search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கீழக்கரையில் நகர்மன்ற கூட்டம் தலைவர் செஹானஸ் ஆபிதா தலைமையில் நடந்தது.
    X
    கீழக்கரையில் நகர்மன்ற கூட்டம் தலைவர் செஹானஸ் ஆபிதா தலைமையில் நடந்தது.

    460 தெருநாய்களை பிடிக்க ரூ.3.22 லட்சம் செலவு செய்ததாக தகவல்

    கீழக்கரையில் 460 தெருநாய்களை பிடிக்க ரூ.3.22 லட்சம் செலவு செய்ததாக தகவல் கவுன்சிலர்கள் கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
    கீழக்கரை

    ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகர்மன்ற கூட்டம் தலைவர் செஹானஸ் ஆபிதா தலைமையில்,   துணைத்தலைவர் ஹமீது சுல்த்தான், ஆணையாளர் செல்வராஜ் முன்னிலையில் நடைபெற்றது.

    கூட்டம் தொடங்கியது முதல் இறுதி வரை பரபரப்பாக காணப்பட்டது. கூட்டத்தில் 38 தீர்மானங்கள் கொண்டு வரப்பட்டன. இதில் முதல் தீர்மானமாக இந்துக்கள் மயான கரையில் மின்மயானம் ரூ.1கோடியே 41 லட்சம் செலவில் அமைப்பது குறித்து தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. 

    இதற்கு பொதுமக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு இருந்ததை தொடர்ந்து அத்தீர்மானம் ஒத்தி வைக்கப்பட்டது.கூட்டத்தில் 460 தெரு நாய்கள் பிடிக்க ரூ.3 லட்சத்து 22 ஆயிரம் செலவு செய்ததாக கணக்கு காண்பிக்கப்பட்டதால் நகர்மன்ற துணைத்தலைவர் உள்பட அனைத்து கவுன்சிலர்கள் அதிர்ச்சிக்குள்ளாயினர். 

    கடந்த முறை ஒரு நாயை பிடிக்க ரூ.350 வழங்கிய நிலையில் தற்போது ரூ.700 வழங்கியதால் கடும் வாக்கு வாதம் நடந்து, பின்னர் தீர்மானம் நிறைவேறியது. 

    மேலும் அனைத்து வார்டுகளிலும் குடிநீர் குழாய்களை பழுது நீக்கி. குடிநீர் வழங்குவது குறித்தும், சாலைகள் அமைப்பது குறித்தும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. 

    நகராட்சிக்கு சொந்தமான இடங்களில் அந்தந்த வார்டு கவுன்சிலர்களுக்கு தெரிவிக்காமலே பல பணிகளை நிறைவேற்றுவதாக கவுன்சிலர்கள்  குற்றம் சாட்டினர்.  அதைத்தொடர்ந்து மற்ற அனைத்து பணிகளும் நிறைவேற்றப்படும் என்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 

    கூட்டத்தில் கவுன்சிலர்கள், பொறியாளர் மீரான் அலி, மேலாளர் பத்மநாதன், துப்புரவு ஆய்வாளர் பூபதி உள்பட நகராட்சி ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×