என் மலர்
நீங்கள் தேடியது "Reserve Bank Governor"
ஐதராபாத்:
ஐதராபாத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பா.ஜனதா மூத்த தலைவர் சுப்பிரமணியசாமி பேசியதாவது:-
ரிசர்வ் வங்கியின் புதிய கவர்னர் மிகப்பெரிய ஊழல்வாதி. நிதி அமைச்சகத்தில் இருந்து அவரை பதவி நீக்கம் செய்ய வைத்தேன். அப்படிப்பட்டவர் ரிசர்வ் வங்கியின் கவர்னராக நியமிக்கப்பட்டது ஆச்சரியத்தை அளிக்கிறது.
ரிசர்வ் வங்கி கவர்னர் பதவிக்கு பெங்களூர் ஐ.ஐ.எம். பேராசிரியர் ஆர்.வைத்தியநாதன் தான் தகுதியானவர். அவர் ஆர்.எஸ்.எஸ். அமைப்பை சேர்ந்தவர்.
பிரதமர் மோடி அரசுக்கு எதிராக எதிர்ப்பு அலை எதுவும் வீசவில்லை. வருகிற பாராளுமன்ற தேர்தலில் மீண்டும் பா.ஜனதாவே வெற்றி பெறும்.
காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி இங்கிலாந்து குடியுரிமை வைத்துள்ளார். அவரால் நமது நாட்டின் பிரதமராக முடியாது. ராகுலின் இந்திய குடியுரிமையை ரத்து செய்ய வேண்டும். அப்படி செய்தால் அவரால் எம்.பி.யாக கூட முடியாது.
தமிழகம் உள்பட நாடு முழுவதும் உள்ள மக்கள் அயோத்தியில் ராமருக்கு கோவில் கட்ட வேண்டும் என்று விரும்புகின்றனர். எனவே அயோத்தியில் நிச்சயம் ராமர் கோவில் கட்டுவோம். ராமர் கோவில் தொடர்பாக இந்து தர்ம ஆச்சார்ய சபையிலும் நான் திட்டம் அளித்துள்ளேன்.
இவ்வாறு அவர் கூறினார். #SubramanianSwamy
மத்திய நிதி அமைச்சகத்துக்கும் ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் படேலுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
ரிசர்வ் வங்கி தன்னாட்சி அதிகாரம் கொண்டது. அந்த அதிகாரத்துக்கு சவால் விடும் வகையில் ரிசர்வ் வங்கிக்கு மத்திய நிதி அமைச்சகம் சமீபத்தில் 3 கோரிக்கைகளை வைத்தது.
நிதிபற்றாக்குறையை கட்டுப்படுத்த ரிசர்வ் வங்கி தனது கையிருப்பு பணத்தின் பெரும்பகுதியை மத்திய அரசுக்கு மாற்ற வேண்டும் என்பது அதில் ஒரு கோரிக்கை ஆகும். இதற்கு ரிசர்வ் வங்கி உடன்படவில்லை.
இந்த மோதல் வெளிப்படையாக தெரிந்த நிலையில் வருகிற 19-ந்தேதி நடைபெறும் வாரிய கூட்டத்தில் ரிசர்வ் வங்கி கவர்னர் ராஜினாமா செய்யலாம் என்ற தகவல் வெளியானது. இதை நிதி அமைச்சகம் மறுத்திருந்தது.
இந்தநிலையில் பிரதமர் நரேந்திர மோடியை ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் படேல் சந்தித்ததாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த 9-ந்தேதி இந்த சந்திப்பு நடந்ததாக கூறப்படுகிறது. நாட்டின் பொருளாதார நிலை குறித்து இருவரும் ஆலோசனை நடத்தியதாக தெரிகிறது.
மத்திய அரசுக்கும், ரிசர்வ் வங்கி கவர்னருக்கும் இடையே மோதல் ஏற்பட்ட நிலையில் இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. #RBI #PMModi #UrjitPatel
ரிசர்வ் வங்கி கவர்னராக உர்ஜித் படேல் பதவி வகித்து வருகிறார். ரிசர்வ் வங்கிக்கு தன்னாட்சி அதிகாரம் உள்ளது.
அந்த அதிகாரத்துக்கு சவால் விடும் வகையில், ரிசர்வ் வங்கிக்கு மத்திய அரசு சமீபத்தில் 3 கோரிக்கைகளை விடுத்தது. நிதி பற்றாக்குறையை கட்டுப்படுத்த ரிசர்வ் வங்கி தனது கையிருப்பு பணத்தில் பெரும்பகுதியை மத்திய அரசுக்கு மாற்ற வேண்டும் என்பது அதில் ஒரு கோரிக்கை.
இதற்கு ரிசர்வ் வங்கி உடன்படவில்லை.

இதையடுத்து, ரிசர்வ் வங்கி மீது மத்திய அரசு தரப்பில் வெளிப்படையாக விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகின்றன. தனது 3 கோரிக்கைகளுக்கு ரிசர்வ் வங்கியை பணிய வைக்க ரிசர்வ் வங்கி சட்டத்தின் 7-வது பிரிவை பயன்படுத்தி, ரிசர்வ் வங்கிக்கு மத்திய அரசு உத்தரவு பிறப்பிக்கும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் படேல், வருகிற 19-ந் தேதி பதவி விலகக்கூடும் என்று ‘மணிலைப்’ என்ற ஆன்லைன் பொருளாதார பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. உர்ஜித் படேலுக்கு நெருக்கமானவர்களை மேற்கோள்காட்டி, இந்த தகவலை தெரிவித்துள்ளது.
அந்த வட்டாரங்கள், “மத்திய அரசுடனான மோதலால் உர்ஜித் படேல் சோர்வு அடைந்ததுடன், அவரது உடல்நிலையையும் அது பாதித்துள்ளது. எனவே, இந்த மோதல் மேலும் அதிகரித்தால், ரிசர்வ் வங்கியின் போர்டு கூட்டம் 19-ந் தேதி நடைபெறும்போது அவர் பதவி விலகுவார்” என்று கூறியதாக செய்தியில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. #RBIGovernor #UrjitPatel #Resign






