search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ML Sharma"

    ரிசர்வ் வங்கியில் உள்ள இருப்பு தொகையை மத்திய அரசின் பயன்பாட்டுக்கு கேட்டதாக நிதி மந்திரி அருண் ஜெட்லிக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல வழக்கு தொடர்ந்தவருக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. #SCdismissesPIL #ArunJaitley
    புதுடெல்லி:

    ரிசர்வ் வங்கியிடம் இருக்கும் உபரி நிதியான 9 லட்சம் கோடி ரூபாயில் இருந்து 3.5 லட்சம் கோடி ரூபாயை கேட்டு ரிசர்வ் வங்கி கவர்னருக்கு மத்திய அரசு அழுத்தம் கொடுப்பதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. ஆனால், இந்தக் குற்றச்சாட்டை மத்திய அரசு மறுத்துள்ளது.

    இதே குற்றச்சாட்டை மையப்படுத்தி மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லிக்கு எதிராக வழக்கறிஞர் எம்.எல்.சர்மா என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார்.

    இந்த மனு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதி எஸ்.கே.கவுல் ஆகியோரை கொண்ட அமர்வின் முன்னர் இன்று விசாரணைக்கு வந்தது.

    எம்.எல்.சர்மா

    இந்த மனுவை விசாரணைக்கு ஏற்பதற்கான எந்தவொரு முகாந்திரமோ, காரணமோ இல்லை என்று குறிப்பிட்ட நீதிபதிகள் மனுதாரரான எம்.எல்.சர்மாவுக்கு 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டனர்.

    அபராத தொகையை செலுத்தும்வரை அவர் தாக்கல் செய்யும் எந்த மனுக்களையும் அனுமதிக்க வேண்டாம் என்று சுப்ரீம் கோர்ட் பதிவாளரை நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர். #SCdismissesPIL #ArunJaitley
    ×