search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    புதுச்சேரியில் பொங்கல் பரிசு அறிவிப்பு
    X

    புதுச்சேரியில் பொங்கல் பரிசு அறிவிப்பு

    • ஏழை, எளிய மக்களுக்கு ரூ.1000 வழங்கப்படும் என அரசு வேளாண் துறை அமைச்சர் அலுவலகம் அறிவித்துள்ளது.
    • ரேசன் அட்டைதாரர்களுக்கு ரூ.1000 வழங்கப்படும்.

    புதுச்சேரி:

    புதுச்சேரியில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறையினரால் ஏழை, எளிய மக்களுக்கு ரூ.1000 வழங்கப்படும் என அரசு வேளாண் துறை அமைச்சர் அலுவலகம் அறிவித்துள்ளது.

    வேளாண்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிவப்பு ரேசன் அட்டைதாரர்களுக்கு ரூ.1000 வழங்கப்படும். அப்பணம் பயனாளிகளின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சிவப்பு ரேசன் அட்டைதாரரர்களுக்கு பொங்கல் பண்டிகையை ஒட்டி வரும் 4ஆம் தேதி ரூ.1000 வழங்கப்படுகிறது. ஒரு லட்சத்து 30,791 சிவப்பு ரேசன் அட்டைதாரரர்களுக்கு வங்கிக் கணக்கில் தொகை செலுத்தப்படுகிறது.

    Next Story
    ×