search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குங்பூ போட்டி:  பாரத் சி.பி.எஸ்.இ. பள்ளி  மாணவர்கள் சாதனை
    X

    போட்டியில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகள்.

    குங்பூ போட்டி: பாரத் சி.பி.எஸ்.இ. பள்ளி மாணவர்கள் சாதனை

    • ஐதராபாத்தில் மாநிலங் களுக்கு இடையேயான குங்பூ ஜூனியர் போட்டி நடைபெற்றது.
    • தேசிய அளவில் நடைபெறும் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.

    கிருஷ்ணகிரி,

    ஐதராபாத்தில் மாநிலங் களுக்கு இடையேயான குங்பூ ஜூனியர் போட்டி நடைபெற்றது.

    இதில் கிருஷ்ணகிரி பாரத் இன்டர்நேஷனல் பள்ளி மாணவ, மாணவிகள் நவதர்ஷினி, தன்யாஸ்ரீ, தேவிபிரியா, சோபன் சுந்தர் ஆகியோர் வெற்றி பெற்று பதக்கங்களை வென்று தேசிய அளவில் நடைபெறும் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.

    ஜூடோ பிரிவில் ஆதித்யா ராஜ் வெற்றி பெற்று தென்னிந்திய அளவில் நடைபெறும் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். ஸ்கேட்டிங் சப்ஜூனியர் பிரிவில் ஹரிஷ், ஜெயக்குமார், இளையக்கனி ஆகியோர் வெற்றி பெற்று தேசிய அளவில் நடைபெறும் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.

    பஞ்சாபில் நடைபெற்ற வில்வித்தை போட்டியில் சோபன் சுந்தர், தேவிப்பிரியா ஆகியோர் வெற்றி பெற்று பதக்கங்கள் வென்று தேசிய அளவில் நடைபெறும் வில்வித்தை போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.

    போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகள் பள்ளியின் நிறுவனர் மணி, தாளாளர் கிருஷ்ணவேணி மணி, செயலாளர் டாக்டர் சந்தோஷ், முதல்வர் ஹரிநாத், போட்டியின் பயிற்சியாளர் ரஹமத் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள் பாராட்டினார்கள்.

    Next Story
    ×