search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தஞ்சை மாவட்டத்தில் பள்ளி மாணவர்களுக்கு பேச்சு, கட்டுரை போட்டி
    X

    கலெக்டர் தீபக்ஜேக்கப்.

    தஞ்சை மாவட்டத்தில் பள்ளி மாணவர்களுக்கு பேச்சு, கட்டுரை போட்டி

    • ஜூலை 18-ந்தேதி “தமிழ்நாடு நாள் விழாவாக” இனி கொண்டாடப்படும் என அறிவிக்கப்பட்டது.
    • தஞ்சை மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் படிக்கும் மாணவர்களுக்கு கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டிகள் நடைபெற உள்ளன.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது :-

    தமிழ்நாடு முதல்-அமைச்சராக பேரறிஞர் அண்ணா இருந்தபோது தாய்த்தமிழ்நாட்டிற்கு தமிழ்நாடு என ஜூலை 18-ந்தேதி பெயர் சூட்டினார்.

    அந்த நாளினை "தமிழ்நாடு நாள் விழாவாக" இனி கொண்டாடப்படும் என அறிவிக்கப்பட்டது.

    இவ்விழாவினை கொண்டாடும் வகையில் தஞ்சை மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டிகள் நடைபெற உள்ளன.

    மாவட்ட அளவில் கட்டுரை.

    பேச்சு ப்போட்டியில் வெற்றிபெறும் மாணவ ர்களுக்கு முதல் பரிசு ரூ.10 ஆயிரம், 2-ம் பரிசு ரூ.7ஆயிரம், 3-ம் பரிசு ரூ.5 ஆயிரம் என பரிசுத் தொகையும் பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்பட உள்ளது.

    போட்டிகள் நடைபெறும் இடம், நாள், நேரம், போட்டிக்கான தலைப்பு, விதிமுறைகள் குறித்து முதன்மைக் கல்வி அலுவலர் மூலமாக அந்தந்த பள்ளிகளுக்கு சுற்றறிக்கை வாயிலாகத் தெரிவி க்கப்படும்.

    இந்த பேச்சுப் போட்டியில் பங்கேற்று மாணவர்கள் பயன்பெற வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×