search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Thirukkural Book"

    • அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு இலவச திருக்குறள் புத்தகம் வழங்கப்பட்டது.
    • முன்னாள் கவுன்சிலர் அருணா தேவி தெரிவித்தார்.

    வாடிப்பட்டி

    தமிழ்நாடு அரசு தமிழ்வளர்ச்சித்துறை சார்பாக திருக்குறள் ஒப்பு விக்கும் மாணவ-மாணவி களுக்கு ரூ.10 ஆயிரம் பரிசு தொகையும், பாராட்டு சான்றிதழும் வழங்கப்படு கிறது.

    உலக பொதுமறையான திருக்குறள் 1330 குறட்பாக்க ளையும் மனப்பாடம் செய்து ஒப்பிவிக்கும் போட்டியில் வாடிப்பட்டி பகுதியை சேர்ந்த மாணவ-மாணவி கள் கலந்து கொண்டு வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்தில் பல்வேறு சமூக பணிகளை தொடர்ந்து செய்து கொண்டிருக்கும் அம்மா மக்கள்குறை தீர்க்கும் வழிகாட்டு மையம் தனது கல்வி தொண்டில் இலவச நோட்டு புத்தகம், ஆக்கி மட்டை, அரசு பொது தேர்வுகளில் முதல் 3 இடம் பிடித்த மாணவ-மாணவி களுக்கு ரொக்க பணம் ரூ.10 ஆயிரம், 7ஆயிரம், 5 ஆயிரம் வழங்கப்பட்டு வருகிறது.

    இதற்கு சிகரம் பதிக்கும் விதமாக மாணவ-மாணவி களுக்கு 2500 இலவச திருக்குறள் வழங்கிட முன்வந்துள்ளது. இதன் முதல் கட்டமாக வழிகாட்டு மைய அறங்காவலர் டாக்டர் அசோக்குமார் பிறந்த நாள்விழாவை யொட்டி வாடிப்பட்டி அரசு பெண் கள் மேல்நிலைப்பள்ளியில் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை உள்ள மாணவிகள் 979 பேருக்கு திருக்குறள் புத்தகம் வழங்கப் பட்டது.

    இந்த நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியர் திலக வதி தலைமை தாங்கினார். அறக்கட்டளை நிறுவனர் முன்னான் கவுன்சிலர் அருணாதேவி முன்னிலை வகித்தார். தமிழாசிரியர் பிரேமா வரவேற்றார். கவுன்சிலர் சூரியா அசோக் குமார் மாணவிகளுக்கு இலவச திருக்குறள்புத்தகம் வழங்கினார்.

    இதில் 2-ம் கட்டமாக வாடிப்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்க ளுக்கும், பாண்டியராஜபுரம் மதுரை சர்க்கரை ஆலை அரசு மேல் நிலைப் பள்ளியில் 10, 11, 12-ம் வகுப்பு மாணவ-மாணவி களுக்கும், மேட்டு நீரேத்தான் உயர் நிலைப்பள்ளியில் 9, 10-ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு திருக்குறள் புத்தகமும், ஆங்கில அகராதி யும் வழங்கப்பட உள்ளது என்று அம்மா மக்கள் குறைதீர்க்க வழிகாட்டுமைய நிறுவனர் முன்னாள் கவுன்சிலர் அருணா தேவி தெரிவித்தார்.

    • திருக்குறள் ஆன்மீகத்தை கற்பிக்கிறது என தமிழக கவர்னர் ஆர். என். ரவி சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்தார்.
    • இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் திருக்குறள் புத்தகத்தை பதிவுதபாலில் அனுப்பி வைத்தனர்.

    உடுமலை :

    திருக்குறள் ஆன்மீகத்தை கற்பிக்கிறது என தமிழக கவர்னர் ஆர். என். ரவி சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்தார். இதற்கு பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதையடுத்துதிருக்குறள்குறித்துக சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த தமிழக கவர்னருக்கு உடுமலை தபால் நிலையத்திலிருந்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் திருக்குறள் புத்தகத்தை பதிவுதபாலில் அனுப்பி வைத்தனர்.

    இந்நிகழ்ச்சியில் சங்க உடுமலை ஒன்றிய தலைவர் ஆ. ராமசாமி, செயலாளர் தமிழ் தென்றல், கமிட்டி உறுப்பினர்கள் உரல் பட்டி கருப்புசாமி ,வி கே புரம் லோக முருகன், ஜல்லிபட்டி அஜித், குடிமங்கலம் செயலாளர் ஓம் பிரகாஷ், தாலுகா செயலாளர் கனகராஜ் ,ரங்கநாதன், சிஐடியு. செயலாளர் ஜெகதீசன் ஆகியோர் பங்கேற்றனர் .பின்னர் நிர்வாகிகள் கூறுகையில், கவர்னர் திருக்குறளை சரியாக படிக்க வேண்டும் .சனாதனத்தை புகுத்த நினைக்க கூடாது. தமிழர் பண்பாட்டை கொச்சைப்படுத்தக் கூடாது. தமிழகத்தில் மதவெறிக்கு இடமில்லை. மனுதர்மத்தை முறியடிப்போம் மக்கள் ஒற்றுமை காத்திடுவோம். பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்னும் குறள்வழி நிற்போம் என கூறினர்.

    ×