search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "NDA govt"

    நாட்டை பிளவுப்படுத்த நினைக்கும் பாஜக தலைமையிலான மத்திய அரசு அதிகாரம் அளித்த மக்களை வஞ்சித்து விட்டதாக பிரியங்கா காந்தி குற்றம்சாட்டியுள்ளார். #NDAgovt #NDAbetrayed #Priyanka #Priyankainwayanad
    திருவனந்தபுரம்:

    உத்தரப்பிரதேசம் (கிழக்கு) மாநில காங்கிரஸ் பொறுப்பாளர் பிரியங்கா காந்தி கேரள மாநிலம், வயநாடு பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு ஆதரவாக இந்த தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் இன்று தீவிரமான பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார்.

    மனத்தாவாடி பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், இது என் நாடு, இங்குள்ள மலைகள் என் நாட்டை சேர்ந்தது. உத்தரப்பிரதேசத்தில் உள்ள கோதுமை வயல்கள் என் நாட்டை சேர்ந்தது. தமிழ்நாடு என் நாட்டை சேர்ந்தது. குஜராத் என் நாட்டை சேர்ந்தது. ஆனால், கடந்த ஐந்தாண்டுகளில் மத்தியில் ஆட்சி செய்த ஒரே காரியம் இந்த நாட்டை பிளவுப்படுத்தியதுதான் என்று குற்றம்சாட்டினார்.



    ஐந்தாண்டுகளுக்கு முன்னர் மிகப்பெரிய பெரும்பான்மையுடன் மத்தியில் ஒரு ஆட்சி அதிகாரத்துக்கு வந்தது. இந்த நாட்டு மக்கள் அந்த அரசின் மீது அளவுகடந்த நம்பிக்கை வைத்திருந்தனர். ஆனால், அதிகாரத்தை பிடித்ததும் மக்களின் நம்பிக்கைக்கு அவர்கள் வஞ்சனை செய்தனர்.

    விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாக்கப்படும். 2 கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்படும் என்பது உள்பட அவர்கள் அளித்திருந்த வாக்குறுதிகளை எல்லாம் மறந்து விட்டார்கள். தங்களுக்கு அதிகாரம் அளித்த மக்களையும் மறந்து விட்டனர்.

    அதிகாரம் மக்களுக்கானது அல்ல; ஆட்சியாளர்களுக்கு உரிமையான சொத்து என்பது போன்ற மனநிலையில் அவர்கள் மிதக்க தொடங்கி விட்டனர்.

    பிறந்ததில் இருந்து நான் நன்றாக புரிந்து வைத்திருக்கும் ஒருவரின் சார்பில் உங்கள் முன்னால் இன்று நிற்கிறேன். இந்த தேர்தலில் அவர் உங்கள் வேட்பாளராக நிற்கிறார். கடந்த 10 ஆண்டுகளாக அரசியல் எதிரிகளிடம் தனிப்பட்ட ஏச்சுப்பேச்சுகளை தாங்கி இந்த நாட்டின் ஒற்றுமைக்காகவும் பன்முகத்தன்மை பாதுகாக்கப்படவும் பாடுபடும் அவருக்கு நீங்கள் வாக்களித்து வெற்றிபெற வைக்க வேண்டும் எனவும் பிரியங்கா காந்தி கேட்டுக் கொண்டார். #NDAgovt #NDAbetrayed #Priyanka  #Priyankainwayanad

    ரிசர்வ் வங்கி கவர்னர் ராஜினாமா தொடர்பாக கருத்து தெரிவித்த ப.சிதம்பரம், மத்தியில் ஆட்சி செய்யும் பா.ஜ.க. அரசில் சுயமரியாதை உள்ள கல்வியாளர்கள், அறிவாளிகள் யாரும் பணியாற்ற மாட்டார்கள் என குறிப்பிட்டுள்ளார். #PChidambaram #UrjitPatel
    புதுடெல்லி:

    ரிசர்வ் வங்கியின் 24-வது கவர்னராக கடந்த 5-9-2016 அன்று பொறுப்பேற்ற உர்ஜித் பட்டேல் தனது பதவிக்காலம் முடிவதற்கு முன்னர் இன்று தனது பதவியை ராஜினாமா செய்தார்.

    அவரது பணிக்காலத்தில் ஆற்றிய கடமைகளுக்கு பிரதமர் மோடி, நிதி மந்திரி அருண் ஜெட்லி ஆகியோர் புகழாரம் சூட்டியுள்ள நிலையில் சுயமரியாதை உள்ளவர்கள் யாரும் பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசில் பணியாற்ற மாட்டார்கள் என முன்னாள் நிதி மந்திரி ப.சிதம்பரம் குறிப்பிட்டுள்ளார்.

    இதுதொடர்பாக, தனது டுவிட்டர் பக்கத்தில் அடுத்தடுத்து வெளியிட்டுள்ள பதிவுகளில், ‘கடந்த மாதம் 19-ம் தேதி நடைபெற்ற ரிசர்வ் வங்கி மேலிட கூட்டத்தின்போதே உர்ஜித் பட்டேல் ராஜினாமா செய்திருக்க வேண்டும்.

    ஆனால், இந்த அரசு தனது வழியை மாற்றிக்கொள்ளும் என அவர் கருதி இருக்கலாம். ஆனால், அப்படி எல்லாம் நடக்காது என்பது எனக்கு தெரியும். நல்லவேளையாக மீண்டும் ஒரு அவமதிப்பான கூட்டம் நடப்பதற்கு முன்னர் அவர் ராஜினாமா செய்துள்ளார்.

    இதை அறிந்து நான் ஆச்சரியப்படவில்லை. வேதனைப்படுகிறேன். இந்த அரசில் சுயமரியாதை உள்ள எந்த கல்வியாளர்களும், அறிவாளிகளும் பணியாற்ற முடியாது’ என ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். 

    ரிசர்வ் வங்கியை ஒரு குழுவினரால் நடத்தும் கம்பனியாக மாற்ற இந்த அரசு நினைக்கிறது. தேர்தல் நெருங்கும் நிலையில் மத்திய அரசின் பொருளாதார சீர்குலைவை சரிகட்டுவதற்காக ரிசர்வ் வங்கியிடம் இருக்கும் உபரி நிதியை பறிப்பதுதான் இந்த அரசின் அவசர நோக்கமாக உள்ளது எனவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார். #selfrespectingscholar #selfrespectingacademic #NDAgovt #PChidambaram #UrjitPatel
    ×