என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Reserve Bank"
- தங்கத்தின் கையிருப்பும் 7 கோடி டாலா் குறைந்து 4,084 கோடி டாலராக உள்ளது.
- அந்நியச் செலாவணி சொத்து மதிப்பில் (எஃப்சிஏ) ஏற்பட்ட கடுமையான வீழ்ச்சியே அந்நிய செலாவணி கையிருப்பு கணிசமாக சரிவடைந்ததற்கு முக்கிய காரணம்.
புது டெல்லி:
இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு, கடந்த வாரத்தில் ரூ.46.28 லட்சம் கோடியாக (60,106 கோடி டாலா்) சரிவடைந்துள்ளதாக ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ரிசா்வ் வங்கி வெளியிட்ட புள்ளிவிவரத்தில் கூறப்பட்டிருப்பதாவது:-
கடந்த ஜூன் 3-ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு 60,106 கோடி டாலராக குறைந்துள்ளது. இதற்கு முந்தைய வாரத்தில் இந்த கையிருப்பு 60,136 கோடி டாலராக இருந்த நிலையில், 30 கோடி டாலா் குறைந்துள்ளது. மேலும், கடந்த மே மாதம் 20-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் அந்நிய செலாவணி கையிருப்பு 59,751 கோடி டாலராக காணப்பட்டது.
அந்நியச் செலாவணி சொத்து மதிப்பில் (எஃப்சிஏ) ஏற்பட்ட கடுமையான வீழ்ச்சியே அந்நிய செலாவணி கையிருப்பு கணிசமாக சரிவடைந்ததற்கு முக்கிய காரணம். ஏனெனில், ஒட்டுமொத்த கையிருப்பில் இதன் பங்களிப்பே அதிகமாக உள்ளது.
மேலும், தங்கத்தின் கையிருப்பும் 7 கோடி டாலா் குறைந்து 4,084 கோடி டாலராக உள்ளது.
இவ்வாறு ரிசா்வ் வங்கி வெளியிட்டுள்ள வாராந்திர புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- யுபிஐ பேமன்ட்களில் இனிமேல் கிரெடிட் கார்டுகளையும் இணைக்கும் வசதி கொண்டுவரப்பட உள்ளது.
- முதலில் ரூபே கிரெடிட் கார்டுகளுக்கு மட்டும் யுபிஐயில் இணைக்கும் வசதி வழங்கப்படுமாம்.
யுபிஐ பேமன்ட்களின் செயல்பாடுகளில் முக்கிய முன்னேற்றமாக, கிரெடிட் கார்டுகளையும் யுபிஐ செயலிகளில் இணைக்கும் வசதி விரைவில் நடைமுறைக்கு வர உள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது முன்னதாக யுபிஐ பேமன்ட்களில் டெபிட்கார்டுகளை மட்டும் இணைக்கும் வசதி இருந்தது. இனிமேல் கிரெடிட் கார்டுகளையும் இணைக்கும் வசதி கொண்டுவரப்பட உள்ளது.
முதலில் ரூபே கிரெடிட் கார்டுகளுக்கு மட்டும் யுபிஐயில் இணைக்கும் வசதி வழங்கப்படும் எனவும் அதன்பின் மாஸ்டர் கார்டு, விசா போன்ற கிரெடிட் கார்டுகளுக்கு அந்த வசதி நீட்டிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதுவரை பயனர்கள் டெபிட் கார்டுகளை மட்டும்தான் இணைத்திருக்க முடியுமாம்.
ரிசர்வ் வங்கியின் நிதிக்கொள்கைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. அது முடிந்த பின் ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திதாஸ் தாஸ் நிருபர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது: பயனர்களின் சேமிப்பு கணக்குகளுக்கு வழங்கப்படும் டெபிட் கார்டுகள் அல்லது நடப்பு கணக்குகளை யுபிஐ பேமன்டில் இணைத்துக்கொள்ளும் வசதி தற்போது இருந்து வருகிறது.
இனிமேல் கிரெடிட் கார்டுகளையும் பயனர்கள் யுபிஐ செயலியில் இணைத்துக் கொள்ளும் வசதி கொண்டு வரப்பட உள்ளது. முதலில் ரூபே கிரெடிட் கார்டுகளுக்கும் பின்னர் படிப்படியாக மாஸ்டர் கார்டு, விசா போன்ற மற்ற கிரெடிட் கார்டுகளுக்கும் அந்த வசதி நீட்டிக்கப்படும்" என அவர் தெரிவித்தார்.
சென்னை:
தற்போது புழக்கத்தில் இருக்கும் ரூ. 100, ரூ.50, ரூ.20 ஆகிய நோட்டுகளில் புதிய வண்ணத்தில் ரூபாய் நோட்டுகளை அச்சிட்டு வெளியிட ரிசர்வ் வங்கி முடிவு செய்தது.
அதன்படி ரூ.100, ரூ.50 புதிய நோட்டுகளை அச்சிட்டு புழக்கத்தில் வெளியிட்டுவிட்டது.
தற்போது ரூ.20 புதிய நோட்டையும் ரிசர்வ் வங்கி அச்சிட்டுள்ளது. பச்சையும், மஞ்சளும் கலந்து வெளிர் மஞ்சள் நிறத்தில் இந்த நோட்டு உள்ளது.
ஒரு பக்கம் மகாத்மா காந்தி படமும் ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திசாந்ததாஸ் கையெழுத்தும் இடம் பெற்றுள்ளது. மறு பக்கம் நாட்டின் பாரம்பரியத்தை விளக்கும் வகையில் எல்லோரா குகை ஓவியம் இடம் பெற்றுள்ளது. மேலும் எல்லா ரூபாய் நோட்டுக்களும் இருப்பது போல் தமிழ் உள்பட 15 மொழிகளில் 20 ரூபாய் என்று அச்சிடப்பட்டுள்ளது.
இந்த புதிய 20 ரூபாய் நோட்டுக்கள் விரைவில் புழக்கத்துக்கு வர உள்ளதாக கூறப்படுகிறது. புதிய நோட்டுக்கள் வெளியிட்டாலும் பழைய நோட்டுகளும் புழக்கத்தில் இருக்கும் என்று தெரிவித்துள்ளனர். #NewBankNote #Rs20BankNote #RBIboard
சேலம்-சென்னை எழும்பூர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் கடந்த 2016-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 8-ந்தேதி ரூ.6 கோடி பணம் கொள்ளையடிக்கப்பட்டது. ரெயில் கூரையை அறுத்து ஓடும் ரெயிலில் நடந்த இந்த கொள்ளை சம்பவம் உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இது தொடர்பாக விசாரணை நடத்திய சி.பி.சி.ஐ.டி. டி.எஸ்.பி. கிருஷ்ணன் தலைமையிலான தனிப்படையினர் கொள்ளையில் ஈடுபட்டது மத்திய பிரதேசத்தை சேர்ந்த பார்தி இன கொள்ளையர்கள் என்பதை கண்டு பிடித்தனர்.
இதையடுத்து அவர்களை கைது செய்யும் நோக்கில் தமிழகத்தில் இருந்து 50 போலீசாருடன் கடந்த நவம்பர் மாதம் மத்திய பிரதேசம் சென்ற சி.பி.சி.ஐ.டி. போலீசார் கொள்ளை கும்பல் தலைவன் மோஹர்சிங் (35), தினேஷ் (38), ரோஹன் (32) உள்பட 7 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
டிசம்பர் மாதம் 5-ந் தேதி தமிழக போலீசார் என கருதி மத்திய பிரதேச போலீசார் 2 பேரை கொள்ளையர்கள் துப்பாக்கியால் சுட்டனர். மேலும் அம்மாநில சட்டசபை தேர்தல் பிரசாரம் அப்போது நடந்ததால் தமிழக போலீசாருக்கு மத்திய பிரதேச போலீசார் உதவி செய்யவில்லை.
இதனால் அதே மாதத்தில் 12-ந் தேதி தமிழக போலீசார் சென்னை திரும்பினர். மேலும் கொள்ளையர்கள் எஸ்.எல்.ஆர். உள்பட பல நவீன ரக துப்பாக்கிகள் வைத்திருப்பதை சி.பி.சி.ஐ.டி. போலீசார் உறுதி செய்தனர்.
இதையடுத்து மத்திய பிரதேச கொள்ளையர்களை கைது செய்ய ஆயுதம் தாங்கிய போலீசாரின் உதவி தேவைப்படுவது குறித்து தமிழக டி.ஜி.பி. ராஜேந்திரனிடம் சி.பி.சி.ஐ.டி. சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. அதனை ஏற்ற டி.ஜி.பி. ராஜேந்திரன் சி.பி.சி.ஐ.டி. போலீசாருடன் 50-க்கும் மேற்பட்ட கமாண்டோ படையையும் அனுப்ப முடிவு செய்தார்.
இதனால் கமாண்டோ படை மற்றும் கூடுதல் போலீஸ் பாதுகாப்புடன் சி.பி.சி.ஐ.டி. போலீசார் வருகிற 7-ந் தேதி முதல் மத்திய பிரதேசத்தில் தேடுதல் வேட்டையில் ஈடுபட உள்ளனர். தமிழக போலீசாருக்கு, மத்திய பிரதேச போலீசார் உதவி செய்யாததால் தற்போது வரை கொள்ளையர்கள் அனைவரையும் கைது செய்ய முடியவில்லை.
தற்போது தமிழகத்தில் இருந்து 50-க்கும் மேற்பட்ட கமாண்டோ படையுடன் சி.பி.சி.ஐ.டி. போலீசாரும் களம் இறங்குவதால் இந்த கொள்ளை வழக்கில் மீதம் உள்ள கொள்ளையர்களையும் கட்டாயம் கைது செய்வோம் என்று போலீசார் நம்பிக்கை தெரிவித்தனர். #ChennaiTrainRobbery #RBIMoney
தமிழ்நாட்டைச் சேர்ந்த வக்கீல் ஜி.எஸ்.மணி, சுப்ரீம் கோர்ட்டில் ஒரு பொதுநல வழக்கு ஒன்றை தொடர்ந்தார்.
இது தொடர்பாக அவர் தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டு இருந்ததாவது:-
ஏ.டி.எம். எந்திரங்களில் பணம் எடுக்கும் போது சில நேரங்களில் எந்திரத்தில் இருந்து பணம் வெளியே வருவது இல்லை. ஆனால் எடுக்கப்பட்டதாக குறிப்பிட்ட தொகை கணக்கில் இருந்து கழிக்கப்பட்டு விடுகிறது. இந்த தொகை சம்பந்தப்பட்ட வாடிக்கையாளரின் கணக்கில் உடனே வரவு வைக்கப்படுவது இல்லை. சில நாட்கள் தாமதம் ஆகிறது.
சில நேரங்களில் சம்பந்தப்பட்ட வங்கி மேலாளரிடம் எழுத்துப்பூர்வமாக புகார் அளித்தால்தான் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதே பிரச்சினை ஆன்-லைன் மூலமான வங்கி பண பரிமாற்றங்களிலும் நிகழ்கிறது.
இந்த பிரச்சினைகளால் வாடிக்கையாளர்கள் மிகவும் பாதிக்கப்படுகிறார்கள். எனவே, இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்த மனு சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதி சஞ்சய் கன்னா ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறி இருப்பதாவது:-
இந்த மனுவை தற்போது விசாரணைக்கு ஏற்க முடியாது. எனவே தள்ளுபடி செய்யப்படுகிறது. இருப்பினும் மனுதாரர் இந்த பிரச்சினை குறித்து ரிசர்வ் வங்கியை அணுகி மனு அளிக்கலாம். ரிசர்வ் வங்கி அந்த மனுவை 3 மாதங்களுக்குள் பரிசீலித்து முடிவை எடுக்கவில்லை என்றால் மனுதாரர் உரிய அமைப்பை அணுகி முறையிடலாம்.
இவ்வாறு நீதிபதிகள் தங்கள் உத்தரவில் கூறி உள்ளனர். #RTI #SupremeCourt #RBI
2016ம் ஆண்டு நவம்பர் 8-ந்தேதி பண மதிப்பிழப்பு திட்டம் அறிவிக்கப்பட்டது. இதன்படி அப்போது புழக்கத்தில் இருந்த ரூ.1000, ரூ.500 நோட்டுகள் செல்லாது என அறிவித்து அதற்கு பதிலாக ரூ.2000, ரூ.500 புதிய நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டது.
தொடர்ந்து ஒவ்வொரு வருடமும் இந்த நோட்டுகள் கணிசமாக அச்சடிக்கப்பட்டு புழக்கத்தில் விடப்பட்டன. இதில் ரூ.2000 நோட்டுகளை கருப்பு பணமாக பதுக்குவது அதிகரித்து வருகிறது.
கடந்த மார்ச் வரையிலான புள்ளி விவரப்படி 18 லட்சம் கோடி மதிப்பிலான ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் உள்ளன. அதில் 6.37 லட்சம் கோடி ரூ.2000 நோட்டுகளாகும். இது மொத்த பணத்தில் 37 சதவீதம் ஆகும்.
அதேபோல 500 ரூபாய் நோட்டுகள் ரூ.7.33 லட்சம் கோடி புழக்கத்தில் உள்ளன. இது மொத்த பணத்தில் 43 சதவீதம் ஆகும்.
2000 ரூபாய் நோட்டு அச்சடிப்பதை நிறுத்தி விட்டதாக தகவல் வெளியானது. ஆனால் அவ்வாறு நிறுத்தவில்லை என்றும் அதிகாரிகள் கூறினார்கள். #BlackMoney #RBI #Demonetisation
ரிசர்வ் வங்கியிடம் இருக்கும் உபரி நிதியான 9 லட்சம் கோடி ரூபாயில் இருந்து 3.5 லட்சம் கோடி ரூபாயை கேட்டு ரிசர்வ் வங்கி கவர்னருக்கு மத்திய அரசு அழுத்தம் கொடுப்பதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. ஆனால், இந்தக் குற்றச்சாட்டை மத்திய அரசு மறுத்துள்ளது.
இதே குற்றச்சாட்டை மையப்படுத்தி மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லிக்கு எதிராக வழக்கறிஞர் எம்.எல்.சர்மா என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரணைக்கு ஏற்பதற்கான எந்தவொரு முகாந்திரமோ, காரணமோ இல்லை என்று குறிப்பிட்ட நீதிபதிகள் மனுதாரரான எம்.எல்.சர்மாவுக்கு 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டனர்.
அபராத தொகையை செலுத்தும்வரை அவர் தாக்கல் செய்யும் எந்த மனுக்களையும் அனுமதிக்க வேண்டாம் என்று சுப்ரீம் கோர்ட் பதிவாளரை நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர். #SCdismissesPIL #ArunJaitley
மத்திய நிதி அமைச்சகத்துக்கும் ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் படேலுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
ரிசர்வ் வங்கி தன்னாட்சி அதிகாரம் கொண்டது. அந்த அதிகாரத்துக்கு சவால் விடும் வகையில் ரிசர்வ் வங்கிக்கு மத்திய நிதி அமைச்சகம் சமீபத்தில் 3 கோரிக்கைகளை வைத்தது.
நிதிபற்றாக்குறையை கட்டுப்படுத்த ரிசர்வ் வங்கி தனது கையிருப்பு பணத்தின் பெரும்பகுதியை மத்திய அரசுக்கு மாற்ற வேண்டும் என்பது அதில் ஒரு கோரிக்கை ஆகும். இதற்கு ரிசர்வ் வங்கி உடன்படவில்லை.
இந்த மோதல் வெளிப்படையாக தெரிந்த நிலையில் வருகிற 19-ந்தேதி நடைபெறும் வாரிய கூட்டத்தில் ரிசர்வ் வங்கி கவர்னர் ராஜினாமா செய்யலாம் என்ற தகவல் வெளியானது. இதை நிதி அமைச்சகம் மறுத்திருந்தது.
இந்தநிலையில் பிரதமர் நரேந்திர மோடியை ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் படேல் சந்தித்ததாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த 9-ந்தேதி இந்த சந்திப்பு நடந்ததாக கூறப்படுகிறது. நாட்டின் பொருளாதார நிலை குறித்து இருவரும் ஆலோசனை நடத்தியதாக தெரிகிறது.
மத்திய அரசுக்கும், ரிசர்வ் வங்கி கவர்னருக்கும் இடையே மோதல் ஏற்பட்ட நிலையில் இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. #RBI #PMModi #UrjitPatel
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்