search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பொங்கல் பரிசு 1,000 ரூபாயை 25,176 பேர் வாங்கவில்லை
    X

    பொங்கல் பரிசு 1,000 ரூபாயை 25,176 பேர் வாங்கவில்லை

    • வேலூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களில் கணக்கெடுப்பு
    • அரசு கருவூலத்தில் பணத்தை அதிகாரிகள் செலுத்தினர்

    வேலூர்:

    தமிழ்நாடு முழுவதும் உள்ள ரேசன் கடைகளில் பொங்கல் பரிசு தொகை 1000 ரூபாய், 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை வழங்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த மாதம் உத்தரவிட்டிருந்தார்.

    அதன்படி தகுதியுள்ள 2 கோடியே 18 லட்சத்து 86 ஆயிரத்து 123 குடும்ப அட்டைதாரர் களுக்கு ரூ.1000 பணம் ஒதுக்கப்பட்டு அந்த தொகை ரேசன் கடைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.

    ஆனால் இந்த பணத்தை பெரும்பாலான மக்கள் வாங்கினாலும் ஒருசிலர் இந்த பணம் வேண்டாம் என்று வாங்காமல் இருந்து விட்டனர்.

    சென்னையை எடுத்துக் கொண்டால் வட சென்னையில் 10 லட்சத்து 18 ஆயிரத்து 728 குடும்ப அட்டைகளுக்கும், தென் சென்னையில் 10 லட்சத்து 39 ஆயிரத்து 552 குடும்ப அட்டைகளுக்கும் தலா ரூ.1000 பணம் வழங்க ரேசன் கடைகளுக்கு பணம் அனுப்பி வைக்கப்பட்டிருந் தது.

    ஆனால் வடசென்னையில் 9 லட்சத்து 83 ஆயிரத்து 5 பேரும், தென் சென்னை யில் 9 லட்சத்து 90 ஆயிரத்து 14 பேர் மட்டுமே பொங்கல் பரிசு பணம் ரூ.1000 வாங்கி சென்றுள்ளனர்.

    வடசென்னையில் 35 ஆயிரத்து 723 குடும்ப அட்டைதாரர்களும் தென் சென்னையில் 49 ஆயிரத்து 538 குடும்ப அட்டைதாரர் களும் ரூபாய் வாங்கவில்லை.

    இதேபோல் காஞ்சீபுரம் மாவட்டத்தில் 8026 கார்டு தாரர்களும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 10,263 கார்டு தாரர்களும், திருவள்ளூர் மாவட்டத்தில் 8,874 கார்டு தாரர்களும் 1000 ரூபாய் பொங்கல் பரிசு தொகுப்பு வாங்கவில்லை.

    வேலூர் மாவட்டத்தில் 7,171 ரேசன் கார்டு தாரர்களும், ராணிப்பேட்டை மாவட்டத்தில் 2,897 திருவண்ணாமலை மாவட்டத்தில் 13,385, திருப்பத்தூர் மாவட்டத்தில் 1,723 ரேசன் அட்டைதாரர்கள் ரூ. 1000 மற்றும் பொங்கல் பரிசு தொகுப்பு வாங்கவில்லை.

    வேலூர் உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மொத்தம் 25176 ரேசன் கார்டுதாரர்கள் பொங்கல் பரிசுத்தொகுப்பு வாங்கவில்லை.

    தமிழ்நாடு முழுவதும் 4 லட்சத்து 39 ஆயிரத்து 669 குடும்ப அட்டைதாரர்கள் பொங்கல் பரிசு தொகை வாங்காததால் அரசுக்கு ரூ.43 கோடியே 96 லட்சத்து 69 ஆயிரம் பணம் திரும்பி வந்துவிட்டது.

    இந்த தொகையை அரசு கருவூலத்தில் அதிகாரிகள் செலுத்தி விட்டனர்.

    Next Story
    ×