search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "president election"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தேர்தல் அதிகாரியான மாநிலங்களவை செயலாளரிடம் திரவுபதி முர்மு வேட்பு மனுவை அளித்தார்.
    • அதிமுக சார்பில் ஓ.பி.எஸ், தம்பிதுரை உள்ளிட்டோரும் பாஜக ஆளும் பிற மாநில முதல்வர்களும் பங்கேற்றனர்.

    குடியரசுத்தலைவர் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் திரவுபதி முர்மு போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து எதிர்க்கட்சிகள் சார்பில் யஷ்வந்த் சின்ஹா போட்டியிடுகிறார். இருவரும் முக்கியத் தலைவர்களிடம் ஆதரவுக் கோரி வருகின்றனர்.

    இந்நிலையில், ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் திரவுபதி முர்மு வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

    தேர்தல் அதிகாரியான மாநிலங்களவை செயலாளரிடம் திரவுபதி முர்மு வேட்பு மனுவை அளித்தார்.

    பிரதமர் மோடி, அமித்ஷா உள்ளிட்டோர் முன்னிலையில் வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டது. அப்போது, அதிமுக சார்பில் ஓ.பி.எஸ், தம்பிதுரை உள்ளிட்டோரும் பாஜக ஆளும் பிற மாநில முதல்வர்களும் பங்கேற்றனர்.

    • ஜனாதிபதி வேட்பாளர் திரவுபதி முர்மு டெல்லியில் இன்று வேட்பு மனு தாக்கல் செய்யவுள்ளார்.
    • டெல்லி வந்த முர்மு பிரதமர், உள்துறை மந்திரி உள்ளிட்ட மூத்த தலைவர்களை நேற்று சந்தித்தார்.

    புதுடெல்லி:

    ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் முடிவதால், புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்காக அடுத்த மாதம் 18-ம் தேதி தேர்தல் நடக்கிறது. இதில் மத்தியில் ஆளும் பா.ஜ.க. கூட்டணி வேட்பாளராக திரவுபதி முர்மு அறிவிக்கப்பட்டுள்ளார்.

    பல்வேறு கட்சித் தலைவர்களைச் சந்தித்து ஆதரவு திரட்டி வரும் முர்மு, ஒடிசாவில் இருந்து நேற்று புறப்பட்டு புதுடெல்லி வந்தார். இன்று வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளார்.

    இந்நிலையில், புதுடெல்லி வந்த திரவுபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். தொடர்ந்து, மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா, துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு மற்றும் பா.ஜ.க. மூத்த தலைவர்களைச் சந்தித்தார்.

    இதுதொடர்பாக பிரதமர் மோடி சமூக வலைதள பக்கத்தில் கூறுகையில், திரவுபதி முர்முவை ஜனாதிபதி வேட்பாளராக அறிவித்திருப்பதை பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனர். நாட்டில் நிலவி வரும் அடிமட்ட பிரச்னைகள் பற்றிய அவரது புரிதல் மற்றும் வளர்ச்சிக்கான தொலைநோக்குப் பார்வை சிறப்பானது என குறிப்பிட்டுள்ளார்.

    • காந்தி சிலைக்கு மாலை அணிவித்த தான் குடியரசு தலைவர் தேர்தலில் போட்டியிட இருப்பதாக தெரிவித்தார்.
    • மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் ஆதரவு கேட்க உள்ளார்

    திருப்பூர் :

    இந்தியாவின் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் விரைவில் நிறைவு பெறுவதையடுத்து, அவர் வகிக்கும் பதவிக்கான தேர்தல் ஜூலை 18ந் தேதி நடைபெறும் என்று இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது. இதையடுத்து பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட அரசியல் கட்சியினர் தங்களது வேட்பாளர்களை அறிவித்து வருகின்றனர். இந்தநிலையில், தமிழ் மாநில மக்கள் முன்னேற்ற கழகத்தின் தலைவர் முகமது முத்துகுடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிட இருப்பதாக தெரிவித்துள்ளார்.

    திருப்பூர் பெருமாநல்லூரை சேர்ந்த முகமது முத்து தமிழ் மாநில மக்கள் முன்னேற்ற கழகத்தின் தலைவராக உள்ளார். இன்று காலை திருப்பூர் மாநகராட்சி அருகே உள்ள காந்தி சிலைக்கு மாலை அணிவித்த பின்பு செய்தியாளர்களை சந்தித்த முகமது முத்து, தான் குடியரசு தலைவர் தேர்தலில் போட்டியிட இருப்பதாக தெரிவித்தார். இது குறித்து அவர் கூறுகையில், குடியரசு தலைவர் தேர்தலில் போட்டியிட முடிவு செய்து வேட்புமனு வாங்கி வந்துள்ளேன், வரும் 27ந் தேதி பாராளுமன்ற வளாகத்தில் வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளேன். தமிழக முதல்வர் மற்றும் எதிர்க்கட்சி தலைவரிடம் ஆதரவு கேட்டுள்ளேன்.

    அதே போன்று ஆந்திர முதல்வரிடமும் ஆதரவு கேட்டுள்ளேன். அதுமட்டுமின்றி வேட்புமனு தாக்கல் செய்த பின்னர் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் ஆதரவு கேட்க உள்ளேன். நான் வெற்றி பெறும் பட்சத்தில் மக்களின் நலனில் அக்கறை செலுத்துவேன். கல்வி, மருத்துவத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பேன். தமிழகத்தின் பெருமையை நிலைநிறுத்துவேன் என்றார்.

    • ஜூலை 18-ந்தேதி குடியரசுத் தலைவர் தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், ஏற்கனவே, எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக யஷ்வந்த் சின்கா அறிவிக்கப்பட்டார். இப்போது பா.ஜ.க.வும் வேட்பாளரை அறிவித்துள்ளது.
    • ‘எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது’ என குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக கூட்டணி சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள திரவுபதி முர்மு தெரிவித்துள்ளார்.

    குடியரசுத் தலைவருக்கான தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளராக ஜார்கண்ட் மாநிலத்தின் முன்னாள் ஆளுநர் திரவுபதி முர்மு அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்தவர்.

    டெல்லி பாஜக தலைமை அலுவலகத்தில் நேற்று இரவு நடைபெற்ற பாராளுமன்றக்குழு கூட்டத்திற்கு பிறகு திரவுபதி முர்மு பெயர் அதிகாரபூர்வ குடியரசுத் தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பா.ஜ.க. தலைவர் ஜேபி நட்டா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

    ஜூலை 18-ந்தேதி குடியரசுத் தலைவர் தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், ஏற்கனவே, எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக யஷ்வந்த் சின்கா அறிவிக்கப்பட்டார். இப்போது பா.ஜ.க.வும் வேட்பாளரை அறிவித்துள்ளது.

    இந்த அறிவிப்புக்கு பின் திரவுபதி முர்மு அளித்த பேட்டியில், "எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது, என்னால் நம்ப முடியவில்லை. இந்த கட்டத்தில், அதிகம் பேச விரும்பவில்லை. நன்றி உள்ளவராக இருக்க கடமைப்பட்டுள்ளேன்.

    அரசியலமைப்பில் ஜனாதிபதிக்கு என்ன அதிகாரங்கள் இருந்தாலும், நான் அதற்கேற்ப செயல்படுவேன். தேர்தலில் வெற்றி பெற அனைத்துக் கட்சிகள், மாநிலங்கள் ஆதரவைக் கோருகிறேன். எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்களின் ஆதரவை நான் பெறுவேன்."

    இவ்வாறு அவர் கூறினார்.

    • குடியரசுத் தலைவர் தேர்தலில் பா.ம.க.வை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினரும், சட்டப்பேரவை உறுப்பினர்களும் திரவுபதி முர்முவை ஆதரிப்பது என்று பா.ம.க. உயர்நிலைக் குழு கூட்டத்தில் ஒருமனதாக முடிவு செய்யப்பட்டது.
    • இந்தியக் குடியரசின் 72 ஆண்டு கால வரலாற்றில் பழங்குடியின பெண்மணி ஒருவரை முதன்முறையாக குடியரசுத் தலைவராக்க ஆதரவளிப்பதில் பா.ம.க. மகிழ்ச்சியும், பெருமிதமும் அடைகிறது.

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    பா.ம.க. தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான டாக்டர் அன்புமணி ராமதாசை, மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், பா.ஜனதா கட்சியின் தலைவர் ஜே.பி. நட்டாவும் நேற்று மாலை தொடர்பு கொண்டு, குடியரசுத் தலைவர் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வேட்பாளராக ஜார்க்கண்ட் மாநில முன்னாள் ஆளுனராகிய திரவுபதி முர்முவை களமிறக்க முடிவு செய்திருப்பதாக தெரிவித்தனர். அவருக்கு பா.ம.க. ஆதரவளிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டனர்.

    இந்தக் கோரிக்கை குறித்து ராமதாஸ், பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் மற்றும் உயர்நிலைக் குழு உறுப்பினர்களுடன் இன்று காலை கலந்தாய்வு நடத்தினார்.

    குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடும் திரவுபதி முர்மு ஒரிசா மாநிலத்தைச் சேர்ந்த பழங்குடியின பெண்மணி ஆவார். மிகவும் சாதாரண குடும்பத்தில் பிறந்த அவர், பல தடைகளை முறியடித்து பொதுவாழ்வில் முன்னேறியவர். ஜார்க்கண்ட் கவர்னராக 6 ஆண்டுகளுக்கு மேல் சிறப்பாக பணியாற்றியவர் என்ற பெருமையும் அவருக்கு உண்டு.

    திரவுபதி முர்மு தேர்தலில் வெற்றி பெற்று குடியரசுத் தலைவராக பொறுப்பேற்கும்போது அந்தப் பதவியை அலங்கரிக்கும் முதலாவது பழங்குடியினராகவும், 2-வது பெண்மணியாகவும் இருப்பார். பழங்குடியினர் ஒருவரை குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுப்பது அந்த இனத்திற்கு அளிக்கப்படும் அங்கீகாரம் என்பதாலும், செய்யப்படும் பெருமை என்பதாலும் குடியரசுத் தலைவர் தேர்தலில் பா.ம.க.வை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினரும், சட்டப்பேரவை உறுப்பினர்களும் திரவுபதி முர்முவை ஆதரிப்பது என்று பா.ம.க. உயர்நிலைக் குழு கூட்டத்தில் ஒருமனதாக முடிவு செய்யப்பட்டது.

    இந்தியக் குடியரசின் 72 ஆண்டு கால வரலாற்றில் பழங்குடியின பெண்மணி ஒருவரை முதன்முறையாக குடியரசுத் தலைவராக்க ஆதரவளிப்பதில் பா.ம.க. மகிழ்ச்சியும், பெருமிதமும் அடைகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ஒடிசாவில் உள்ள ராய்ராங்பூரில் உள்ள அவரது வீட்டிற்கும் பாதுகாப்புப் படையினர் பாதுகாப்பு வழங்கப்படுகிறது.
    • துணை ராணுவப் படையைச் சேர்ந்த சுமார் 14- 16 பேர் கொண்ட ஒரு பிரிவினர் முர்முவுக்கு பாதுகாப்பு அளிக்கும் பணியை மேற்கொண்டுள்ளனர்.

    பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பிற மூத்த தலைவர்கள் அடங்கிய கட்சியின் நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தைத் தொடர்ந்து நேற்று நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் ஜார்க்கண்ட் ஆளுநராக பணியாற்றிய ஒடிசாவைச் சேர்ந்த கட்சித் தலைவரான முர்முவின் வேட்புமனுவை பாஜக தலைவர் ஜே.பி.நட்டா அறிவித்தார்.

    இந்த அறிவிப்புக்கு பிறகு, மத்திய உள்துறை அமைச்சகம் ஜனாதிபதி வேட்பாளர் முர்முவின் பாதுகாப்புப் பொறுப்பை ஏற்க அதன் விஜபி பாதுகாப்புக் குழுவை அனுப்புமாறு மத்திய ரிசரவ் போலீஸ் படைக்கு உத்தரவிட்டது.

    இதையடுத்து, ஒடிசாவை தளமாகக் கொண்ட துணை ராணுவப் படையைச் சேர்ந்த சுமார் 14- 16 பேர் கொண்ட ஒரு பிரிவினர் முர்முவுக்கு பாதுகாப்பு அளிக்கும் பணியை மேற்கொண்டுள்ளனர்.

    ஒடிசாவில் உள்ள ராய்ராங்பூரில் உள்ள அவரது வீட்டிற்கும் பாதுகாப்புப் படையினர் பாதுகாப்பு வழங்குகின்றனர். மேலும், நாட்டின் முதல் குடிமகனாக அவர் பொறுப்பேற்கும் வரை கமாண்டோ பாதுகாப்பு அளிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஜனாதிபதி தேர்தலுக்கு பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் வேட்பாளர் யாரும் இன்னும் அறிவிக்கப்படவில்லை.
    • யஷ்வந்த்சின்கா மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் துணைத்தலைவராக உள்ளார்.

    புதுடெல்லி:

    புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் ஜூலை 18-ந்தேதி நடக்கிறது. ஜூலை 21-ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடக்கிறது. வேட்புமனு தாக்கல் செய்ய வருகிற 29-ந்தேதி கடைசி நாளாகும்.

    ஜனாதிபதி தேர்தலுக்கு பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் வேட்பாளர் யாரும் இன்னும் அறிவிக்கப்படவில்லை.

    இந்த நிலையில் ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகளின் கூட்டணி வேட்பாளராக முன்னாள் மத்திய மந்திரி யஷ்வந்த்சின்காவின் பெயர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    யஷ்வந்த்சின்கா மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் துணைத்தலைவராக உள்ளார்.

    ஜனாதிபதி வேட்பாளர் பெயருக்கு பரிந்துரைக்கப்பட்டு உள்ளதால் அவர் அந்த கட்சியில் இருந்து விலகி உள்ளார். இதை அவர் தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்து உள்ளார்.

    இதற்காக அவர் மம்தா பானர்ஜிக்கு தனது நன்றியை தெரிவித்து உள்ளார்.

    • ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் அடுத்த மாதத்துடன் நிறைவடைகிறது.
    • ஜனாதிபதி தேர்தல் ஜூலை 18-ம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

    புதுடெல்லி:

    இந்தியாவின் 15-வது ஜனாதிபதியாக ராம்நாத் கோவிந்த் கடந்த 2017-ம் ஆண்டு பதவியேற்றார். அவரது பதவிக்காலம் ஜூலை 24-ம் தேதி முடிவடைகிறது. இதனால் அடுத்த ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் ஜூலை 18-ம் தேதி நடைபெறும் என இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்தது.

    இதையடுத்து, ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளரை நிறுத்துவது தொடர்பாக எதிர்க்கட்சிகளுடன் டெல்லியில் நேற்று முன்தினம் மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜி ஆலோசனை நடத்தினார். எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக சரத்பவாரை அனைவரும் முன்மொழிந்த நிலையில், உடல்நிலை சரியில்லாததால் தன்னால் நிற்க முடியாது என சரத்பவார் மறுத்துவிட்டார்.

    இந்நிலையில், ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக எதிர்க்கட்சிகள் ஜூன் 21-ம் தேதி மீண்டும் ஆலோசனை நடத்த முடிவு செய்துள்ளனர். இதில் எதிர்க்கட்சிகள் சார்பில் பொது வேட்பாளரை தேர்வு செய்வது குறித்து ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகின.

    • ஜனாதிபதி தேர்தலில் பா.ஜனதா நிறுத்தும் வேட்பாளரை எதிர்த்து காங்கிரஸ் கட்சியும் வேட்பாளரை களம் இறக்க முடிவு செய்துள்ளது.
    • இதனால் ஜனாதிபதி தேர்தல் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

    புதுடெல்லி:

    ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்தின் பதவி காலம் அடுத்த மாதம் (ஜூலை) 24-ந் தேதியுடன் முடிவடைகிறது.

    இதையடுத்து புதிய ஜனாதிபதியை தேர்வு செய்ய இந்திய தேர்தல் ஆணையம் தேர்தல் அட்டவணை அறிவித்துள்ளது.

    அதன்படி புதிய ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கு ஜூலை 18-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் வருகிற 15-ந் தேதி (புதன்கிழமை) தொடங்குகிறது. ஜூன் 29-ந் தேதி வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம். வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை ஜூன் 30-ந் தேதி நடைபெறும்.

    வேட்பு மனுக்களை திரும்ப பெறுவதற்கான கடைசி நாள் ஜூலை 2 ஆகும். போட்டியிருக்கும் பட்சத்தில் ஜூலை 18-ந் தேதி ஓட்டுப்பதிவு நடைபெறும். ஜூலை 21-ந் தேதி வாக்குகள் எண்ணி முடிவு அறிவிக்கப்படும்.

    ஜனாதிபதி தேர்தலில் 776 எம்.பி.க்கள் 4,033 எம்.எல்.ஏ.க்கள் வாக்களிப்பார்கள். இவர்களது ஒட்டுமொத்த வாக்கு மதிப்பு 10 லட்சத்து 79 ஆயிரத்து 206 ஆகும். இதில் 50 சதவீதத்துக்கு மேல் வாக்கு பெறுபவர் வெற்றி பெற முடியும்.

    பா.ஜனதா தலைமையிலான கூட்டணிக்கு 5 லட்சத்து 26 ஆயிரத்து 420 வாக்குகள் உள்ளன. காங்கிரஸ் தலைமையிலான கூட்டணிக்கு 2 லட்சத்து 59 ஆயிரத்து 892 வாக்குகள் உள்ளன. எந்த அணியையும் சேராத மாநில கட்சிகளுக்கு 2 லட்சத்து 92 ஆயிரத்து 894 வாக்குகள் உள்ளன.

    பா.ஜ.க. கூட்டணி நிறுத்தும் வேட்பாளர் வெற்றிபெறுவதற்கு சுமார் 13 ஆயிரம் வாக்குகள் குறைவதாக தெரியவந்துள்ளது. மாநில கட்சிகளின் ஆதரவை பெற்று பா.ஜ.க. நிறுத்தும் வேட்பாளர் எளிதாக வெற்றிபெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    ஜனாதிபதி தேர்தலில் பா.ஜனதா நிறுத்தும் வேட்பாளரை எதிர்த்து காங்கிரஸ் கட்சியும் வேட்பாளரை களம் இறக்க முடிவு செய்துள்ளது. இதனால் ஜனாதிபதி தேர்தல் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. எதிர்க்கட்சிகள் எந்தளவுக்கு ஒற்றுமையாக இருக்கும் என்பது ஜனாதிபதி தேர்தலில் தெள்ளத் தெளிவாக தெரிந்துவிடும். இது 2024-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் எதிரொலிக்கும் என்பதால் காங்கிரஸ் கட்சி எதிர்க்கட்சிகளை ஓரணியில் திரட்டுவதற்கான முயற்சிகளை தீவிரப்படுத்தி உள்ளது.

    அதே சமயத்தில் வலுவாக உள்ள பா.ஜனதா தலைமையிலான கூட்டணி சில மாநில கட்சிகளின் ஆதரவை பெறவேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது. கடந்த தடவை ஜனாதிபதி தேர்தல் நடந்தபோது நவீன் பட்நாயக் தலைமையிலான பிஜூ ஜனதாதளமும், ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர். காங்கிரசும் பா.ஜனதாவுக்கு ஆதரவு கொடுத்தன. இந்த ஆண்டும் இந்த இரு கட்சிகளும் பா.ஜனதா நிறுத்தும் வேட்பாளரை ஆதரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இதை கருத்தில்கொண்டு பா.ஜனதா மூத்த தலைவர்கள் வேட்பாளர் தேர்வில் தீவிரம் காட்டத் தொடங்கியுள்ளனர். அடுத்த வாரம் ஜனாதிபதி வேட்பாளரை அறிவிக்க வேண்டும் என்பதால் டெல்லியில் பா.ஜ.க. மூத்த தலைவர்கள் இடையே அடுத்தடுத்து ஆலோசனை கூட்டங்கள் விறுவிறுப்பை ஏற்றி உள்ளன.

    தற்போதைய நிலவரப்படி பிரதமர் மோடி புதிய ஜனாதிபதி பதவிக்கு யாரும் எதிர்பாராத வகையில் வேட்பாளரை அறிவிப்பார் என்று டெல்லி வட்டாரத்தில் பேசப்படுகிறது. பழங்குடி இனத்தை சேர்ந்தவர் அல்லது இஸ்லாமியர் ஒருவருக்கு புதிய ஜனாதிபதி ஆகும் வாய்ப்பை பிரதமர் மோடி கொடுப்பார் என்று கூறப்படுகிறது. இதனால் பா.ஜ.க. வட்டாரத்தில் 6 பேரின் பெயர்கள் ஜனாதிபதி வேட்பாளராக தேர்வு செய்ய வாய்ப்பு இருப்பதாக பரபரப்பாக பேசப்படுகிறது.

    ஜார்கண்ட் மாநில முன்னாள் கவர்னர் திரவுபதி முர்மு, கேரள கவர்னர் ஆரிப் முகமதுகான், உத்தரபிரதேச கவர்னர் அனந்திபென் படேல், சத்தீஷ்கர் கவர்னர் அனுசுயா, கர்நாடக கவர்னர் தவர்சந்த் கெலாட் மற்றும் ராணுவ மந்திரி ராஜ்நாத்சிங் ஆகிய 6 பேர் பெயர்தான் தீவிரமாக பரிசீலனையில் உள்ளதாக கூறப்படுகிறது. இந்த 6 பேரில் ஜார்கண்ட் மாநில முன்னாள் கவர்னர் திரவுபதி முர்மு பெயர் முன்னிலையில் உள்ளது. வேட்பாளர் தேர்வு போட்டியில் அவர்தான் முன்களத்தில் இருப்பதாக பா.ஜ.க. வட்டாரத்தில் பேசப்படுகிறது.

    திரவுபதி முர்மு ஒடிசா மாநில பழங்குடி இனத்தை சேர்ந்தவர். அந்த மாநிலத்தில் உள்ள சந்தல் பழங்குடி இனம் மிக மிக பழமையான இனமாகும். எனவே அந்த பழங்குடியினரை கவுரவிக்கும் வகையில் திரவுபதி முர்முவை ஜனாதிபதி ஆக்க பிரதமர் மோடி விரும்புவதாக கூறப்படுகிறது. திரவுபதி முர்மு ஜனாதிபதியாக தேர்வானால் அந்த பதவியில் அமரும் முதல் இந்திய பழங்குடி இன பெண் என்ற பெருமையை பெறுவார்.

    ஜார்கண்ட் மாநிலத்தில் 5 ஆண்டுகள் கவர்னர் பதவியை நிறைவு செய்துள்ள திரவுபதி முர்மு, பிரதமர் மோடி உள்பட பா.ஜ.க. மூத்த தலைவர்கள் அனைவரிடமும் நன்கு பழகி வருகிறவர். ஆர்.எஸ்.எஸ். தலைவர்களிடமும் அவருக்கு செல்வாக்கு இருக்கிறது. அதோடு அனைத்து கட்சி தலைவர்களிடமும் அவர் நல்ல அணுகுமுறையில் உள்ளார்.

    இந்தியாவில் 6 மாநிலங்களில் பழங்குடி இன மக்களின் வாக்குகள் அதிகமாக உள்ளன. பல தொகுதிகளில் எம்.பி.க்கள் தேர்வை தீர்மானிப்பதில் பழங்குடி இன மக்களின் வாக்குகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. திரவுபதி முர்முவை ஜனாதிபதி வேட்பாளராக அறிவித்தால் பிஜூ ஜனதாதளம் ஆதரவை உறுதியாக பெறுவது மட்டுமின்றி 6 மாநில பழங்குடி இன மக்களின் ஆதரவை பெற முடியும் என்று பா.ஜ.க. தலைவர்கள் கருதுகிறார்கள்.

    இதை கருத்தில் கொண்டுதான் திரவுபதி முர்முவுக்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாக பா.ஜ.க. வட்டாரத்தில் கூறப்படுகிறது. இதற்கிடையே சமீபத்தில் இஸ்லாமிய இறை தூதர் நபிகள் நாயகம் பற்றி இந்தியாவில் பா.ஜ.க. செய்தி தொடர்பாளர் வெளியிட்ட சர்ச்சை கருத்துக்கு இஸ்லாமிய நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. எனவே இஸ்லாமியரை ஜனாதிபதியாக்கலாம் என்ற கருத்து நிலவுகிறது. இந்த கருத்துக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டால் கேரள கவர்னர் ஆரீப் முகமது கானுக்கு ஜனாதிபதி ஆகும் வாய்ப்பு கிடைக்கலாம்.

    ஒருவேளை திரவுபதி முர்மு ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்படும் பட்சத்தில் ஆரீப் முகமது கானை துணை ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்க வாய்ப்பு உள்ளது. தற்போதைய சூழ்நிலையில் திரவுபதி முர்மு, ஆரீப் முகமது கான் இருவரில் ஒருவரை ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்க பிரகாசமான வாய்ப்புகள் உள்ளன.

    சத்தீஷ்கர் கவர்னர் அனுசுயா மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்தவர். அவரை ஜனாதிபதி வேட்பாளராக அறிவித்தால் விரைவில் வரவுள்ள மத்திய பிரதேச மாநில சட்டசபை தேர்தலில் பா.ஜ.க.வுக்கு வெற்றிவாய்ப்பு அதிகமாக இருக்கும் என்று கருதப்படுகிறது. அதுபோல உத்தரபிரதேச மாநில கவர்னர் அனந்திபென்னுக்கும் வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது. ஆனால் இவர் குஜராத் மாநிலத்தை சேர்ந்தவர் என்பதால் வாய்ப்பு மிக மிக குறைவு என்றே சொல்கிறார்கள்.

    பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத்சிங் பெயரும் தற்போது புதியதாக ஜனாதிபதி வேட்பாளர் பதவிக்கு பேசப்படுகிறது. ஆனால் ராஜ்நாத்சிங் அதை விரும்பவில்லை என்று அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்தன. அதற்கு பதில் கர்நாடக மாநில கவர்னராக இருக்கும் தவர்சந்த் கெலாட்டுக்கு பதவி கொடுக்கலாம் என்று பரிசீலிக்கப்படுகிறது. இவர் பா.ஜ.க.வில் உள்ள தலித் இன தலைவர்களில் முக்கியத்துவம் வாய்ந்தவர். எனவே தவர்சந்த் பெயரும் வேட்பாளர் பட்டியலில் பரிசீலனையில் உள்ளது.

    இதற்கிடையே தெலுங்கானா கவர்னர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் பெயரும் ஜனாதிபதி வேட்பாளர் பட்டியலில் உள்ளதாக கூறப்படுகிறது. ஜனாதிபதி பதவி கிடைக்காத பட்சத்தில் அவரை துணை ஜனாதிபதியாக தேர்வு செய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் ஜனாதிபதி வேட்பாளர் தேர்வுக்கு பிறகு சில மாநிலங்களின் கவர்னர்கள் மாற்றப்பட உள்ளனர்.

    அப்போது டாக்டர் தமிழிசைக்கு முக்கியத்துவம் வாய்ந்த ஒரு மாநிலம் கொடுக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனால் ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தப்படப்போவது யார் என்பதில் பா.ஜ.க. வட்டாரத்திலும் மிகுந்த பரபரப்பான எதிர்பார்ப்பு காணப்படுகிறது.

    இந்த நிலையில் பா.ஜ.க. வேட்பாளரை எதிர்த்து எதிர்க்கட்சிகளும் வேட்பாளரை நிறுத்த முடிவு செய்துள்ளன. காங்கிரஸ் கட்சியை சாராத ஒருவரை வேட்பாளராக களம் இறக்க சோனியா முன்வந்துள்ளார். இது தொடர்பாக அவர் தீவிர ஆலோசனை நடத்தி வருகிறார்.

    நேற்று மாநில ஜனாதிபதி தேர்தல் அட்டவணை வெளியானதும் காங்கிரஸ் தலைவர் சோனியா கூட்டணி கட்சித் தலைவர்களுடன் ஆலோசனையை தொடங்கினார். நேற்று இரவு அவர் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி ஆகியோருடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆலோசனை நடத்தினார்.

    அப்போது எதிர்க்கட்சிகள் சார்பில் பொது வேட்பாளரை நிறுத்த முடிவு செய்யப்பட்டது. காங்கிரஸ் கட்சியில் மட்டுமின்றி அனைத்து தரப்பினரிடமும் செல்வாக்கு பெற்ற ஒருவரை வேட்பாளராக நிறுத்த ஆலோசித்து வருகிறார்கள். எனவே காங்கிரஸ் கட்சியை சேராத எதிர்க்கட்சி வரிசையில் உள்ள மாநில கட்சி மூத்த தலைவர்களில் ஒருவருக்கு வேட்பாளராகும் வாய்ப்பு கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

    இத்தகைய காரணங்களால் நாடு முழுவதும் அனைத்து முக்கிய கட்சிகளிடமும் ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக விறுவிறுப்பு ஏற்பட்டுள்ளது.

    • குடியரசுத் தலைவர் தேர்தலில் பதிவான வாக்குகள் ஜூலை 21-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.
    • குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் ஜூன் 15-ம் தேதி நடைபெறும்.

    புதுடெல்லி: ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் பதவி காலம் அடுத்த மாதம் (ஜூலை) 24-ந் தேதி முடிவடைகிறது. இதனால் புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் தேதி எப்போது அறிவிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு இருந்து வந்தது.

    இந்த நிலையில் ஜனாதிபதி தேர்தலுக்கான தேர்தல் தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக, டெல்லி விக்யான் பவனில் நடைபெற்று வரும் செய்தியாளர்கள் சந்திப்பில் தேர்தல் ஆணையம் அறிவிக்கையை வெளியிட்டுள்ளது.

    அதன்படி, ஜனாதிபதி தேர்தல் ஜூலை மாதம் 18-ம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

    இதுகுறித்து தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் கூறியதாவது;-

    தற்போதைய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பதவிக்காலம் ஜூலை 24-ம் தேதியுடன் நிறைவடைகிறது. புதிய ஜனாதிபதி ஜூலை 25-ம் தேதி பதவியேற்பார்.

    இந்நிலையில், ஜனாதிபதி பதவிக்கான தேர்தல் ஜூலை 18-ம் தேதி நடைபெறுகிறது.

    ஜனாதிபதி தேர்தலில் மொத்த வாக்குகளின் மதிப்பு 10,86,431 ஆகும். நாடாளுமன்றம், மாநில சட்டசபைகளில் ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறும்.

    மொத்தம் 776 நாடாளுமன்ற உறுப்பினர்கள், 4,120 சட்டப்பேரவை, மேலவை உறுப்பினர்கள் தேர்தலில் வாக்களிக்கின்றனர். வேட்புமனு ஏற்கப்பட்ட 50 நாடாளுமன்ற உறுப்பினர்கள் அல்லது எம்எல்ஏக்கள் வேட்பாளரை முன்மொழிய வேண்டும்.

    தேர்தல் ஆணையம் வழங்கும் பேனா மூலம் மட்டுமே வாக்களிக்க வேண்டும்.

    குடியரசுத் தலைவர் தேர்தலில் பதிவான வாக்குகள் ஜூலை 21-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

    குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் ஜூன் 15-ம் தேதி நடைபெறும். வேட்புமனுக்களை தாக்கல் செய்ய கடைசி நாள் ஜூன் 29-ம் தேதி, ஜூன் 30-ம் தேதி பரிசீலனை செய்யப்படும். வேட்புமனுக்களை திரும்பப் பெற ஜூலை 2-ம் தேதி கடைசி நாளாகும்.

    இவ்வாறு அவர் அறிவித்தார்.

    • ஜனாதிபதி தேர்தலுக்கான தேர்தல் தேதி இன்று அறிவிக்கப்படுகிறது.
    • எம்.எல்.ஏ.க்களின் ஓட்டு மதிப்பை பொறுத்தமட்டில் மாநிலத்துக்கு மாநிலம் மாறுபடும்.

    புதுடெல்லி:

    ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் பதவி காலம் அடுத்த மாதம் (ஜூலை) 24-ந் தேதி முடிவடைகிறது.

    இதனால் புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் தேதி எப்போது அறிவிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு இருந்து வந்தது.

    இந்த நிலையில் ஜனாதிபதி தேர்தலுக்கான தேர்தல் தேதி இன்று அறிவிக்கப்படுகிறது. டெல்லி விக்யான் பவனில் இன்று மாலை 3 மணிக்கு நடைபெறும் நிருபர்கள் சந்திப்பின்போது ஜனாதிபதி தேர்தல் தொடர்பான அறிவிக்கையை தேர்தல் ஆணையம் வெளியிடுகிறது. 2017ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் ஜூலை 17ந் தேதி நடைபெற்றது.

    பாராளுமன்றத்தின் இரு அவைகளின் எம்.பி.க்கள் மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள எம்.எல்.ஏ.க்கள். ஜனாதிபதி தேர்தலில் ஓட்டு போடுவார்கள்.

    ஒவ்வொரு எம்.பி.யின் ஓட்டு மதிப்பு 708 ஆகும். மக்களவை, மேல்சபையை சேர்ந்த 776 எம்.பி.க்கள் இருக்கிறார்கள். அவர்களின் ஓட்டு மதிப்பு 5 லட்சத்து 49 ஆயிரத்து 408 ஆகும்.

    எம்.எல்.ஏ.க்களின் ஓட்டு மதிப்பை பொறுத்தமட்டில் மாநிலத்துக்கு மாநிலம் மாறுபடும்.

    பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி தங்களது வேட்பாளரை நிறுத்தி ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற முயற்சிக்கும், எதிர்க்கட்சிகள் ஒன்று இணைந்து பொது வேட்பாளரை நிறுத்தும் முயற்சியில் ஈடுபடும், எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் செயலில் தெலுங்கானா முதல் மந்திரியும், டி.ஆர்.எஸ். கட்சி தலைவருமான சந்திரசேகரராவ் ஈடுபட்டுள்ளார்.

    ஜனாதிபதி தேர்தலில் நவீன் பட்நாயக்கின் பிஜூ ஜனதாதளம் கட்சிக்கு 2.9 சதவீத வாக்குகள் உள்ளது. இதனால் அந்த கட்சியின் முடிவு முக்கியமானது.

    சமீபத்தில் நடந்த மாலத்தீவு அதிபர் தேர்தலில் எதிர்க்கட்சி வேட்பாளர் வெற்றி பெற்றாலும், தற்போதைய அதிபர் யாமீன் பதவியில் நீடிக்க திட்டமிட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன. #Maldives
    மாலே:

    இந்திய பெருங்கடல் பகுதியில் அமைந்துள்ள மாலத்தீவில் சமீபத்தில் அதிபர் தேர்தல் நடந்தது. சில மாதங்களுக்கு முன்னர் அரசியல் ஸ்திரத்தன்மையற்ற சூழல் இருந்து நெருக்கடி நிலை அமல்படுத்தப்பட்ட மாலத்தீவில் நடந்த அதிபர் தேர்தல் மிகவும் கவனிக்கப்பட்டது.  

    மாலத் தீவு முன்னேற்றக் கட்சி சார்பில் போட்டியிட்ட தற்போதைய அதிபர் அப்துல்லா யாமீன், எதிர்க்கட்சியான மாலத் தீவு ஜனநாயக கட்சி வேட்பாளர் இப்ராகிம் முகமது ஷோலியிடம் தோல்வியடைந்தார்.

    அதிபர் தேர்தலில் தோல்வியடைந்தாலும், தனது பதவியில் தொடர்ந்து நீடிக்க அந்த நாட்டு அதிபர் அப்துல்லா யாமீன் திட்டமிட்டு வருவதாக எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டியுள்ளனர். இதுகுறித்து எதிர்க்கட்சிக் கூட்டணியின் செய்தித் தொடர்பாளர் அகமது மஹ்லூப் கூறுகையில், “கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அதிபர் தேர்தலில் எதிர்க்கட்சிக் கூட்டணியின் வேட்பாளர் முகமது சோலீ வெற்றி பெற்றதாகவும், தோல்வியை ஏற்றுக் கொள்வதாகவும் அதிபர் அப்துல்லா யாமீன் அறிவித்துள்ளார். 

    எனினும், மாற்று வழியில் தனது அதிபர் பதவியில் தொடர்ந்து நீடிக்க அவர் திட்டமிட்டு வருவதாக எங்களுக்கு தகவல்கள் கிடைத்துள்ளன. நடந்து முடிந்த தேர்தலில் முறைகேடுகள் நடைபெற்றதாக தேர்தல் ஆணையத்திடம் முறையிடவும், அதனை நிரூபிக்கும் வகையில் தற்போது அவரது கட்டுப்பாட்டில் உள்ள உளவுத் துறையிடமிருந்து அறிக்கையைப் பெற்று வழங்கவும் அவர் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. 

    மேலும், வரும் ஞாயிற்றுக்கிழமை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவுள்ள தேர்தல் முடிவுகளை நிறுத்தி வைக்குமாறு தேர்தல் ஆணையத்தை அவர் கேட்டுக்கொள்வார் என்றும் கூறப்படுகிறது என்று தெரிவித்தார். 
    ×