search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "poster"

    • திண்டுக்கல் நகரில் பரபரப்பு வாசகங்களுடன் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது.
    • பிரபாகரன் மக்கள் முன் தோன்றி தமிழ் ஈழத்திற்கான தீர்வுகளை அறிவிப்பார் என வாசகங்கள் இடம் பெற்றிருந்தன.

    திண்டுக்கல்:

    விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் உயிேராடு இருப்பதாக கடந்த சில தினங்களுக்கு முன்பு உலகத்தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் தெரிவித்தார். அவர் விரைவில் பொது வெளியில் தோன்றுவார் எனவும் பரபரப்பான செய்தியை வெளியிட்டார்.

    ஆனால் இலங்கை அரசு இதனை திட்டவட்டமாக மறுத்தது. 9 ஆண்டுகளுக்கு முன்பே பிரபாகரன் சுட்டு கொலை செய்யப்பட்ட தாகவும், இதற்கு போதிய ஆதாரங்கள் இருப்பதாக வும் தெரிவித்தனர். இந்நிலையில் திண்டுக்கல் நகரில் தமிழர்தேசிய முன்னணி சார்பில் பரபரப்பு வாசகங்களுடன் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது.

    விடுதலை போராட்ட களத்தில் இருக்கும் வரையில் இந்தியாவிற்கு எதிரான நாடுகள் எதையும் இலங்கையில் கால் பதிக்கவிடவில்லை என்பதை இந்தியா சிந்திக்க வேண்டும். சர்வதேச அரசியல் சூழலையும் இலங்கை அரசியல் சூழலையும் கருத்தில் கொண்டு தமிழ்ஈழ தேசிய தலைவர் பிரபாகரன் மக்கள் முன் தோன்றி தமிழ் ஈழத்திற்கான தீர்வுகளை அறிவிப்பார். எனவே உலகத்தமிழர்கள் அனைவரும் ஒன்றிணைந்து பேராதரவு தரவேண்டும். பழ.நெடுமாறன் வழிகாட்டுதலின்படி அவருக்கு துணை நிற்கவேண்டும் என குறிப்பிட்டுள்ளது.

    கடந்த சில தினங்களாக பரபரப்பை கூட்டி பின் மெல்ல நகர்ந்த இப்பிரச்சினை மீண்டும் சூடுபிடிக்க தொடங்கி யுள்ளது.

    • ஊராட்சி ஒன்றிய அலுவ லகம் வட்டாட்சியர் அலுவலகம் ஆகிய இடங்களில் ஏராளமான போஸ்டர்கள் ஒட்டப்பட்ட தால் பரபரப்பு ஏற்பட்டது.
    • ஊராட்சி மன்ற தலைவரின் ஆதரவாளர்கள் மடக்கி தாக்கியுள்ளனர்.

    விழுப்புரம்:

    செஞ்சி அருகே மீனம்பூர் கிராமத்தில் ஊராட்சி மன்ற தலைவரின் ஆதரவாளர்கள் மணல் கொள்ளையில் ஈடுபடுவதாகவும் ஏரியை ஆக்கிரமிப்பு செய்து விவசாயம் செய்வதாகவும் விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகம் மற்றும் செஞ்சி ஊராட்சி ஒன்றிய அலுவ லகம் வட்டாட்சியர் அலுவலகம் ஆகிய இடங்களில் ஏராளமான போஸ்டர்கள் ஒட்டப்பட்ட தால் பரபரப்பு ஏற்பட்டது.

    இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து அறிந்த சில பத்திரிகையாளர்கள் சம்பவ இடத்திற்கு சென்ற போது ஒரு சிலர் அவர்களை மறித்து தகராறு செய்துள்ளனர். இந்நிலையில் போஸ்டர் அடித்து ஒட்டப்பட்டதாக கூறப்படும் நபர்களை ஊராட்சி மன்ற தலைவரின் ஆதரவாளர்கள் மடக்கி தாக்கியுள்ளனர். இவை அனைத்து சம்பவங்களும் வாட்ஸ் அப்பில் பரவி வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    • நெல்லை மாநகர் பகுதிகளில் அனுமதியின்றி சுவர்களில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களை அப்புறப்படுத்த நெல்லை மாநகராட்சி கமிஷனர் சிவகிருஷ்ண மூர்த்தி உத்தரவிட்டார்.
    • சுகாதார ஆய்வாளர் இளங்கோ தலைமையில் நெல்லை மாநகராட்சி பணியாளர்கள் இப்பணியில் ஈடுபட்டனர்.

    நெல்லை:

    தூய்மை நகரங்களுக்கான மக்கள் இயக்கம் திட்டத்தை செயல்படுத்தும் விதமாக மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் ஒவ்வொரு மாதமும் 2 மற்றும் 4-வது சனிக்கிழமைகளில் தீவிர தூய்மை பணிகளை மேற்கொள்ள நகராட்சி நிர்வாகத்துறை சார்பில் உத்தரவிடப்பட்டுள்ளது.அதன்படி பணிகள் நடைபெற்று வருகிறது.

    நெல்லை மாநகர் பகுதிகளில் அனுமதியின்றி சுவர்களில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களை அப்புறப்படுத்த நெல்லை மாநகராட்சி கமிஷனர் சிவகிருஷ்ண மூர்த்தி உத்தரவிட்டார். அதன்படி நெல்லை, டவுன், வண்ணார்பேட்டை, பாளை பகுதிகளில் ஒட்டப்பட்டி ருந்த போஸ்டர்கள் அகற்றப்பட்டது.

    சுகாதார ஆய்வாளர் இளங்கோ தலைமையில் நெல்லை மாநகராட்சி பணியாளர்கள் இப்பணியில் ஈடுபட்டனர்.

    • ரஜினிகாந்தை அரசியலுக்கு இழுக்கும் வகையில் ரசிகர்கள் போஸ்டர்கள் ஒட்டி பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றனர்.
    • மதுரை மண்ணின் மைந்தர்கள் வித்தியாசமாக யோசிக்க கூடியவர்கள்.

    மதுரை:

    தமிழ் திரை உலகில் ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டாராக திகழ்ந்து வருகிறார். அவரது பிறந்தநாள் சில நாட்களில் வருகிறது. இதையொட்டி ரசிகர்கள் போஸ்டர்கள் ஒட்டி பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றனர்.

    மதுரையில் வித்தியாசமாக போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. அதில், "கோடிகளை குவிக்க விளம்பரத்தில் கூட நடிக்காதவன் நீ, தேடி வந்த உயர் பதவிகளை விரும்பாதவன் நீ, இதுவே தமிழகத்தை நீ ஆள தகுதி என 7 கோடி மக்களின் தீர்ப்பு ஆயிரம் அதிசயம் அமைந்தது உன் ஜாதகம்" என்ற வாசகங்கள் இடம் பெற்றுள்ளன. இந்த வாசகங்கள் ரஜினிகாந்தை அரசியலுக்கு அழைப்பது போல உள்ளது.

    மதுரை மண்ணின் மைந்தர்கள் வித்தியாசமாக யோசிக்க கூடியவர்கள், போஸ்டர்கள் மூலம் பரபரப்பை ஏற்படுத்துபவர்கள். அந்த வகையில் இந்த போஸ்டர்களும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • கப்பல் படையினர், படகை நிறுத்துமாறு எச்சரிக்கை விடுத்தனர்.
    • 9 மீனவர்களை இந்திய கப்பல் படையினர் இரும்பு கம்பியால் தாக்கியதில் காயமடைந்தனர்.

    புதுச்சேரி:

    காரைக்கால் மாவட்டம் காரைக்கால் மேடு மீனவர் கிராமத்தை சேர்ந்தவர் செல்வம். இவருக்கு சொந்தமான விசைப்படகில், வழக்கம் போல், கடந்த சில தினங்களுக்கு முன், 10 மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு சென்றனர். அப்போது அங்கு வந்த இந்திய கப்பல் படையினர், படகை நிறுத்துமாறு எச் சரிக்கை விடுத்ததாகவும், நிறுத்தாத காரணத்தால், கப்பலில் இருந்த வீரர்கள் துப்பாக்கி சூடு நடத்தியதில், மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த வீரவேல் என்கின்ற மீனவர் குண்டு காய ங்களுடன் மதுரை அரசு மருத்து வமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    மேலும் படகில் இருந்த 9 மீனவர்களை இந்திய கப்பல் படையினர் இரும்பு கம்பியால் தாக்கியதில் காயமடைந்து நாகை மருத்துவகல்லூரி மருத்து வமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்நிலையில் இந்திய கப்பல் படை தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து, காரைக்கால் மாவட்ட மீனவர்கள் சார்பில், காரைக்கால் துறைமுகம், காரைக்கால் மேடு, கிளிஞ்சல் மேடு, மண்டபத்தூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மீனவர்கள் சுவரொட்டிகள் ஒட்டியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    • பிரதம மந்திரி குடியிருப்பு திட்ட (ஊரகம்) பயனாளிகளுக்கு தமிழக அரசால் வழங்கப்பட்ட திட்ட கையேடு வழங்கப்பட்டது.
    • சுவரொட்டியானது மாவட்ட கலெக்டர் அலுவலகம், வட்டார வளர்ச்சி அலுவலகம், ஊராட்சி அலுவலகம் மற்றும் கிராம ஊராட்சி பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ளது.

    நெல்லை

    நெல்லை மாவட்ட கலெக்டரால், பிரதம மந்திரி குடியிருப்பு திட்டம் தொடர்பான கையேடு மற்றும் ஊரக வளர்ச்சித்துறையில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் தொடர்பான புகார் தொலைபேசி எண் குறித்த சுவரொட்டி வெளியிடப்பட்டது.

    ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை மூலம் செயல்படுத்தப்படும் பிரதம மந்திரி குடியிருப்பு திட்ட (ஊரகம்) பயனாளிகளுக்கு தமிழக அரசால் வழங்கப்பட்ட திட்ட கையேட்டினை பயனாளிகளுக்கு வழங்கியும், ஊரக குடியிருப்பு திட்டங்கள் மற்றும் ஊரக வளர்ச்சி துறை அனைத்து திட்டங்கள் தொடர்பான சந்தேகங்கள் மற்றும் புகார்களை தெரிவிக்க 89254 22215 மற்றும் 89254 22216 ஆகிய தொலைபேசி எண் குறித்த சுவரொட்டியினை நெல்லை மாவட்ட கலெக்டர் விஷ்ணு வெளியிட்டார்.மேலும் பொதுமக்கள் இதனை பயன்படுத்தி கொள்ளுமாறு அவர் கேட்டுக் கொண்டார்.

    சுவரொட்டியானது மாவட்ட கலெக்டர் அலுவலகம், வட்டார வளர்ச்சி அலுவலகம், ஊராட்சி அலுவலகம் மற்றும் கிராம ஊராட்சி பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ளது.

    • ஒற்றை தலைமையா? இரட்டை தலைமையா? என்ற குழப்பம் நீடித்து வரும் வேளையில் திருவிடைமருதூரில் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக போஸ்டர் ஓட்டப்பட்டுள்ளது.
    • எடப்பாடி பழனிசாமி தலைமையில் வெற்றி பயணம் தொடரட்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

    சுவாமிமலை:

    அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமையா? இரட்டை தலைமையா? என்ற குழப்பம் நீடித்து வரும் வேளையில் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக அவரது ஆதரவாளர்களும், எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக அவரது ஆதரவாளர்களும் போஸ்டர் ஓட்டி தங்களது ஆதரவை வெளிப்படுத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில் தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூரில் வடக்கு ஒன்றிய செயலாளர் அசோக்குமார் மற்றும் நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக போஸ்டர் ஒட்டி உள்ளனர்.

    அதில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் வெற்றி பயணம் தொடரட்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

    இதேப்போல் ஆடுதுறை, திருப்பனந்தாள், பந்தனல்லூர், திருபுவனம் ஆகிய இடங்களிலும் எடப்பாடிக்கு ஆதரவாக போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.

    மாதவரம் அருகே அம்மன் சிலை கடத்தப்பட்டதாக கூறி போஸ்டர் ஓட்டிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

    மாதவரம்:

    மாதவரம் பால் பண்ணை அருகே உள்ள பெரியசேக்காடு பகுதியில் எல்லை காத்த மாரியம்மன் கோவில் உள்ளது. கடந்த 2011-ம் ஆண்டு கோவிலுக்கு அருகில் உள்ள ஒரு வீட்டில் கட்டிடம் கட்ட பள்ளம் தோண்டிய போது 1 அடி கொண்ட வெண்கல அம்மன் சிலை கண்டுபிடிக்கப்பட்டது.

    இந்த அம்மன் சிலை பற்றி அப்போதிருந்த போலீசார் அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தி பின்னர் வருவாய் துறையிடனரிடம் சிலையை ஒப்படைத்தனர். தற்போது அந்த சிலை தொல் பொருள் ஆராய்ச்சி நிலையத்தில் உள்ளதாக தெரிகிறது.

    இந்த நிலையில் மீட்கப்பட்ட அம்மன் சிலை கடத்தப்பட்டு விட்டதாகவும் இதற்கு அதிகாரிகள் மற்றும் உள்ளூர் நிர்வாகிகள் உடந்தையாக இருந்ததாகவும் குற்றம் சாட்டி மாதவரம் பால்பண்ணை, மாத்தூர் போன்ற பகுதிகளில் போஸ்டர் ஒட்டப்பட்டு இருந்தது. இதனால் அப்பகுதி மக்களிடையே பரபரப்பு ஏற்பட்டது.

    இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் மற்றும் கோவில் நிர்வாகத்தினர் வார்டு முன்னாள் கவுன்சிலர் மனோகரன் தலைமையில் 100-க்கும் மேற்பட்டோர் மாதவரம் பால்பண்ணை போலீ நிலையத்தை முற்றுகையிட்டனர். அவதூறு சுவரொட்டி ஒட்டிய மதிவாணன் என்பவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

    மாதவரம் உதவி கமி‌ஷனர் ராமலிங்கம், இன்ஸ்பெக்டர் ஆனந்த் ஆகியோர் பொதுமக்களிடம் சமாதானம் பேசி கலைந்து போக செய்தனர்.

    இதையடுத்து போலீஸ் மீதும் கோவில் நிர்வாகத்தின் மீதும் பொய்யான அவதூறு பரப்பியதாக வழக்குபதிவு செய்து மதிவாணனை கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.

    ரேபரேலி தொகுதியில் ‘பிரியங்காவை காணவில்லை’ என பல இடங்களில் சுவரொட்டிகளை ஒட்டியுள்ள சம்பவம் காங்கிரஸ் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது. #PriyankaGandhi #RaeBareli #Missing
    ரேபரேலி:

    காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, உத்தரபிரதேசத்தின் ரேபரேலி தொகுதி எம்.பி. ஆவார். அங்கு சோனியா காந்திக்கு பதிலாக அவரது மகள் பிரியங்காதான் கட்சி நடவடிக்கைகளை கவனித்து வருகிறார். ஆனால் சமீப காலமாக அவர் தொகுதிக்கு செல்லவில்லை என தெரிகிறது.



    இதனால் ஆத்திரம் அடைந்த அந்த தொகுதிவாசிகள் ‘பிரியங்காவை காணவில்லை’ என பல இடங்களில் சுவரொட்டிகளை ஒட்டியுள்ளனர். ரேபரேலி தொகுதி மக்கள் அனைவரும் தங்கள் குடும்பத்தினர் எனக்கூறும் சோனியா குடும்பத்தினர், தற்போது அதை மறந்துவிட்டனர் என்றும் அதில் கூறப்பட்டு இருந்தது. இந்த சுவரொட்டிகளால் தொகுதி முழுவதும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த விவகாரம் மாநில காங்கிரசிலும் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது. #PriyankaGandhi #RaeBareli #Missing 
    திருக்கோவிலூர் அருகே சப்-இன்ஸ்பெக்டரை கண்டித்து போஸ்டர் ஒட்டிய 2 பேர் மீது போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர்.
    திருக்கோவிலூர்:

    திருக்கோவிலூரை அடுத்துள்ள மணலூர் பேட்டை போலீஸ் நிலையத்துக்குட்பட்ட பெரும்பாலான கிராமங்கள் தென்பெண்ணை ஆற்றங்கரையோரம் உள்ளது. திருவண்ணாமலை மாவட்ட எல்லையாக இருப்பதால் இங்கிருந்து மணல் கடத்தல் நடைபெற்று வந்தது.   

    இதனை தடுக்க மணலூர்பேட்டை சப்-இன்ஸ்பெக்டர் சிவசந்திரன் தலைமையிலான போலீசார் இரவு பகலாக வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். 

    மேலும் மணல் கடத்தலில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இதனால் ஆத்திரம் அடைந்த ஜம்படை கிராமத்தைச் சேர்ந்த தட்சிணாமூர்த்தி (வயது 29), தணிகைவேல் (37) ஆகியோர் மணலூர்பேட்டை சப்-இன்ஸ்பெக்டர் சிவசந்திரனை கண்டித்து ஜம்படை பஸ் நிறுத்தத்தில் உள்ள நிழற்குடையில் போஸ்டர் ஒட்டினார்கள். 

    இது குறித்து தகவல் அறிந்த சப்-இன்ஸ்பெக்டர் சிவசந்திரன் ஜம்படை கிராமத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார். போஸ்டர் ஒட்டிய தட்சிணாமூர்த்தி மற்றும் தணிகைவேல் ஆகிய 2 பேர் மீது வழக்குபதிவு செய்து அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
    நடிகர் எஸ்.வி. சேகரை தேடப்படும் நபராக அறிவித்து சென்னை நகரம் முழுவதும் பரபரப்பு சுவரொட்டி ஒட்டப்பட்டுள்ளது.
    சென்னை:

    நடிகர் எஸ்.வி. சேகர் சில தினங்களுக்கு முன்பு தனது டுவிட்டர் பக்கத்தில் பெண் பத்திரிகையாளர்களை அவதூறாக விமர்சனம் செய்து பதிவு வெளியிட்டார். அவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி போலீஸ் கமி‌ஷனர் அலுவலகத்தில் பத்திரிகையாளர் சங்கத்தினர் புகார் அளித்தனர்.

    அவர் மீது பொது அமைதியை சீர் குலைத்தல், அவதூறு பரப்புதல், பெண் வன்கொடுமை உள்ளிட்ட 4 சட்டப்பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். கைது செய்வதற்கான எந்த நடவடிக்கையும் போலீசார் மேற் கொள்ளவில்லை.

    கைது நடவடிக்கையில் இருந்து தப்புவதற்காக எஸ்.வி. சேகர் முன் ஜாமீன் கேட்டு சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். ஆனால் முன் ஜாமீன் மனுவை கோர்ட்டு தள்ளுபடி செய்தது. மேலும் இந்த வழக்கில் மற்றவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது போல எஸ்.வி. சேகர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீசாருக்கு நீதிபதி உத்தரவிட்டார். அதன் பிறகும் எஸ்.வி.சேகரை கைது செய்ய போலீசார் எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை.

    முன்ஜாமீன் கிடைக்காததால் அவர் தலைமறைவாகிவிட்டதாக தகவல் வெளியானது. எஸ்.வி. சேகரை கைது செய்யாததற்கு அவரது உறவினர் ஒருவரின் தலையீடே காரணம் என்று அரசியல் கட்சித் தலைவர்கள் குற்றம் சாட்டினர்.

    இந்த நிலையில் எஸ்.வி.சேகர் போலீசாருக்கு சவால் விடும் வகையில் 2 நாட்களுக்கு முன்பு சென்னை பாண்டி பஜாரில் நடந்த விழாவில் பங்கேற்றார். இந்த விழாவில் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணனும் கலந்து கொண்டார். ஆனாலும் அவரை போலீசார் கைது செய்ய எந்த முயற்சியும் எடுக்கவில்லை.

    இந்த நிலையில் நடிகர் எஸ்.வி. சேகரை தேடப்படும் நபராக அறிவித்து சென்னை நகரம் முழுவதும் பரபரப்பு சுவரொட்டி ஒட்டப்பட்டுள்ளது. மக்கள் மன்றத்தினர் இந்த சுவரொட்டியை ஒட்டியுள்ளனர். மயிலாப்பூர் பகுதியில் இந்த சுவரொட்டி அதிகமாக ஒட்டப்பட்டுள்ளன. அவருக்கு எதிரான வாசகங்களும் அதில் இடம் பெற்றுள்ளன. #SVeShekher
    டெல்லி அக்பர் சாலை பெயர் பலகை மீது ஒட்டப்பட்டிருந்த 'மகாரானா பிரதாப் மார்ஜ்' என்ற புதிய பெயரை போலீசார் இன்று நீக்கினர். #delhiakbarroad
    புதுடெல்லி:

    புதுடெல்லியில் உள்ள அக்பர் சாலையில் பல மத்திய மந்திரிகள், பாஜக தலைவர் அமித் ஷா மற்றும் காங்கிரஸ் அலுவலகம் அமைந்துள்ளது. இந்த சாலையின் பெயர் பலகையில் மர்ம நபர்கள் 'மகாரானா பிரதாப் மார்ஜ்' என்ற புதிய பெயரை ஒட்டியிருந்தனர்.

    அதனை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் பார்த்து புதிய பெயரை நீக்கினர். இதுகுறித்து டெல்லி முனிசிபல் கவுன்சில் புகார் அளித்த பின் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர்.

    இரண்டு ஆண்டுகளுக்கு முன் ஜெனரல் விகே சிங் அக்பர் சாலையின் பெயரை, 'மகாராஜனா பிரதாப் மார்ஜ்' என்று மாற்ற வேண்டும் என மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்திருத்திருந்தார். ஆனால் கோரிக்கை மறுக்கப்பட்டது. இருப்பினும் சாலை பெயரை மாற்றி பல முறை போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. மகாரானா பிரதாப் பேரரசர் அக்பர் காலத்தில் அவருடன் போரிட்ட அரசர் என்பது குறிப்பிடத்தக்கது. #delhiakbarroad


    ×