search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Pongal Gift"

    • பொங்கல் பரிசு தொகுப்பில் தலா 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை மற்றும் முழுக் கரும்பு வழங்குவதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
    • இந்த ஆண்டிற்கான பொங்கல் தொகுப்பில் ரொக்கப்பரிசு குறித்த அறிவிப்பு இடம்பெறவில்லை.

    சென்னை:

    மிச்சாங் புயலால் பாதிக்கப்பட்ட வடசென்னை பகுதிக்கு உட்பட்ட ராயபுரம், ஆர்.கே.நகர், பெரம்பூர், திரு.வி.க.நகர், கொளத்தூர், திருவொற்றியூர் உள்ளிட்ட பகுதியை சேர்ந்த 30 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி இன்று அடையாறில் நடைபெற்றது.

    சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள குறிஞ்சி இல்லத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பயனாளிகள் 100 பேருக்கு நிவாரண பொருட்களை வழங்கி, பொருட்களை கொண்டு செல்லும் வாகனங்களையும் கொடியசைத்து அனுப்பி வைத்தார்.

    அப்போது அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கேலோ இந்தியா போட்டிகள் தமிழ்நாட்டில் வருகிற 19-ந்தேதி முதல் 31-ந்தேதி வரை நடைபெறுவதால் நிறைவு விழாவில் பங்கேற்க வருமாறு பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுக்க இன்று டெல்லி செல்கிறேன்.

    பிரதமரை சந்திக்கும் போது தமிழ்நாட்டுக்கான மழை வெள்ள பாதிப்புகளுக்கு நிவாரண நிதியை கூடுதலாக வழங்கவும் வலியுறுத்த உள்ளேன்.

    கேள்வி:-பொங்கலுக்கு 1000 ரூபாய் பரிசு தொகுப்பு அறிவிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சியினர் கேட்டு வருகிறார்களே? வாய்ப்பு உள்ளதா?

    பதில்:-அதுபற்றி முதல்-அமைச்சர்தான் முடிவு எடுப்பார்.

    கேள்வி:-கடந்த 10 ஆண்டுகளில் தமிழகத்துக்கு 2½ மடங்கு கூடுதலாக நிதி ஒதுக்கி உள்ளதாக பிரதமர் கூறி இருக்கிறாரே? ஆனால் நாம் தொடர்ந்து போதுமான நிதி ஒதுக்கவில்லை என்று குற்றம்சாட்டி வருகிறோமே?

    பதில்:-நிதி அமைச்சர் தெளிவாக பதில் சொல்லி விட்டார். இதுபற்றி விதண்டாவாதம் செய்ய விரும்பவில்லை. நிதி அமைச்சர் பார்த்து விட்டு சென்றுள்ளார். விரைவில் நிதி ஒதுக்குவார்கள் என்று நம்புகிறோம்.

    கேள்வி:-இளைஞர் அணி மாநாடு எப்போது நடைபெறும்?

    பதில்:-அதுபற்றி தலைவர் அறிவிப்பார். 2 நாளில் முடிவு செய்து அறிவித்து விடுவார்கள். இம்மாத இறுதிக்குள் மாநாடு நடைபெறும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அப்போது அமைச்சர் பி.கே.சேகர்பாபு, கலாநிதி வீராசாமி எம்.பி., மேயர் பிரியா மற்றும் எம்.எல்.ஏ.க் கள் உடன் இருந்தனர்.

    • தமிழ்நாட்டு உழவர்களிடம் இருந்து மட்டுமே கொள்முதல் செய்ய வேண்டும்.
    • ஒரு கரும்புக்கு ரூ.50 வீதம் விலை வழங்கவும் தமிழக அரசு முன்வர வேண்டும்.

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    பொங்கல் திருநாளுக்கான பரிசுத் தொகுப்பு குறித்து தமிழக அரசின் சார்பில் இதுவரை எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. போதிய வாழ் வாதாரம் இல்லாமல் அரசின் உதவியை நம்பியிருக்கும் மக்களுக்கும், கரும்பு சாகுபடி செய்துள்ள உழவர்களுக்கும் அரசின் தாமதம் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

    எனவே, தமிழ்நாட்டு மக்களுக்கான பொங்கல் பரிசுத் தொகுப்பை உடனடியாக தமிழக அரசு அறிவிக்க வேண்டும். அதில் கரும்பு இருப்பதை உறுதி செய்ய வேண்டும். உயரம் தொடர்பாக எந்த நிபந்தனையும் விதிக்காமல் முழுக் கரும்பு என்ற அடிப்படையில், தமிழ்நாட்டு உழவர்களிடம் இருந்து மட்டுமே கொள்முதல் செய்ய வேண்டும். ஒரு கரும்புக்கு ரூ.50 வீதம் விலை வழங்கவும் தமிழக அரசு முன்வர வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • நிவாரண பணம் கிடைக்காத பொதுமக்கள் ரேசன் கடைகளில் ரூ.6 ஆயிரம் கேட்டு விண்ணப்பம் எழுதி கொடுத்துள்ளனர்.
    • புத்தாண்டு பிறந்த ஓரிரு நாட்களில் பொங்கல் பரிசுத் தொகுப்புக்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும்.

    சென்னை:

    புத்தாண்டு நாளை பிறப்பதையொட்டி தமிழக மக்கள் அனைவரும் பொங்கல் பண்டிகையை எதிர் நோக்க தொடங்கி உள்ளனர்.

    ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையை மக்கள் சிறப்பாக கொண்டாடுவதற்காக தமிழக அரசானது ரேசன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்புடன் முழு கரும்பு, ரொக்கப் பணம் தருவது வழக்கம்.

    அந்த வகையில் இந்த பொங்கல் பண்டிகைக்கு 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, ரொக்கப்பணம் ரூ.1000, ஒரு முழு கரும்பு ஆகியவற்றை வழங்க திட்டமிட்டு வருவதாக தெரிகிறது.

    ஆனாலும் இன்னும் எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படவில்லை. பொங்கல் பண்டிகைக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், பரிசுத் தொகுப்பு எப்போது கிடைக்கும்? என எதிர்பார்க்க தொடங்கிவிட்டனர்.

    இதுகுறித்து அதிகாரிகளிடம் கேட்ட போது அவர்கள் கூறியதாவது:-

    ஒவ்வொரு ஆண்டும் ரேசனில் பொங்கல் பண்டிகைக்கு என்னென்ன பொருட்கள் வழங்குவது என்பது குறித்து டிசம்பர் மாதமே முடிவு செய்து பொங்கல் பரிசுத் தொகுப்பும் தொடங்கி வைக்கப்பட்டு விடும்.

    ஆனால் இந்த டிசம்பர் மாதத்தில் 'மிச்சா' புயல் வந்த காரணத்தால் சென்னை உள்பட 4 மாவட்டங்கள் வெள்ளத்தில் தத்தளித்தது. அதன் பிறகு தென்மாவட்டங்களில் பெய்த கனமழையால் தூத்துக்குடி-திருநெல்வேலி மாவட்டங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டது.

    இந்த மாவட்ட மக்களுக்கு வெள்ள நிவாரண பணிகள் வழங்கும் பணிகள் இன்னும் முழுமையாக முடிவடையவில்லை. நிவாரண பணம் கிடைக்காத பொதுமக்கள் ரேசன் கடைகளில் ரூ.6 ஆயிரம் கேட்டு விண்ணப்பம் எழுதி கொடுத்துள்ளனர்.

    அவர்களின் வங்கிக் கணக்கிற்கு இன்னும் பணம் போய் சேரவில்லை. நாளை அல்லது நாளை மறுநாள் தான் பணம் அனுப்பப்படும் என தெரிகிறது.

    இந்த சூழலில் வெள்ளம் பாதிக்காத மாவட்டங்களில் உள்ள மக்கள் பொங்கல் பரிசுத் தொகுப்பை ஆவலுடன் எதிர்பார்ப்பது அரசின் கவனத்துக்கு வந்துள்ளது.


    ஆனாலும் அரசு அனைத்து மாவட்டங்களுக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பை மிக விரைவில் அறிவிக்கும். வெள்ள நிவாரணத்தால்தான் இந்த அறிவிப்பு தாமதமாகி உள்ளது.

    புத்தாண்டு பிறந்த ஓரிரு நாட்களில் பொங்கல் பரிசுத் தொகுப்புக்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும். இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உயர் அதிகாரிகளுடன் ஏற்கனவே ஆலோசனை நடத்தி உள்ளார். எனவே விரைவில் அறிவிப்பை எதிர்பார்க்கலாம்.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    • ஏழை, எளிய மக்களுக்கு ரூ.1000 வழங்கப்படும் என அரசு வேளாண் துறை அமைச்சர் அலுவலகம் அறிவித்துள்ளது.
    • ரேசன் அட்டைதாரர்களுக்கு ரூ.1000 வழங்கப்படும்.

    புதுச்சேரி:

    புதுச்சேரியில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறையினரால் ஏழை, எளிய மக்களுக்கு ரூ.1000 வழங்கப்படும் என அரசு வேளாண் துறை அமைச்சர் அலுவலகம் அறிவித்துள்ளது.

    வேளாண்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிவப்பு ரேசன் அட்டைதாரர்களுக்கு ரூ.1000 வழங்கப்படும். அப்பணம் பயனாளிகளின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சிவப்பு ரேசன் அட்டைதாரரர்களுக்கு பொங்கல் பண்டிகையை ஒட்டி வரும் 4ஆம் தேதி ரூ.1000 வழங்கப்படுகிறது. ஒரு லட்சத்து 30,791 சிவப்பு ரேசன் அட்டைதாரரர்களுக்கு வங்கிக் கணக்கில் தொகை செலுத்தப்படுகிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தென்மாவட்டங்களிலும் அதி கனமழையால் மிகப்பெரிய சேதங்கள் ஏற்பட்டுள்ளன.
    • தென் மாவட்டங்களில் மழையால் பாதிப்புகளைச் சந்தித்துள்ள மக்களுக்கு உரிய நிவாரணத் தொகைகளும் விரைவில் அறிவிக்கப்படவுள்ளன.

    சென்னை:

    தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் ரொக்கத் தொகையுடன் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படுவது வழக்கம். கடந்த ஆண்டு அரிசி குடும்ப அட்டைதாரா்கள் அனைவருக்கும் ஆயிரம் ரூபாய் ரொக்கம், தலா ஒரு கிலோ பச்சரிசி, சா்க்கரை, முழுக் கரும்பு அடங்கிய தொகுப்பு அளிக்கப்பட்டது.

    இந்த நிலையில், வரும் பொங்கல் பண்டிகைக்கும் பரிசுத் தொகுப்பை வழங்க தமிழக அரசு தயாராகிக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில், மிச்சாங் புயலால் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய நான்கு மாவட்டங்களில் கடும் பாதிப்புகள் ஏற்பட்டன.

    இதனால், சுமாா் 30 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ரூ.6 ஆயிரம் வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக ரூ.1,486 கோடியே 93 லட்சம் அளவுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

    இதைத் தொடா்ந்து, திருநெல்வேலி, தூத்துக்குடி தென்காசி, கன்னியாகுமரி ஆகிய நான்கு தென்மாவட்டங்களிலும் அதி கனமழையால் மிகப்பெரிய சேதங்கள் ஏற்பட்டுள்ளன. இந்தச் சேதங்களைச் சீர் செய்ய இடைக்கால நிவாரணமாக ரூ. 2 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளாா். மேலும், தென் மாவட்டங்களில் மழையால் பாதிப்புகளைச் சந்தித்துள்ள மக்களுக்கு உரிய நிவாரணத் தொகைகளும் விரைவில் அறிவிக்கப்படவுள்ளன.

    மழை, வெள்ளத்தால் எட்டு மாவட்டங்களுக்கு கடும் பாதிப்புகள் ஏற்பட்டு உள்ள சூழலில், பொங்கல் பரிசுத் தொகுப்பை எப்படி வழங்குவது என்பது குறித்து தமிழக அரசு ஆலோசித்து வருகிறது. ரொக்கத் தொகையாக ஆயிரம் ரூபாய் வழங்கலாமா? என்பது தொடா்பாக பல்வேறு யோசனைகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

    பொங்கல் பரிசுத் தொகுப்பு குறித்த அதிகார பூா்வ அறிவிப்பு ஓரிரு நாள்களில் வெளியாகும் என தலைமை செயலக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. தென் மாவட்ட வெள்ள பாதிப்புகளைப் பாா்வையிட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (வியாழக்கிழமை) தூத்துக்குடி சென்றுள்ளாா்.

    அவா் இன்றிரவு சென்னை திரும்புகிறார். எனவே இன்னும் ஓரிரு நாட்களில் பொங்கல் பரிசுத் தொகுப்பு குறித்து ஆலோசிக்கப்பட்டு அதிகாரபூா்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • அதிக மழை பெய்ததால் சென்னை உள்பட 4 மாவட்ட மக்களும் தண்ணீரில் தத்தளித்து இப்போதுதான் பாதிப்பில் இருந்து மீண்டு வருகின்றனர்.
    • தமிழ்நாடு முழுவதும் 2.19 கோடி அரிசி ரேசன் கார்டுதாரர்களுக்கு பச்சரிசி 1 கிலோ, சர்க்கரை மற்றும் ரூ.1000 கடந்த ஆண்டு பொங்கலுக்கு வழங்கப்பட்டது.

    சென்னை:

    தமிழகத்தில் ஆண்டு தோறும் பொங்கல் பண்டிகையை மக்கள் அனைவரும் சிறப்பாக கொண்டாடும் வகையில் பொங்கல் பொருட்களுடன் ரொக்கப் பணம் ரூ.1000 வழங்கப்படுவது வழக்கம்.

    அதேபோல் அடுத்த மாதம் வர இருக்கிற பொங்கல் பண்டிகைக்கும் பொங்கல் பொருட்களுடன் ரூ.1000 கிடைக்கும் என பொதுமக்கள் எதிர்பார்க்க தொடங்கிவிட்டனர்.

    இதற்கான முன்னேற்பாடுகளை தமிழக அரசு செய்து வந்த நிலையில் வங்கக்கடலில் உருவான மிச்சாங் புயல் சில நாட்களுக்கு முன்பு சென்னையிலும் காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களிலும் அதிக பாதிப்பை ஏற்படுத்தியது. இங்கு அதிக மழை பெய்ததால் சென்னை உள்பட 4 மாவட்ட மக்களும் தண்ணீரில் தத்தளித்து இப்போதுதான் பாதிப்பில் இருந்து மீண்டு வருகின்றனர்.

    தமிழக அரசும் சென்னை உள்பட 4 மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வெள்ள நிவாரணமாக ரூ.6 ஆயிரம் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது. வருகிற 16-ந்தேதி டோக்கன் வழங்கி 10 நாட்களில் இந்த பணத்தை மக்களுக்கு வழங்க இருக்கிறார்கள்.

    ரேசன் கடைகள் மூலம் இந்த பணத்தை கொடுத்து முடித்ததும், அடுத்த மாதம் (ஜனவரி) பொங்கல் பரிசு பொருட்களுடன் ரூ.1000 வழங்க வேண்டிய நிலையில் அரசு உள்ளது.

    தமிழ்நாடு முழுவதும் 2.19 கோடி அரிசி ரேசன் கார்டுதாரர்களுக்கு பச்சரிசி 1 கிலோ, சர்க்கரை மற்றும் ரூ.1000 கடந்த ஆண்டு பொங்கலுக்கு வழங்கப்பட்டது.

    அதேபோல் அடுத்த மாதம் (ஜனவரி) வர இருக்கிற பொங்கல் பண்டிகைக்கும் ரூ.1000 ரொக்கப் பணத்துடன் ஒரு கிலோ பச்சரிசி மற்றும் சர்க்கரை வழங்கப்படும் என தெரிகிறது.

    இதற்கான ஏற்பாடுகளை உணவுத்துறை இப்போதே செய்யத் தொடங்கிவிட்டது.

    தமிழகத்தில் 1 கோடியே 13 லட்சத்து 84 ஆயிரத்து 300 குடும்பத் தலைவிகளுக்கு ஏற்கனவே மாதம் ரூ.1000 வழங்கப்பட்டு வருகிறது.

    இந்த பணம் ஒவ்வொரு மாதமும் 15-ந்தேதி அவரவர் வங்கி கணக்கிற்கு சென்று விடுகிறது. அதே போல் இந்த மாதம் 15-ந் தேதி பெண்களுக்கு ரூ.1000 அனுப்பப்படுகிறது. அடுத்த மாதமும் 15-ந்தேதி ரூ.1000 வந்து விடும்.

    இந்த நிலையில் அடுத்த மாதம் (ஜனவரி) ரேசன் கடைகளில் பொங்கல் பொருட்களுடன் ரூ.1000 கிடைக்க உள்ளது. 2.19 கோடி ரேசன் கார்டுதாரர்களுக்கும் இவை வழங்கப்பட உள்ளது. பொங்கலுக்கு 1 வாரத்துக்கு முன்பே இவற்றை வழங்க திட்டமிடப்பட்டு வருகிறது.

    பாராளுமன்ற தேர்தலுக்கான அறிவிப்பு மார்ச் மாதம் அறிவிக்கப்பட உள்ள நிலையில் ஜனவரி மாதம் 2 முறை பொது மக்களுக்கு பணம் கிடைக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

    • அதிகபட்சமாக தென் சென்னையில் 49 ஆயிரத்து 538 பேரும், குறைந்தபட்சமாக திருப்பத்தூரில் 1,723 பேரும் பொங்கல் பரிசை வாங்கவில்லை.
    • அரசு கருவூலத்திற்கு ரூ. 43 கோடியே 96 லட்சத்து 69 ஆயிரம் பணம் திரும்பியதாக தமிழ்நாடு உணவுத்துறை தெரிவித்துள்ளது.

    தமிழ்நாடு முழுவதும் உள்ள ரேசன் கடைகளில் பொங்கல் பரிசு தொகை 1000 ரூபாய், 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த மாதம் உத்தரவிட்டிருந்தார்.

    அதன்படி தகுதியுள்ள 2 கோடியே 18 லட்சத்து 86 ஆயிரத்து 123 குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1000 பணம் ஒதுக்கப்பட்டு அந்த தொகை ரேசன் கடைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.

    ஆனால் இந்த பணத்தை பெரும்பாலான மக்கள் வாங்கினாலும் ஒருசிலர் இந்த பணம் வேண்டாம் என்று வாங்காமல் இருந்து விட்டனர்.

    அந்த வகையில் தமிழ்நாடு முழுவரும் அரசின் பொங்கல் பரிசு ரூ.1000 தொகையை 4.40 லட்சம் பேர் வாங்கவில்லை என்று தகவல் வெளியாகி உள்ளது.

    அதில் அதிகபட்சமாக தென் சென்னையில் 49 ஆயிரத்து 538 பேரும், குறைந்தபட்சமாக திருப்பத்தூரில் 1,723 பேரும் பொங்கல் பரிசை வாங்கவில்லை என்று கூறப்படுகின்றது. இதன்மூலம், அரசு கருவூலத்திற்கு ரூ. 43 கோடியே 96 லட்சத்து 69 ஆயிரம் பணம் திரும்பியதாக தமிழ்நாடு உணவுத்துறை தெரிவித்துள்ளது.

    • வேலூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களில் கணக்கெடுப்பு
    • அரசு கருவூலத்தில் பணத்தை அதிகாரிகள் செலுத்தினர்

    வேலூர்:

    தமிழ்நாடு முழுவதும் உள்ள ரேசன் கடைகளில் பொங்கல் பரிசு தொகை 1000 ரூபாய், 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை வழங்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த மாதம் உத்தரவிட்டிருந்தார்.

    அதன்படி தகுதியுள்ள 2 கோடியே 18 லட்சத்து 86 ஆயிரத்து 123 குடும்ப அட்டைதாரர் களுக்கு ரூ.1000 பணம் ஒதுக்கப்பட்டு அந்த தொகை ரேசன் கடைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.

    ஆனால் இந்த பணத்தை பெரும்பாலான மக்கள் வாங்கினாலும் ஒருசிலர் இந்த பணம் வேண்டாம் என்று வாங்காமல் இருந்து விட்டனர்.

    சென்னையை எடுத்துக் கொண்டால் வட சென்னையில் 10 லட்சத்து 18 ஆயிரத்து 728 குடும்ப அட்டைகளுக்கும், தென் சென்னையில் 10 லட்சத்து 39 ஆயிரத்து 552 குடும்ப அட்டைகளுக்கும் தலா ரூ.1000 பணம் வழங்க ரேசன் கடைகளுக்கு பணம் அனுப்பி வைக்கப்பட்டிருந் தது.

    ஆனால் வடசென்னையில் 9 லட்சத்து 83 ஆயிரத்து 5 பேரும், தென் சென்னை யில் 9 லட்சத்து 90 ஆயிரத்து 14 பேர் மட்டுமே பொங்கல் பரிசு பணம் ரூ.1000 வாங்கி சென்றுள்ளனர்.

    வடசென்னையில் 35 ஆயிரத்து 723 குடும்ப அட்டைதாரர்களும் தென் சென்னையில் 49 ஆயிரத்து 538 குடும்ப அட்டைதாரர் களும் ரூபாய் வாங்கவில்லை.

    இதேபோல் காஞ்சீபுரம் மாவட்டத்தில் 8026 கார்டு தாரர்களும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 10,263 கார்டு தாரர்களும், திருவள்ளூர் மாவட்டத்தில் 8,874 கார்டு தாரர்களும் 1000 ரூபாய் பொங்கல் பரிசு தொகுப்பு வாங்கவில்லை.

    வேலூர் மாவட்டத்தில் 7,171 ரேசன் கார்டு தாரர்களும், ராணிப்பேட்டை மாவட்டத்தில் 2,897 திருவண்ணாமலை மாவட்டத்தில் 13,385, திருப்பத்தூர் மாவட்டத்தில் 1,723 ரேசன் அட்டைதாரர்கள் ரூ. 1000 மற்றும் பொங்கல் பரிசு தொகுப்பு வாங்கவில்லை.

    வேலூர் உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மொத்தம் 25176 ரேசன் கார்டுதாரர்கள் பொங்கல் பரிசுத்தொகுப்பு வாங்கவில்லை.

    தமிழ்நாடு முழுவதும் 4 லட்சத்து 39 ஆயிரத்து 669 குடும்ப அட்டைதாரர்கள் பொங்கல் பரிசு தொகை வாங்காததால் அரசுக்கு ரூ.43 கோடியே 96 லட்சத்து 69 ஆயிரம் பணம் திரும்பி வந்துவிட்டது.

    இந்த தொகையை அரசு கருவூலத்தில் அதிகாரிகள் செலுத்தி விட்டனர்.

    • கோவை மாவட்டத்தில் மொத்தம் 10 லட்சத்து 98 ஆயிரத்து 476 அரிசி குடும்ப அட்டைகள் உள்ளன.
    • அரசுக்கு ரூ.43 கோடியே 96 லட்சத்து 69 ஆயிரம் பணம் திரும்பி வந்துவிட்டது.

    கோவை

    தமிழ்நாடு முழுவதும் உள்ள ரேசன் கடைகளில் பொங்கல் பரிசு தொகை 1000 ரூபாய், 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை வழங்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த மாதம் உத்தரவிட்டிருந்தார்.

    அதன்படி தகுதியுள்ள 2 கோடியே 18 லட்சத்து 86 ஆயிரத்து 123 குடும்ப அட்டைதாரர் களுக்கு ரூ.1000 பணம் ஒதுக்கப்பட்டு அந்த தொகை ரேசன் கடைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.ஆனால் இந்த பணத்தை பெரும்பாலான மக்கள் வாங்கினாலும் ஒருசிலர் இந்த பணம் வேண்டாம் என்று வாங்காமல் இருந்து விட்டனர்.

    கோவை மாவட்டத்தில் மொத்தம் 10 லட்சத்து 98 ஆயிரத்து 476 அரிசி குடும்ப அட்டைகள் உள்ளன. இதில் 10 லட்சத்து 66 ஆயிரத்து 150 பேர் பொங்கல் பரிசு தொகுப்பை பெற்றுள்ளனர். இது 97.06 சதவீதம் ஆகும். 32 ஆயிரத்து 326 பேர் பரிசுத்தொகுப்பை பெறவில்லை. இதனால் இவர்களது பணம் அரசுக்கு திரும்பிச் சென்று விட்டது.

    தமிழ்நாடு முழுவதும் 4 லட்சத்து 39 ஆயிரத்து 669 குடும்ப அட்டைதாரர்கள் பொங்கல் பரிசு தொகை வாங்காததால் அரசுக்கு ரூ.43 கோடியே 96 லட்சத்து 69 ஆயிரம் பணம் திரும்பி வந்துவிட்டது. இந்த தொகையை அரசு கருவூலத் தில் அதிகாரிகள் செலுத்தி விட்டனர்.

    சென்னையை எடுத்துக் கொண்டால் வட சென்னை யில் 10 லட்சத்து 18 ஆயிரத்து 728 குடும்ப அட்டைகளுக்கும், தென் சென்னையில் 10 லட்சத்து 39 ஆயிரத்து 552 குடும்ப அட்டைகளுக்கும் தலா ரூ.1000 பணம் வழங்க ரேசன் கடைகளுக்கு பணம் அனுப்பி வைக்கப்பட்டிருந் தது.

    ஆனால் வடசென்னை யில் 9 லட்சத்து 83 ஆயிரத்து 5 பேரும், தென் சென்னை யில் 9 லட்சத்து 90 ஆயிரத்து 14 பேர் மட்டுமே பொங்கல் பரிசு பணம் ரூ.1000 வாங்கி சென்றுள்ளனர்.

    வடசென்னையில் 35 ஆயிரத்து 723 குடும்ப அட்டைதாரர்களும் தென் சென்னையில் 49 ஆயிரத்து 538 குடும்ப அட்டைதாரர் களும் ரூபாய் வாங்கவில்லை.

    இதேபோல் காஞ்சீபுரம் மாவட்டத்தில் 8026 கார்டு தாரர்களும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 10,263 கார்டு தாரர்களும், திருவள்ளூர் மாவட்டத்தில் 8,874 கார்டு தாரர்களும் 1000 ரூபாய் பொங்கல் பரிசு தொகுப்பு வாங்கவில்லை. 

    • மதுரை, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் பொங்கல் பரிசு 1000 ரூபாயை 39 ஆயிரம் பேர் வாங்கவில்லை.
    • இந்த பணத்தை பெரும்பாலான மக்கள் வாங்கினாலும் ஒருசிலர் இந்த பணம் வேண்டாம் என்று வாங்காமல் இருந்து விட்டனர்.

    மதுரை

    தமிழ்நாடு முழுவதும் உள்ள ரேசன் கடைகளில் பொங்கல் பரிசு தொகை 1000 ரூபாய், 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை வழங்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த மாதம் உத்தரவிட்டிருந்தார்.

    அதன்படி தகுதியுள்ள 2 கோடியே 18 லட்சத்து 86 ஆயிரத்து 123 குடும்ப அட்டைதாரர் களுக்கு ரூ.1000 பணம் ஒதுக்கப்பட்டு அந்த தொகை ரேசன் கடைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. ஆனால் இந்த பணத்தை பெரும்பாலான மக்கள் வாங்கினாலும் ஒருசிலர் இந்த பணம் வேண்டாம் என்று வாங்காமல் இருந்து விட்டனர்.

    மதுரை-விருதுநகர்

    மதுரை மாவட்டத்தில் 9 லட்சத்து 28 ஆயிரத்து 422 குடும்ப அட்டைகளுக்கும், விருதுநகர் மாவட்டத்தில் 5 லட்சத்து 98 ஆயிரத்து 956 குடும்ப அட்டைகளுக்கும் ரூ.1000 பணம் வழங்க ரேஷன் கடைகளுக்கு பணம் அனுப்பப்பட்டிருந்தது.

    ஆனால் மதுரை மாவட்டத்தில் 9 லட்சத்து 8 ஆயிரத்து 983 பேரும், விருதுநகர் மாவட்டத்தில் 5 லட்சத்து 90 ஆயிரத்து 29 பேர் மட்டுமே ரூ.1000 வாங்கியுள்ளனர். மதுரை மாவட்டத்தில் 19 ஆயிரத்து 439 குடும்ப அட்டை தாரர்களும், விருதுநகர் மாவட்டத்தில் 8 ஆயிரத்து 927 குடும்ப அட்டை தாரர்களும் 1000 ரூபாய் வாங்கவில்லை.

    ராமநாதபுரம்-சிவகங்கை

    ராமநாதபுரம் மாவட்டத்தில் 3 லட்சத்து 95 ஆயிரத்து 742 குடும்ப அட்டைகளுக்கும், சிவகங்கை மாவட்டத்தில் 4 லட்சத்து 15 ஆயிரத்து 316 குடும்ப அட்டைகளுக்கும் ரூ.1000 பணம் வழங்க ரேஷன் கடைகளுக்கு பணம் அனுப்பப்பட்டிருந்தது.

    ஆனால் ராமநாதபுரம் மாவட்டத்தில் 3 லட்சத்து 92 ஆயிரத்து 349 பேரும், சிவகங்கை மாவட்டத்தில் 4 லட்சத்து 7 ஆயிரத்து 984 பேர் மட்டுமே ரூ.1000 வாங்கியுள்ளனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் 3 ஆயிரத்து 393 குடும்ப அட்டை தாரர்களும், சிவகங்கை மாவட்டத்தில் 7 ஆயிரத்து 332 குடும்ப அட்டை தாரர்களும் 1000 ரூபாய் வாங்கவில்லை.

    மதுரை, விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய 4 மாவட்டங்களிலும் 39 ஆயிரத்து 91 பேர் பொங்கல் பரிசு 1000 ரூபாய் வாங்கவில்லை.

    • சேலம் மாவட்டத்தில், 11 ஆயிரத்து 612 நுகர்வோர் பொங்கல் பரிசு வாங்கவில்லை.
    • பொங்கல் பரிசு வாங்காததால் தமிழக அரசுக்கு, ஒரு கோடியே 16 லட்சத்து 12 ஆயிரம் ரூபாய் மீதமானது.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் 1,606 ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு வினியோகம் கடந்த 9-ந் தேதி தொடங்கியது. தகுதியுள்ள 10 லட்சத்து 71 ஆயிரத்து 724 நுகர்வோர் பொங்கல் பரிசு பெற டோக்கன் வழங்கப்பட்டது.

    அதன்படி ரேஷன் கடைக்கு வருகை தந்த நுகர்வோர், பரிசு தொகுப்பு வாங்கினர். ஒரு கார்டுக்கு தலா, ஆயிரம் ரூபாய் ரொக்கம், ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரையுடன் முழு கரும்பும் வழங்கப்பட்டன. முதற்கட்டமாக போகி பண்டிகை வரை பொங்கல் பரிசு வினியோகம் செய்யப்பட்டது.

    இதையடுத்து, 2-ம் கட்டமாக 17-ந் தேதி முதல், 20-ந் தேதி வரை நுகர்வோர், பொங்கல் பரிசை பெற்றுச்சென்றனர். மொத்த கார்டுகளில் 10 லட்சத்து 60 ஆயிரத்து 112 பேருக்கு பொங்கல் பரிசு வழங்கப்பட்டது. இது, 98.1 சதவீதம். மீதமுள்ள சேலம் மாவட்டத்தில், 11 ஆயிரத்து 612 நுகர்வோர் பொங்கல் பரிசு வாங்கவில்லை.

    இதன்மூலம் தமிழக அரசுக்கு, ஒரு கோடியே 16 லட்சத்து 12 ஆயிரம் ரூபாய் மீதமானது. இத்தொகை அரசு கருவூலத்தில் செலுத்தப்பட்டு உள்ளது என பொது விநியோக திட்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பொங்கல் தொகுப்பு 5 நாட்கள் தொடர்ந்து வழங்கப்பட்ட நிலையில் ரேசன் கடைகள் நேற்று வரை மூடப்பட்டன. இன்று மீண்டும் கடைகள் திறக்கப்பட்டன.
    • பொங்கலுக்கு வெளியூர் சென்றவர்கள் சொந்த இடங்களுக்கு திரும்பியதால் இன்றும் பொங்கல் தொகுப்பு வழங்கப்படுகிறது.

    சென்னை:

    பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் வகையில் அரசு சார்பில் ரூ.1000 ரொக்கத்துடன் பச்சரிசி, சர்க்கரை, கரும்பு ஆகியவை வழங்கப்பட்டன. 2 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு கடந்த 9-ந் தேதி முதல் 13-ந் தேதி முதல் வரை வழங்கப்பட்டன. 92 சதவீதம் பேருக்கு பொங்கல் தொகுப்பு வினியோகிக்கப்பட்டது.

    பொங்கல் தொகுப்பு 5 நாட்கள் தொடர்ந்து வழங்கப்பட்ட நிலையில் ரேசன் கடைகள் நேற்று வரை மூடப்பட்டன. இன்று மீண்டும் கடைகள் திறக்கப்பட்டன. பொங்கலுக்கு வெளியூர் சென்றவர்கள் சொந்த இடங்களுக்கு திரும்பியதால் இன்றும் பொங்கல் தொகுப்பு வழங்கப்படுகிறது.

    இதுகுறித்து சிவில் சப்ளை அதிகாரி ஒருவர் கூறுகையில், பொங்கல் தொகுப்பு பெரும்பாலானவர்களுக்கு கொடுக்கப்பட்டு விட்டன. இதுவரையில் வாங்காமல் இருந்தால் வாங்கிக் கொள்ளலாம். ரூ.1000 ரொக்கம் கொடுப்பது நிறுத்துவது குறித்து அரசிடம் இருந்து எந்த உத்தரவும் வரவில்லை. அதனால் தொடர்ந்து வினியோகித்து கொண்டு இருக்கிறோம் என்றார்.

    ×