search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Ponneri"

    பொன்னேரி அருகே ஓசியில் பிரியாணி கேட்டு ஊழியர்களை தாக்கிய 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பொன்னேரி:

    பொன்னேரி, புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள பிரியாணி கடையில் ஊழியர்களாக வேலை பார்த்து வருபவர்கள் வசிம், லிசன். இரவில் கடைக்கு வந்த 3 வாலிபர்கள் பணம் கொடுக்காமல் பிரியாணி, காடை வருவல் கேட்டனர். இதனை கடையில் இருந்த ஊழியர்கள் கண்டித்தனர்.

    இதனால் ஆத்திரம் அடைந்த 3 வாலிபர்கள் வசிம், லிசனை சரமாரியாக தாக்கி தப்பி சென்று விட்டனர்.

    இது குறித்து பொன்னேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆலாடு பகுதியை சேர்ந்த சூர்ய பிரகாஷ், கும்மங்குளம் பாலாஜி ஆகிய 2 பேரை கைது செய்தனர். மேலும் பரிக்கபட்டை சேர்ந்த பிரகாசை தேடி வருகிறார்கள்.

    பொன்னேரி அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதலில் தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பொன்னேரி:

    பொன்னேரி அடுத்த ஜீவா தெருவை சேர்ந்தவர் மாணிக்கம் (43). கூலித் தொழிலாளி. இவர் பழவேற்காட்டில் இருந்து பொன்னேரிக்கு மோட்டார் சைக்கிளில் வந்தார். கல்மேடு பகுதியில் அவர் வரும் போது பொன்னேரியில் இருந்து பழவேற்காட்டிற்கு சென்ற பழவேற்காட்டை சேர்ந்த யூசுப் (26) என்பவரது மோட்டார் சைக்கிளின் மீது நேருக்கு நேர் மோதி விபத்துகுள்ளானது.

    இதில் பலத்த காயம் அடைந்த மாணிக்கம் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்தார். ஆம்புலன்ஸ் மூலம் சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி மாணிக்கம் இறந்துவிட்டார். இதுகுறித்து பொன்னேரி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    பொன்னேரி அருகே தனியார் பள்ளியில் மரக்கிளையை வெட்டிய தொழிலாளி கீழே விழுந்து பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பொன்னேரி:

    பொன்னேரியை அடுத்த துர்கா நகரை சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது 50). கூலித்தொழிலாளி. இவர் பஞ்செட்டியில் உள்ள தனியார் பள்ளியில் மரக் கிளையை வெட்டும் பணியில் ஈடுபட்டார்.

    அப்போது அவர் எதிர்பாராத விதமாக மரத்தில் இருந்து கீழே விழுந்தார். இதில் பலத்த காயம் அடைந்த சுப்பிரமணி சம்பவ இடத்திலேயே பலியானார்.

    இது பற்றி அறிந்ததும் சுப்பிரமணியின் உறவினர்கள் திரண்டு வந்தனர். அவர்கள் பொன்னேரி- செங்குன்றம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். தனியார் பள்ளி நிர்வாகம் உரிய பாதுகாப்பு சாதனங்கள் இன்றி பணியாளர்களை வேலை வாங்கி வருவதால் இது போன்ற உயிரிழப்புகள் ஏற்படுவதாக புகார் தெரிவித்தனர்.

    இதனிடையே பொன்னேரியில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று விட்டு மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி அவ்வழியே வந்தார்.

    அவர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டார். உயிரிழந்த தொழிலாளியின் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு பெற்று தருவதாக உறுதியளித்தார். இதையடுத்து மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.

    பொன்னேரி அருகே அடகு கடையை உடைத்து கொள்ளை முயற்சி நடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    பொன்னேரி:

    பொன்னேரியை அடுத்த கிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவர் சந்தோஷ். இவர் அடகு கடை நடத்தி வருகிறார். இந்த பகுதியை சேர்ந்த ஏராளமானோர் இங்கு நகைகளை அடகு வைத்துள்ளனர்.

    நேற்று இரவு சந்தோஷ் கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றுவிட்டார். கடை முன்பு கண்காணிப்பு கேமராவும் பொருத்தி இருந்தார்.

    இரவு 12.30 மணியளவில் இந்த கடைக்கு வந்த ஒரு கொள்ளை கும்பல், முதலில் கண்காணிப்பு கேமராவை உடைத்து எறிந்தது. ‌ஷட்டரில் உள்ள பூட்டுகளை உடைத்து விட்டு கிரில் கதவை திறக்க முயன்றனர்.

    அப்போது சத்தம் கேட்டு அருகில் உள்ள வீட்டில் இருந்தவர் வெளியே எட்டிப்பார்த்தார். யார் அது என்று குரல் கொடுத்தார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்களும் அங்கு வந்தனர்.

    இதையடுத்து கொள்ளையர்கள் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். இதுபற்றி அடகு கடை உரிமையாளருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே அவர் வந்தார். கடைக்குள் கொள்ளையர்கள் நுழைவதற்குள் பக்கத்து வீட்டுக்காரர் பார்த்ததால் கொள்ளையர்கள் ஓடி விட்டனர்.

    இதனால் அடகு கடையில் இருந்த பல லட்சம் மதிப்புள்ள தங்க நகைகள் தப்பின.இதுகுறித்து பொன்னேரி போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

    பொன்னேரியை அடுத்த வெண்பாக்கத்தில் தையல் கடை வைத்திருப்பவர் மனோ. நேற்று இரவு 10 மணிக்கு கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றார்.

    இன்று காலை கடையின் ‌ஷட்டர் திறந்து கிடந்தது. இது பற்றிய தகவல் அறிந்ததும் கடைக்கு வந்து பார்த்தார். அப்போது அங்கு இருந்த ரூ.15 ஆயிரம் ரொக்கம், செட்ஆப் பாக்ஸ், ஆதார் அட்டை ஆகியவை திருடப்பட்டிருப்பது தெரிய வந்தது. இதுபற்றி பொன்னேரி போலீசில் புகார் செய்யப்பட்டது.

    இரண்டு சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்தனர். தப்பி ஓடிய கொள்ளையர்களை தேடி வருகிறார்கள்.

    பொன்னேரி அருகே அம்மன் கோவில் உண்டியலை உடைத்து கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பொன்னேரி:

    பொன்னேரி அருகே கல்லூர் கிராமம் உள்ளது. இங்கு இருக்கும் காளி அம்மன் கோவிலில் கிராம மக்கள் வழிபட்டு வருகிறார்கள். நேற்று இரவு பூஜை முடிந்ததும் கோவில் பூட்டப்பட்டது.

    இன்று காலை, கோவிலுக்கு சாமி கும்பிட சிலர் சென்றனர். அப்போது கோவில் பூட்டு உடைக்கப்பட்டு, கதவு திறந்து கிடந்தது.

    உள்ளே சென்று பார்த்த போது உண்டியல் உடைக்கப்பட்டு அதில் இருந்த பணம் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது. அம்மன் சிலையில் அணிவிக்கப்பட்டிருந்த 10 பவுன் தங்கச் சங்கிலி திருடப்பட்டிருந்தது.

    கோவில் இருந்த குத்து விளக்கு, வெள்ளி பூஜை பொருட்கள், பட்டுப் புடவைகள், ஆம்ளிப்பர், ஆகியவற்றையும் கொள்ளையர்கள் எடுத்துச் சென்று விட்டனர். இதுகுறித்து திருப்பாலைவனம் போலீசார் வழக்கு பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகிறார்கள்.

    பொன்னேரி அருகே கார்-வேன் மோதல்லில் 10 பேர் காயம் அடைந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பொன்னேரி:

    மீஞ்சூர் அருகே உள்ள சுப்பா ரெட்டிப்பாளையம் கிராமத்தை சேர்ந்த 20 பேர் நேற்று இரவு பெரும்பேடு குப்பத்தில் நடைபெற்ற பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலந்து கொண்டு மீஞ்சூர் திரும்பிக் கொண்டிருந்தனர்.

    வேனை ராஜேந்திரன் என்பவர் ஒட்டி வந்தார். பொன்னேரி அடுத்த சாணார்பாளையம் என்ற கிராமத்தின் அருகே வேன் வந்தது. அப்போது மீஞ்சூரில் இருந்து எதிரே வந்த கார் மீது மோதியது.

    இந்த விபத்தில் காரும் வேனும் நேருக்கு நேர் மோதியதில் தலை குப்புற கவிழ்ந்தது. இதில் 10-க்கும் மேற்பட்டோருக்கு காயம் ஏற்பட்டது. சஞ்சீவி (50), பிரசாந்த் (24), ரித்தீஷ் (24) ஆகிய மூவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

    அவர்களுக்கு பொன்னேரி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல்சிகிச்சைக்காக சென்னை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    பொன்னேரி அருகே கடையின் பூட்டை உடைத்து ரூ.1 லட்சம் மதிப்புள்ள செல்போன்கள் கொள்ளையடித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    பொன்னேரி:

    பொன்னேரி அடுத்த வேம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் ஜெகநாதன். இவர் செல்போன் கடை வைத்துள்ளார். நேற்று இரவு கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றார்.

    இன்று அதிகாலை அருகில் உள்ள கடைக்காரர்கள் கடையின் ‌ஷட்டர் திறந்திருப்பதை தெரிவித்தனர். வந்து பார்த்த போது ‌ஷட்டர் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. கடையில் இருந்த ரூ.1 லட்சம் மதிப்புள்ள 20 செல்போன்கள், 20 ஆயிரம் ரூபாய் ரொக்கமும் திருடப் பட்டிருப்பது தெரிய வந்தது.

    மீஞ்சூர் மற்றும் பொன்னேரியில் 3 பெண்கள் திடீரென மாயமானது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பொன்னேரி:

    மீஞ்சூரை அடுத்த சோமஞ்சேரி அம்பேத்கர் தெருவைச் சேர்ந்தவர் சிவகுமார். இவரது மகள் சோபனா (வயது 15).

    கடந்த 5-ந் தேதி வீட்டில் இருந்து கடைக்கு சென்ற சோபனா வீடு திரும்பவில்லை. உறவினர்கள் வீடுகளில் தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்து மீஞ்சூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    பொன்னேரியை அடுத்த கிருஷ்ணாபுரம் அருந்ததி நகரைச்சேர்ந்தவர் முனுசாமி. இவரது மகள் சரிதா (19). வீட்டில் இருந்து வெளியே சென்ற சரிதா காணவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்து பொன்னேரி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    பொன்னேரி அடுத்த ஆலாடு பூந்தோட்டகாலனியைச் சேர்ந்தவர் சம்பத். இவரது மனைவி புனிதா (22) கடந்த 23-ந் தேதி புனிதா உடல்நிலை சரிஇல்லாததால் பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்று வருவதாக கூறி சென்றார். பின்னர் வீட்டுக்கு திரும்பவில்லை.

    சம்பத் பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு சென்று விசாரித்த போது புனிதாவை மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பியதாக டாக்டர்கள் தெரிவித்து உள்ளனர்.

    ஆனால் புனிதா எங்கு சென்றார். என்ன ஆனார் என்று தெரியவில்லை.

    மாயமான 3 பெண்களும் கடத்தப்பட்டனரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த 2 மாதத்துக்கு முன்பு 100-க்கும் மேற்பட்ட பெண்கள், மாணவிகள் மாயமானார்கள். தற்போது பெண்கள் மாயமாகும் சம்பவம் குறைந்து இருந்தது.

    இப்போது பெண்கள் மீண்டும் மாயமாகும் சம்பவம் அதிகரித்து இருப்பது பெற்றோரை அதிர்ச்சி அடைய செய்து உள்ளது. #Tamilnews
    பொன்னேரி-சோழவரம் பகுதியில் விதிகளை மீறி வாகனம் ஓட்டிய மொத்தம் 330 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
    பொன்னேரி:

    பொன்னேரி உட்கோட்ட போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட சோழவரம், பொன்னேரி, காட்டூர், திருப்பாலைவனம், மீஞ்சூர் ஆகிய பகுதிகளில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அதிகவேகமாக வாகனம் ஓட்டி வந்தது, மது குடித்துவிட்டு வாகனம் ஓட்டுதல், லைசென்ஸ், ஹெல் மேட் இல்லாமல் வாகனம் ஓட்டி வந்தவர்கள் என விதிமுறை மீறிய மொத்தம் 330 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அவர்களி டம் இருந்து ரூ. 33 ஆயிரத்து 600 அபராதம் வசூலிக்கப்பட்டது. #tamilnews
    பொன்னேரி அடுத்த வஞ்சிவாக்கம் கூட்டுரோட்டில் மது குடிக்க பணம் தராததால் பேரனே பாட்டியை அடித்துக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
    பொன்னேரி:

    பொன்னேரியை அடுத்த வஞ்சிவாக்கம் கூட்டு ரோட்டில் வசித்து வந்தவர் மணிமேகலை (வயது 70). இவருடன் மகளின் மகனான கமல் தங்கி இருந்து பொன்னேரியில் உள்ள ஓட்டலில் வேலை பார்த்து வருகிறார்.

    நேற்று இரவு வீட்டுக்கு வந்த கமல் மது குடிக்க பணம் கேட்டு மணிமேகலையுடன் தகராறு செய்தார். இதனை மணிமேகலை கண்டித்து பணம் கொடுக்க மறுத்துவிட்டார். இந்த நிலையில் மது குடித்து வந்த கமல் மீண்டும் பாட்டி மணிமேகலையிடம் தகராறு செய்தார். அப்போது அருகில் கிடந்த உருட்டுக் கட்டையால் மணிமேகலையை தாக்கினார். இதில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.

    சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்து பார்த்த போது மணிமேகலை கொலை செய்யப்பட்டு கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    இது குறித்து திருப்பாலைவனம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் கமலை கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது. #Tamilnews
    மது அருந்திய போது ஏற்பட்ட தகராறில் நண்பரை கொன்று வீட்டில் புதைத்த வாலிபர், 5 மாதத்துக்கு பிறகு சிக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
    பொன்னேரி:

    வேலூர் கிருஷ்ணா புரத்தை சேர்ந்தவர் விஜய் (வயது 20). இவர் பொன்னேரியை அடுத்த மாதவரம் பகுதியில் உள்ள இரும்பு உருக்கு ஆலையில் வேலை பார்த்து வந்தார்.

    அதே பகுதியில் உள்ள வீட்டை வாடகைக்கு எடுத்து உடன் வேலை பார்க்கும் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த சுரேஷ் கவுத் என்பவருடன் தங்கி இருந்தார். இந்த நிலையில் கடந்த டிசம்பர் 15-ந் தேதி விஜய் திடீரென மாயமானார். இதுபற்றி அவரது தாய் பொன்னேரி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    இதேபோல் விஜய்யுடன் தங்கி இருந்து சுரேஷ் கவுத்தும் தலைமறைவாகி விட்டார். இதனால் விஜய் என்ன ஆனார்? என்பது தெரியாமல் இருந்தது. விஜய் பயன்படுத்திய செல்போனின் ஐ.எம்.இ. நம்பரை வைத்து ஆய்வு செய்து வந்தனர்.
    இதற்கிடையே விஜயின் செல்போன் எண்ணூர் அருகே பயன்படுத்துவது தெரிந்தது. இதனை வைத்து  அப்பகுதியில் தங்கி இருந்த சுரேஷ் கவுத்தை போலீசார் மடக்கி பிடித்தனர்.

    விசாரணையில் டிசம்பர் 15-ந் தேதி மது அருந்திய போது ஏற்பட்ட தகராறில் விஜயை அடித்து கொலை செய்துவிட்டதாகவும், உடலை வீட்டிலேயே புதைத்ததாகவும் சுரேஷ் கவுத் தெரிவித்தார்.

    இதையடுத்து நேற்று இரவு  அவர்கள் ஏற்கனவே தங்கி இருந்த தாசில்தார் சுமதி முன்னிலையில் போலீசார் தோண்டியினர். அப்போது விஜயின் எலும்புக்கூடுகள் கிடைத்தது. அதனை பரிசோதனைக்காக பொன்னேரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    சுரேஷ் கவுத்திடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? யாரேனும் உதவினார்களா? என்ற கோணத்தில் விசாரணை நடக்கிறது. கொலை நடந்த 5 மாதத்துக்கு பின்னர் செல்போனால் குற்றவாளி சிக்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.
    பொன்னேரி அருகே மணல் கடத்தல் டிராக்டர் மோதி சிறுவன் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பொன்னேரி:

    பொன்னேரியை அடுத்த வீரங்கிவேடு கிராமத்தை சேர்ந்தவர் பாபு. இவரது மகன் கோகுல் (வயது 3½).

    இன்று அதிகாலை பாபுவின் தம்பி சண்முகம் தனது மோட்டார் சைக்கிளில் சிறுவன் கோகுலை ஏற்றிக் கொண்டு அருகில் உள்ள வயல்வெளிக்கு சென்றார்.

    அப்போது எதிரே மணல் கடத்தி வந்த டிராக்டர் திடீரென மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே சிறுவன் கோகுல் பரிதாபமாக இறந்தான். சண்முகத்துக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

    விபத்து நடந்ததும் டிராக்டரை நிறுத்தி விட்டு அதில் இருந்தவர்கள் தப்பி ஓடிவிட்டனர். படுகாயம் அடைந்த சண்முகத்தை அக்கம் பக்கத்தினர் மீட்டு பொன்னேரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    பெரும்பேடு ஏரியில் மர்ம நபர்கள் மணல் கடத்தலில் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    மாமல்லபுரத்தை அடுத்த சூலேரிக்காட்டை சேர்ந்தவர் முருகன் (34). அதே பகுதியில் கிழக்கு கடற்கரையை கடக்க முயன்றார். அப்போது சென்னை நோக்கி வந்த கார் முருகன் மீது மோதியது. இதில் அவர் பரிதாபமாக இறந்தார். இது குறித்து மாமல்லபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×