search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "STUDENTS ACHIEVEMENT"

    • புனே டாசல்ட் சிஸ்டம்ஸ் பன்னாட்டு நிறுவனத்தில் பொறியியல் துறையில் விழிப்புணர்வை உருவாக்குவதற்காக தேசிய அளவில் தயாரிப்பு வடிவமைப்பு போட்டி நடைபெற்றது.
    • இந்தியாவில் உள்ள 23 மாநிலங்களில் இருந்து 245 என்ஜினீயரிங் கல்லூரிகளில் இருந்து மாணவர்கள் 1774 குழுக்களில், மொத்தம் 8870 மாண வர்கள் கலந்து கொண்டனர்.

    நெல்லை:

    புனே டாசல்ட் சிஸ்டம்ஸ் பன்னாட்டு நிறுவனத்தில் பொறியியல் துறையில் படைப்பாற்றல், புதுமையான அணுகுமுறை மற்றும் தனித்துவமான பொறியியல் திறன்களை வெளிப்படுத்த ஒரு தளத்தை வழங்குதல், புதிய தயாரிப்பு வடிவமைப்பு மூலம் நிலைத்தன்மை பற்றிய விழிப்புணர்வை உருவாக்குவதற்காக தேசிய அளவில் தயாரிப்பு வடிவமைப்பு போட்டி நடைபெற்றது.

    இதில் இந்தியாவில் உள்ள 23 மாநிலங்களில் இருந்து 245 என்ஜினீயரிங் கல்லூரிகளில் இருந்து மாணவர்கள் 1774 குழுக்களில், மொத்தம் 8870 மாண வர்கள் கலந்து கொண்டனர். இதில் நெல்லை எப்.எக்ஸ். என்ஜினீயரிங் கல்லூரி எந்திரவியல் துறை மாணவர்கள் பிரவீன், மனோஜ்குமார், ஜோயல் ராஜ், லேவிஷ் பெஸ்ட்ஸ் க்ராஸ்ட்டென் ஆகியோர் பங்கேற்று பவர் ஜெனெரேஷன் குறித்த புதிய வடிவமைப்பு கண்டுபிடிப்பை சமர்ப்பித்தனர். குறைந்த காற்று வேகத்தில் கூட மின்சாரம் தயாரிக்கலாம் என்ற அடிப்படை அம்சத்தை வழங்கினர்.

    இதனை வல்லுநர் குழுவினர் சதீஷ் குமார் சின்ஹா, (ஏ.வி.பி. சஸ்டைனபிலிட்டி, அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனம்), சோலிஸ் இந்தியா டெக்னாலஜி நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி மகாதேவன், ஆசியா மற்றும் பசிபிக் பகுதி விண்வெளி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கல்வி மைய ஆலோசகர் உகர்குவன் ஆகியோர் ஆய்வு செய்து எப்.எக்ஸ். கல்லூரி கண்டுபிடிப்புக்கு முதல் பரிசை அறிவித்தனர்.

    இதற்கு செஞ்சுரியன் தொழில்நுட்பம் மற்றும் மேலாண்மை பல்கலைக்கழக துணைவேந்தர், டாக்டர் சுப்ரியா பட்டநாயக் மாணவர்களுக்கு ரொக்கப்பரிசு ரூ.1 லட்சம் வழங்கி பாராட்டினார்.

    மாணவர்களின் கண்டுபிடிப்புக்கு உறுதுணையாக எந்திரவியல் துறை பேராசிரியரும், வடிவமைப்பு அனாலிசிஸ் அப்ளைட் ஆய்வக பொறுப்பாளருமான கண்ணன் செயல்பட்டார். தேசிய அளவில் எப்.எக்ஸ். என்ஜினீயரிங் கல்லூரி முதல் பரிசு வென்ற மாணவர்களுக்கு பன்னாட்டு நிறுவனத்தில் உடனடி வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    இதற்கு ஊக்கம் அளித்த பொதுமேலாளர்கள் ஜெயக்குமார், கிருஷ்ணகுமார், கல்லூரி முதல்வர் வேல்முருகன், இயந்திரவியல் துறை தலைவர் பேராசிரியர் சாமுவேல் ஹான்சன், அப்ளைட் லேப் தலைவர் லட்சுமி நாராயணன் மற்றும் மாணவர்களை ஸ்காட் கல்வி குழும நிறுவனர் கிளிட்டஸ் பாபு, தாளாளர் பிரியதர்ஷினி அருண்பாபு ஆகியோர் பாராட்டினர்.

    • உயா்நிலைப் பள்ளி மாணவா்கள் குறுவள மைய தடகள விளையாட்டுப்போட்டிகளில் சிறப்பிடம் பெற்றுள்ளனா்.
    • தற்காலிக உடற்கல்வி ஆசிரியா் பயிற்சி அளித்து வருகிறாா்.

    காங்கயம் : 

    விளையாட்டு மைதானமோ, நிரந்தர உடற்கல்வி ஆசிரியரோ இல்லாத நிலையிலும் பெரிய இல்லியம் அரசு உயா்நிலைப் பள்ளி மாணவா்கள் குறுவள மைய தடகள விளையாட்டுப்போட்டிகளில் சிறப்பிடம் பெற்றுள்ளனா்.

    காங்கயம் வட்டாரம், பொத்தியபாளையம் ஊராட்சிக்குட்பட்ட பெரிய இல்லியம் கிராமத்தில் செயல்பட்டு வந்த ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, கடந்த 2018 ம் ஆண்டு அரசு உயா்நிலைப் பள்ளியாக தரம் உயா்த்தப்பட்டது. இப்பள்ளியில் இதுவரை அரசு சாா்பில் உடற்கல்வி ஆசிரியா் நியமிக்கப்படவில்லை. மேலும் பள்ளியில் பெரிய அளவில் விளையாட்டு மைதானமும் இல்லை.

    ஆனால் இப்பள்ளி மாணவா்கள் விளையாட்டுப் போட்டிகளில் ஆா்வமுடன் பங்கேற்று வந்தனா். இந்நிலையில் மாணவா்களின் விளையாட்டுத் திறனைக்கண்ட பள்ளி நிா்வாகம் மாணவா்களை ஊக்குவிப்பதற்காக பள்ளி மேலாண்மைக்குழு, பெற்றோா் - ஆசிரியா் கழகம் சாா்பில் தற்காலிக உடற்கல்வி ஆசிரியா் நியமனம் செய்துள்ளனா்.

    விளையாட்டு மைதானம் இல்லாததால் தனியாா் வழித்தடத்தை ஓடுபாதையாக மாற்றி மாணவா்களுக்கு தற்காலிக உடற்கல்வி ஆசிரியா் பயிற்சி அளித்து வருகிறாா்.

    இந்நிலையில் அண்மையில் நடைபெற்ற காங்கயம் குறுவள மைய தடகள விளையாட்டுப்போட்டிகளில் இப்பள்ளியை சோ்ந்த மாணவா்கள் சிறப்பிடம் பிடித்து பள்ளிக்கு பெருமை சோ்த்துள்ளனா். இதில் 14 வயதுக்குட்பட்டோருக்கான பிரிவில் இப்பள்ளி மாணவா்கள் 9 போ் முதலிடமும், 4 போ் இரண்டாம் இடமும், ஒருவா் மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளனா்.

    அதன்படி மாணவி லக்ஷிதா 3,000 மீட்டா், 1,500 மீட்டா் ஓட்டப்பந்தயங்களில் முதலிடமும், 100 மீட்டா் தடைத்தாண்டும் பிரிவில் மூன்றாம் இடமும் பிடித்துள்ளாா். மாணவி திவ்யா உயரம் தாண்டுதல், தடைத்தாண்டும் ஓட்டம் 100 மீட்டா் பிரிவில் முதலிடம் பிடித்துள்ளாா். மாணவி விஜயலட்சுமி 400 மீட்டா், 600 மீட்டா் ஓட்டப்பந்தயங்களில் முதலிடமும் பெற்றாா்.

    தொடா் ஓட்டம் 100 , 4 பிரிவில் மாணவிகள் பிரிவில் தீக்ஷனா, காஷ்மீரா, விஜயலட்சுமி, திவ்யா ஆகியோரும், மாணவா்கள் பிரிவில் விஷ்வா, ஜீவானந்தம், தினேஷ், மோத்தீஷ் ஆகியோரும் முதலிடம் பிடித்தனா்.மாணவா் விஷ்வா, தடைத்தாண்டும் ஓட்டம் 80 மீட்டா் பிரிவில் முதலிடமும், 400 மீட்டா் ஓட்டப்பந்தயத்தில் இரண்டாமிடமும், மாணவா் தினேஷ் உயரம் தாண்டுதலில் முதலிடமும், தடைத்தாண்டும் ஓட்டம் 80 மீட்டா் பிரிவில் இரண்டாமிடமும், நீளம் தாண்டுதலில் மாணவா் ஜீவானந்தம் இரண்டாமிடத்தை பிடித்துள்ளனா்.

    குறுவள மைய தடகள விளையாட்டுப்போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவா்கள், தற்காலிக உடற்கல்வி ஆசிரியா் மணிவேல் ஆகியோருக்கு பள்ளித் தலைமையாசிரியா் ஈஸ்வரி பாராட்டு தெரிவித்தாா்.

    • சோழவந்தான் பள்ளி மாணவர்கள் சாதனை படைத்தனர்.
    • தாளாளர் செந்தில்குமார், பள்ளி முதல்வர், ஆசிரியர் மற்றும் மாணவர்கள் பாராட்டி தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

    சோழவந்தான்

    சி.பி.ஸ்.இ. பள்ளிகளுக்கு இடையேயான மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டிகள் மதுரை கல்வி சர்வதேச பொதுப்பள்ளி சார்பில் மதுரை எஸ்.எஸ்.ஜி.ஏ. மைதானத்தில் 3 நாட்கள் நடைபெற்றது.

    இதில் 10-க்கும் மேற்பட்ட அணிகள் பங்கு பெற்றன. இந்த தொடரின் இறுதி போட்டியில் கல்வி சர்வதேச பொதுப்பள்ளி மாணவர்கள் மற்றும் அத்யாபனா பள்ளி மாண வர்கள் மோதின. 15 ஓவர்கள் கொண்ட ஆட்டத்தில் முதலாவதாக பேட்டிங் செய்த மதுரை அத்யாபனா பள்ளி 13.1 ஓவர்களில் 48 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டு களையும் பறிகொடுத்தது.

    பின் 49 ரன்களை இலக்காக கொண்டு ஆடிய கல்வி சர்வதேச பொதுப்பள்ளி மாணவர்கள் 7 ஓவர்களில் 50 ரன்களுக்கு 4 விக்கெட் டுகள் மட்டும் இழந்து தங்க பதக்கம் வெற்றி பெற்றது. சிறந்த பேட்ஸ்மேனாக ஷமீர் மற்றும் தொடர் நாயகனாக ரிஷிசித்ரன் தேர்ந்தெடுக் கப்பட்டனர்.

    தொடரை வென்ற கல்வி சர்வதேச பொதுப்பள்ளி மாணவர்கள் கிரிக்கெட் பயிற்சியாளர்கள் கணேச மூர்த்தி, கார்த்திக் ஆகியோர் களை பள்ளி தாளாளர் செந்தில்குமார், பள்ளி முதல்வர், ஆசிரியர் மற்றும் மாணவர்கள் பாராட்டி தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

    • மண்டல அளவிலான சிலம்பம் போட்டியில் ராமநாதபுரம் மாணவர்கள் சாதனை படைத்தனர்.
    • கம்பு சண்டை 14 வயதிற்கு உட்பட்ட பிரிவில் மாணவன் ஷனேல் ஆண்டர்சன் முதல் பரிசு தங்கப்பதக்கம் வென்றார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் அமிர்த வித்யாலயா பள்ளியில் சி.பி.எஸ்.இ. கல்வி துறை, மதுரை சர்வோதய பப்ளிக் குழுமம் சார்பில் பள்ளி மாணவர்களுக்கான மண்டல அளவிலான சிலம்பம் போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் ராமநாதபுரம், மதுரை, சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் இருந்து மாணவர்கள் கலந்து கொண்டனர். ஒற்றை கம்பு, இரட்டை கம்பு, கம்பு சண்டை ஆகிய பிரிவுகளில் போட்டி நடைபெற்றது. இதில் ராமநாதபுரம் நிக்கோலஸ் சிலம்பம் பயிற்சி பள்ளி மாணவர்கள் இரட்டை கம்பு 14 வயதிற்கு உட்பட்ட பிரிவில் மாணவி பர்ஹத் ஜபீன் முதல் பரிசு தங்கப்பதக்கம் வென்றார். கம்பு சண்டை 14 வயதிற்கு உட்பட்ட பிரிவில் மாணவன் ஷனேல் ஆண்டர்சன் முதல் பரிசு தங்கப்பதக்கம் வென்றார். ஒற்றை கம்பு பிரிவில் 12 மற்றும் 17 வயதிற்கு உட்பட்ட பிரிவில் மாணவர்கள் திவ்யதீக்க்ஷிதா, ஸ்டாண்லி ஆண்டர்சன் இரண்டாம் பரிசு வெள்ளி பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளனர். வெற்றி பெற்ற மாணவர்களை சிலம்பம் மாஸ்டர் மேத்யு இம்மானுவேல் மற்றும் பயிற்சியாளர்கள் திருமுருகன், செல்லபாண்டி பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.

    • மாவட்ட டேபிள் டென்னிஸ் போட்டியில் எஸ்.பி.கே. பள்ளி மாணவர்கள் சாதனை படைத்தனர்.
    • 6-ம் வகுப்பு மாணவர் தேஜஸ் ஒற்றையர் போட்டியில் 2-ம் இடம் பெற்று சான்றிதழ்கள் பெற்றனர்.

    அருப்புக்கோட்டை

    சிவகாசி ரோட்டரி கிளப் சார்பில் விருதுநகர் மாவட்ட அளவிலான மாணவ- மாணவிகளுக்கான டேபிள் டென்னிஸ் போட்டிகள் பல்வேறு பிரிவுகளில் நடை பெற்றது. இதில் பல்வேறு பள்ளிகளை சேர்ந்த மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.

    அருப்புக்கோட்டை எஸ்.பி.கே. மேல்நிலைப் பள்ளி 12-ம் வகுப்பு மாணவர் சந்தோஷ், ஒற்றையர் போட்டியில் முதலிடம் பெற்றும் இரட்டையர் போட்டியில் 12-ம் வகுப்பு மாணவர்கள் சந்தோஷ், பிரகதீஸ்வரன், ஆகிய இருவரும் முதலிடம் பெற்று கேடயங்கள் சான்றிதழ்கள் பெற்று சாம்பியன் பட்டம் பெற்றனர்.

    ஒவ்வொரு பிரிவிலும் 58 மாணவர்கள் கலந்து கொண்டனர். மேலும் யூ 17 பிரிவில் 11-ம் வகுப்பு மாணவர் விமல் இரட்டையர் போட்டியில் 3-ம் இடம் பெற்றும், யூ-13 பிரிவில் 6-ம் வகுப்பு மாணவர் தேஜஸ் ஒற்றையர் போட்டியில் 2-ம் இடம் பெற்று சான்றிதழ்கள் பெற்றனர்.

    மேலும் இந்த பள்ளி மாணவர்கள் அதிக புள்ளிகள் பெற்று சாம்பியன் பட்டம் பெற்றனர். சாம்பியன் பட்டம் வென்ற எஸ்.பி.கே. மேல்நிலைப்பள்ளி டேபிள் டென்னிஸ் வீரர்களையும் ஊக்குவித்த உடற் கல்வி இயக்குனர் சவுந்தர பாண்டியன் மற்றும் உடற் கல்வி ஆசிரியர்களையும் நாடார்கள் உறவின்முறை தலைவர் காமராஜன், எஸ்.பி.கே. கல்வி குழும தலைவர் ஜெயக்குமார், பள்ளி செயலாளர் கவுன்சிலர் மணி முருகன், பள்ளி தலைவர் சிவராம கிருஷ்ணன், உதவி தலைவர் கனகவேல், உதவி செயலா ளர் தங்கராஜ், தலைமை ஆசிரியர் ஆனந்தராஜன் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.

    • 10-ம் வகுப்பு தேர்வில் மாணவி மதுமதி 494 பெற்று பள்ளியில் முதலிடம் பெற்றார்.
    • மொத்தம் 22 பேர் 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்தனர்.

    வள்ளியூர்:

    நெல்லை மாவட்டம் வடக்கன்குளம் எஸ்.ஏ.வி. பாலகிருஷ்ணா மெட்ரிக் பள்ளி மாணவர்கள் இந்தாண்டு 249 பேர் 10-ம் வகுப்பு தேர்வு எழுதினர். இதில் மாணவி மதுமதி 494 பெற்று பள்ளியில் முதலிடம் பெற்றார். மாணவர் பாலகிஷன் 493 மதிப்பெண் பெற்று 2-வது இடம் பெற்றுள்ளார். மாணவிகள் அகஸ்தியா, பாலசவுமியா ஆகியோர் 492 மதிப்பெண் பெற்று 3-வது இடம்பெற்று பள்ளியில் சாதனை படைத்தனர்.

    மொத்தம் 22 பேர் 100-க்கு 100 மதிப்பெண்களும், 450-க்கு மேல் 59 மாணவர்களும், 400-க்கு மேல் 118 மாணவர்களும் பெற்று சாதனை படைத்தனர்.

    இதேபோன்று 11-ம் வகுப்பு பொதுத்தேர்வில் ஜெஸ்மின் பிரித்தி 591 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதலிடம் பெற்றார். வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளை பள்ளித் தலைவர் கிரகாம் பெல், தாளாளர் திவாகரன், முதல்வர் சுடலையாண்டி மற்றும் ஆசிரியர்கள் இனிப்பு வழங்கி பாராட்டினர்.

    • 10 பேர் 60 சதவீதத்திற்கு அதிகமாகவும் மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.
    • 10-ம் வகுப்பு தேர்வில் மாணவி சஷ்மிதா 500-க்கு 489 மதிப்பெண்கள் பெற்று பள்ளி அளவில் முதலிடம் பிடித்துள்ளார்.

    திருப்பூர்:

    திருப்பூரை அடுத்த அணைபுதூரில் உள்ள ஏ.கே.ஆர். அகாடமி பள்ளி மாணவர்கள் சி.பி.எஸ்.இ. பிளஸ்-2 தேர்வில் 100 சதவீத தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர். பிளஸ்-2 தேர்வில் பள்ளி மாணவி ஹரினிகா 500-க்கு 488 மதிப்பெண்கள் பெற்று பள்ளி அளவில் முதலிடம் பிடித்துள்ளார். மாணவன் ஹர்ஷத் 481 மதிப்பெண்களுடன் 2-ம் இடமும், மாணவி ஸ்ரீ சாந்தி 468 மதிப்பெண்களுடன் 3-ம் இடமும் பிடித்துள்ளனர். மேலும் தேர்வு எழுதிய மாணவர்களில் வேதியியல் பாடத்தில் ஒரு மாணவரும், கணினி அறிவியல் பாடத்தில் ஒரு மாணவரும் 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். 3 மாணவர்கள் 95 சதவீத மதிப்பெண்களுக்கு அதிகமாகவும், 3 பேர் 90 சதவீதத்திற்கு மேலும், 7 பேர் 85 சதவீதத்திற்கு மேலும், 7 பேர் 80 சதவீதத்திற்கு மேலும், 18 பேர் 70 சதவீதத்திற்கு மேலும், 10 பேர் 60 சதவீதத்திற்கு அதிகமாகவும் மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.

    இதேபோல் 10-ம் வகுப்பு தேர்வில் மாணவி சஷ்மிதா 500-க்கு 489 மதிப்பெண்கள் பெற்று பள்ளி அளவில் முதலிடம் பிடித்துள்ளார். மாணவி ஸ்ரீமதி 485 மதிப்பெண்களுடன் 2-ம் இடமும், மாணவி பிரியங்கா 480 மதிப்பெண்களுடன் 3-ம் இடமும் பிடித்துள்ளனர். மேலும் தேர்வு எழுதிய மாணவர்களில் 3 பேர் கணித பாடத்தில் 100-க்கு 100 மதிப்பெண்களும், 2 பேர் தமிழ் பாடத்திலும், ஒருவர் சமூக அறிவியல் பாடத்திலும் 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். 19 மாணவர்கள் 90 சதவீத மதிப்பெண்களுக்கு அதிகமாகவும், 28 பேர் 80 சதவீதத்திற்கு மேலும், 27 பேர் 70 சதவீதத்திற்கு மேலும், 16 பேர் 60 சதவீத மதிப்பெண்களுக்கு அதிகமாகவும் பெற்றுள்ளனர். தேர்வில் சாதனை படைத்த மாணவர்களுக்கு பள்ளி நிர்வாகம் சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பள்ளி தாளாளர்லட்சுமி நாராயணன் தலைமை தாங்கினார். இதில் பிளஸ்-2 மற்–றும் 10-ம் வகுப்பு தேர்வில் பள்ளி அளவில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவ-மாணவிகள் கேக் வெட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள். இதில் பள்ளி முதல்வர் கணேஷ், நிர்வாக அலுவலர் சுப்பிரமணியம் உள்பட மாணவர்கள், பெற்றோர் கலந்து கொண்டனர்.

    • சாதனை படைத்த மாணவ–மாணவியருக்கு பாராட்டு விழா மற்றும் 8-ம் வகுப்பு முடித்த மாணவ–மாணவியருக்கு கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி, பள்ளி வளா கத்தில் நடைபெற்றது.
    • இவ்விழாவிற்கு, பள்ளி தலைமை யாசிரியர் கதிர்வேல் தலைமை வகித்தார்.

    வாழப்பாடி:

    சேலம் மாவட்டம் கல்வராயன் மலை கல்வராயன் மலை மண்ணுார் கிராமத்தில் இயங்கி வரும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், கல்வி, கலைத்திறன் மற்றும் தேசிய திறனறித் தேர்வில் வெற்றி பெற்று சாதனை படைத்த மாணவ–மாணவியருக்கு பாராட்டு விழா மற்றும் 8-ம் வகுப்பு முடித்த மாணவ–மாணவியருக்கு கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி, பள்ளி வளா கத்தில் நடைபெற்றது.

    இவ்விழாவிற்கு, பள்ளி தலைமை யாசிரியர் கதிர்வேல் தலைமை வகித்தார். ஆசிரியர் சக்திவேல் வரவேற்றார். தேசிய திறனறித்தேர்வில் வெற்றி பெற்ற மாணவிகள் சி.அனிசியா, ஜோ. ஹாசினி ஆகியோருக்கு, பள்ளி மேலாண்மைக்குழு, பெற்றோர் ஆசிரியர் கழகம் மற்றும் கிராம பொதுமக்கள் சார்பில் பாராட்டி பரிசு வழங்கப்பட்டது.

    இதனைத்தொடர்ந்து, கனவு மாணவர் விருது பெற்ற மாணவர்கள் மற்றும் கல்வி அடைவுத்தேர்வில் சிறப்பிடம் பெற்றவர்கள் மற்றும் அழகிய கையெழுத்து பயிற்சி பெற்றவர்களுக்கு பரிசுகளும் பாராட்டுச் சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.

    தொடர்ந்து பள்ளியில்இந்த ஆண்டு 8-ம் வகுப்பு முடித்து வேறு பள்ளிகளில் 9-ம் வகுப்பு சேரவுள்ள மாணவ–மாணவிகளுக்கு கல்வி வழி காட்டு நிகழ்ச்சி நடை பெற்றது. இவ்விழாவில், பள்ளி மாணவ–மாணவியர், ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மைக்குழு நிர்வாகிகள், பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர். முடிவில் ஆசிரியர் வெங்கடாசலம் நன்றி கூறினார்.

    • வில்லியனூர் ஆச்சார்யா கல்லூரியில் மாநில அளவிலான ஹாக்கி விளையாட்டு போட்டி நடைபெற்றது.
    • போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான பரிசளிப்பு நிகழ்ச்சி கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

    புதுச்சேரி:

    வில்லியனூர் ஆச்சார்யா கல்லூரியில் மாநில அளவிலான ஹாக்கி விளையாட்டு போட்டி நடைபெற்றது.

    இப்போட்டியில் புதுவை, காரைக்கால், மாகி, ஏனாம் பகுதிகளை சேர்ந்த மாணவர்கள் பங்கேற்றனர். போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான பரிசளிப்பு நிகழ்ச்சி கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

    விழாவில் ஆச்சார்யா கல்வி குழும தலைவர் அரவிந்தன் மற்றும் கல்லூரி என்ஜினீயரிங் விளையாட்டு குழு இயக்குனர் குமரேசன் ஆகியோர் முன்னிலையில் மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

    மடுகரை ராமமூர்த்தி அரசு உயர்நிலைப்பள்ளி உடற்கல்வி ஆசிரியர் செந்தில் மற்றும் கூடப்பாக்கம் உடற் கல்வி விரிவுரையாளர் ராமச்சந்திரன் ஆகியோர் உடனிருந்தனர்.

    • அரசு கலைக் கல்லூரி மாணவா்கள் 3 தங்கப் பதக்கங்களை பெற்றுள்ளனா்.
    • பருவத் தோ்வுகளில் பல்கலைக்கழக அளவில் சிறப்பிடம் பெற்ற மாணவா்கள் பட்டியல் வெளியிடப்பட்டது.

    திருப்பூர் : 

    கோவை பாரதியாா் பல்கலைக் கழகம் சாா்பில் நடைபெற்ற 2022 பருவத் தோ்வுகளில் பல்கலைக்கழக அளவில் சிறப்பிடம் பெற்ற மாணவா்கள் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் திருப்பூா் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி மாணவா்கள் 3 தங்கப் பதக்கங்களை பெற்றுள்ளனா்.

    இது குறித்து கல்லூரி முதல்வா் கிருஷ்ணன் கூறியதாவது:- இளங்கலை சா்வதேச வணிகவியல் துறையில் பிரபாகரன் என்ற மாணவன் முதலிடம் பிடித்து தங்கப் பதக்கத்தையும், இதே துறையில் பிரவீன்குமாா் என்ற மாணவன் 6 -வது இடத்தையும், வரலாற்றுத் துறை மாணவி பாண்டிச்செல்வி 3 -வது இடத்தையும், அகில் பிரசாத் 4 -வது இடத்தையும், கோபிநாத் 6 -வது இடத்தையும், அருள்குமாா் 10 -ம் இடத்தையும் பிடித்துள்ளனா்.

    முதுநிலை பட்ட வகுப்புகளில் ஆடை வடிவமைப்பு ,நாகரிகம் துறையில் மாணவி வாணி ஸ்ரீ முதலிடம் பெற்று தங்கப் பதக்கமும், வேதியியல் துறையில் மாணவி திவ்யா முதலிடம் பிடித்து தங்கப் பதக்கமும் பெற்றனா்.

    மேலும் நாக காா்த்திகா 4 ம் இடமும், ஹரிஹரன் 5 ம் இடமும், வானிலன் 6 ம் இடமும், சிவசக்தி 7 ம் இடமும், கவிப்பிரியா 8 ம் இடமும் பிடித்துள்ளனா்.

    ஆங்கில இலக்கியத் துறையில் மோனிஷா 6-ம் இடமும், விலங்கியல் துறையில் பத்மஸ்ரீ 6 ம் இடமும் பிடித்துள்ளனா் என்றாா்.சிறப்பிடம் பிடித்த மாணவா்களை துறைத் தலைவா்கள் மற்றும் பேராசிரியா்கள் பாராட்டினா்.

    • 1,330 திருக்குறள்களை 66 நிமிடங்களில் ஒப்புவித்தனர்
    • மாணவர்களுக்கு சாதனைக்கான சான்றிதழ் வழங்கப்பட்டது

    குடியாத்தம்:

    குடியாத்தம் அடுத்த பாக்கம் கிராமத்தில் உள்ள ஆசிர்வாத் இன்டர்நேஷனல் சி.பி.எஸ்.இ. பள்ளியில் ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் 133 பேர் தலா 10 திருக்குறள்கள் என 133 அதிகாரங்களைக் கொண்ட 1,330 திருக்குறள்களை 66 நிமிடங்களில் ஒப்புவித்தனர்.

    இது உலக சாதனையாகும். இந்த திருக்குறள் ஒப்புவித்தல் சாத னையை லிங்கன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் நிறுவனம் பதிவு செய்தது. இந்த நிலையில் லிங்கன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் நிறுவனம்சார்பில் திருக்குறள் ஒப்புவித்தல் போட்டியில் சாதனை படைத்த 133 மாணவர்களுக்கு சாதனைக்கான சான்றிதழ் மற்றும் பதக்கங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு பள்ளி தாளாளர் எஸ்.மஞ்சுநாத் தலைமை தாங்கினார். பள்ளி முதல்வர் பிரமிளா கண்ணன் வரவேற் றார். சிறப்பு விருந்தினராக டி.வி. புகழ் ஈரோடு மகேஷ், திரைப்பட இசையமைப்பாளர் சி.அரவிந்த்பாபு ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களுக்கும், மாணவர்களின் சாத னைக்கு உதவியாக இருந்த ஆசிரியர்களுக்கும் சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்களை வழங்கி கவுரவித்தனர். சாதனை நிகழ்ச் சிக்கான ஏற்பாடுகளை லிங்கன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் நிறுவனர் ஜோசப் இளந்தென்றல், தலைமை நிர்வாக அலுவலர் எஸ்.கார்த்திக் குமார் ஆகியோர் செய்து இருந்தனர். நிகழ்ச்சியில் பெற்றோர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

    முடிவில் பள்ளியின் கணக்கு அலுவலர் கே.செல்வகுமார் நன்றி கூறினார்.

    • தேசிய அளவிலான கைப்பந்து போட்டியில் பாலமேடு அரசு பள்ளி மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர்.
    • இதில் 10-ம் வகுப்பு பயிலும் 2 மாணவர்கள் இந்திய அளவிலான அணிகளுக்கு தேர்வாகியுள்ளனர்.

    அலங்காநல்லூர்

    சென்னையில் தேசிய அளவிலான கைப்பந்து போட்டி நடைபெற்றது. இதில் தென் மாவட்ட அணியில் பாலமேடு அருகே உள்ள வெள்ளையம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் பயிலும் 6 மாணவர்கள் பங்கேற்றனர். இதில் அவர்கள் சிறப்பாக விளையாடி அந்த அணி தங்கப்பதக்கம் பெற்றது. இதையடுத்து 6 மாணவர்களை பள்ளி தலைமை ஆசிரியர் இந்திரா, உதவி தலைமை ஆசிரியர்கள் விஜித்ரா, முருகன், முதுநிலை ஆசிரியர் செந்தில், உடற்கல்வி ஆசிரியர்கள் மதுசிங், சத்தியசீலன் மற்றும் பள்ளி மேலாண்மை குழு தலைவர், பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் இளமாறன், பயிற்சியாளர் சதீஷ்ராஜா மற்றும் அனைத்து ஆசிரியர்களும் பாராட்டினர். இதில் 10-ம் வகுப்பு பயிலும் ஆறுமுகம், கவிபாலன் ஆகிய இருவரும் இந்திய அளவிலான அணிகளுக்கு தேர்வாகியுள்ளனர்.

    ×