search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பஸ் படிக்கட்டுகளில்  தொங்கியபடி பயணிக்கும் பள்ளி மாணவர்கள் - விபத்தில் சிக்கும் அபாயம்
    X

    ஆபத்தை உணராமல் பஸ் படிக்கட்டுகளில் தொங்கியபடி பயணம் செய்யும் மாணவர்களின் காட்சி.

    பஸ் படிக்கட்டுகளில் தொங்கியபடி பயணிக்கும் பள்ளி மாணவர்கள் - விபத்தில் சிக்கும் அபாயம்

    • குறைவான பஸ் வசதியால் நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் ஆபத்தை உணராமல் படியில் தொங்கியபடி பயணிக்கின்றனர்.
    • தவித்த மாணவர்களை அங்கிருந்த பொதுமக்கள் தங்கள் இருசக்கர வாகனத்தில் பள்ளிக்கு அழைத்துச் சென்றனர்.

    பல்லடம்:

    பல்லடத்தில் இருந்து மாதப்பூர் வழியாக ஏராளமான பள்ளி மாணவர்கள், பல்லடம் மற்றும் பொங்கலூரில் உள்ள அரசு பள்ளிகளுக்கு செல்கின்றனர். பல்லடத்திலிருந்து சமத்துவபுரம், மாதப்பூர் வழியாக காலை நேரத்தில் ஒரு அரசு பஸ், ஒரு தனியார் பஸ் மட்டுமே இயக்கப்படுகிறது. குறைவான பஸ் வசதியால் நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் ஆபத்தை உணராமல் படியில் தொங்கியபடி பயணிக்கின்றனர்.

    இது குறித்து பலமுறை கோரிக்கை வைத்தும் மனு அளித்தும் இதுவரை கூடுதல் பஸ்கள் இவ்வழித்தடத்தில் இயக்குவதற்கு அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என பொதுமக்கள் கூறுகின்றனர். இதற்கிடையே நேற்று காலை மாதப்பூரில் இருந்து பொங்கலூர் அரசு பள்ளிக்குச் சென்ற 5 மாணவர்களை கூட்ட நெரிசல் காரணமாக பஸ்சில் இருந்து இறக்கிவிட்டு சென்றதால், பள்ளிக்கு செல்ல முடியாமல் அந்த மாணவர்கள் அவதிக்குள்ளாகினர்.

    இந்தநிலையில் பள்ளிக்கு செல்ல முடியாமல் தவித்த மாணவர்களை அங்கிருந்த பொதுமக்கள் தங்கள் இருசக்கர வாகனத்தில் பள்ளிக்கு அழைத்துச் சென்றனர்.

    பஸ்சுக்காக நல்லா கவுண்டம்பாளையத்தில் இருந்து மாதப்பூர் வரை 2 கிலோமீட்டர் தூரம் நடந்தே வருவதாகவும் மாதப்பூரில் இருந்து பொங்கலூர் செல்ல முறையான பஸ்வசதி இல்லாததால் பள்ளிக்கு உரிய நேரத்தில் செல்ல முடியாத நிலை உள்ளதாகவும் பள்ளி மாணவர்கள் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து அரசு பஸ் ஓட்டுனரிடம் கேட்டபோது, பல்லடம், சமத்துவபுரம், மாதப்பூர், நல்லா கவுண்டம்பாளையம் ஆகிய பகுதிகளில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் காலை நேரத்தில் வருகின்றனர்.

    கூடுதல் பஸ் வசதி இல்லாத காரணத்தால் கூட்ட நெரிசல் ஏற்படுவதாகவும் இது குறித்து அரசு போக்குவரத்து டிப்போவில் தெரிவித்துள்ளதாகவும், கூடுதல் பஸ்களை இயக்கினால் மட்டுமே இந்தப்பிரச்சனை தீரும் என்று தெரிவித்தார்.

    Next Story
    ×