search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "rajiv gandhi"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ராஜீவ் காந்தியின் பிறந்தநாள் முன்னிட்டு வீரபூமியில் உள்ள அவரது நினைவிடத்தில் மரியாதை.
    • ராபர்ட் வத்ரா, எம்பி கேசி வேணுகோபால், லோபி மல்லிகார்ஜுன் கார்கே ஆகியோரும் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

    முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 78வது பிறந்தநாள் இன்று நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் கொண்டாடப்படுகிறது.

    இந்நிலையில் ராஜீவ் காந்தியின் பிறந்தநாள் முன்னிட்டு வீரபூமியில் உள்ள அவரது நினைவிடத்தில் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி, பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி ஆகியோர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

    இவர்களைத் தவிர, ராபர்ட் வத்ரா, எம்பி கேசி வேணுகோபால், லோபி மல்லிகார்ஜுன் கார்கே ஆகியோரும் நினைவிடத்தில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • 1991ஆம் ஆண்டு விடுதலைப் புலிகளின் தற்கொலைப் படையால் படுகொலை செய்யப்பட்டார்.
    • இந்தியாவின் இளைய பிரதமரான ராஜீவ் காந்தி 1984- 89-ல் பதவி வகித்தார்.

    முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 78-வது பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி இன்று மரியாதை செலுத்தினார். இந்தியாவின் இளைய பிரதமரான ராஜீவ் காந்தி 1984- 89-ல் பதவி வகித்தார்.

    1991ஆம் ஆண்டு விடுதலைப் புலிகளின் தற்கொலைப் படையால் படுகொலை செய்யப்பட்டார்.

    பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில், " அவரது பிறந்தநாளில், நமது முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்திக்கு எனது மரியாதை" என்று பதிவிட்டுள்ளார்.

    முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 28ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, சோனியா காந்தி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள், அவரின் நினைவிடத்திற்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.
    புது டெல்லி:

    முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 28-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி நாடு முழுவதிலும் உள்ள காங்கிரஸ் அலுவலகத்தில் அவரது உருவப்படங்கள் மற்றும் உருவச்சிலைக்கு அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது.

    தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ் அழகிரி நேற்று வெளியிட்ட அறிக்கையில், ‘முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் 28-வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, 21-ந் தேதி (இன்று) தமிழகம் முழுவதும் மாலை 4 மணி முதல் 6 மணி வரை தமிழக காங்கிரஸ் கட்சி சார்பில் அமைதி ஊர்வலம் நடக்கிறது. இந்த அமைதி ஊர்வலத்தின் இறுதியில் பயங்கரவாத எதிர்ப்பு உறுதிமொழி எடுத்துக்கொள்ள வேண்டும்’ என கேட்டுக் கொண்டார்.



    இந்நிலையில் இன்று காலை சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா, ராபர்ட் வதேரா, முன்னாள் பிரதமர் மன் மோகன் சிங், முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி உள்ளிட்டோர் டெல்லியில் உள்ள ராஜீவ் காந்தியின் நினைவிடத்திற்கு சென்று மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.  

    முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் 28-வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் நாளை மாலை காங்கிரஸ் கட்சி சார்பில் அமைதி ஊர்வலம் நடைபெற உள்ளதாக கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ். அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் 28-வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, 21-ந் தேதி(நாளை) தமிழகம் முழுவதும் மாலை 4 மணி முதல் 6 மணி வரை தமிழக காங்கிரஸ் கட்சி சார்பில் அமைதி ஊர்வலம் நடக்கிறது. இந்த அமைதி ஊர்வலத்தின் இறுதியில் பயங்கரவாத எதிர்ப்பு உறுதிமொழி எடுத்துக்கொள்ள வேண்டும்.



    தமிழக காங்கிரஸ் கட்சி வடசென்னை, தென்சென்னை, சென்னை கிழக்கு, சென்னை மேற்கு மாவட்டங்கள் சார்பில் சென்னையில் நடைபெறும் நினைவுநாள் நிகழ்ச்சியில் நானும், அகில இந்திய காங்கிரஸ் கட்சி செயலாளர்கள் சஞ்சய்தத், சிரிவல்ல பிரசாத், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர்கள் குமரி அனந்தன், எம்.கிரு‌‌ஷ்ணசாமி ஆகியோர் பங்கேற்பார்கள்.

    மாவட்டங்களில் நடத்தப்படும் நிகழ்ச்சிகளில், தமிழக காங்கிரஸ் சிறப்பு பிரதிநிதிகளும் பங்கேற்க இருக்கிறார்கள். அதன்படி திருச்சியில் ப.சிதம்பரம், மதுரையில் கே.ஆர்.ராமசாமி, வேலூரில் கே.வி.தங்கபாலு, தேனியில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், காஞ்சிபுரத்தில் சு.திருநாவுக்கரசர், கன்னியாகுமரியில் எச்.வசந்தகுமார் உள்ளிட்டோர் பங்கேற்கிறார்கள்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    ராஜீவ் காந்தி பற்றிய மோடியின் பேச்சுக்கு கர்நாடக பா.ஜனதா தலைவர்களில் ஒருவரும், சாம்ராஜ நகர் தொகுதி வேட்பாளருமான சீனிவாச பிரசாத் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். #Rajivgandhi #PMModi
    பெங்களூர்:

    பிரதமர் மோடி உத்தர பிரதேசம் மாநிலம் லக்னோவில் நடந்த தேர்தல் பிரசாரத்தின் போது முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் தந்தையுமான ராஜீவ்காந்தியை விமர்சனம் செய்தார்.

    மோடி பேசும்போது, “உங்கள் தந்தை (ராஜீவ்காந்தி), அவரது விசுவாசிகளால் கறைபடியாதவர் என்று புகழப்பட்டார். ஆனால் அவரது வாழக்கை இறுதியில் ஊழல்வாதி என்றே முடிந்தது” என்றார்.

    மோடியின் பேச்சுக்கு காங்கிரஸ் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். ராகுல்காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில், “மோடியின் போர் முடிந்து விட்டது. உங்கள் கர்மா உங்களுக்காக காத்திருக்கிறது. என் தந்தை மீதான உங்களது உள் நம்பிக்கைகளை பரவுவது உங்களை பாதுகாக்காது” என்று பதிலடி கொடுத்தார்.

    இந்த நிலையில் ராஜீவ் காந்தி பற்றிய மோடியின் பேச்சுக்கு கர்நாடக பா.ஜனதா தலைவர்களில் ஒருவரும், சாம்ராஜ நகர் தொகுதி வேட்பாளருமான சீனிவாச பிரசாத் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

    சீனிவாச பிரசாத் முதலில் காங்கிரஸ், ஜே.டி.எஸ். கட்சிகளில் இருந்தார். 2016-ம் ஆண்டு காங்கிரசில் இருந்து விலகி பா.ஜனதா கட்சியில் சேர்ந்தார்.

    வாஜ்பாய் அமைச்சரவையில் மந்திரியாகவும் இருந்தார். அவர் கூறியதாவது:-

    ராஜீவ்காந்தியை எனக்கு நன்றாக தெரியும். அவர் எப்போதுமே ஊழலில் ஈடுபட்டது கிடையாது. மோடி மீது நான் மிகுந்த மரியாதை வைத்துள்ளேன். ஆனால் அவர் ராஜீவ்காந்தியை ஊழல்வாதி என்று கூறியதை ஏற்று கொள்ள முடியாது.

    போபர்ஸ் வழக்கில் ராஜீவ்காந்தி மீதான லஞ்ச குற்றச்சாட்டை டெல்லி ஐகோர்ட்டு தள்ளுபடி செய்து விட்டது. மோடியின் குற்றச்சாட்டு பொருத்தமானதல்ல. ராஜீவ்காந்தியுடன் நான் அருகில் இருந்து பழகியவன். மோடி குற்றச்சாட்டை நாட்டில் உள்ள யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். ராஜீவ்காந்தி பற்றி மோடி இப்படி பேசியிருக்க கூடாது. அதற்கான அவசியமும் இல்லை.

    ராஜீவ்காந்தி சிறிய வயதிலேயே மிகப்பெரிய பொறுப்புகளை ஏற்றார். அவரை குறித்து வாஜ்பாய் போன்ற அரசியல் தலைவர்கள் நல்ல கருத்துக்களை தெரிவித்துள்ளனர். ஊழல் குற்றச்சாட்டு காரணமாக அவர் உயிரிழக்கவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பா.ஜனதா வேட்பாளரான சீனிவாச பிரசாத்தை ஆதரித்து கடந்த ஏப்ரல் 9-ந் தேதி மோடி பிரசாரம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது. #Rajivgandhi #PMModi
    முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற முருகன், தன்னை விடுதலை செய்ய கோரி வேலூர் ஜெயிலில் தொடர் உண்ணாவிரதம் இருந்து வருகிறார். #nalinimurugan #rajivgandhi

    வேலூர்:

    முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற முருகன் வேலூர் மத்திய சிறையிலும், அவருடைய மனைவி நளினி பெண்கள் சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளனர்.

    முருகன் உள்பட 7 பேரை விடுதலை செய்ய தமிழக அரசின் சிபாரிசின் மீது நடவடிக்கை எடுக்காமல் கவர்னர் காலம் கடத்தி வருகிறார். இதுகுறித்து முருகன் கடந்த 31-ந் தேதி வேலூர் மத்தியசிறை அதிகாரிகள் மூலம் கவர்னருக்கு கோரிக்கை மனு அனுப்பி உள்ளார்.

    அதில் ராஜீவ்காந்தி கொலைக்கும், எங்களுக்கும் தொடர்பு இல்லை, வேண்டுமென்றால் உண்மை கண்டறியும் சோதனை நடத்துங்கள். அல்லது கருணை கொலை செய்யுங்கள், இல்லையென்றால் உண்ணாவிரதம் இருந்து சாகவிடுங்கள் என்று கூறி உள்ளார்.

    இதனால் அவர் கடந்த 2-ந் தேதி முதல் உண்ணாவிரதம் இருந்து வருகிறார். இன்று காலை உணவையும் சாப்பிட மறுத்து விட்டார். தொடர்ந்து 7-வது நாளாக முருகன் உண்ணாவிரதம் இருக்கிறார். அவரிடம் சிறைத்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். #nalinimurugan #rajivgandhi

    முன்னாள் பிரதமர் ராஜூவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்றுள்ள முருகன், விடுதலை செய்யக்கோரி வேலூர் சிறையில் உண்ணாவிரதம் இருந்தார். #rajivgandhi #nalinimurugan #vellorejail

    வேலூர்:

    முன்னாள் பிரதமர் ராஜூவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்றுள்ள முருகன் வேலூர் ஆண்கள் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதே வழக்கில் ஆயுள் தண்டனை பெற்றுள்ள முருகனின் மனைவி நளினி வேலூர் பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

    கடந்த 27 ஆண்டுகளாக சிறையில் உள்ள நளினி, முருகன், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை தொடர்பாக பல்வேறு தரப்பில் இருந்து தொடர்ந்து முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இந்நிலையில், வேலூர் பெண்கள் சிறையில் நளினி முருகன் சந்திப்பு நேற்று காலை நடந்தது. இதற்காக பலத்த பாதுகாப்புடன் பெண்கள் சிறைக்கு முருகன் அழைத்து செல்லப்பட்டார். அங்கு நளினி முருகன் சந்திப்பு ஒரு மணி நேரம் நடந்தது. பின்னர், வேலூர் சிறையில் முருகன் அடைக்கப்பட்டார்.

    இதனை தொடர்ந்து நேற்று பிற்பகல் முதல் தனது உண்ணாவிரதத்தை முருகன் தொடங்கினார். இரவு உணவும் அவர் சாப்பிடவில்லை.

    2-வது நாளாக இன்று காலையிலும் அவர் உணவு சாப்பிடவில்லை. தொடர்ந்து உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளார். அவரை அதிகாரிகள் சமாதானப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

    இது தொடர்பாக சிறைத்துறை வட்டாரத்தில் விசாரித்தபோது, தங்களது விடுதலையை முன் வைத்து முருகன் உண்ணாவிரதத்தை தொடங்கியுள்ளார்.

    தங்களது மனுவின் மீது கவர்னர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியுள்ளார். உண்ணாவிரதம் இருப்பது தொடர்பான மனுவையும் அவர் சிறை நிர்வாகத்திடம் அளித்துள்ளார் என்றனர். #rajivgandhi #nalinimurugan #vellorejail

    பஞ்சாப் மாநிலத்தின் லூதியானா நகரில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் சிலையை அவமதித்த சம்பவம் காங்கிரசார் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. #SukhbirSinghBadal #GurpreetSingh #RajivGandhi
    சண்டிகர்:

    முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி, கடந்த 31-10-1984-ம் அன்று டெல்லியில் உள்ள தனது வீட்டில் சீக்கிய பாதுகாவலர்களால் துப்பாக்கியால் சுடப்பட்டு படுகொலை செய்யப்பட்டார்.

    இந்த படுகொலைக்குப்பிறகு சீக்கியர்களுக்கு எதிராக நாடு முழுவதும் வன்முறை வெறியாட்டங்கள் நடந்தன. இதில் 2800 சீக்கியர்கள் பலியாகினர். டெல்லியில் மட்டும் 2100 சீக்கியர்கள் கொடூரமான முறையில் கொல்லப்பட்டனர்.

    இந்த கலவரம் தொடர்பான வழக்கில் இருந்து முன்னர் விடுவிக்கப்பட்ட காங்கிரஸ் பிரமுகர் சஜ்ஜன் குமாருக்கு சமீபத்தில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

    இதன்மூலம் சீக்கியர்களுக்கு எதிரான அந்த வன்முறையில் காங்கிரஸ் கட்சிக்கு இருந்த தொடர்பை கோர்ட் உறுதிபடுத்தி விட்டதாக சீக்கியர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர். இதற்காக காங்கிரஸ் தலைமை பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.


    இந்நிலையில், பஞ்சாப் மாநிலத்தின் லூதியானா நகரில் உள்ள சலேம் தப்ரி பகுதியில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் சிலையை நேற்றிரவு சிலர் பெயின்ட் பூசி அலங்கோலப்படுத்தினர்.

    இந்த சம்பவம் அம்மாநில காங்கிரசார் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக, காவல் நிலையத்தில் லூதியானா நகர காங்கிரஸ் தலைவர் குர்பிரீத் சிங் புகார் அளித்துள்ள நிலையில் சிரோன்மணி அகாலி தளம் கட்சி தொண்டர்கள்தான் இந்த காரியத்தை செய்ததாக பஞ்சாப் முதல் மந்திரி கேப்டன் அமரிந்தர் சிங் குற்றம்சாட்டியுள்ளார்.

    இந்த விரும்பத்தகாத செயலுக்காக சிரோன்மணி அகாலி தளம் கட்சி தலைவர் சுக்பிர் சிங் பாதல் பஞ்சாப் மக்களிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். #SukhbirSinghBadal #GurpreetSingh #RajivGandhi
    முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் ‘பாரத ரத்னா’ விருதை திரும்பப்பெற தீர்மானம் நிறைவேற்றுவதற்காக பஞ்சாப் மாநில சட்டசபையை அவசரமாக கூட்டுமாறு சிரோன்மணி அகாலி தளம் வலியுறுத்தியுள்ளது. #RajivGandhis #BharatRatna
    சண்டிகர்:

    தமிழ்நாட்டில் 1991-ம் ஆண்டு தேர்தல் பிரசாரம் செய்யவந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி, 21-5-1991 அன்று ஸ்ரீபெரும்புதூரில் மனித வெடிகுண்டால் கொல்லப்பட்டார். நாட்டுக்காக தனது உயிரை தியாகம் செய்த ராஜீவ் காந்தியின் மறைவுக்கு பின்னர் அவரை கவரவிக்கும் வகையில் நாட்டின் மிகமிக உயரிய 'பாரத ரத்னா' விருது அவருக்கு கடந்த ஆண்டில் அளிக்கப்பட்டது.
     
    ராஜீவ் காந்தியின் தாயாரும் இந்தியாவின் முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி, கடந்த 31-10-1984 அன்று டெல்லியில் உள்ள தனது வீட்டில் சீக்கிய பாதுகாவலர்களால் துப்பாக்கியால் சுடப்பட்டு படுகொலை செய்யப்பட்டார்.

    இந்த படுகொலைக்குப்பிறகு சீக்கியர்களுக்கு எதிராக நாடு முழுவதும் வன்முறை வெறியாட்டங்கள் நடந்தன. இதில் 2800 சீக்கியர்கள் பலியாகினர். டெல்லியில் மட்டும் 2100 சீக்கியர்கள் கொடூரமான முறையில் கொல்லப்பட்டனர்.

    டெல்லியில் சுமார் 25 வயது மதிக்கத்தக்க இருவரை உயிருடன் எரித்துக் கொல்லப்பட்ட சம்பவத்தில் டெல்லி போலீசார் போதிய ஆதாரங்கள் இல்லை என வழக்கை முன்னர் மூடி விட்டனர். எனினும், சிறப்பு புலனாய்வு படையினர் நடத்திய விசாரணையின் அடிப்படையில் இவ்வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் மீது டெல்லி உயர் நீதிமன்றத்தில் மீண்டும் வழக்கு தொடரப்பட்டது.

    இவ்வழக்கில் கடந்த 20-11-2018 அன்று தீர்ப்பளித்த டெல்லி கூடுதல் அமர்வு நீதிபதி அஜய் பான்டே, குற்றவாளி யஷ்பால் சிங் என்பவருக்கு மரண தண்டனையும், அவருக்கு உடந்தையாக இருந்த ஓய்வுபெற்ற போஸ்ட் மாஸ்டர் நரேஷ் ஷெராவத் என்பவருக்கு ஆயுள் தண்டனை விதித்தும் தீர்ப்பளித்தார். இருவருக்கும் தலா 35 லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.

    முன்னர் இந்த கலவர வழக்கில் இருந்து நிரபராதி என்று விடுவிக்கப்பட்ட டெல்லி முன்னாள் காங்கிரஸ் தலைவர் சஜ்ஜன் குமாருக்கு சமீபத்தில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

    இந்த வன்முறைகளில் மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்திக்கு தொடர்பு இருந்ததாக ஆம் ஆத்மி கட்சியினர் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர்.

    இந்நிலையில், ராஜீவ் காந்திக்கு கடந்த 1991-ம் ஆண்டில் அளிக்கப்பட்ட 'பாரத ரத்னா’ விருதை திரும்பப்பெற வேண்டும் என டெல்லி சட்டசபையில் நேற்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக செய்திகள் வெளியாகின. ஆனால், இந்த தகவலுக்கு டெல்லி துணை முதல் மந்திரி மணிஷ் சிசோடியா மறுப்பு தெரிவித்தார். அப்படி எந்தவொரு தீர்மானமும் சட்டசபையில் நிறைவேற்றப்படவில்லை என அவர் குறிப்பிட்டார்.

    இந்நிலையில், பஞ்சாப் மாநில சட்டசபையில் எதிர்க்கட்சியாக இருக்கும் சிரோன்மணி அகாலி தளம் கட்சியின் தலைவர் சுக்பிர் சிங் பாதல் இவ்விவகாரம் தொடர்பாக இன்று ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

    அந்த அறிக்கையில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது:-

    டெல்லி சட்டசபையில் முதலில் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றிவிட்டு பின்னர் ‘பல்டி’ அடித்ததன் மூலம் ஆம் ஆத்மி கட்சி மற்றும் டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலின் நிலைப்பாடு என்ன? என்பது தெளிவாக விளங்குகின்றது.

    காங்கிரஸ் தலைமை வற்புறுத்தியதால் டெல்லி சட்டசபையில் முன்வைக்கப்பட்ட தீர்மானத்தை டெல்லி அரசு மறைத்து விட்டது. இந்த பொய்யின் மூலம் காங்கிரஸ் கட்சியுடன் ஆம் ஆத்மி கள்ளத்தொடர்பு வைத்துள்ளது நன்றாக புரிகிறது.

    ராஜீவ் காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் பிரமுகர்கள் தூண்டுதலின்படி டெல்லியில் சீக்கியர்கள் இனப்படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில் பஞ்சாபில் உள்ள ஆம் ஆத்மி கட்சி தலைவர்களின் நிலைப்பாடு தொடர்பாக அவர்கள் விளக்கம் அளித்தாக வேண்டும். 

    இதற்கிடையில், இதுதொடர்பாக இங்குள்ள சீக்கியர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் ராஜீவ் காந்திக்கு அளிக்கப்பட்ட ‘பாரத ரத்னா’ விருதை திரும்பப்பெறுமாறு சட்டசபையில் தீர்மானம் கொண்டு வரப்படுமா? என்பதை முதல் மந்திரி கேப்டன் அமரிந்தர் சிங் தெளிவுப்படுத்த வேண்டும்.

    இனப்படுகொலை வெறியாட்டத்தில் ஈடுபட்ட யாருக்கும் இதைப்போன்ற நாட்டின் மிக கவுரவத்துக்குரிய விருது பெறும் தகுதி இல்லை என்ற செய்தியை இதன் மூலம் பஞ்சாப் மாநில காங்கிரஸ் பதிவு செய்தாக வேண்டும். இதற்காக சட்டசபையின் சிறப்பு கூட்டத்தை கூட்ட வேண்டும். 

    இந்த தீர்மானம் ஒருமனதாக நிறைவேறவும், மனிதநேயத்துக்கு எதிரான குற்றங்களுக்கு இந்த சமூகத்தில் இடமில்லை என்பதை  இதன் வாயிலாக உணர்த்தவும் சிரோன்மணி அகாலி தளம் அனைத்து வகையிலும் துணையாக இருக்கும்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார். #RajivGandhis #BharatRatna
    ராஜீவ் காந்திக்கு வழங்கப்பட்ட பாரத ரத்னா விருதை திரும்ப பெறுவது தொடர்பான தீர்மானத்திற்கு டெல்லி சட்டமன்ற உறுப்பினர் அல்கா லம்பா ஆதரவு அளிக்காததால் அவரை கட்சியில் இருந்து விலகும்படி ஆம் ஆத்மி கூறியுள்ளது. #MLAAlkaLamba
    புதுடெல்லி:

    சீக்கியர்களுக்கு எதிரான கலவரத்தை கட்டுப்படுத்த தவறியதால் ராஜீவ் காந்திக்கு வழங்கப்பட்ட பாரத ரத்னா விருதை திரும்ப பெறவேண்டும் என்று டெல்லி சட்டமன்றத்தில் நேற்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால் இது தேசிய அளவில் பரபரப்பான சில மணி நேரங்களில் அப்படி ஒரு தீர்மானத்தை நிறைவேற்றவில்லை என ஆம் ஆத்மி கட்சி மறுத்துள்ளது.

    இந்நிலையில், ராஜீவ் காந்திக்கு எதிரான தீர்மானத்தை நிறைவேற்றுவதற்கு ஆம் ஆத்மி கட்சியின் அல்கா லம்பா எம்எல்ஏ ஆதரவு அளிக்க மறுத்துள்ளார். இதனால் அவரை கட்சியில் இருந்து விலகும்படி கட்சி தலைமை நெருக்கடி கொடுத்த தகவல் வெளியாகி உள்ளது.



    இதுதொடர்பாக அல்கா லம்பா கூறுகையில், “ராஜீவ் காந்திக்கு எதிரான தீர்மானத்திற்கு நான் ஆதரவு அளிக்க மாட்டேன் என கூறியதால் என் மீது கட்சியினர் கோபம் கொண்டனர். ராஜினாமா செய்யுமாறு கட்சி என்னை கேட்டுக்கொண்டுள்ளது. நான் ராஜினாமா செய்யத் தயாராகவே இருக்கிறேன். ராஜீவ் காந்தி நாட்டுக்காக பல்வேறு தியாகங்களை செய்துள்ளார். எனவே அவருக்கு எதிரான தீர்மானத்தை நான் ஆதரிக்கவில்லை. எனவே, கட்சியின் விருப்பத்துக்கு எதிராக நின்றதால், என்னை பதவி விலகுமாறு கேட்கின்றனர்” என்றார். #MLAAlkaLamba

    முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் மறைவுக்கு பின்னர் அவரை கவரவிக்கும் வகையில் அளிக்கப்பட்ட ‘பாரத ரத்னா’ விருதை திரும்பப்பெற டெல்லி சட்டசபையில் இன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. #DelhiAssembly #BharatRatna #RajivGandhi
    புதுடெல்லி:

    தமிழ்நாட்டில் 1991-ம் ஆண்டு தேர்தல் பிரசாரம் செய்யவந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி, 21-5-1991 அன்று ஸ்ரீபெரும்புதூரில் மனித வெடிகுண்டால் கொல்லப்பட்டார். நாட்டுக்காக தனது உயிரை தியாகம் செய்த ராஜீவ் காந்தியின் மறைவுக்கு பின்னர் அவரை கவரவிக்கும் வகையில் நாட்டின் மிகமிக உயரிய 'பாரத ரத்னா' விருது அவருக்கு கடந்த ஆண்டில் அளிக்கப்பட்டது.

    இந்த விருதினை திரும்பப்பெற வேண்டும் என டெல்லி சட்டசபையில் இன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

    ராஜீவ் காந்தியின் தாயாரும் இந்தியாவின் முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி, கடந்த 31-10-1984 அன்று டெல்லியில் உள்ள தனது வீட்டில் சீக்கிய பாதுகாவலர்களால் துப்பாக்கியால் சுடப்பட்டு படுகொலை செய்யப்பட்டார்.

    இந்த படுகொலைக்குப்பிறகு சீக்கியர்களுக்கு எதிராக நாடு முழுவதும் வன்முறை வெறியாட்டங்கள் நடந்தன. இதில் 2800 சீக்கியர்கள் பலியாகினர். டெல்லியில் மட்டும் 2100 சீக்கியர்கள் கொடூரமான முறையில் கொல்லப்பட்டனர்.

    டெல்லியில் சுமார் 25 வயது மதிக்கத்தக்க இருவரை உயிருடன் எரித்துக் கொல்லப்பட்ட சம்பவத்தில் டெல்லி போலீசார் போதிய ஆதாரங்கள் இல்லை என வழக்கை முன்னர் மூடி விட்டனர். எனினும், சிறப்பு புலனாய்வு படையினர் நடத்திய விசாரணையின் அடிப்படையில் இவ்வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் மீது டெல்லி உயர் நீதிமன்றத்தில் மீண்டும் வழக்கு தொடரப்பட்டது.

    இவ்வழக்கில் கடந்த 20-11-2018 அன்று தீர்ப்பளித்த டெல்லி கூடுதல் அமர்வு நீதிபதி அஜய் பான்டே, குற்றவாளி யஷ்பால் சிங் என்பவருக்கு மரண தண்டனையும், அவருக்கு உடந்தையாக இருந்த ஓய்வுபெற்ற போஸ்ட் மாஸ்டர் நரேஷ் ஷெராவத் என்பவருக்கு ஆயுள் தண்டனை விதித்தும் தீர்ப்பளித்தார். இருவருக்கும் தலா 35 லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.

    முன்னர் இந்த கலவர வழக்கில் இருந்து நிரபராதி என்று விடுவிக்கப்பட்ட டெல்லி முன்னாள் காங்கிரஸ் தலைவர் சஜ்ஜன் குமாருக்கு சமீபத்தில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

    இந்த வன்முறைகளில் மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்திக்கு தொடர்பு இருந்ததாக ஆம் ஆத்மி கட்சியினர் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர்.

    இந்நிலையில், அளிக்கப்பட்ட 'பாரத ரத்னா’ விருதை திரும்பப்பெற டெல்லி சட்டசபையில் இன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. #DelhiAssembly #BharatRatna #RajivGandhi
    பேரறிவாளன் உள்பட 7 பேர் விடுதலையில் உறுதியாக இருக்கிறோம் என்று துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார். #ADMK #OPanneerSelvam
    பெரியகுளம்:

    பெரியகுளம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் தொடர்பான அ.தி.மு.க. ஆலோசனை கூட்டம் நேற்று பெரியகுளத்தில் நடந்தது. இந்த கூட்டத்தில் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்- அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொண்டார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    ராஜீவ்காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் உள்பட 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்று தமிழக அரசின் சார்பில் 2 முறை கவர்னரிடம் பரிந்துரை செய்து உள்ளோம். அமைச்சரவை கூட்டத்தில் அவர்களை விடுதலை செய்வது என முடிவு செய்யப்பட்டு உள்ளது. எனவே அவர்களை விடுதலை செய்வதில் உறுதியாக இருக்கிறோம்.


    ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் குடிசைகளை மாற்றி 13 லட்சம் வீடுகள் கட்டிக் கொடுக்க திட்டம் தீட்டப்பட்டு இருந்தது. இதில் 3¾ லட்சம் வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளது. வரும் 2022-ம் ஆண்டுக்குள் தமிழகத்தில் 13 லட்சம் வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டு குடிசைகள் இல்லாத தமிழகமாக மாற்றப்படும்.

    தமிழகத்தில் எந்தவொரு தொகுதியும் புறக்கணிக்கப்படவில்லை. 234 தொகுதிகளிலும் மாவட்ட கலெக்டரின் நேரடி பார்வையில் அனைத்து திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இரட்டை இலை சின்னம் துரோகிகள் கைவசம் உள்ளது என்று சிலர் கூறுவது தவறு. 18 எம்.எல்.ஏ.க்களின் பதவி போன விரக்தியில் அவர்கள் பேசுகின்றனர்.

    வடகிழக்கு பருவமழை குறித்தும், வர இருக்கிற கஜா புயலால் சராசரி அளவை காட்டிலும் அதிக பாதிப்புகள் இருக்கலாம் என்பதை கருத்தில் கொண்டும் அனைத்து அதிகாரிகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தயார் நிலையில் உள்ளனர். ஓ.பி.எஸ்., இ.பி.எஸ்.க்கு பதவி கொடுத்தவர் சசிகலா என்று தினகரன் கூறுகிறார். எனக்கு பதவி கொடுத்தவர் ஜெயலலிதாதான். எங்களுக்கு அரசியல் ரீதியான எதிர்க்கட்சி தி.மு.க.தான். துரோகி கட்சி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம். வரும் இடைத்தேர்தலில் 20 தொகுதிகளிலும் அ.தி.மு.க. அமோக வெற்றி பெற்று இரட்டை இலையை வெற்றி சின்னமாக மாற்றுவோம்.

    இவ்வாறு ஓ.பன்னீர்செல்வம் கூறினார். #ADMK #OPanneerSelvam 
    ×