என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » ml sharma
நீங்கள் தேடியது "ML Sharma"
ரிசர்வ் வங்கியில் உள்ள இருப்பு தொகையை மத்திய அரசின் பயன்பாட்டுக்கு கேட்டதாக நிதி மந்திரி அருண் ஜெட்லிக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல வழக்கு தொடர்ந்தவருக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. #SCdismissesPIL #ArunJaitley
புதுடெல்லி:
ரிசர்வ் வங்கியிடம் இருக்கும் உபரி நிதியான 9 லட்சம் கோடி ரூபாயில் இருந்து 3.5 லட்சம் கோடி ரூபாயை கேட்டு ரிசர்வ் வங்கி கவர்னருக்கு மத்திய அரசு அழுத்தம் கொடுப்பதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. ஆனால், இந்தக் குற்றச்சாட்டை மத்திய அரசு மறுத்துள்ளது.
இதே குற்றச்சாட்டை மையப்படுத்தி மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லிக்கு எதிராக வழக்கறிஞர் எம்.எல்.சர்மா என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரணைக்கு ஏற்பதற்கான எந்தவொரு முகாந்திரமோ, காரணமோ இல்லை என்று குறிப்பிட்ட நீதிபதிகள் மனுதாரரான எம்.எல்.சர்மாவுக்கு 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டனர்.
அபராத தொகையை செலுத்தும்வரை அவர் தாக்கல் செய்யும் எந்த மனுக்களையும் அனுமதிக்க வேண்டாம் என்று சுப்ரீம் கோர்ட் பதிவாளரை நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர். #SCdismissesPIL #ArunJaitley
ரிசர்வ் வங்கியிடம் இருக்கும் உபரி நிதியான 9 லட்சம் கோடி ரூபாயில் இருந்து 3.5 லட்சம் கோடி ரூபாயை கேட்டு ரிசர்வ் வங்கி கவர்னருக்கு மத்திய அரசு அழுத்தம் கொடுப்பதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. ஆனால், இந்தக் குற்றச்சாட்டை மத்திய அரசு மறுத்துள்ளது.
இதே குற்றச்சாட்டை மையப்படுத்தி மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லிக்கு எதிராக வழக்கறிஞர் எம்.எல்.சர்மா என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
இந்த மனு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதி எஸ்.கே.கவுல் ஆகியோரை கொண்ட அமர்வின் முன்னர் இன்று விசாரணைக்கு வந்தது.
எம்.எல்.சர்மா
இந்த மனுவை விசாரணைக்கு ஏற்பதற்கான எந்தவொரு முகாந்திரமோ, காரணமோ இல்லை என்று குறிப்பிட்ட நீதிபதிகள் மனுதாரரான எம்.எல்.சர்மாவுக்கு 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டனர்.
அபராத தொகையை செலுத்தும்வரை அவர் தாக்கல் செய்யும் எந்த மனுக்களையும் அனுமதிக்க வேண்டாம் என்று சுப்ரீம் கோர்ட் பதிவாளரை நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர். #SCdismissesPIL #ArunJaitley
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X