search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "போலீஸ் அதிரடி"

    • 175 கேன்களில் இருந்த மொத்த 6105 லிட்டர் எரிசாராயம் பறிமுதல் செய்யப்பட்டது.
    • போபாலில் இருந்து எரிசாராயத்தை கடத்தி வந்து விற்பது தெரிந்தது.

    செங்கல்பட்டு:

    மதுராந்தகம் அருகே உள்ள அய்யனார் கோவில் சந்திப்பில் கடந்த மாதம் எரிசாராயம் கடத்தி வந்த லாரியை போலீசார் மடக்கி பிடித்தனர். அதில் 175 கேன்க ளில் இருந்த மொத்த 6105 லிட்டர் எரிசா ராயம் பறிமுதல் செய்யப்பட்டது.

    இது தொடர்பாக லாரி டிரைவரான மேகவண்ணன் என்பவரை போலீசார் கைது செய்தனர். இதில் எரிசாராயம் கடத்தல் தமிழகம், கேரளா, பாண்டிச்சேரி என மிகப்பெரிய அளவில் நடைபெறுவது தெரிந்தது.

    மேகவண்ணன் கொடுத்த தகவலின்படி பட்டாபிராமை சேர்ந்த கிஷோர், சைதாப்பேட்டையை சேர்ந்த தனசேகரன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் போபாலில் இருந்து எரிசாராயத்தை கடத்தி வந்து விற்பது தெரிந்தது. இதையடுத்து மதுராந்தகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தர்மலிங்கம் தலைமையில் தனிப்படை போலீசார் போபால் விரைந்து சென்று எரி சாராயம் கடத்தலுக்கு மூளையாக செயல்பட்ட குர்மீட்சிங் சாசன் என்பவரை பிடித்தனர்.

    போபாலில் இருந்து ஐதராபாத் வழியாக எரிசாராயத்தை கொண்டு வந்து தமிழகம், கேரளா முழுவதும் சப்ளை செய்து வந்தது கண்டு பிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து எரிசாராயம் வழக்கில் தொடர்புடைய ஐதராபாத்தை சேர்ந்த சுரேஷ், செங்கல்பட்டை சேர்ந்த தனசேகரன் உள்பட மொத்தம் 18 பேர் கைது செய்யப்பட்டனர்.

    எரிசாராயம் கடத்தலில் ஈடுபட்ட கும்பலை மொத்தமாக போலீசார் பிடித்தனர். அவர்களிடம் இருந்து 2 லாரிகள், 2 கார்கள், வேன், மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் 15 ஆயிரத்து 911 லிட்டர் எரிசாராயம் கைப்பற்றப்பட்டது. எரிசாராயம் கடத்தல் கும்பலை கூண்டோடு பிடித்த தனிப்படை போலீசாரை அதிகாரிகள் பாராட்டினர்.

    • கோரிமேடு பகுதியில் மதுகுடித்து வாகனம் ஓட்டி வந்த 3 பேருக்கு தலா ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தனர்.
    • குடித்து விட்டு வாகனம் ஒட்டுபவர்களை கண்டறிய சோதனைகளை தீவிரப்படுத்த உள்ளோம்.

    புதுச்சேரி:

    புதுவையில் கடந்த சில நாட்களாக விபத்துகள் நடந்து வருகின்றன. போதையில் வாகனங்களை ஓட்டுவதால் உயிர் சேதமும், பொருட்சேதமும் அதிகளவில் ஏற்பட்டு வருகிறது.

    இதைத்தொடர்ந்து போதையில் வாகனங்களை ஓட்டுபவர்களை கண்டறிந்து அபராதம் விதிக்கபோலீசார் முடிவு செய்தனர்.

    இதைத்தொடர்ந்து வடக்கு பகுதி போக்குவரத்து போலீஸ் சூப்பிரண்டு மாறன் உத்தரவின்பேரில் புதுச்சேரி நகரப்பகுதியான புஸ்சி வீதி, அண்ணா சாலை ஆகிய பகுதிகளில் போக்குவரத்து போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

    அப்போது வாகன ஓட்டிகளிடம் போக்குவரத்து போலீசார் கேமராவுடன் கூடிய, மதுகுடித்திருப்பதை கண்டறியும் நவீன கருவி மூலமாக சோதனை நடத்தினார்கள். இதில் மதுகுடித்துவிட்டு வாகனம் ஓட்டி வந்த 6 பேருக்கு தலா ரூ.10 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.60 ஆயிரம் அபராதம் விதித்தனர்.

    இது போல் கோரிமேடு பகுதியில் மதுகுடித்து வாகனம் ஓட்டி வந்த 3 பேருக்கு தலா ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தனர்.

    மேலும் கிருமாம்பாக்கம் பகுதியில் மதுபோதையில் வாகனம் ஓட்டி வந்த 6 பேருக்கு தலா ரூ.10 ஆயிரம் வீதம் ரூ.60 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. புதுச்சேரியில் நேற்று ஒரேநாளில் மதுகுடித்துவிட்டு வாகனம் ஓட்டிய 15 பேருக்கு ரூ.1½ லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

    இது குறித்து சீனியர் போலீஸ் சூப்பிரண்டு பிரிஜேந்திர குமார் யாதவ் கூறியதாவது:-

    வார இறுதி விடுமுறை நாட்களில் புதுவைக்கு அதிகளவில் சுற்றுலா பயணிகள்வருகிறார்கள். இதனால் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. அவ்வாறு 10 இடங்களை கண்டறிந்துள்ளோம். அனைவரும் போக்குவரத்து விதிகளை மதிக்கவேண்டும்.

    நாங்கள் புதுவைக்கு வரும் சுற்றுலா பயணிகள், புதுவை உள்ளூர் மக்கள் என அனைவரையும் சமமாக தான் பார்க்கிறோம். விதிமுறைகளைமீறுபவர்களுக்கு அபராதம் விதிக்கிறோம்.

    குடித்து விட்டு வாகனம் ஒட்டுபவர்களை கண்டறிய சோதனைகளை தீவிரப்படுத்த உள்ளோம். அவர்களுக்கு கடுமையான அபராதமும் விதிக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அசோக்குமார் கோர்ட்டுக்குள் புகுந்து வெட்டியது ஏன்? என்று கேணிக்கரை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர்.
    • போலீசாரின் அதிரடி நடவடிக்கையால் தலைமறைவாக இருந்து வந்த கொக்கி குமார் தற்போது சிக்கியுள்ளார்.

    ராமநாதபுரம்:

    ராமநாதபுரம் சிவஞானபுரத்தை சேர்ந்த சேகர் என்பவரின் மகன் அசோக் குமார்(வயது28). இவர் மீது கொலை முயற்சி உள்ளிட்ட 12 வழக்குகள் உள்ளன. கேணிக்கரை போலீஸ் நிலைய ரவுடிகள் பட்டியலிலும் இவரது பெயர் உள்ளது.

    ராமநாதபுரம் அருகே உள்ள ஆர்.எஸ்.மடை பகுதியை சேர்ந்த கோவிந்தராஜ் என்பவரின் மகன் சந்துரு சிவஞானபுரத்தில் உள்ள பால் கடையில் வேலை பார்த்து வந்தார். கடந்த மாதம் 13-ந் தேதி கடையில் இருந்த சந்துருவை, அசோக்குமார் தாக்கி கொலை மிரட்டல் விடுத்திருக்கிறார்.

    இந்த வழக்கில் கைதான அசோக்குமார் நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்தார். அவர் தினமும் ராமநாதபுரம் கோர்ட்டில் கையெழுத்திட்டு வந்தார். அதேபோல் நேற்றும் கையெழுதிடுவதற்காக வந்த அசோக்குமார் கோர்ட்டின் அறையில் நின்றுகொண்டிருந்தார்.

    அப்போது அங்கு சந்துருவின் உறவினரான ஆர்.எஸ்.மடையை சேர்ந்த ரவுடி குமார் என்கிற கொக்கிக்குமார்(26), சண்முகநாதன்(22) ஆகியோர் வந்தனர். அவர்கள் கோர்ட்டின் அறையில் நின்று கொண்டிருந்த அசோக் குமாரை அரிவாளால் வெட்டி விட்டு தப்பினர்.

    இதில் படுகாயமடைந்த அசோக்குமாரை கோர்ட்டில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் மீட்டு ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அவரை அசோக்குமார் கோர்ட்டுக்குள் புகுந்து வெட்டியது ஏன்? என்று கேணிக்கரை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர்.

    அப்போது அசோக் குமாருக்கும் கொக்கி குமாருக்கும் ஏற்கனவே முன்விரோதம் இருந்து வந்த நிலையில், தனது உறவினராக சந்துருவை தாக்கிய தகவல் அறிந்த கொக்கி குமார், அசோக்குமாரை பழி தீர்க்க திட்டமிட்டு கோர்ட்டுக்குள் புகுந்து அரிவாளால் வெட்டிய தகவல் தெரியவந்தது.

    தப்பி சென்ற கொக்கி குமார், சண்முகநாதனை பிடிக்க ராமநாதபுரம் போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை உத்தரவின்பேரில் கேணிக்கரை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆடிவேல் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இருவரையும் தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.

    இந்நிலையில் கொக்கி குமார் உச்சிப்புளி பிரப்பன் வலசையில் உள்ள காட்டுப் பகுதியில் பதுங்கியிருந்ததை அவரது செல்போன் சிக்னல் மூலம் தனிப்படை போலீசார் கண்டறிந்தனர். இதையடுத்து இன்ஸ்பெக்டர் ஆடிவேல், சப்-இன்ஸ்பெக்டர் தினேஷ்பாபு மற்றும் போலீசார் அங்கு சென்றனர்.

    அப்போது இன்ஸ்பெக்டர் மற்றும் சப்-இன்ஸ்பெக்டரை தாக்கி விட்டு கொக்கி குமார் தப்பியோட முயன்றார். இதனால் இன்ஸ்பெக்டர் ஆடிவேல் கொக்கி குமாரை நோக்கி துப்பாக்கியால் சுட்டார். முதலில் சுடப்பட்ட போது கொக்கி குமார் மீது படவில்லை. இதனால் இன்ஸ்பெக்டர் 2-வது முறையாக துப்பாக்கியால் சுட்டார்.

    இதில் கொக்கி குமாரின் வலது காலில் துப்பாக்கி குண்டு பாய்ந்தது. இதனால் அவர் தொடர்ந்து ஓட முடியாமல் கீழே விழுந்தார். துப்பாக்கி சூட்டில் காயமடைந்த கொக்கிகுமார் ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

    மேலும் அவர் தாக்கியதில் இன்ஸ்பெக்டர் மற்றும் சப்-இன்ஸ்பெக்டரும் காயமடைந்தனர். அவர்களும் ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். கொக்கி குமார் மீது கொலை முயற்சி உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன.

    இந்நிலையில் ஒரு வழக்கில் ஜாமீனில் வெளியே வந்த அவர், விசாரணைக்கு கோர்ட்டில் ஆஜராகாமல் தலைமறைவானார். திருப்பூர் பகுதியில் பதுங்கி தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து வந்த அவர், நேற்று முன்தினம் ராமநாதபுரம் வந்திருக்கிறார்.

    அன்றைய தினமே ராமநாதபுரம் பசும்பொன் நகரை சேர்ந்த பாலமுருகன் என்பவரை வெட்டி விட்டு தப்பினார். பின்பு கொத்தர் தெருவை சேர்ந்த சூர்யா என்பவரை தாக்க அவரது வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது சூர்யா வீட்டுக்குள் சென்று கதவை பூட்டிக்கொண்டார்.

    இதனால் கொக்கி குமாரின் தாக்குதலில் இருந்து தப்பியிருக்கிறார். அதன் தொடர்ச்சியாக நேற்று கோா்ட்டுக்குள் புகுந்து அசோக்குமாரை வெட்டி விட்டு கொக்கிகுமார் தப்பினார்.

    இந்த சம்பவம் நடந்த சிறிது நேரத்திலேயே அவரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் செல்போன் சிக்னல் மூலம் கொக்கி குமாரின் இருப்பிடத்தை கண்டுபிடித்தனர். அங்கு சென்று கைது செய்ய முயன்ற போது இன்ஸ் பெக்டர் மற்றும் சப்-இன்ஸ்பெக்டரை தாக்கி னார்.

    இதனால் போலீசார் அவரை துப்பாக்கியால் சுட்டு பிடித்தனர். போலீசாரின் அதிரடி நடவடிக்கையால் தலைமறைவாக இருந்து வந்த கொக்கி குமார் தற்போது சிக்கியுள்ளார். 

    • கடந்த ஜனவரி மாதம் முதல் ஏப்ரல் வரையில் விபசார தடுப்பு பிரிவு போலீசார் நடத்திய வேட்டையில் 94 பெண்கள் மீட்கப்பட்டு காப்பகத்தில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
    • 55 விபசாரதரகர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

    சென்னை:

    சென்னையில் மசாஜ் செண்டர்கள், தங்கும் விடுதிகள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளில் நல்ல சம்பளத்தில் வேலை இருப்பதாக கூறி இளம்பெண்களை வரவழைத்து அவர்களின் மனதை மாற்றி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தும் கும்பலை பிடிக்க சென்னை மாநகர போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை மேற் கொண்டு வருகிறார்கள்.

    அந்த வகையில் சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையின் கீழ் இயங்கி வரும் விபசார தடுப்பு பிரிவு போலீசார் சென்னையில் தொடர்ச்சியாக தீவிர கண்காணிப்புடன் விபசார வேட்டையில் ஈடுபட்டு வருகிறார்கள். இதன்படி அடுக்குமாடி குடியிருப்புகள், மற்றும் லாட்ஜுகளில் இளம்பெண்களை வைத்து பாலியல் தொழிலில் ஈடுபட்டு வரும் தரகர்களை போலீசார் கைது செய்து வருகிறார்கள்.

    இதன்படி கடந்த ஜனவரி மாதம் முதல் ஏப்ரல் வரையில் விபசார தடுப்பு பிரிவு போலீசார் நடத்திய வேட்டையில் 94 பெண்கள் மீட்கப்பட்டு காப்பகத்தில் சேர்க்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக 35 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. 55 விபசாரதரகர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

    பாலியல் தொழிலில் ஈடுபடும் புரோக்கர்கள் செல்போன்கள் மூலமாக வாடிக்கையாளர்களை தொடர்பு கொண்டு அழைத்த காலம் எல்லாம் மலையேறிவிட்டது.

    தற்போது இணைய தளங்கள் மூலமாகவே புரோக்கர்கள் பாலியல் தொழிலுக்கு வலை விரித்து கொண்டிருக்கிறார்கள். லொகாண்டோ, ஜஸ்ட் டயல், விவா போன்ற பாலியல் இணையதளங்கள் மூலமாக வாடிக்கையாளர்களை வளைத்து போடும் தரகர்களின் எண்ணிக்கை நாளுக்கும் நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

    இதனை கருத்தில் கொண்டு இந்த இணைய தளங்களை முடக்க விபசார தடுப்பு பிரிவு போலீசார் அதிரடி நடவடிக்கையில் இறங்கி இருக்கிறார்கள்.

    இது போன்ற பாலியல் இணைய தளங்களை முற்றிலுமாக முடக்கும் வகையில் சைபர்கிரைம் போலீசார் மூலமாக விபசார தடுப்பு பிரிவு போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு உள்ளனர். இது தொடர்பாக மத்திய அரசின் எலக்ட்ரானிக் மற்றும் தகவல் தொழில்நுட்ப துறை மற்றும் கூகுள் நிறுவனத்துக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. மேலும் தகவல் தொழில்நுட்ப சட்டம் 2021ன் படி இந்த இணைய தளங்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து முடக்குவதற்காக தமிழக அரசின் தகவல் தொழில்நுட்பம் மற்றும் சேவை துறையின் செயலாளருக்கும் போலீசார் பரிந்துரை செய்து வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    இதன் மூலம் பாலியல் இணைய தளங்களுக்கு விரைவில் முட்டுக்கட்டை வருமா? என்கிற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

    • புகாரின் பேரில் திருவாரூர் லஞ்ச ஒழிப்பு போலீசார் ரகசியமாக விசாரணை நடத்தி பல்வேறு தகவல்களை திரட்டினர்.
    • சோதனையில் முடிவில் என்னென்ன ஆவணங்கள் சிக்கியது என்பது உள்ளிட்ட பல்வேறு விவரங்கள் தெரிய வரும்.

    திருவாரூர்:

    திருவாரூர் ஜி.ஆர்.டி கார்டனை சேர்ந்தவர் முத்துமீனாட்சி. இவர் தற்போது விழுப்புரம் சர்க்கரை ஆலையின் நிர்வாக மேலாளராக பணிபுரிந்து வருகிறார். அங்கேயே தங்கி உள்ளார்.

    இவர் கடந்த 2014-ம் ஆண்டு முதல் 2019-ம் ஆண்டு வரை திருவாரூர் வருவாய் கோட்டாட்சியராக பணிபுரிந்த போது நத்தம் புறம்போக்கு இடத்தில் வீட்டு மனைபட்டா வழங்கியதும், அந்த இடத்தை நெடுஞ்சாலைதுறை விரிவாக்க பணிக்காக மீண்டும் அரசிடமே நல்ல விலைக்கு வழங்கி முறைகேட்டில் ஈடுபட்டதாக புகார்கள் எழுந்தன.

    புகாரின் பேரில் திருவாரூர் லஞ்ச ஒழிப்பு போலீசார் ரகசியமாக விசாரணை நடத்தி பல்வேறு தகவல்களை திரட்டினர். அதில் முத்து மீனாட்சி, நில எடுப்பு சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலர் மணிமேகலை, கிராம நிர்வாக அலுவலர் துர்காராணி, உதவியாளர் கார்த்தி, அடியக்கமங்கலத்தை சேர்ந்த முருகன், முல்லையம்மாள், குமார், சுகுமார், சிவகுமார், சதீஷ்குமார், வினோத்குமார், திருப்பாலியூர் சுகுமாரி ஆகிய 12 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    இந்நிலையில் இன்று திருவாரூரில் உள்ள முத்து மீனாட்சி வீட்டிற்கு 20-க்கும் மேற்பட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் சென்றனர். அப்போது வீட்டின் வெளி கதவை பூட்டிவிட்டு வீட்டில் இருந்தவர்களை வெளிளே செல்ல அனுமதிக்கவில்லை. தொடர்ந்து பல்வேறு அறைகளில் சோதனை நடத்தினர். தொடர்ந்து சோதனை நடந்து வருகிறது. சோதனையில் முடிவில் என்னென்ன ஆவணங்கள் சிக்கியது என்பது உள்ளிட்ட பல்வேறு விவரங்கள் தெரிய வரும்.

    இதேப்போல் வீட்டு மனை பட்டா முறைகேட்டுக்கு உதவியாக இருந்ததாக கூறி அப்போதைய அடியக்கமங்கலம் வி.ஏ.ஓ.வும், தற்போதைய விளமல் வி.ஏ.ஓ.வுமான துர்காராணி என்பவரின் விளமல் சிவன் கோவில் நகரில் உள்ள வீடு மற்றும் அடியக்கமங்கலம் வி.ஏ.ஓ. உதவியாளர் கார்த்தி என்பவரது அடியக்கமங்கலத்தில் உள்ள வீடு ஆகியவற்றிலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் தனி தனி குழுவாக சென்று அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

    இதேப்போல் தஞ்சாவூரில் உள்ள நில எடுப்பு பிரிவு மாவட்ட வருவாய் அலுவலர் மணிமேகலை என்பவரது வீட்டில் சோதனை நடந்து வருகிறது.

    மேலும் சோதனை நடைபெறும் திருவாரூர் மாவட்டம் 3 அரசு அலுவலர்கள் மற்றும் தஞ்சையில் உள்ள ஒரு அரசு அலுவலர் ஆகிய 4 பேரின் வீடுகள் முன்பும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    திருவாரூர், தஞ்சை மாவட்டத்தில் ஒரே நேரத்தில் 4அரசு அலுவலர்களின் வீடுகளில் நடந்து வரும் சோதனை சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

    • தாக்குதலுக்குள்ளான 5 வடமாநில வாலிபர்களும் ஒன்று சேர்ந்த வெரைட்டிஹால் ரோடு போலீசில் புகார் செய்தனர்.
    • புகாரின் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    கோவை:

    கோவை, திருப்பூர் மாவட்டத்தில் ஏராளமான வட மாநில வாலிபர்கள் தங்கியிருந்து பனியன் கம்பெனி, மற்றும் தொழிற்சாலைகளில் வேலை பார்த்து வருகிறார்கள்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு வட மாநில வாலிபர்கள் தமிழகத்தில் தாக்கப்படுவதாக சமூக வலைதளங்களில் வதந்தி பரவியது. இதைத்தொடர்ந்து வடமாநில வாலிபர்கள் தங்கள் சொந்த ஊருக்கு புறப்பட்டு செல்வதாகவும் கூறப்பட்டது.

    இதையடுத்து தமிழக அதிகாரிகள் மற்றும் போலீசார் வடமாநில வாலிபர்கள் வேலைபார்க்கும் நிறுவனங்கள் அவர்கள் வசிக்கும் பகுதிகளுக்கு நேரில் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இங்கு எந்தவித அச்சுறுத்தலும் இல்லை, ஏதாவது பிரச்சினை இருந்தால் உடனடியாக புகார் தெரிவிக்கும்படி அறிவுறுத்தினர்.

    போலீசார் மற்றும் அதிகாரிகள் மேற்கொண்ட நடவடிக்கை காரணமாக வடமாநில வாலிபர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பிச் செல்வது குறைந்தது. இந்தநிலையில் கோவையில் நேற்று வடமாநில வாலிபர்கள் தாக்கப்பட்டனர். அவர்களை தாக்கியவர்களை போலீசார் உடனடியாக கைது செய்தனர்.

    இந்த சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-

    வட மாநிலத்தை சேர்ந்தவர் கவுதம் சியாமல் கட்டுவா (வயது 33). இவர் இடையர் வீதியில் தங்கி இருந்து தங்க நகை பட்டறையில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். அவருடன் தன்மைய் ஜனா, ஜகாத் ஆகியோரும் வேலை செய்து வருகின்றனர்.

    நேற்று இரவு இவர்கள் 3 பேரும் மகாளியம்மன் கோவில் வீதி அருகே நின்று கொண்டு பேசிக்கொண்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக 4 வாலிபர்கள் குடிபோதையில் வந்தனர்.

    அவர்கள் தகாத வார்த்தைகளால் பேசி கவுதம் சியாமல் கட்டுவா, தன்மைய் ஜனா ஆகியோரை தாக்கினர். பின்னர் அங்கு இருந்து தப்பிச் சென்றனர். இதனை தொடர்ந்து அவர்கள் காந்திபார்க் அருகே பானிபூரி சாப்பிட்டு கொண்டு இருந்த வடமாநில வாலிபர்களான மோனா, ஷேக் தவான் ஆகியோரையும் தாக்கிவிட்டு தப்பிச் சென்றனர்.

    தாக்குதலுக்குள்ளான 5 வடமாநில வாலிபர்களும் ஒன்று சேர்ந்த வெரைட்டிஹால் ரோடு போலீசில் புகார் செய்தனர். புகாரின் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் வட மாநில வாலிபர்களை தாக்கியது. செட்டிவீதியை சேர்ந்த சூர்ய பிரகாஷ் (19), பிரகாஷ் (20) கல்லூரி மாணவர் பிரகதீஸ் (21) வேல்முருகன் (20) என்பது தெரிய வந்தது. பின்னர் போலீசார் தலைமறைவாக இருந்த 4 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் தாக்குதலுக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் குடிபோதையில் தெரியாமல் தாக்கி விட்டதாக தெரிவித்தனர்.

    பின்னர் போலீசார் கல்லூரி மாணவர் உள்பட 4 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    • சரியான வாகன எண் பலகை பொருத்தாமல் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் மீது 4,132 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
    • வீண் அபராதத்தையும் தவிர்க்க, அனைவரும் தங்களின் முறையற்ற வாகன எண் தகடுகளை சரி செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

    சென்னை:

    சென்னையில் முறையான பதிவு எண்கள் பொறிக்காத வாகன பதிவு எண் பெயர் பகைகள் அகற்றப்பட்டு வருகின்றன.

    இது தொடர்பாக சென்னை மாநகர போக்குவரத்து போலீசார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    சென்னை பெருநகர போக்குவரத்துக் காவல் துறையினர் வாரந்தோறும் முறையற்ற வாகன பதிவு எண் இல்லாத வாகனங்கள் மீது நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

    கடந்த 3 வாரங்களில் சுமார் 43 ஆயிரம் வாகனங்களை சரிசெய்து முறையான எண் பொறுத்தப்பட்டுள்ளது.

    சரியான வாகன எண் பலகை பொருத்தாமல் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் மீது 4,132 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

    3 நாட்களுக்குள் அபராதம் செலுத்துமாறு வழக்குப் பதிவு செய்த அதிகாரியின் வாட்ஸ்அப் எண்ணுக்கும், காவல் நிலைய மின்னஞ்சல் முகவரிக்கும் அனுப்புமாறு அறிவுறுத்தி, நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனத்தில் துண்டு அறிக்கை ஒட்டப்பட்டன.

    இந்த துண்டு அறிக்கையை வாகன ஓட்டிகள் படித்து அறிந்து எண்ணை சரி செய்து அனுப்பி வைக்கவும், அதற்குண்டான அபராத தொகையை செலுத்தவும் அறிவுறுத்தப்பட்டது. தவறும் பட்சத்தில் அவருக்கு ரூ.1500 என விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

    தங்களது சவுகரியத்தையும் வீண் அபராதத்தையும் தவிர்க்க, அனைவரும் தங்களின் முறையற்ற வாகன எண் தகடுகளை சரி செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

    இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

    • விதிமுறை மீறி நம்பர் பிளேட் பொருத்தப்பட்ட அனைத்து மோட்டார் சைக்கிள்களையும் மடக்கி பிடித்தனர்.
    • இனிவரும் நாட்களில் வாகன சோதனை தீவிரப்படுத்தப்பட்டு அபராதம் விதிக்கப்படும் என்று போலீசார் தெரிவித்தனர்.

    ஆலந்தூர்:

    மோட்டார் சைக்கிள், கார் உள்ளிட்ட வாகனங்களில் பெரும்பாலானோர் போக்குவரத்து விதிமுறைகளை மீறி பதிவு எண்ணை பொருத்தி உள்ளனர்.

    பார்ப்பதற்கு எளிதில் தெரியாத அளவிற்கு மாடலாகவும், கலர்கலராகவும் வைத்து இருக்கிறார்கள். விதிமுறைப்படி வாகனங்களில் நம்பர் பிளேட்டுகள் பொருத்த வேண்டும் என்று போலீசார் எச்சரித்தும் பலர் கண்டு கொள்வதில்லை.

    இந்நிலையில் மடிப்பாக்கம் காவல் நிலையம் எல்லைக்குட்பட்ட தில்லை கங்கா நகர் மெயின் ரோடு, ஆதம்பாக்கம் ஏரி பாலம் அருகே இன்று காலை மடிப்பாக்கம் போக்குவரத்து போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது விதிமுறை மீறி நம்பர் பிளேட் பொருத்தப்பட்ட அனைத்து மோட்டார் சைக்கிள்களையும் மடக்கி பிடித்தனர். வாகனங்களில் இருந்த விதவிதமான நம்பர் பிளேட்டுகளை அதிரடியாக அகற்றினர். மேலும் அங்கேயே அந்த மோட்டார் சைக்கிள்களுக்கு விதிமுறைபடி உள்ள புதிய நம்பர் பிளேட் மாற்றப்பட்டது.

    சுமார் 100-க்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிள்கள் இதில் சிக்கியது. கார்களும் தப்பவில்லை. விதிமுறை மீறி நம்பர் பிளேட் உள்ள வாகனங்களுக்கு இன்று ஒரு நாள் மட்டும் போக்குவரத்து போலீசார் அபராதம் விதிக்கவில்லை.

    வாகன ஓட்டிகளை எச்சரித்து அனுப்பினர். இனிவரும் நாட்களில் வாகன சோதனை தீவிரப்படுத்தப்பட்டு அபராதம் விதிக்கப்படும் என்று போலீசார் தெரிவித்தனர்.

    இன்று காலை நடந்த இந்த அதிரடி சோதனையில் 10-க்கும் மேற்பட்ட போக்குவரத்து போலீசார் ஈடுபட்டனர். சிக்கிய வாகனங்கள் சாலை யோரத்தில் வரிசையாக நிறுத்தப்பட்டு இருந்ததால் அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது.

    புளியந்தோப்பு போக்குவரத்து எல்லைக்கு உட்பட்ட பகுதியில் முறையான நம்பர் பிளேட் இல்லாமல் வாகனம் ஓட்டி வரும் வாகன ஓட்டிகளை போலீசார் எச்சரித்து அறிவுரை வழங்கினர். மேலும் வாகன ஓட்டிகள் விரும்பினால் உடனடியாக நம்பர் பிளேட்டில் ஸ்டிக்கர் ஒட்டி அனுப்பி வைத்தனர்.

    இந்த வாகன சோதனையில் இன்ஸ்பெக்டர் செல்லதுரை, சப்-இன்ஸ்பெக்டர் முனிவேல், ரேகா, சையத் அமின், தலைமை காவலர்கள் பாஸ்கர், சுரேஷ்பாபு, பிரேம்நாதன் ஆகியோர் ஈடுபட்டனர்.

    ×