search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பள்ளி மாணவ-மாணவிகள் 22,985 பேருக்கு இலவச பஸ் பாஸ்
    X

    கலெக்டர் ஆஷா அஜித் பள்ளி மாணவருக்கு இலவச பஸ் பாஸ் அட்டைகளை வழங்கினார். அருகில் கோட்ட மேலாளர் தங்கப் பாண்டியன் உள்ளார்.

    பள்ளி மாணவ-மாணவிகள் 22,985 பேருக்கு இலவச பஸ் பாஸ்

    • பள்ளி மாணவ-மாணவிகள் 22,985 பேருக்கு இலவச பஸ் பாஸ் வழங்கப்பட்டது.
    • கட்டணமில்லா பேருந்து பயண அட்டைகளை பெற்று பயன் பெறலாம்.

    காரைக்குடி

    தமிழ்நாடு அரசு போக்கு வரத்து கழகம் கும்பகோணம் லிமிடெட் காரைக்குடி மண்டலத்திற்கு உட்பட்ட சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகள் கட்டண மில்லா பயணம் செய்வதற்கு ஏதுவாக சிவ கங்கை மாவட்டத்தில் 13,061 மாணவ, மாணவி களுக்கும், ராமநாதபுரம் மாவட்டத்தில் 9,924 மாணவ, மாணவி களுக்கும் மொத்தம் 22,985 மாணவ, மாணவிகளுக்கு ஸ்மார்ட் கார்டு வடிவிலான கட்டணமில்லா பேருந்து அட்டைகள் வழங்கப்பட்டது.

    சிவகங்கை மாவட்டம் மன்னர் மேல்நிலைப் பள்ளி யில் நடந்த இந்த நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் ஆஷா அஜித் மாணவ மாணவி களுக்கு கட்டணமில்லா பேருந்து அட்டைகளை வழங்கினார். ஏனைய பள்ளிகளில் காரைக்குடி மண்டலத்தில் உள்ள 2 கோட்ட மேலாளர்கள், 11 கிளை மேலாளர்கள் மூலம் பள்ளி மாணவ, மாணவி களுக்கு கட்டணமில்லா பேருந்து பயண அட்டைகள் வழங்கப்பட்டது.

    மேலும் இது நாள் வரை கட்டணமில்லா பேருந்து பயண அட்டைக்கு விண் ணப்பிக்காத மாணவ, மாணவிகள் உடனடியாக விண்ணப்பித்து கட்டண மில்லா பேருந்து பயண அட்டைகளை பெற்று பயன் பெறுமாறு மாணவ, மாணவிகளுக்கு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

    Next Story
    ×