search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "betrayed"

    நாட்டை பிளவுப்படுத்த நினைக்கும் பாஜக தலைமையிலான மத்திய அரசு அதிகாரம் அளித்த மக்களை வஞ்சித்து விட்டதாக பிரியங்கா காந்தி குற்றம்சாட்டியுள்ளார். #NDAgovt #NDAbetrayed #Priyanka #Priyankainwayanad
    திருவனந்தபுரம்:

    உத்தரப்பிரதேசம் (கிழக்கு) மாநில காங்கிரஸ் பொறுப்பாளர் பிரியங்கா காந்தி கேரள மாநிலம், வயநாடு பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு ஆதரவாக இந்த தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் இன்று தீவிரமான பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார்.

    மனத்தாவாடி பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், இது என் நாடு, இங்குள்ள மலைகள் என் நாட்டை சேர்ந்தது. உத்தரப்பிரதேசத்தில் உள்ள கோதுமை வயல்கள் என் நாட்டை சேர்ந்தது. தமிழ்நாடு என் நாட்டை சேர்ந்தது. குஜராத் என் நாட்டை சேர்ந்தது. ஆனால், கடந்த ஐந்தாண்டுகளில் மத்தியில் ஆட்சி செய்த ஒரே காரியம் இந்த நாட்டை பிளவுப்படுத்தியதுதான் என்று குற்றம்சாட்டினார்.



    ஐந்தாண்டுகளுக்கு முன்னர் மிகப்பெரிய பெரும்பான்மையுடன் மத்தியில் ஒரு ஆட்சி அதிகாரத்துக்கு வந்தது. இந்த நாட்டு மக்கள் அந்த அரசின் மீது அளவுகடந்த நம்பிக்கை வைத்திருந்தனர். ஆனால், அதிகாரத்தை பிடித்ததும் மக்களின் நம்பிக்கைக்கு அவர்கள் வஞ்சனை செய்தனர்.

    விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாக்கப்படும். 2 கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்படும் என்பது உள்பட அவர்கள் அளித்திருந்த வாக்குறுதிகளை எல்லாம் மறந்து விட்டார்கள். தங்களுக்கு அதிகாரம் அளித்த மக்களையும் மறந்து விட்டனர்.

    அதிகாரம் மக்களுக்கானது அல்ல; ஆட்சியாளர்களுக்கு உரிமையான சொத்து என்பது போன்ற மனநிலையில் அவர்கள் மிதக்க தொடங்கி விட்டனர்.

    பிறந்ததில் இருந்து நான் நன்றாக புரிந்து வைத்திருக்கும் ஒருவரின் சார்பில் உங்கள் முன்னால் இன்று நிற்கிறேன். இந்த தேர்தலில் அவர் உங்கள் வேட்பாளராக நிற்கிறார். கடந்த 10 ஆண்டுகளாக அரசியல் எதிரிகளிடம் தனிப்பட்ட ஏச்சுப்பேச்சுகளை தாங்கி இந்த நாட்டின் ஒற்றுமைக்காகவும் பன்முகத்தன்மை பாதுகாக்கப்படவும் பாடுபடும் அவருக்கு நீங்கள் வாக்களித்து வெற்றிபெற வைக்க வேண்டும் எனவும் பிரியங்கா காந்தி கேட்டுக் கொண்டார். #NDAgovt #NDAbetrayed #Priyanka  #Priyankainwayanad

    கோடிக்கணக்கான இந்துக்களுக்கு பிரதமர் மோடி தலைமையிலான பாஜக ஆட்சி துரோகம் செய்துவிட்டதாக விஷ்வ இந்து பரிஷத் அமைப்பின் முன்னாள் தலைவர் பிரவீன் தொகாடியா குற்றம்சாட்டியுள்ளார். #ModiBetrayedHindus #Togadia
    லக்னோ:

    அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் விஷ்வ இந்து பரிஷத் அமைப்பின் தலைவர் பிரவீன் தொகாடியா, இந்திய பிரதமர் மோடிக்கு அயோத்தியில் வந்து தரிசனம் செய்யக்கூட நேரம் இல்லை என்றும், ஆனால் வெளிநாடுகளில் உள்ள மசூதிகளுக்கு செல்ல நேரம் இருப்பதாகவும் சாடியுள்ளார்.

    மேலும், அயோத்தி, மதுரா, மற்றும் காசி ஆகிய பகுதிகளில் கோவில் கட்டப்படும் என அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றாமல், மோடி பல கோடி இந்துக்களுக்கு துரோகம் செய்துவிட்டதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.



    தொடர்ந்து பேசிய தொகாடியா, அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்காக தாம் ஒரு வரைவு அறிக்கையை தயார் செய்து வருவதாகவும், அதனை அரசு பாராளுமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

    மேலும், அந்தரஷ்ட்ரியா இந்து பரிஷத் எனும் புதிய அமைப்பைத் துவங்கியுள்ள தொகாடியா, அயோத்தியில் ராமர் கோவில் கட்ட வலியுறுத்தி, அக்டோபர் மாதத்தில் உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் இருந்து அயோத்தி வரை பேரணி நடத்த இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். #ModiBetrayedHindus #Togadia
    காவிரி விவகாரத்தில் காங்கிரஸ், பாரதீய ஜனதா அரசு தமிழகத்திற்கு துரோகம் செய்து வருகின்றது என்று ஜி.கே.வாசன் குற்றம் சாட்டியுள்ளார். #gkvasan #cauveryissue

    திண்டுக்கல்:

    தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் இன்று திண்டுக்கல் வந்தார். அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    டெல்டா பகுதியில் குறுவை சாகுபடிக்கு தண்ணீர் கிடைக்க காவிரி மேலாண்மை ஆணையம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். பெட்ரோல்- டீசல் விலையை மத்திய அரசு உடனடியாக குறைக்க வேண்டும்.

    கச்சா எண்ணை விலை ஏற்றத்துக்கு ஏற்ப விலை நிர்ணயம் செய்ய வேண்டும். விலை ஏற்றத்தால் அத்தியாவசிய பொருட்கள் விலை ஏறி வருகிறது.

    ஆகையால் ஜி.எஸ்.டி.க்குள் பெட்ரோல் டீசலை கொண்டு வரவேண்டும். காவிரி விவகாரத்தில் காங்கிரஸ், பாரதீய ஜனதா அரசு தமிழகத்திற்கு துரோகம் செய்து வருகின்றது. பா.ஜனதா- காங்கிரஸ் எதிரும் புதிருமாக இருந்தாலும் தமிழகத்திற்கு காவிரி தண்ணீர் தருவது தொடர்பாக 2 கட்சிகளும் ஒன்று சேர்ந்து தண்ணீர் தராமல் துரோகம் செய்து வருகின்றனர்.

    தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது. அதனை சரி செய்வது ஆளுங்கட்சியின் கடமையாகும் வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் வங்கிக் கொள்ளை மற்றும் திருட்டு வழக்குகளில் ஈடுபடுகின்றனர்.

    இவ்வாறு அவர் கூறினார். #gkvasan #cauveryissue

    ×