search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Yameen"

    ஊழல் வழக்கில் கைதாகி வீட்டுக்காவலில் அடைக்கப்பட்டுள்ள மாலத்தீவு முன்னாள் அதிபர் அப்துல்லா யாமீனை விடுதலை செய்யுமாறு ஐகோர்ட் இன்று உத்தரவிட்டுள்ளது. #Maldivesformerpresident #Yameen #AbdullaYameenreleased
    மாலே:

    மாலத்தீவு முன்னாள் அதிபர் அப்துல்லா யாமீன். இவர் கடந்த 2013-ம் ஆண்டு முதல் பதவி வகித்து வந்தார். கடந்த ஆண்டு செப்டம்பரில் நடந்த தேர்தலில் அவர் தோல்வி அடைந்தார்.  

    தேர்தலின்போது சட்ட விரோதமாக ரூ.10 கோடி பணம் பெற்றதாக இவர்மீது குற்றம் சாட்டப்பட்டது. இதுதொடர்பான வழக்கு விசாரணை கிரிமினல் கோர்ட்டில் நடந்து வந்தது.

    அப்துல்லா யாமீன் வெளியே இருந்தால் இந்த வழக்கு தொடர்பான சாட்சிகளை கலைத்து விடுவார் என்று வாதாடிய அரசுதரப்பு  வழக்கறிஞரின் கோரிக்கைக்கு நீதிபதி ஒப்புதல் அளித்தார்.

    அப்துல்லா யாமீன் 18-2-2019 அன்று கைது செய்யப்பட்டு, தலைநகர் மாலேவில் அருகேயுள்ள தூனிட்கோ தீவில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் அவரது உடல்நிலையை கருதி வீட்டுக்காவலில் அடைத்துவைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

    அவரை கைது செய்து ஒருமாதத்துக்கு மேலாகியும் இவ்விவகாரம் தொடர்பான வலுவான ஆதாரங்களை அரசுதரப்பு நீதிமன்றத்தில் சமர்ப்பிக்காததால், உரிய காரணங்கள் இல்லாமல் முன்னாள் அதிபர் அப்துல்லா யாமீனை காவலில் வைத்திருக்க முடியாது என்று தெரிவித்த ஐகோர்ட் நீதிபதி அவரை விடுதலை செய்வதாக இன்று உத்தரவிட்டார்.

    குற்றம் நிரூபிக்கப்பட்டால் யாமீனுக்கு 15 வருட ஜெயில் தண்டனையும், மோசடி செய்த பணத்தை விட 3 மடங்கு அபராத தொகையும் விதிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

    மாலத்தீவில் உள்ள யாமீனின் வங்கி கணக்குகளையும் ரூ.45 கோடி மதிப்புள்ள சொத்துக்களையும் கோர்ட்டு முடக்கி வைத்துள்ளது. #Maldivesformerpresident #Yameen #AbdullaYameenreleased
    சமீபத்தில் நடந்த மாலத்தீவு அதிபர் தேர்தலில் எதிர்க்கட்சி வேட்பாளர் வெற்றி பெற்றாலும், தற்போதைய அதிபர் யாமீன் பதவியில் நீடிக்க திட்டமிட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன. #Maldives
    மாலே:

    இந்திய பெருங்கடல் பகுதியில் அமைந்துள்ள மாலத்தீவில் சமீபத்தில் அதிபர் தேர்தல் நடந்தது. சில மாதங்களுக்கு முன்னர் அரசியல் ஸ்திரத்தன்மையற்ற சூழல் இருந்து நெருக்கடி நிலை அமல்படுத்தப்பட்ட மாலத்தீவில் நடந்த அதிபர் தேர்தல் மிகவும் கவனிக்கப்பட்டது.  

    மாலத் தீவு முன்னேற்றக் கட்சி சார்பில் போட்டியிட்ட தற்போதைய அதிபர் அப்துல்லா யாமீன், எதிர்க்கட்சியான மாலத் தீவு ஜனநாயக கட்சி வேட்பாளர் இப்ராகிம் முகமது ஷோலியிடம் தோல்வியடைந்தார்.

    அதிபர் தேர்தலில் தோல்வியடைந்தாலும், தனது பதவியில் தொடர்ந்து நீடிக்க அந்த நாட்டு அதிபர் அப்துல்லா யாமீன் திட்டமிட்டு வருவதாக எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டியுள்ளனர். இதுகுறித்து எதிர்க்கட்சிக் கூட்டணியின் செய்தித் தொடர்பாளர் அகமது மஹ்லூப் கூறுகையில், “கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அதிபர் தேர்தலில் எதிர்க்கட்சிக் கூட்டணியின் வேட்பாளர் முகமது சோலீ வெற்றி பெற்றதாகவும், தோல்வியை ஏற்றுக் கொள்வதாகவும் அதிபர் அப்துல்லா யாமீன் அறிவித்துள்ளார். 

    எனினும், மாற்று வழியில் தனது அதிபர் பதவியில் தொடர்ந்து நீடிக்க அவர் திட்டமிட்டு வருவதாக எங்களுக்கு தகவல்கள் கிடைத்துள்ளன. நடந்து முடிந்த தேர்தலில் முறைகேடுகள் நடைபெற்றதாக தேர்தல் ஆணையத்திடம் முறையிடவும், அதனை நிரூபிக்கும் வகையில் தற்போது அவரது கட்டுப்பாட்டில் உள்ள உளவுத் துறையிடமிருந்து அறிக்கையைப் பெற்று வழங்கவும் அவர் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. 

    மேலும், வரும் ஞாயிற்றுக்கிழமை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவுள்ள தேர்தல் முடிவுகளை நிறுத்தி வைக்குமாறு தேர்தல் ஆணையத்தை அவர் கேட்டுக்கொள்வார் என்றும் கூறப்படுகிறது என்று தெரிவித்தார். 
    ×