search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "police action"

    • நெல்லை மாநகர பகுதி களில் போக்குவரத்து விதி முறைகளை தீவிரமாக கண்காணிக்க போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் உத்தரவிட்டார்.
    • இரு சக்கர வாகனங்களில் செல்வோர் கண்டிப்பாக ஹெல்மெட் அணிய வேண்டும் என வாகன ஓட்டிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    நெல்லை:

    நெல்லை மாநகர பகுதி களில் விபத்துகளை குறைக்க வும், போக்குவரத்து விதி முறைகளை தீவிரமாகவும் கண்காணிக்க போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் உத்தரவிட்டார்.

    அபராதம்

    அதன்பேரில் இரு சக்கர வாகனங்களில் செல்வோர் கண்டிப்பாக ஹெல்மெட் அணிய வேண்டும், நான்கு சக்கர வாகனங்களில் செல்வோர் சீட்பெல்ட் அணிய வேண்டும் என வாகன ஓட்டிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இதனை கண்காணிக்கும் பொருட்டு மாநகரின் பல்வேறு இடங்களிலும் போலீசார் ஆங்காங்கே சோதனை நடத்தி விதிமு றைகளை மீறும் வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதித்து வருகின்றனர்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு வாலிபர் ஒருவர் விபத்தை ஏற்படுத்தும் வகையில் மோட்டார் சைக்கிளில் அதிவேகமாக சென்றார். இதனைப்பார்த்த போலீசார் சந்திப்பு ஈரடுக்கு மேம்பாலத்தில் அந்த வாலிபரை மடக்கி பிடித்து ரூ.20 ஆயிரம் அபராதம் விதித்தனர்.

    20 இடங்களில் வாகன சோதனை

    இந்நிலையில் விடுமுறை நாளான இன்று மாநகரின் பல்வேறு இடங்களில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.பழையபேட்டை சோதனை சாவடி, வழுக்கோடை முக்கு, நயினார்குளம் குளக்கரை சாலை, டவுன் ஆர்ச் பகுதி, ஈரடுக்கு மேம்பால கீழ்பகுதி, சந்திப்பு, வண்ணார்பேட்டை, புறவழிச்சாலை, பாளை மார்க்கெட், சமாதானபுரம் உள்ளிட்ட 20-க்கும் மேற் பட்ட இடங்களில் இன்று அதிரடி சோதனை நடத்தப் பட்டது.

    அப்போது ஏராளமான வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணியாமலும், காரில் சென்றவர்கள் சீட் பெல்ட் அணியாமலும் சென்றதை போலீசார் பார்த்தனர். உடனே அவர்களை பிடித்து அவர்களுக்கு தலா ரூ.1,000 அபராதமாக விதித்தனர்.

    வண்ணார்பேட்டையில் போக்குவரத்து இன்ஸ் பெக்டர் பேச்சிமுத்து தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஹெல்மெட் அணியாமல் சென்றவர்களுக்கு ரூ.1,000 அபராதம் விதித்தனர்.

    • விதிமுறை மீறி நம்பர் பிளேட் பொருத்தப்பட்ட அனைத்து மோட்டார் சைக்கிள்களையும் மடக்கி பிடித்தனர்.
    • இனிவரும் நாட்களில் வாகன சோதனை தீவிரப்படுத்தப்பட்டு அபராதம் விதிக்கப்படும் என்று போலீசார் தெரிவித்தனர்.

    ஆலந்தூர்:

    மோட்டார் சைக்கிள், கார் உள்ளிட்ட வாகனங்களில் பெரும்பாலானோர் போக்குவரத்து விதிமுறைகளை மீறி பதிவு எண்ணை பொருத்தி உள்ளனர்.

    பார்ப்பதற்கு எளிதில் தெரியாத அளவிற்கு மாடலாகவும், கலர்கலராகவும் வைத்து இருக்கிறார்கள். விதிமுறைப்படி வாகனங்களில் நம்பர் பிளேட்டுகள் பொருத்த வேண்டும் என்று போலீசார் எச்சரித்தும் பலர் கண்டு கொள்வதில்லை.

    இந்நிலையில் மடிப்பாக்கம் காவல் நிலையம் எல்லைக்குட்பட்ட தில்லை கங்கா நகர் மெயின் ரோடு, ஆதம்பாக்கம் ஏரி பாலம் அருகே இன்று காலை மடிப்பாக்கம் போக்குவரத்து போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது விதிமுறை மீறி நம்பர் பிளேட் பொருத்தப்பட்ட அனைத்து மோட்டார் சைக்கிள்களையும் மடக்கி பிடித்தனர். வாகனங்களில் இருந்த விதவிதமான நம்பர் பிளேட்டுகளை அதிரடியாக அகற்றினர். மேலும் அங்கேயே அந்த மோட்டார் சைக்கிள்களுக்கு விதிமுறைபடி உள்ள புதிய நம்பர் பிளேட் மாற்றப்பட்டது.

    சுமார் 100-க்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிள்கள் இதில் சிக்கியது. கார்களும் தப்பவில்லை. விதிமுறை மீறி நம்பர் பிளேட் உள்ள வாகனங்களுக்கு இன்று ஒரு நாள் மட்டும் போக்குவரத்து போலீசார் அபராதம் விதிக்கவில்லை.

    வாகன ஓட்டிகளை எச்சரித்து அனுப்பினர். இனிவரும் நாட்களில் வாகன சோதனை தீவிரப்படுத்தப்பட்டு அபராதம் விதிக்கப்படும் என்று போலீசார் தெரிவித்தனர்.

    இன்று காலை நடந்த இந்த அதிரடி சோதனையில் 10-க்கும் மேற்பட்ட போக்குவரத்து போலீசார் ஈடுபட்டனர். சிக்கிய வாகனங்கள் சாலை யோரத்தில் வரிசையாக நிறுத்தப்பட்டு இருந்ததால் அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது.

    புளியந்தோப்பு போக்குவரத்து எல்லைக்கு உட்பட்ட பகுதியில் முறையான நம்பர் பிளேட் இல்லாமல் வாகனம் ஓட்டி வரும் வாகன ஓட்டிகளை போலீசார் எச்சரித்து அறிவுரை வழங்கினர். மேலும் வாகன ஓட்டிகள் விரும்பினால் உடனடியாக நம்பர் பிளேட்டில் ஸ்டிக்கர் ஒட்டி அனுப்பி வைத்தனர்.

    இந்த வாகன சோதனையில் இன்ஸ்பெக்டர் செல்லதுரை, சப்-இன்ஸ்பெக்டர் முனிவேல், ரேகா, சையத் அமின், தலைமை காவலர்கள் பாஸ்கர், சுரேஷ்பாபு, பிரேம்நாதன் ஆகியோர் ஈடுபட்டனர்.

    • 2 சொகுசு கார்கள், 6 இருசக்கர வாகனங்கள், 21 செல்போன்கள் ஆகியவற்றையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
    • ஒரே நாளில் நடந்த இந்த போலீசாரின் அதிரடி நடவடிக்கை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    அரூர்:

    தருமபுரி மாவட்டம், அரூர் அருகே உள்ள கோட்டப்பட்டி பகுதிகளில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த சூதாட்டக்காரர்கள் சூதாட்டம் நடத்தி வருவதாக அரூர் டி.எஸ்.பி. புகழேந்தி கணேசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் அவருடைய தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் சுந்தரமூர்த்தி, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் கமலநாதன், சக்திவேல் மற்றும் போலீசார்கள் நேற்று இரவு 12 மணி முதல் அதிகாலை 5 மணி வரை அதிரடி ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது கோட்டப்பட்டி பெரிய ஏரி மாட்டு கொட்டகையில் பணம் வைத்து சூதாடுவது தெரியவந்தது.

    உடனே அங்கு விரைந்து சென்ற போலீசார் அவர்களை சுற்றி வளைத்து பிடித்தனர். கைது செய்யப்பட்ட 15 பேரின் விவரம் வருமாறு:-

    ராஜா முகமது (வயது 43), சக்கரை (51), கணேசன் (45), சிலம்பரசன் (28), கருணாகரன் (53), குமார் (57), மகராமூர்த்தி (51), அஜித் (26), பழனிசாமி (52), வினோத்குமார் (33), தனபால் (49), செல்வம் (52), ராஜா (65), கலையரசன் (32), பெரியசாமி (46).

    இவர்கள் சேலம், புதுக்கோட்டை, திருவண்ணாமலை, திருப்பத்தூர் உள்ளிட்ட பல மாவட்டங்களை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    மேலும் தலைமறைவான கன்ஸ்வாட்டர், அஜித், குமார், சங்கர், தங்கப்பா, குப்பன், ராஜகோபால் ஆகியோரை தேடி வருகின்றனர்.

    கைதானவர்களிடம் இருந்து ரூ.5,77,345 ரொக்கப்பணம் பறிமுதல் செய்யப்பட்டது. அத்துடன் 2 சொகுசு கார்கள், 6 இருசக்கர வாகனங்கள், 21 செல்போன்கள் ஆகியவற்றையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

    ஒரே நாளில் நடந்த இந்த போலீசாரின் அதிரடி நடவடிக்கை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • விருதுநகர் மாவட்டத்தில் ஒரே நாளில் 12 திருட்டு-கொள்ளை முயற்சி சம்பவங்கள் நடந்து வருகிறது.
    • இதை தடுக்க மாவட்ட போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக கொலை, கொள்ளை,நகை பறிப்பு, வழிப்பறி, கஞ்சா, புகையிலை பொருட்கள் விற்பனை அதிகரிப்பு, ரேசன் அரிசி கடத்தல், இளம்பெண்கள் மாயம் போன்றவை சர்வ சாதாரணமாக நடந்து வருகிறது.

    இதுதொடர்பாக போலீஸ் நிலையங்களில் நாள்தோறும் புகார்கள் குவிந்த வண்ணம் உள்ளன. ஆனால் இதுவரை குற்றவாளிகள் கைது செய்யப்பட்டதாக தெரியவில்லை.

    இந்த நிலையில் விருதுநகர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் 9-ந் தேதி மட்டும் 12 இடங்களில் திருட்டு, கொள்ளை முயற்சி சம்பவங்கள் நடந்துள்ளன. அன்றைய தினம் விருதுநகர் பைபாஸ் ரோட்டில் உள்ள விறகு கடையில் மர்ம நபர் புகுந்து ரூ. 20 ஆயிரத்தை திருடிச் சென்றார்.

    இதேபோல் பாத்திமா நகர் மெயின் ரோட்டில் பூட்டியிருந்த வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர் அங்கு நகை, பணம் இல்லாததால் பொருட்களை சூறையாடிவிட்டு அருகில் உள்ள ஜவுளிக்கடைக்குள் புகுந்து பொருட்களை திருடிச் சென்றார். இந்த சம்பவம் அந்தப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. காமிராவில் பதிவாகி உள்ளது.

    இதேபோல் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் திருட்டு, கொள்ளை முயற்சி சம்பவங்கள் நடந்துள்ளன. இது தொடர்பாக போலீஸ் நிலையங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. விருதுநகர், ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், சாத்தூர், சிவகாசி உள்ளிட்ட பகுதிகளில் நடந்து வரும் தொடர் கொள்ளைகளால் அந்தப்பகுதி மக்கள் பீதிய டைந்துள்ளனர்.

    எனவே போலீசார் தீவிர ரோந்து பணி மேற்கொண்டு சமூக விரோதிகளை கைது செய்ய வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.

    இது தொடர்பாக பொதுமக்கள் கூறுகையில், திருட்டு பயம் காரணமாக வீட்டை பூட்டிவிட்டு வெளியே செல்வது அச்ச மாக உள்ளது. தனியாக நடந்து செல்லும் பெண்கள் மற்றும் நபர்களை குறிவைத்து வழிப்பறி சம்பவங்கள் நடப்பது அதிகரித்துள்ளது. மாவட்டத்தில் கஞ்சா, புகையிலை விற்பனையும் சர்வ சாதாரணமாக நடந்து வருகிறது. இதை தடுக்க மாவட்ட போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    • திருச்சி மற்றும் கும்பகோணத்திற்கு மசாலா லோடு ஏற்றிய லாரிகள் அதிக அளவில் செல்கின்றன.
    • நூதன முறையில் ஓடும் லாரியில் ஏறி தார்பாய்களை கிழித்து மசாலா பாக்கெட்டுகளை திருடி செல்கின்றனர்.

    நாமக்கல்:

    நாமக்கல் வழியாக திருச்சி மற்றும் கும்பகோணத்திற்கு மசாலா லோடு ஏற்றிய லாரிகள் அதிக அளவில் செல்கின்றன. இந்த லாரிகள் நாமக்கல் மாவட்ட எல்லையில் உள்ள வளையப்பட்டி, மைக்கல்நாயக்கன்பட்டி தாண்டி செல்லும்போது, மர்ம நபர்கள் நூதன முறையில் ஓடும் லாரியில் ஏறி தார்பாய்களை கிழித்து மசாலா பாக்கெட்டுகளை திருடி செல்கின்றனர்.

    அதன்படி கடந்த 20 நாட்களில் 12 லாரிகளில் இருந்து ரூ.15 லட்சம் மதிப்பிலான மசாலா பாக்கெட்டுகள் திருடப்பட்டு உள்ளன. இதுகுறித்து திருச்சி மற்றும் கும்பகோணம் போலீஸ் நிலையங்களில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என லாரி உரிமையாளர்கள் புகார் தெரிவித்துள்ளனர். மேலும் இதுகுறித்து நேற்று நாமக்கல் மாநில லாரி உரிமையாளர் செயலாளர் வாங்கலியை சந்தித்தும் முறையிட்டனர். அப்போது, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் அளித்து உரிய நடவடிக்கை எடுக்க ஏற்பாடு செய்வதாக அவர் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து லாரி உரிமையாளர்கள் கூறுகையில், மசாலா பாக்கெட்டுகள் மட்டுமின்றி சோப்பு, பொடி ஏற்றி வரும் லாரிகளையும் குறி வைத்து நாமக்கல் பகுதியில் திருட்டு அதிக அளவில் நடந்து வருகிறது. லாரி லோடு ஏற்றிய பின் அதை உரியவரிடம் ஒப்படைப்பது லாரி உரிமையாளர்களின் பொறுப்பாகும். ஆனால் வழியில் இது போன்ற கொள்ளை சம்பவம் நடப்பதால் லோடு ஏற்றிய நாங்கள் இழப்பீடு கொடுக்க வேண்டிய நிலை உள்ளது.

    போலீஸ் நிலையங்களில் எங்களின் புகாரை பதிவு செய்து எப்.ஐ.ஆர் போட்டுக் கொடுத்தால் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் இருந்து நாங்கள் இழப்பீடு பெற்றுக் கொள்ள முடியும். ஆனால் போலீசார் வழக்கு பதிவு செய்வதில்லை. இது போன்ற வழிப்பறி கொள்ளைகள் இரவு நேரங்களில் அதிக அளவில் நடைபெறுகிறது. சம்பவம் நடந்து சில மணி நேரம் கழித்து தான் லாரி டிரைவர்கள் பொருட்கள் கொள்ளை போய் இருப்பதை கண்டுபிடிக்கிறார்கள்.

    தமிழக அரசு இதுபோன்று லாரியில் திருட்டு நடந்தால், எந்த இடத்தில் கண்டுபிடிக்கப்படுகிறதோ அதன் அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளிக்கலாம், நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளது.

    மேட்டுப்பட்டி சோதனை சாவடியில் இரவு நேரங்களில் கடந்த ஒரு மாதமாக போலீசார் கண்காணிப்பு பணியில் இல்லை. இதனால் அந்த பகுதியில் திருட்டுகள் அதிக அளவில் நடக்கிறது. எனவே தமிழக முதல்-அமைச்சர் எங்கள் பிரச்சினையை அறிந்து ஓடும் லாரியில் நடைபெறும் திருட்டுகளை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். 

    • கஞ்சா விற்பனையை தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
    • கல்லூரி மாணவர்கள் மத்தியில் கஞ்சா விற்பனை அமோகமாக நடந்து வந்தது வெட்டவெளிச்சமாகி உள்ளது.

    காரைக்குடி

    தமிழகத்தில் மது பழக்கத்துக்கு அடுத்து கஞ்சா மற்றும் போதை பொருட்களை இளைஞர்கள் பயன்படுத்துவது அதிகரித்து வருகிறது. இந்த பழக்கம் காரணமாக இளைஞர்களின் எதிர்காலம் முற்றிலும் நாசமாகிவிடும் அபாயம் உள்ளது.

    இதனை கருத்தில் கொண்டு தமிழ கத்தில் கஞ்சா விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கஞ்சா வியாபாரிகளின் சொத்துக்கள் முடக்கப்படு கிறது. மேலும் குண்டர் சட்டத்தின் கீழும் நட வடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் கல்லூரி மாணவர்கள் மத்தியில் சமீபகாலமாக கஞ்சா விற்பனை அதிகமாக நடைபெறுவதாக புகார்கள் எழுந்தது. இதைத்தொடர்ந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் கஞ்சா விற்பனை செய்பவர்களை கண்டறிந்து கைது செய்ய தனிப்படை அமைக்க உத்தரவிட்டார்.

    இதைத் தொடர்ந்து துணை போலீஸ் சூப்பிரண்டு வினோஜி ஆலோசனைபடி தனிப்படை போலீசார் காரைக்குடி பகுதி முழு வதும் கடந்த 3 நாட்களாக தீவிர சோதனை நடத்தினர்.

    அப்போது கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 2 கல்லூரி மாணவர்கள் கைது செய்யப்பட்டனர்.

    இதில் ஒரு மாணவர் மதுரையில் உள்ள ஒரு பாலிடெக்னிக் கல்லூரியில் படித்தவர் என்பதும், அவர் பாதியில் படிப்பை நிறுத்தி விட்டு கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு லட்சம், லட்சமாக சம்பாதித்து வந்ததும் தெரியவந்தது.

    பிடிபட்ட 2 கல்லூரி மாணவர்களிடம் இருந்து 1 கிேலா 100 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். போலீசாரின் விசாரணை யில் கல்லூரி மாணவர்கள் மத்தியில் கஞ்சா விற்பனை அமோகமாக நடந்து வந்தது வெட்டவெளிச்சமாகி உள்ளது.

    காரைக்குடி பகுதியில் மட்டும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 15 பேரை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். கஞ்சா விற்பனையில் ஈடுபட்டட பலர் 22 வயதுக்குட்பட்ட வர்கள். அதில் பெரும்பா லானவர்கள் கல்லூரி மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    மேலும் தொடர்ந்து தனிப்படை போலீசார் கஞ்சா வியாபாரிகளை கண்காணித்து நடவடிக்ைக எடுத்து வருகின்றனர். இந்த நடவடிக்கைக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

    • பண்ருட்டி போலீசார் என்.எல்.சி. தொழிலாளியிடம் கந்துவட்டி கேட்டு மிரட்டியவரை கைது செய்தனர்.
    • நாளொன்றுக்கு 18 ஆயிரம் வீதம் 45 நாட்களில் தவணை முறையில் 7,50,000- கொடுத்துள்ளார் செல்வழகன்.

    கடலூர்:

    பண்ருட்டி போலீஸ் உட்கோட்டம் முத்தாண்டிக் குப்பம் காவல் எல்லைக் குட்பட்ட சின்ன ஒடப்பன் குப்பத்தை சேர்ந்தவர் செல்வழகன் (வயது 30) என்.எல்.சி. ஒப்பந்த தொழிலாளி. இவர், அதேபகுதியை சேர்ந்த பந்தல் அமைப்பாளர் தனசேகரன் (33). என்பவரி டம் தனது குடும்ப செலவுக் காக ரூ 3,00,000 கடனாக பெற்றிருந்தார். இந்ததொகையை பெறுவதற்காக பூர்த்தி செய்யப் படாத 10ஆவணங்களை கொடுத்திருந்ததார். இந்தகடன் தொகைக்கு நாளொன்றுக்கு 18 ஆயிரம் வீதம் 45 நாட்களில் தவனை முறையில் 7,50,000 கொடுத்துள்ளார் செல்வழகன். தனசேகரன் தன்னிடம் மேலும் பணம் கேட்டு மிரட்டு–வதாக முத்தாண்டிக் குப்பம் போலீசில் செல்வழ கன்புகார் கொடுத்தார். கடலூர் எஸ்.பி. பண்ருட்டி டி.எஸ்.பி. ஆகியோர் உத்தரவின் பேரில் பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரன் முத்தாண்டி குப்பம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜாராம் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார். விசாரணையில் அதே ஊரைச் சேர்ந்த பெட்ரோல் பங்க் ஊழியர் ராமலிங்கம் என்பவரிடமும் தனசேகரன் கந்து வட்டி கேட்டு மிரட்டி யுள்ளது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து தனசேகரனை கைது செய்து அவரிடமிருந்து செல்வழகன் கொடுத்த ஆவணங்களை கைப்பற்றினர். பின்னர் தனசேகரனை பண்ருட்டி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    சென்னை அமைந்தகரையில் பதுங்கி இருந்து ஆஸ்பத்திரியில் வேலை பார்த்த நக்சலைட் பயங்கரவாதியை போலீசார் கைது செய்தனர். #Naxalitearrested

    சென்னை:

    சென்னை அமைந்தகரையில் தனியார் ஆஸ்பத்திரியில் மேற்கு வங்காளத்தை சேர்ந்த நக்சலைட் பயங்கரவாதி ஒருவன் பணி புரிந்து வருவதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது.

    அங்கு சிலிகுரி என்ற இடத்தில் பயங்கரவாத செயலில் ஈடுபட்டதாக கூறி அம்மாநில போலீசாரால் இவன் கைது செய்யப்பட்டவன் என்றும், அங்கிருந்து சென்னைக்கு தப்பி வந்து யாருக்கும் தெரியாமல் ரகசியமாக ஆஸ்பத்திரியில் துப்புரவு பணியில் வேலைக்கு சேர்ந்திருப்பதும் கண்டு பிடிக்கப்பட்டது.

    இதையடுத்து போலீசார் அங்கு சென்று அந்த வாலிபரை மடக்கி பிடித்தனர். நேற்று நள்ளிரவு 11 மணி அளவில் பிடிபட்ட அந்த வாலிபரை போலீசார் அமைந்தகரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.

    அப்போது அவனது பெயர் கந்தர்பதாஸ் (24) என்பது தெரிய வந்தது. அசாம் மாநிலத்தை சேர்ந்த இவன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டு 3 மாதம் சிறையில் இருந்தது தெரிய வந்தது. இதுபற்றி போலீசார் அவனிடம் விசாரணை நடத்தினர். அப்போது கந்தர்பதாஸ் எனக்கும் பயங்கரவாத இயக்கங்களுக்கும் தொடர்பு இல்லை என்று கூறியுள்ளான்.

    ஆனால் பயங்கரவாத செயல்பாட்டில் ஈடுபட்ட சிலருடன் கந்தர்பதாஸ் கைது செய்யப்பட்டிருப்பதை போலீசார் உறுதி செய்தனர்.

    இதையடுத்து கியூ பிரிவு போலீசாரும் கந்தர்பதாசிடம் விசாரணை நடத்தினர். சென்னை போலீசார் மேற்கொண்ட விசாரணைக்கு பின்னர், நக்சலைட் பயங்கரவாதியான கந்தர்பதாஸ், கியூ பிரிவு போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டான்.

    மேற்கு வங்காளத்தில் கைது செய்யப்பட்டு சிறைக்கு சென்ற கந்தர்பதாஸ், ஜாமீனில் விடுதலையான பின்னர் சென்னைக்கு வந்துள்ளான்.

    கடந்த 20 நாட்களுக்கு முன்னர்தான் அமைந்தகரையில் உள்ள ஆஸ்பத்திரியில் வேலைக்கு சேர்ந்துள்ளான். இவன் சென்னைக்கு வந்ததன் பின்னணி என்ன? என்பது தெரியவில்லை. இதுபற்றி போலீசார் விசாரணை தீவிரப்படுத்தியுள்ளனர்.

    குற்ற வழக்கில் தொடர்புடைய நக்சலைட் அமைப்பை சேர்ந்த நபர் பிடிபட்ட சம்பவம் சென்னை போலீசார் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விசாரணைக்கு பின்னர் கந்தர்பதாஸ் சிறையில் அடைக்கப்பட்டு பின்னர் மேற்குவங்காள போலீசாரிடம் ஒப்படைக்கப்படுவான் என்று தெரிகிறது.

    அமைந்தகரை நெல்சன் மாணிக்கம் சாலையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில்தான் கந்தர்பதாஸ் பணிபுரிந்து வந்துள்ளான். இங்கு வட மாநிலத்தவர்கள் பலரும் வேலை செய்து வருகிறார்கள், ஆஸ்பத்திரியில் நடைபெறும் கட்டுமான பணியில் ஈடுபட்டுள்ள வட மாநிலத்தவர்களுடன் கந்தர்பதாஸ் தகராறு செய்ததாக கூறப்படுகிறது. அப்போது அவன் நான் ஒரு பயங்கரவாதி என்று மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது.

    இதனை தொடர்ந்து ஆஸ்பத்திரி பாதுகாப்பு அதிகாரியான ஓய்வு பெற்ற டி.எஸ்.பி. ராமதாஸ் அவர் பற்றிய தகவல்களை சேகரித்தார். யூடியூப்பில் தேடிப்பார்த்த போதுதான் கந்தர்பதாஸ் பற்றிய தகவல்கள் தெரிய வந்தது. இதன் பின்னர்தான் அதிகாரி ராமதாஸ் பயங்கரவாதியை பிடித்து போலீசில் ஒப்படைத்துள்ளார்.

    கந்தர்பதாஸ் உல்பா பயங்கரவாத அமைப்பை சேர்ந்தவனாக இருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது. இது தொடர்பாகவும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    இதற்கிடையே கந்தர்பதாஸ் சட்டை அணியாமல் வெற்று உடம்புடன் துப்பாக்கியை கையில் வைத்துக் கொண்டு போஸ் கொடுக்கும் காட்சி சமூக வலை தளங்களில் பரவி வருகிறது. இதனை தொடர்ந்து சென்னைக்கு வரும் வெளி மாநிலத்தவர்களை தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என்று போலீசாருக்கு உயர் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். #Naxalitearrested 

    நெல்லையில் இன்று அதிகாலை போலீசார் நடத்திய அதிரடி வேட்டையில் 14 ரவுடிகள் கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    நெல்லை:

    தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு அருகே உள்ள பக்கப்பட்டி கிராமத்தில் கடந்தமாதம் 26-ந் தேதி முத்துசாமி, அவரது பேரன் சுடலைமணி ஆகிய இருவரும் ஒரு கும்பலால் அரிவாளால் சரமாரியாக வெட்டி கொலை செய்யப்பட்டனர். இது தொடர்பாக சகோதரர்கள் இரண்டு பேர் ஆலங்குளம் கோர்ட்டில் சரணடைந்தனர்.

    ஆனால் இந்த கொலை வழக்கில் உண்மையான குற்றவாளிகள் தலைமறைவாக இருப்பதாகவும், அவர்களை கைது செய்ய வேண்டும் என்றும் பல்வேறு அமைப்புகள் கோரிக்கை விடுத்தன. இதுதொடர்பாக தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தினார்கள்.

    அதில் மேலும் பலருக்கு இரட்டை கொலையில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதுதொடர்பாக தனிப்படை போலீசார் அருண்குமார், சின்னதம்பி ஆகிய இரண்டு பேரை தீவிரமாக தேடிவந்தனர். அவர்கள் நெல்லை தச்சநல்லூர் பகுதியில் உள்ள சில அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் ஆதரவுடன் பதுங்கியிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    இதைத்தொடர்ந்து நெல்லை சரக போலீஸ் டி.ஐ.ஜி. கபில்குமார் சரத்கர் உத்தரவின்பேரில் தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு முரளிரம்பா, நெல்லை மாநகர போலீஸ் துணைகமி‌ஷனர் சுகுணாசிங் ஆகியோர் மேற்பார்வையில் சுமார் 20-க்கும் மேற்பட்ட போலீசார் துப்பாக்கியுடன் இன்று அதிகாலை 3 மணியளவில் தச்சநல்லூர் சத்திரம்புதுக்குளம் பகுதிக்கு சென்றனர்.

    அங்குள்ள கண்ணபிரான், எஸ்டேட் மணி ஆகியோர் வீடுகளை போலீசார் சுற்றி வளைத்து அதிரடி சோதனை நடத்தினார்கள். போலீசார் உள்ளே நுழைந்ததை பார்த்ததும் அங்கு தங்கியிருந்த 20-க்கும் மேற்பட்டவர்கள் பல்வேறு திசைகளில் தப்பி ஓடினார்கள். போலீசாரும் அவர்களை விரட்டி சென்று பிடித்தனர்.

    இதில் தேவேந்திரகுல வேளாளர் கூட்டமைப்பு மாநில இளைஞரணி செயலாளர் கண்ணபிரான் (வயது 40), எஸ்டேட் மணி (35), குமுளி ராஜ்குமார் (38) அருண், செல்லபாண்டி, கணேசன், விஜி, ஆறுமுகம், ராஜதுரை உள்பட 14 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்கள் மீது பல்வேறு கொலை, அடிதடி உள்பட ஏராளமான வழக்குகள் உள்ளன.

    இவர்களது பெயர் போலீஸ் நிலையங்களில் ரவுடிகள் பட்டியலிலும் உள்ளது. இவர்களிடம் தீவிர விசாரணை நடத்திய போலீசார், அவர்கள் பதுங்கியிருந்த வீடுகளில் சோதனை நடத்தினார்கள். அப்போது வீடுகளின் மறைவிடங்களில் ஏராளமான அரிவாள்களும், நாட்டு வெடிகுண்டுகளும் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

    அங்கு ஒரு சொகுசு கார் உள்பட 2 கார்கள் நின்றன. அதிலும் நாட்டு வெடிகுண்டுகள் மற்றும் அரிவாள்கள் இருந்தன. அனைத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர். மொத்தம் 9 நாட்டு வெடிகுண்டுகள், 27 அரிவாள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் 2 கார்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

    போலீசார் இன்று அதிகாலை நடத்திய இந்த அதிரடி சோதனையால் அந்த பகுதி முழுவதும் போர்களம் போல் பரபரப்பாக காணப்பட்டது.

    கைதான 14 ரவுடிகளையும் பாளை ஆயுதப்படை போலீஸ் மைதானாத்தில் உள்ள அலுவலகத்திற்கு கொண்டு சென்று போலீசார் தீவிர விசாரணை நடத்தினார்கள். அவர்களில் பக்கப்பட்டி இரட்டை கொலையில் யார் யாருக்கு தொடர்பு உள்ளது? வேறு சதிசெயல்களில் அவர்கள் ஈடுபட்டார்களா? திட்டம் தீட்டினார்களா? என போலீசார் துருவி துருவி விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    வருகிற 10-ந் தேதி, தேவேந்திரகுல வேளாளர் கூட்டமைப்பின் நிறுவன தலைவர் பசுபதிபாண்டியனின் நினைவு நாள் வருகிறது. இதை முன்னிட்டு சிலரை கொலை செய்யவும், அவர்கள் திட்டம்தீட்டி இருந்ததாகவும் கூறப்படுகிறது. இதுதொடர்பாக உயர் போலீஸ் அதிகாரிகளும் பிடிபட்டவர்களிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    நாட்டு வெடிகுண்டுகள் மற்றும் அரிவாள்களுடன் 14 ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    சீர்காழி அருகே கார்-மோட்டார் சைக்கிளில் கடத்தி வரப்பட்ட ரூ.1 1/2 லட்சம் மதிப்பிலான மதுபாட்டில் மற்றும் சாராயத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.
    சீர்காழி:

    நாகை மாவட்டம் சீர்காழியை அடுத்த திருவெண்காடு இன்ஸ்பெக்டர் வேலுதேவி, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் முருகவேல் மற்றும் போலீசார் நேற்று இரவு திருவெண்காடு அருகே மணிகிராமத்தில் வாகன சோதனை நடத்தினர். அப்போது 11 மணி அளவில் ஒரு மோட்டார் சைக்கிளும், அதனை தொடர்ந்து ஒரு சொகுசு காரும் வந்தது. அவைகளில் வந்த 4 மர்ம நபர்கள் போலீசார் சோதனையில் ஈடுபட்டு இருப்பதை கண்டதும் சற்று தொலைவில் மோட்டார் சைக்கிளையும், காரையும் நிறுத்திவிட்டு தப்பி சென்று விட்டனர். 

    இதனை கண்ட போலீசார் 2 வாகனங்களையும் சோதனை செய்தனர். அப்போது மோட்டார் சைக்கிளில் புதுச்சேரி மாநில சாராயம் 120 லிட்டர் இருந்தது. அதே போல காரில் 150 லிட்டர்சாராயமும், 15 அட்டைபெட்டிகளில் 720 மதுபாட்டில்களும் இருந்தன. அவற்றின் மொத்த மதிப்பு ரூ.1 1/2 லட்சம் ஆகும். அவற்றை போலீசார் பறிமுதல் செய்து திருவெண்காடு போலீஸ் நிலையம் கொண்டு சென்றனர். மதுகடத்தலுக்கு பயன்படுத்திய வாகனங்களும் கைப்பற்றபட்டன. 

    இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து புதுச்சேரி மாநிலத்தில் இருந்து சாராயம், மதுபாட்டில்களை கடத்தி வந்த மர்ம நபர்கள் யார் யார்? அவர்கள் அதனை யாருக்காக கடத்தி வந்தனர்?  என்பது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும்தப்பி சென்ற 4 பேரையும் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் திருவெண்காடு பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    புதுச்சேரி மாநிலத்தில் இருந்து போலீசாரின் ஒத்துழைப்புடன் சாராயம், மதுபாட்டில்களை தமிழக பகுதிக்கு கடத்தி வருவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது காவல்துறை கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும கோரிக்கை விடுத்துள்ளனர்.
    ஊத்தங்கரை அருகே போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது நாட்டு துப்பாக்கி வைத்திருந்த 2 பேரை கைது செய்தனர்.

    ஊத்தங்கரை:

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை மாரம்பட்டி வனப்பகுதி அருகே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அன்பரசன் மற்றும் தனிப்படை போலீசார் ஒரு வழக்கிற்காக ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது அங்கு நாட்டு துப்பாக்கி வைத்து கொண்டு 2 வாலிபர்கள் சுற்றி திரிந்து கொண்டிருந்தனர்.

    போலீசாரை கண்டதும் 2 பேரும் அங்கிருந்து தப்பி ஓட முயன்றனர். அவர்களை போலீசார் சுற்றி வளைத்து பிடித்து விசாரித்தனர்.

    தருமபுரி மாவட்டம் அரூர் அருகே சந்திராவரம் வேடியப்பன் நகரை சேர்ந்தவர் அய்யகண்ணு என்கிற சின்னசாமி (வயது 36), அவரது உறவினர் சேலம் மாவட்டம் மேச்சேரியை சேர்ந்தவர் ராஜகண்ணு (43) ஆகிய 2 பேரும் நாட்டு துப்பாக்கி மூலம் வனவிலங்குகளை வேட்டையாட வந்திருப்பது தெரியவந்தது.

    உடனே போலீசார் 2 பேரையும் கைது செய்து அவர்களிடம் நாட்டு துப்பாக்கி ஒன்றையும பறிமுதல் செய்தனர்.

    பின்னர் அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி 2 பேரையும் ஊத்தங்கரை கிளை சிறையில் போலீசார் அடைத்தனர். 

    கிருஷ்ணகிரியில் வங்கி மற்றும் வீட்டு முன் நிறுத்தியிருந்த பைக்குகளை திருடிய கர்நாடக வாலிபர் கைது செய்யப்பட்டார்.
    கிருஷ்ணகிரி அருகே உள்ள பீமான்டப்பள்ளி புளியஞ்சேரி பகுதியை சேர்ந்தவ டிரைவர் சரவணன் (வயது 34). இவர் கடந்த 12-ந் தேதி கிருஷ்ணகிரியில் உள்ள வங்கி எதிரே உள்ள பகுதியில் ரூ. 65 ஆயிரம் மதிப்புள்ள தனது பைக்க நிறுத்தி விட்டு அந்த பகுதியில் தனது வேலை முடித்து கொண்டு திரும்பி வந்து பார்த்தபோது தனது பைக் அங்கு இல்லாததை கண்டு அதிர்ச்சியடைந்தார். பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

    இதனையடுத்து சரவணன் கிருஷ்ணகிரி டவுன் போலீசில் புகார் அளித்தார். மேலும் இதேபோல் கிருஷ்ணகிரி சேலம் சாலையில் உள்ள பழக்கடை நடத்திவரும் சுகுமார் (63) என்பவரது ரூ. 48 ஆயிரம் மதிப்புள்ள பைக்கை தனது வீட்டு முன்பு நிறுத்தி இருந்தையும் கடந்த 9ம் தேதி மர்மநபர் திருடி சென்று உள்ளார். இது குறித்து சுகுமாரும் போலீசில் புகார் அளித்துள்ளார்.

    இந்த நிலையில் போலீசார் வழக்குபதிவு செய்து பைக் திருடனை தேடி வந்த நிலையில் கிருஷ்ணகிரி டவுன் பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் பைக்கில் வந்த நபரை விசாரித்தபோது கர்நாடகா மாநிலம், பங்காரூபேட்டை பகுதியை சேர்ந்த முனிராஜ் மகன் பிரவின்(23) என்பதும், மற்றும் சரவணன், சுகுமார் ஆகியோரின் பைக்கை திருடியது தெரியவந்தது. 

    இதனையடுத்து போலீசார் 2 பைக்குகளையும் பறிமுதல் செய்து பிரவினை கைது செய்தனர்.
    ×