search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "alcohol bottle seized"

    நாகர்கோவில் அருகே இன்று பறக்கும் படை அதிகாரிகள் ஆம்னி பஸ் ஒன்றில் அதிரடி சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்கிருந்த 17 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

    நாகர்கோவில்:

    பாராளுமன்ற தேர்தல் சூடு பிடிக்க தொடங்கி உள்ளது. வேட்பாளர்கள் கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை, வீடு வீடாக சென்று வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    பறக்கும் படை அதிகாரிகளும் தீவிர கண்காணிப்பு பணியை மேற்கொண்டு வருகிறார்கள். பணம் விநியோகம், மதுபானங்கள் சப்ளையை தடுக்க அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

    நாகர்கோவில் அருகே இன்று பறக்கும் படை அதிகாரிகள் ஆம்னி பஸ் ஒன்றில் அதிரடி சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்கிருந்த 17 மதுபாட்டில்களை பறிமுதல் செய்துள்ளனர்.

    பறிமுதல் செய்யப்பட்ட மதுபாட்டில்கள் நாகர்கோவில் மதுவிலக்கு போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது. வாக்காளர்களுக்கு சப்ளை செய்ய மதுபாட்டில்கள் கொண்டு வரப்பட்டதா? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    இதேபோல் ராஜாக்கமங்கலம் அருகே பறக்கும் படை அதிகாரிகள் இன்று காலை வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது காரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு வரப்பட்ட ரூ.2 லட்சத்தை பறிமுதல் செய்தனர்.

    கிள்ளியூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதி யில் அதிகாரிகள் நேற்றிரவு நடத்திய வாகன சோதனையில் காரில் கொண்டு வரப்பட்ட ரூ.2 லட்சம் சிக்கியது.

    நேற்று காலையில் பத்மநாபபுரம் தொகுதியில் ரூ.4 லட்சத்து 92 ஆயிரத்து 720-ம், கிள்ளியூர் தொகுதியில் ரூ.2 லட்சத்து 10 ஆயிரத்து 500-ம், நாகர்கோவில் தொகுதியில் கார் ஒன்றும் பறிமுதல் செய்யப்பட்டது. மொத்தத்தில் இதுவரை மாவட்டம் முழுவதும் 13 வாகனங்கள், 11 மிக்சிகள், 39 கிராம் தங்கம், 23 மதுபாட்டில்கள், ரூ.78 லட்சத்து 75 ஆயிரத்து 395 ரொக்கப்பணமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

    சீர்காழி அருகே கார்-மோட்டார் சைக்கிளில் கடத்தி வரப்பட்ட ரூ.1 1/2 லட்சம் மதிப்பிலான மதுபாட்டில் மற்றும் சாராயத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.
    சீர்காழி:

    நாகை மாவட்டம் சீர்காழியை அடுத்த திருவெண்காடு இன்ஸ்பெக்டர் வேலுதேவி, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் முருகவேல் மற்றும் போலீசார் நேற்று இரவு திருவெண்காடு அருகே மணிகிராமத்தில் வாகன சோதனை நடத்தினர். அப்போது 11 மணி அளவில் ஒரு மோட்டார் சைக்கிளும், அதனை தொடர்ந்து ஒரு சொகுசு காரும் வந்தது. அவைகளில் வந்த 4 மர்ம நபர்கள் போலீசார் சோதனையில் ஈடுபட்டு இருப்பதை கண்டதும் சற்று தொலைவில் மோட்டார் சைக்கிளையும், காரையும் நிறுத்திவிட்டு தப்பி சென்று விட்டனர். 

    இதனை கண்ட போலீசார் 2 வாகனங்களையும் சோதனை செய்தனர். அப்போது மோட்டார் சைக்கிளில் புதுச்சேரி மாநில சாராயம் 120 லிட்டர் இருந்தது. அதே போல காரில் 150 லிட்டர்சாராயமும், 15 அட்டைபெட்டிகளில் 720 மதுபாட்டில்களும் இருந்தன. அவற்றின் மொத்த மதிப்பு ரூ.1 1/2 லட்சம் ஆகும். அவற்றை போலீசார் பறிமுதல் செய்து திருவெண்காடு போலீஸ் நிலையம் கொண்டு சென்றனர். மதுகடத்தலுக்கு பயன்படுத்திய வாகனங்களும் கைப்பற்றபட்டன. 

    இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து புதுச்சேரி மாநிலத்தில் இருந்து சாராயம், மதுபாட்டில்களை கடத்தி வந்த மர்ம நபர்கள் யார் யார்? அவர்கள் அதனை யாருக்காக கடத்தி வந்தனர்?  என்பது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும்தப்பி சென்ற 4 பேரையும் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் திருவெண்காடு பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    புதுச்சேரி மாநிலத்தில் இருந்து போலீசாரின் ஒத்துழைப்புடன் சாராயம், மதுபாட்டில்களை தமிழக பகுதிக்கு கடத்தி வருவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது காவல்துறை கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும கோரிக்கை விடுத்துள்ளனர்.
    தடை செய்யப்பட்ட புகையிலை மற்றும் திருட்டுத்தனமாக மதுவிற்ற 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

    ராஜபாளையம்:

    விருதுநகர் மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள், திருட்டு மது விற்பனை நடைபெறுவதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜ ராஜனுக்கு தகவல் கிடைத்தது.

    அவரது உத்தரவின் பேரில் ராஜபாளையம் சரகத்தில் துணை சூப்பிரண்டு ரவிச்சந்திரன் மேற்பார்வையில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.

    தெற்கு போலீஸ் இன்ஸ் பெக்டர் பவுல்ஏசுதாஸ், சப்-இன்ஸ்பெக்டர்கள் அருண்குமார், மூவேந்திரன், திருமலைராஜா மற்றும் போலீசார் ரோந்து சென்றபோது சங்கரன் கோவில் முக்கு பகுதியில் உள்ள கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்கப்படுவது தெரியவந்தது. அதனை பறிமுதல் செய்ததோடு, கடை உரிமையாளர் முருகனையும் கைது செய்தனர்.

    இதேபோல் அக்னி, சரவணன் (48) ஆகியோரும் புகையிலை பொருட்கள் விற்றதாக கைது செய்யப்பட்டனர்.

    சேத்தூர் புறக்காவல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராமசாமி தலைமையிலான போலீசார் ரோந்து சென்றபோது சுந்தர் ராஜபுரம் பகுதியில் ஒரு கடையில் திருட்டுத்தனமாக மது விற்கப்படுவது தெரிய வந்தது. அதனை விற்றதாக போதராஜ் (40) என்பவரை கைது செய்த போலீசார் 20 மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.

    தளவாய்புரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் பெருமள்சாமி, ரெங்கன் மற்றும் போலீசார் முறம்பு பகுதியில் மது விற்றதாக நாகராஜ் (27) என்பவரையும் சேத்தூர் சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடேஷ், சொக்கநாதன் புத்தூர் பகுதியில் மாரிமுத்து (29) என்பவரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

    ×