search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மண்டபம் மீனவர்கள் மாநாட்டில் 5 ஆயிரம் பேர் பங்கேற்பார்கள்
    X

    தி.மு.க செயல்வீரர்கள் கூட்டத்தில் பேரூர் செயலாளர் அப்துல் ரகுமான் மரைக்காயர் பேசினார்.

    மண்டபம் மீனவர்கள் மாநாட்டில் 5 ஆயிரம் பேர் பங்கேற்பார்கள்

    • முதல்-அமைச்சர் பங்கேற்கும் மண்டபம் மீனவர்கள் மாநாட்டில் 5 ஆயிரம் பேர் பங்கேற்பார்கள் என தி.மு.க. செயலாளர் அப்துல்ரகுமான் மரைக்காயர் தெரிவித்துள்ளார்.
    • 5000 பேர் மாநாட்டில் பங்கேற்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    மண்டபம்

    முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் ராமநாதபுரம் மாவட்டத்திற்கு வருகிற 17, 18-ந் தேதிகளில் வருகை தர உள்ளார். 17-ந்தேதி ராமநாதபுரத்தில் நடை பெறும் முகவர்கள் கூட்டத்திலும், 18-ந் தேதி மண்டபத்தில் நடைபெறும் மீனவர்கள் மாநாட்டிலும் முதல்-அமைச்சர் கலந்து கொண்டு மீனவர்களின் குறைகளை கேட்டறிந்து பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்க உள்ளார்.

    இது தொடர்பான தி.மு.க. செயல் வீரர்கள் கூட்டம் மண்டபம் பேரூ ராட்சி மகாலில் நடந்தது. அவைத்தலைவர் முருகானந்தம் தலைமை தாங்கினார். மாவட்ட சிறுபான்மை பிரிவு துணை அமைப்பாளர் பாருக் முன்னிலை வகித்தார்.

    பேரூர் செயலாளர் அப்துல் ரகுமான் மரைக்காயர் கூட்டத்தில் பேசியதா வது:-

    வருகிற 18-ந்தேதி முதல்-அமைச்சர் மீனவர்கள் மாநாட்டில் கலந்து கொள்கிறார்.அவருக்கு ராமநாதபுரம் மாவட்ட தி.மு.க. செயலாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் ஆலோசனையின் பேரில் சிறப்பான வரவேற்பு அளிக்க ஏற்பாடு கள் செய்து வருகிறோம்.

    இது தவிர மண்டபம் பகுதியில் இருந்து மீனவர் சமுதாயத்தை சேர்ந்த 5000 பேர் மாநாட்டில் பங்கேற்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் கவுன்சி லர்கள் சகுபர், முகமது மீரா சாஹிப்,வாசிம் அக்ரம், அயலக அணி துணை அமைப்பாளர் காதர் ஜான் மற்றும் அனைத்து விசைப் படகு சங்க தலைவர்கள் சார்பில் விஜயரூபன்,ஜாகிர் உசேன், பாலசுப்பிர மணியன், செல்வகுமார், சர்புதீன், தி.மு.க. உறுப்பி னர்கள் ராஜகோபால், காந்தக்குமார், குலாம், அயூப்கான், பகுருதீன், வெள்ளைச்சாமி, நிசாந்த,வேதாளை கோவிந்தன், முனியசாமி, செய்யது சுல்தான், வார்டு செயலாளர் கஜினி, ஜியாவு தீன், முனியசாமி, முத்து இருளாண்டி, முன்னாள் நகர் பொருளாளர் ராஜ்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×