search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பொன்னேரியில் நண்பரை கொன்று வீட்டில் புதைத்த வாலிபர்: 5 மாதத்துக்கு பின்னர் செல்போனால் சிக்கினார்
    X

    பொன்னேரியில் நண்பரை கொன்று வீட்டில் புதைத்த வாலிபர்: 5 மாதத்துக்கு பின்னர் செல்போனால் சிக்கினார்

    மது அருந்திய போது ஏற்பட்ட தகராறில் நண்பரை கொன்று வீட்டில் புதைத்த வாலிபர், 5 மாதத்துக்கு பிறகு சிக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
    பொன்னேரி:

    வேலூர் கிருஷ்ணா புரத்தை சேர்ந்தவர் விஜய் (வயது 20). இவர் பொன்னேரியை அடுத்த மாதவரம் பகுதியில் உள்ள இரும்பு உருக்கு ஆலையில் வேலை பார்த்து வந்தார்.

    அதே பகுதியில் உள்ள வீட்டை வாடகைக்கு எடுத்து உடன் வேலை பார்க்கும் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த சுரேஷ் கவுத் என்பவருடன் தங்கி இருந்தார். இந்த நிலையில் கடந்த டிசம்பர் 15-ந் தேதி விஜய் திடீரென மாயமானார். இதுபற்றி அவரது தாய் பொன்னேரி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    இதேபோல் விஜய்யுடன் தங்கி இருந்து சுரேஷ் கவுத்தும் தலைமறைவாகி விட்டார். இதனால் விஜய் என்ன ஆனார்? என்பது தெரியாமல் இருந்தது. விஜய் பயன்படுத்திய செல்போனின் ஐ.எம்.இ. நம்பரை வைத்து ஆய்வு செய்து வந்தனர்.
    இதற்கிடையே விஜயின் செல்போன் எண்ணூர் அருகே பயன்படுத்துவது தெரிந்தது. இதனை வைத்து  அப்பகுதியில் தங்கி இருந்த சுரேஷ் கவுத்தை போலீசார் மடக்கி பிடித்தனர்.

    விசாரணையில் டிசம்பர் 15-ந் தேதி மது அருந்திய போது ஏற்பட்ட தகராறில் விஜயை அடித்து கொலை செய்துவிட்டதாகவும், உடலை வீட்டிலேயே புதைத்ததாகவும் சுரேஷ் கவுத் தெரிவித்தார்.

    இதையடுத்து நேற்று இரவு  அவர்கள் ஏற்கனவே தங்கி இருந்த தாசில்தார் சுமதி முன்னிலையில் போலீசார் தோண்டியினர். அப்போது விஜயின் எலும்புக்கூடுகள் கிடைத்தது. அதனை பரிசோதனைக்காக பொன்னேரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    சுரேஷ் கவுத்திடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? யாரேனும் உதவினார்களா? என்ற கோணத்தில் விசாரணை நடக்கிறது. கொலை நடந்த 5 மாதத்துக்கு பின்னர் செல்போனால் குற்றவாளி சிக்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×