search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "report"

    • ராமநாதபுரத்தில் நாளை நடக்கும் வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் கூட்டம் குறித்து காதர்பாட்சா முத்துராமலி்ங்கம் எம்.எல்.ஏ. அறிக்கை விடுத்துள்ளார்.
    • தேர்தல் பணிக்குழு தலைவர் ராஜகண்ணப்பன் கலந்து கொண்டு பேசுகிறார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட தி.மு.க. செயலாளர் முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    ராமநாதபுரத்திற்கு வருகிற 17-தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகை தந்து தென் மண்டல அளவிலான வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் பயிற்சி பாசறைக் கூட்டத்தில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றுகிறார்.

    இது தொடர்பாக வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டங்கள் நாளை (ஞாயிற்றுக்கிழமை) சட்டமன்ற தொகுதி வாரியாக கீழ்கண்ட இடங்களில் நடைபெற உள்ளது.

    முதுகுளத்தூர் தொகுதி வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் கூட்டம் காலை 10 மணிக்கு முதுகுளத்தூரில் உள்ள சர்வ விநாயக சாய் மகாலில் நடக்கிறது. பரமக்குடி தொகுதி வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் கூட்டம் காலை 11 மணிக்கு பரமக்குடி ஏபிஷா மகாலில் நடக்கிறது.

    திருவாடனை தொகுதி வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் கூட்டம், மதியம் 2 மணியளவில் ஆர்.எஸ்.மங்கலம் குட்லு மகாலில் நடக்கிறது. ராமநாதபுரம் தொகுதி வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் கூட்டம், மாலை 4 மணியளவில், ராமநாதபுரம் பாரதிநகர் வைஸ்ராய் மகாலில் நடக்கிறது.

    இக்கூட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மற்றும் கதர் வாரியத் துறை அமைச்சர், தேர்தல் பணிக்குழு தலைவர் ராஜகண்ணப்பன் கலந்து கொண்டு பேசுகிறார்.

    எனவே ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள மாநில, மாவட்ட நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்கள் மற்றும் அனைத்து அணி நிர்வாகிகள், தொண்டர்கள். அவரவர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட இடங்களில் தவறாது கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    • முதல்-அமைச்சர் பங்கேற்கும் மண்டபம் மீனவர்கள் மாநாட்டில் 5 ஆயிரம் பேர் பங்கேற்பார்கள் என தி.மு.க. செயலாளர் அப்துல்ரகுமான் மரைக்காயர் தெரிவித்துள்ளார்.
    • 5000 பேர் மாநாட்டில் பங்கேற்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    மண்டபம்

    முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் ராமநாதபுரம் மாவட்டத்திற்கு வருகிற 17, 18-ந் தேதிகளில் வருகை தர உள்ளார். 17-ந்தேதி ராமநாதபுரத்தில் நடை பெறும் முகவர்கள் கூட்டத்திலும், 18-ந் தேதி மண்டபத்தில் நடைபெறும் மீனவர்கள் மாநாட்டிலும் முதல்-அமைச்சர் கலந்து கொண்டு மீனவர்களின் குறைகளை கேட்டறிந்து பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்க உள்ளார்.

    இது தொடர்பான தி.மு.க. செயல் வீரர்கள் கூட்டம் மண்டபம் பேரூ ராட்சி மகாலில் நடந்தது. அவைத்தலைவர் முருகானந்தம் தலைமை தாங்கினார். மாவட்ட சிறுபான்மை பிரிவு துணை அமைப்பாளர் பாருக் முன்னிலை வகித்தார்.

    பேரூர் செயலாளர் அப்துல் ரகுமான் மரைக்காயர் கூட்டத்தில் பேசியதா வது:-

    வருகிற 18-ந்தேதி முதல்-அமைச்சர் மீனவர்கள் மாநாட்டில் கலந்து கொள்கிறார்.அவருக்கு ராமநாதபுரம் மாவட்ட தி.மு.க. செயலாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் ஆலோசனையின் பேரில் சிறப்பான வரவேற்பு அளிக்க ஏற்பாடு கள் செய்து வருகிறோம்.

    இது தவிர மண்டபம் பகுதியில் இருந்து மீனவர் சமுதாயத்தை சேர்ந்த 5000 பேர் மாநாட்டில் பங்கேற்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் கவுன்சி லர்கள் சகுபர், முகமது மீரா சாஹிப்,வாசிம் அக்ரம், அயலக அணி துணை அமைப்பாளர் காதர் ஜான் மற்றும் அனைத்து விசைப் படகு சங்க தலைவர்கள் சார்பில் விஜயரூபன்,ஜாகிர் உசேன், பாலசுப்பிர மணியன், செல்வகுமார், சர்புதீன், தி.மு.க. உறுப்பி னர்கள் ராஜகோபால், காந்தக்குமார், குலாம், அயூப்கான், பகுருதீன், வெள்ளைச்சாமி, நிசாந்த,வேதாளை கோவிந்தன், முனியசாமி, செய்யது சுல்தான், வார்டு செயலாளர் கஜினி, ஜியாவு தீன், முனியசாமி, முத்து இருளாண்டி, முன்னாள் நகர் பொருளாளர் ராஜ்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • பொது நிதி ஒதுக்கீடு பணிகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என கோரிக்கை வைத்தார்.
    • அ.தி.மு.க. ஆட்சியில் இதுபோன்று வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டதா? என பதில் கேள்வி எழுப்பினார்.

    மதுரை

    மதுரை மாநகராட்சி கூட்டரங்கில் மாமன்ற கூட்டம் மேயர் இந்திராணி பொன் வசந்த் தலைமையில் நடந்தது. மாநகராட்சி ஆணையாளர் பிரவீன் குமார், துணை மேயர் நாகராஜன் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் அ.தி.மு.க. கவுன்சிலர் சோலை ராஜா பேசுகையில் பேசுகை யில், முல்லை பெரியார் கூட்டு குடிநீர் திட்ட பணிகள் குறித்து விளக்க வேண்டும், பொது நிதி ஒதுக்கீட்டில் மேற்கொள்ளப்படும் பணிகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என கோரிக்கை வைத்தார்.

    உடனே மேயர் அ.தி.மு.க. ஆட்சியில் இதுபோன்று வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டதா? என பதில் கேள்வி எழுப்பினார். இரு தரப்பிலும் கட்சியினர் கூச்சல் எழுப்பினர். இதனால் கூட்டத்தில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது. பின்னர் கவுன்சிலர்கள் தங்கள் பகுதியை சார்ந்த குறைகளை தெரிவித்தனர்.

    அப்போது 26- வது வார்டு அ.தி.மு.க. கவுன்சிலர் சொக்காயி பேசுகையில், கவுன்சிலர்களுக்கு சம் பளத்தை உயர்த்தி அறிவித்த முதல்-அமைச்சரை பாராட்டி கல்வெட்டு வைக்க வேண்டும் என்றும், எனது வாக்குக்கு மதிப்பளிக்க வேண்டும் என்றும் கூறினார். உடனே மேயர் இது ஜக்கம்மா வாக்கு என பதிலளித்தார். இதனால் கூட்டத்தில் சிரிப்பலை எழுந்தது.

    • முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும்.
    • ஆர்.பி.உதயகுமார் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

    மதுரை

    முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது-

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திருச்சியில் தி.மு.க. பூத் கமிட்டி கூட்டத்தில் முதல்- அமைச்சர் என்ற மன நிலையை மறந்து எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடியாரை வாய்க்கு வந்த வார்த்தை களால் விமர்சித்துள்ளார்.

    மணிப்பூர் சம்பவம் மிக வும் வேதனை தரத்தக்கது தான். இதற்கு அனைவரும் கவலை தெரிவித்துள்ளனர். கடந்த 21-ந் தேதி எடப்பாடி யார் இந்த சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிக்கையாக தனது டுவிட்டர் பதிவில் கூறி உள்ளார்.

    ஆனால் எடப்பாடியாரின் அறிக்கை வரவில்லை என்று முழு பூசணிக்காயை சோற்றில் மறைத்த கதை யாக, முதல்-அமைச்சர் பதவியை வைத்துக் கொண்டு மு.க.ஸ்டாலின் தரம் தாழ்ந்து பேசக் கூடாது.

    எடப்பாடியாருக்கு செல்வாக்கு அதிகரித்து வரு கிறது என்பதை பொறுத்துக் கொள்ள முடியாமல், பேசி உள்ளார். இன்றைக்கு எதிர்க்கட்சி தலைவராக, 2 கோடி அ.தி.மு.க. தொண்டர்களின் தலைவராக எடப்பாடியார் உள்ளார்

    எடப்பாடியாரை பழிப்ப தாக பேசிய பேச்சு 2 கோடி தொண்டர்களையும், 8 கோடி மக்களையும் பழிப்ப தாக உள்ளது. திருச்சி கூட்டத்தில் எடப்பாடியாரை கொத்தடிமை என்று விமர் சித்துள்ளார் மு.க.ஸ்டாலின். இந்த பேச்சால் 2 கோடி தொண்டர்களின் மனம் புண்பட்டுள்ளது.

    எனவே உடனடியாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மன்னிப்பு கோர வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • மதுரை வரும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு எழுச்சிமிகு வரவேற்பு அளிக்க வேண்டும்.
    • தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

    மதுரை

    கலைஞர் நூற்றாண்டு நூலகத்திறப்பு விழாவிற்கு நாளை (15-ந்தேதி) மதுரை வரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கிராமிய கலைகளுடன் மாநகர், வடக்கு மற்றும் தெற்கு மாவட்டங்கள் சார்பில் எழுச்சிமிக்க வரவேற்பு அளிக்கப்ப டுகிறது.

    இதுகுறித்து மாவட்ட செயலாளர்கள் அமைச்சர் பி.மூர்த்தி, கோ.தளபதி எம்.எல்.ஏ., சேடப்பட்டி மு.மணி மாறன் ஆகியோர் வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:-

    செம்மொழி நாயகர், முத்தமிழறிஞர் கலைஞரின் நூற்றாண்டு நூலகம் மதுரையில் உலகத்தரம் வாய்ந்த அளவில் ரூ.216 கோடி மதிப்பீட்டில் நிறுவப்பட்டுள்ளது. பள்ளி மாணவ, மாணவிகள், கல்லூரி மாணவர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் பயன்பெறும் வகையில் கட்டப்பட்டுள்ள வரலாற்று சிறப்புமிக்க நூலகத்தை தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை திறந்து வைத்து பேசுகிறார். இதற்காக நாளை காலை விமானம் மூலம் மதுரை வரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கிராமிய கலைகளுடன் மதுரை விமான நிலையம் முதல் விழா நடைபெறும் இடம் வரை பல்லாயிரக் கணக்கான தி.மு.க.வினர் பதாகைகளை ஏந்தி, எழுச்சிமிகுதியுடன் வரவேற்க வேண்டும்.

    இந்த மாபெரும் வரவேற்பு நிகழ்வில் மதுரை வடக்கு, மதுரை மாநகர், மதுரை தெற்கு மாவட்ட கழகத்தினர், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பி னர்கள், ஒன்றிய, நகர, பகுதி, வட்டக்கழக, பேரூர் கழக செயலாளர்கள், நிர்வாகிகள், அனைத்து அணிகளின் அமைப்பா ளர் கள், துணை அமைப்பாளர் கள், கழக முன்னோடிகள், உள்ளா ட்சி பிரதிநிதிகள், ஊராட்சி செயலாளர்கள், நிர்வாகிகள், கழகத்தினர், கழக உடன்பிறப்புகள் என பல்லாயி ரக்க ணக்கானோர் பங்கேற்க வேண்டும்.

    இந்த வரவேற்பு நிகழ்வில் பொதுமக்களுக் கும், போக்குவரத்திற்கும் எவ்வித இடையூறுமின்றி தி.மு.க.வினர் மிக உற்சாக மாக கலந்து கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • அ.தி.மு.க. ஆலோசனைக்கூட்டம் நடந்தது.
    • ஆகஸ்டு 20-ந் தேதி மாபெரும் எழுச்சி மாநாடு விமரிசையாக நடைபெறுகிறது.

    மதுரை

    மதுரை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது-

    அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி ஆணைக்கிணங்க மதுரையில் ஆகஸ்டு 20-ந் தேதி மாபெரும் எழுச்சி மாநாடு விமரிசையாக நடைபெறுகிறது.

    இந்த மாநாட்டின் முகூர்த்த கால் மற்றும் பணிகள் தொடர்பாக நிர்வாகிகள் மேற்கொள்ள வேண்டிய அடுத்த கட்ட பணிகள் குறித்து ஆலோ சனை செய்வதற்காக மதுரை மாநகர் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மதுரை பனகல் சாலையில் உள்ள கட்சி அலுவலகத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) மாலை 5 மணி அளவில் நடைபெறு கிறது.

    இந்த கூட்டத்தில் மதுரையில் நடைபெற உள்ள அ.தி.மு.க. எழுச்சி மாநாடு குறித்து முக்கிய ஆலோசனைகள் வழங்கப் படுகின்றன.

    இந்த ஆலோ சனை கூட்டத்தில் இந்நாள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட நிர்வாகிகள், பகுதி, வட்டக் நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், கூட்டுறவு சங்க நிர்வாகிகள், கழக முன்னோடிகள், தொண்டர்கள், செயல் வீரர்கள் அனைவரும் திர ளாக பங்கேற்று சிறப் பிக்கும்படி வேண்டுகிறேன்.

    இவ்வாறு அவர் தெரி வித்துள்ளார்.

    • இந்து சமய அறநிலையத்துறை பதில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.
    • வழக்கு விசாரணையை 4 வாரத் திற்கு ஒத்திவைத்தனர்.

    மதுரை

    மதுரை திருப்பரங்குன்றத்தை சேர்ந்த ராம லிங்கம், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்த தாவது:-

    திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவில் இந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. திருப்பரங்குன்றம் மலையின் மேல் காசி விஸ்வநாதர் கோவிலும், சிக்கந்தர் பாதுஷா தர்காவும் அமைந்துள்ளன. இந்த நிலையில் மலைக்கு போகும் பாதையில் நெல்லித்தோப்பு எனும் பகுதியில் ரம்ஜான் மாதங்களில் முஸ்லிம்கள் தொழுகையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதனால் கோவிலுக்கு செல்லக்கூடிய பக்தர்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. எனவே திருப்பரங்குன்றம் மலையின் மேல் உள்ள நெல்லித்தோப்பு பகுதியில் தொழுகை உள்ளிட்ட நிகழ்ச்சிகள் செய்ய தடை விதித்து உத்தரவிட வேண்டும்.

    இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

    இந்த மனு நீதிபதிகள் சுப்பிரமணியன், விக்டோரியா கவுரி ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.அப்போது நீதிபதிகள், "மலைக்கு மேல் தானே தர்காவும் அமைந்துள்ளது. அரை மணி நேரம் தொழுகை நடத்துவதால் எந்தவித பாதிப்பும் ஏற்பட்டு விடாது என கருத்து தெரிவித்தனர்.

    தொடர்ந்து, இந்த வழக்கு தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை தரப்பில் பதில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை 4 வாரத் திற்கு ஒத்திவைத்தனர்.

    • மதுரை மாவட்டம் முழுவதும் ஏழைகளுக்கு நல உதவிகள் வழங்கப்படுகின்றன.
    • விஜய் மக்கள் இயக்க மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொள்கிறார்கள்.

    மதுரை

    மதுரை மாவட்ட விஜய் மக்கள் இயக்க பொறுப்பா ளர் எஸ்.ஆர். தங்கப்பாண்டி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    இளைய தளபதி விஜய் பிறந்தநாளையொட்டி மதுரை மாவட்டத்தில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் நாளை (வியாழக்கிழமை) ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன.

    தொகுதி, பகுதி வாரியாகவும், கிராம பகுதிகளிலும் ஏழை, எளிய மக்களுக்கு நிர்வாகிகள் இனிப்புகள், அன்னதானம், நலத்திட்ட உதவிகள் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை நடத்தி பொது மக்களுக்கு நல உதவிகளை வழங்க ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது.

    நாளை (22-ந்தேதி) காலை 11மணிக்கு உசிலம் பட்டி நகர தலைவர் எஸ்.ஓ.பிம்.விஜய் ஏற்பாட் டில் உசிலம்பட்டி, செல்லம்பட்டி, சேடப்பட்டி பகுதிகளில் மக்கள் இயக்க கிளை திறப்பு விழா, நலத்திட்ட விழா நடைபெறு கின்றன. தெற்கு மாவட்ட பொருளாளர் விக்கி ஏற்பாட்டில் மதுரை வடக்கு மாசி வீதியில் அன்னதானம் வழங்கப்படுகிறது.

    திருப்பரங்குன்றம் கைத்தறி நகர் பகுதியில் அமைந்துள்ள மனநிலை வளர்ச்சி குன்றியோருக்கான காப்பகத்தில் கைத்தறிநகர் சூர்யா விஜய் ஏற்பாட்டில் மதியம் 1 மணிக்கு அன்ன தான விழா நடை பெறுகின்றன.

    மாவட்ட பிரதிநிதி கல்லணை குமார் ஏற்பாட்டில் விளாச்சேரி பகுதியில் மக்கள் இயக்க பெயர் பலகை திறப்பு விழா இனிப்பு வழங்கும் விழா நடக்கிறது.

    மேற்கு பகுதியில் மாடக்குளம் ரோகித் ஏற்பாட்டில் நலத்திட்ட உதவி வழங்கும் விழா மற்றும் மாவட்ட இளை ஞரணி, தொண்டரணி, மாணவரணி, தகவல் தொழில்நுட்ப அணி, தொழிற்சங்க அணி, வர்த்தக அணி, கொள்கைபரப்பு அணி, மருத்துவர் அணி, வழக்கறிஞர் அணி விவசாய அணி நிர்வாகிகள் ஏற்பாட் டில் மதுரை மாவட்டத்தில் 10 தொகுதிகளிலும் நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெறுகின்றன.

    இந்த நிகழ்ச்சிகள் அனைத்திலும் விஜய் மக்கள் இயக்க மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொள்கிறார்கள்.

    இவ்வாறு அவர் கூறி யுள்ளார்.

    • எடப்பாடி பழனிசாமியை விமர்சித்தால் கடும் விளைவுகளை சந்திக்க வேண்டும்.
    • முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் அறிக்கையில் கூறியுள்ளார்.

    மதுரை

    மதுரை சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

    எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவை எதிர்த்து அரசியல் செய்த திராவிட முன்னேற்ற கழகம், இன்று செந்தில் பாலாஜியின் காலில் அடமானம் வைத்துள்ளது. செந்தில் பாலாஜிக்கு வக்காலத்து வாங்குவதற்கு, பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை பற்றி முதல்-அமைச்சர் தரக்குறைவாக பேசுவதற்கு நாங்கள் கடும் கண்டனத்தை தெரிவிக்கிறோம்.

    7 கோடி தமிழர்களுடைய எதிர்காலமாக உள்ள எடப்பாடி பழனிசாமியை வாய்க்கு வந்தபடி நீங்கள் பேசி இருப்பது ஒரு முதல்-அமைச்சருக்கு அழகா? நாங்கள் எதற்கும் அஞ்சவில்லை. ஏனென்றால் எங்கள் மடியில் கனமில்லை. செந்தில் பாலாஜிக்கு இதய வலி என்றவுடன் முதல்-அமைச்சருக்கு இதயம் ஆடுகிறது.

    எடப்பாடி பழனிசாமியை பற்றி முதல்-அமைச்சர் பேசுவது ஜன நாயகத்தின் அநாகரீகமாகும். இதை உடனடியாக வாபஸ் வாங்க வேண்டும். பலகட்சிக்கு சென்ற செந்தில் பாலாஜிக்கு ஆதரவாக, எங்கள் பொதுச் செயலாளர் மீது நரம்பு இல்லாத நாக்காக பேசிவருவதை நாங்கள் இனிமேல் பொறுத்துக் கொள்ள மாட்டோம்.

    ஒரு கோடியே 49 லட்சம் மக்கள் எடப்பாடியாருக்கு வாக்களித்து உள்ளார்கள். 2 லட்சம் வாக்குகள் கூடுதலாக பெற்றிருந்தால் எடப்பாடியார் இன்றைக்கு முதலமைச்சராக இருந்திருப்பார்.

    எடப்பாடியார் மக்களுக்காக போராடும் உரிமை அவருக்கு உண்டு. மத்திய அரசு விசாரணை செய்தால் எங்களையும் வம்புக்கு இழுக்கிறீர்கள்? இனிமேல் எடப்பாடி பழனிசாமியை விமர்சித்தால் அதற்காக விளைவுகளை நீங்கள் சந்திக்க வேண்டியது இருக்கும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மதுரையில் நடைபெறும் பா.ஜ.க சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் நிர்வாகிகள்- தொண்டர்கள் திரளாக கலந்து கொள்ள வேண்டும்.
    • மருத்துவ பிரிவு டாக்டர் கே .முரளி பாஸ்கரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.

    மதுரை

    மதுரை மாநகர் பா.ஜ.க. மருத்துவ பிரிவு டாக்டர் கே.முரளி பாஸ்கரன் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:-

    பாராளுமன்ற தேர்தல் விரைவில் நடைபெற இருப்பதால் மத்திய பா.ஜ.க. ஆட்சியில் மக்கள் பயன் பெறும் வகையில் செயல்ப டுத்தப்பட்ட திட்டங்கள் குறித்து அனைவரும் அறிய செய்ய வேண்டும் என்று கட்சி மேலிடம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

    இதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் பா.ஜ.க.வினர் பிரதமர் நரேந்திர மோடி ஆட்சி காலத்தில் செயல்படுத்தப்பட்ட பல்வேறு திட்டங்கள் குறித்து விளக்கி பேசி வருகின்றனர். இதேபோல் மதுரை அண்ணாநகரில் பா.ஜ.க. சாதனை விளக்க பொதுக்கூட்டம் இன்று நடைபெறுகிறது. இதே போல் பூத் கமிட்டி மாநாடும் நடைபெற உள்ளது.

    இதில் மாநிலத் தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு பேசுகிறார். எனவே இந்த சிறப்புமிக்க நிகழ்ச்சிகளில் மாவட்ட தலைவர் மகாசுசீந்திரன் உள்பட பா.ஜ.க. நிர்வாகிகள் கலந்து கொள்கின்றனர். இதில் அனைத்து பிரிவு நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன் .

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மக்கள் நலன் கருதி கள்ளர் சீரமைப்பு துறை நிர்வாக மாற்றம் ஏற்கத்தக்கதல்ல.
    • பசும்பொன் பாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.

    மதுரை

    அண்ணா திராவிட மக்கள் முன்னேற்றகழக பொதுச் செயலாளர் வழக்கறிஞர் சே.பசும்பொன் பாண்டியன் இன்று வெளியி ட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது-

    தமிழக அரசு அண்மையில் அரசு ஆணை மூலமாக பிரமலைக்கள்ளர் சமூகத்தின் உழைப்பாலும் நிதியாலும் உருவாக்கப்பட்ட கள்ளர் பொது நலன் நிதிக் குழுமம் மூலமாக உருவான கள்ளர் சீரமைப்புத்துறை பிற்படுத்தப்பட்டோர் நலஅலுவலரிடம் ஒப்படை ப்பது ஏற்கத்தக்கது அல்ல, கண்டிக்கத்தக்கது ஆகும்,

    தென் மாவட்டங்களில் உள்ள கள்ளர் சீரமைப்பு விடுதிகள் குறிப்பாக மதுரை, தேனி, திண்டுக்கல் ஆகிய 3 மாவட்டங்களில் 295 கள்ளர் சீரமைப்பு பள்ளிகள் மற்றும் 54 கள்ளர் சீரமைப்பு விடுதிகள் செயல்பட்டு வரு கின்றன. இவை அனைத்தும் ஆங்கிலேயர் காலத்தி லிருந்து நூறு ஆண்டுகளுக்கு மேலாக இணை இயக்குனர் (கள்ளர் சீரமைப்பு) நிர்வாகத்தின் கீழ் இதுவரை இயங்கி வந்தன.

    எம்ஜிஆர் ஆட்சி காலத்தில் மாற்றம் செய்வதற்கான ஆணைப்பிறப்பிக்கப்பட்டு அன்றைக்கு சட்டமன்ற உறுப்பினராக இருந்த ஆண்டித்தேவர் போன்ற வர்கள் கோரிக்கையை ஏற்று ஆணை திரும்பப் பெறப்ப ட்டது, தற்சமயம் தி.மு.க. அரசு இந்த ஆணையை பிரமலைக்கள்ளர் மக்களின் நலன்கருதி உடனே திரும்ப பெற வேண்டும் தற்போது செய்யப்பட்டுள்ள மாற்றம் காரணமாக கள்ளர் சீரமைப்பு விடுதிகள் அவை செயல்படும் மாவட்டங்களில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர், மற்றும் சிறுபான்மையினர் நலஅலுவலர் மூலம் நிர்வகிக்கலாம், ஆனால் கள்ளர் சீரமைப்பு கட்டு ப்பாட்டில் இருந்த போது ஒவ்வொரு விடுதியும் அந்த பள்ளியின் தலைமையாசிரியர் கட்டுப்பாட்டில் இருந்தது.

    கீழக்கரையில் 460 தெருநாய்களை பிடிக்க ரூ.3.22 லட்சம் செலவு செய்ததாக தகவல் கவுன்சிலர்கள் கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
    கீழக்கரை

    ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகர்மன்ற கூட்டம் தலைவர் செஹானஸ் ஆபிதா தலைமையில்,   துணைத்தலைவர் ஹமீது சுல்த்தான், ஆணையாளர் செல்வராஜ் முன்னிலையில் நடைபெற்றது.

    கூட்டம் தொடங்கியது முதல் இறுதி வரை பரபரப்பாக காணப்பட்டது. கூட்டத்தில் 38 தீர்மானங்கள் கொண்டு வரப்பட்டன. இதில் முதல் தீர்மானமாக இந்துக்கள் மயான கரையில் மின்மயானம் ரூ.1கோடியே 41 லட்சம் செலவில் அமைப்பது குறித்து தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. 

    இதற்கு பொதுமக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு இருந்ததை தொடர்ந்து அத்தீர்மானம் ஒத்தி வைக்கப்பட்டது.கூட்டத்தில் 460 தெரு நாய்கள் பிடிக்க ரூ.3 லட்சத்து 22 ஆயிரம் செலவு செய்ததாக கணக்கு காண்பிக்கப்பட்டதால் நகர்மன்ற துணைத்தலைவர் உள்பட அனைத்து கவுன்சிலர்கள் அதிர்ச்சிக்குள்ளாயினர். 

    கடந்த முறை ஒரு நாயை பிடிக்க ரூ.350 வழங்கிய நிலையில் தற்போது ரூ.700 வழங்கியதால் கடும் வாக்கு வாதம் நடந்து, பின்னர் தீர்மானம் நிறைவேறியது. 

    மேலும் அனைத்து வார்டுகளிலும் குடிநீர் குழாய்களை பழுது நீக்கி. குடிநீர் வழங்குவது குறித்தும், சாலைகள் அமைப்பது குறித்தும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. 

    நகராட்சிக்கு சொந்தமான இடங்களில் அந்தந்த வார்டு கவுன்சிலர்களுக்கு தெரிவிக்காமலே பல பணிகளை நிறைவேற்றுவதாக கவுன்சிலர்கள்  குற்றம் சாட்டினர்.  அதைத்தொடர்ந்து மற்ற அனைத்து பணிகளும் நிறைவேற்றப்படும் என்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 

    கூட்டத்தில் கவுன்சிலர்கள், பொறியாளர் மீரான் அலி, மேலாளர் பத்மநாதன், துப்புரவு ஆய்வாளர் பூபதி உள்பட நகராட்சி ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
    ×