என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "பிரபாகரன் குறித்து பரபரப்பு போஸ்டர்"
- திண்டுக்கல் நகரில் பரபரப்பு வாசகங்களுடன் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது.
- பிரபாகரன் மக்கள் முன் தோன்றி தமிழ் ஈழத்திற்கான தீர்வுகளை அறிவிப்பார் என வாசகங்கள் இடம் பெற்றிருந்தன.
திண்டுக்கல்:
விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் உயிேராடு இருப்பதாக கடந்த சில தினங்களுக்கு முன்பு உலகத்தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் தெரிவித்தார். அவர் விரைவில் பொது வெளியில் தோன்றுவார் எனவும் பரபரப்பான செய்தியை வெளியிட்டார்.
ஆனால் இலங்கை அரசு இதனை திட்டவட்டமாக மறுத்தது. 9 ஆண்டுகளுக்கு முன்பே பிரபாகரன் சுட்டு கொலை செய்யப்பட்ட தாகவும், இதற்கு போதிய ஆதாரங்கள் இருப்பதாக வும் தெரிவித்தனர். இந்நிலையில் திண்டுக்கல் நகரில் தமிழர்தேசிய முன்னணி சார்பில் பரபரப்பு வாசகங்களுடன் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது.
விடுதலை போராட்ட களத்தில் இருக்கும் வரையில் இந்தியாவிற்கு எதிரான நாடுகள் எதையும் இலங்கையில் கால் பதிக்கவிடவில்லை என்பதை இந்தியா சிந்திக்க வேண்டும். சர்வதேச அரசியல் சூழலையும் இலங்கை அரசியல் சூழலையும் கருத்தில் கொண்டு தமிழ்ஈழ தேசிய தலைவர் பிரபாகரன் மக்கள் முன் தோன்றி தமிழ் ஈழத்திற்கான தீர்வுகளை அறிவிப்பார். எனவே உலகத்தமிழர்கள் அனைவரும் ஒன்றிணைந்து பேராதரவு தரவேண்டும். பழ.நெடுமாறன் வழிகாட்டுதலின்படி அவருக்கு துணை நிற்கவேண்டும் என குறிப்பிட்டுள்ளது.
கடந்த சில தினங்களாக பரபரப்பை கூட்டி பின் மெல்ல நகர்ந்த இப்பிரச்சினை மீண்டும் சூடுபிடிக்க தொடங்கி யுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்