என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
கல்வி, கலைத்திறன், தேசிய திறனறித் தேர்வில்மண்ணுார் மலை கிராம பள்ளி மாணவர்கள் வெற்றிபெற்று சாதனை
- சாதனை படைத்த மாணவ–மாணவியருக்கு பாராட்டு விழா மற்றும் 8-ம் வகுப்பு முடித்த மாணவ–மாணவியருக்கு கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி, பள்ளி வளா கத்தில் நடைபெற்றது.
- இவ்விழாவிற்கு, பள்ளி தலைமை யாசிரியர் கதிர்வேல் தலைமை வகித்தார்.
வாழப்பாடி:
சேலம் மாவட்டம் கல்வராயன் மலை கல்வராயன் மலை மண்ணுார் கிராமத்தில் இயங்கி வரும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், கல்வி, கலைத்திறன் மற்றும் தேசிய திறனறித் தேர்வில் வெற்றி பெற்று சாதனை படைத்த மாணவ–மாணவியருக்கு பாராட்டு விழா மற்றும் 8-ம் வகுப்பு முடித்த மாணவ–மாணவியருக்கு கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி, பள்ளி வளா கத்தில் நடைபெற்றது.
இவ்விழாவிற்கு, பள்ளி தலைமை யாசிரியர் கதிர்வேல் தலைமை வகித்தார். ஆசிரியர் சக்திவேல் வரவேற்றார். தேசிய திறனறித்தேர்வில் வெற்றி பெற்ற மாணவிகள் சி.அனிசியா, ஜோ. ஹாசினி ஆகியோருக்கு, பள்ளி மேலாண்மைக்குழு, பெற்றோர் ஆசிரியர் கழகம் மற்றும் கிராம பொதுமக்கள் சார்பில் பாராட்டி பரிசு வழங்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து, கனவு மாணவர் விருது பெற்ற மாணவர்கள் மற்றும் கல்வி அடைவுத்தேர்வில் சிறப்பிடம் பெற்றவர்கள் மற்றும் அழகிய கையெழுத்து பயிற்சி பெற்றவர்களுக்கு பரிசுகளும் பாராட்டுச் சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.
தொடர்ந்து பள்ளியில்இந்த ஆண்டு 8-ம் வகுப்பு முடித்து வேறு பள்ளிகளில் 9-ம் வகுப்பு சேரவுள்ள மாணவ–மாணவிகளுக்கு கல்வி வழி காட்டு நிகழ்ச்சி நடை பெற்றது. இவ்விழாவில், பள்ளி மாணவ–மாணவியர், ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மைக்குழு நிர்வாகிகள், பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர். முடிவில் ஆசிரியர் வெங்கடாசலம் நன்றி கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்