search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    எரிசாராயம் கடத்தி வந்து தமிழகம், கேரளா முழுவதும் விற்ற 18 பேர் கும்பல் கைது
    X

    எரிசாராயம் கடத்தி வந்து தமிழகம், கேரளா முழுவதும் விற்ற 18 பேர் கும்பல் கைது

    • 175 கேன்களில் இருந்த மொத்த 6105 லிட்டர் எரிசாராயம் பறிமுதல் செய்யப்பட்டது.
    • போபாலில் இருந்து எரிசாராயத்தை கடத்தி வந்து விற்பது தெரிந்தது.

    செங்கல்பட்டு:

    மதுராந்தகம் அருகே உள்ள அய்யனார் கோவில் சந்திப்பில் கடந்த மாதம் எரிசாராயம் கடத்தி வந்த லாரியை போலீசார் மடக்கி பிடித்தனர். அதில் 175 கேன்க ளில் இருந்த மொத்த 6105 லிட்டர் எரிசா ராயம் பறிமுதல் செய்யப்பட்டது.

    இது தொடர்பாக லாரி டிரைவரான மேகவண்ணன் என்பவரை போலீசார் கைது செய்தனர். இதில் எரிசாராயம் கடத்தல் தமிழகம், கேரளா, பாண்டிச்சேரி என மிகப்பெரிய அளவில் நடைபெறுவது தெரிந்தது.

    மேகவண்ணன் கொடுத்த தகவலின்படி பட்டாபிராமை சேர்ந்த கிஷோர், சைதாப்பேட்டையை சேர்ந்த தனசேகரன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் போபாலில் இருந்து எரிசாராயத்தை கடத்தி வந்து விற்பது தெரிந்தது. இதையடுத்து மதுராந்தகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தர்மலிங்கம் தலைமையில் தனிப்படை போலீசார் போபால் விரைந்து சென்று எரி சாராயம் கடத்தலுக்கு மூளையாக செயல்பட்ட குர்மீட்சிங் சாசன் என்பவரை பிடித்தனர்.

    போபாலில் இருந்து ஐதராபாத் வழியாக எரிசாராயத்தை கொண்டு வந்து தமிழகம், கேரளா முழுவதும் சப்ளை செய்து வந்தது கண்டு பிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து எரிசாராயம் வழக்கில் தொடர்புடைய ஐதராபாத்தை சேர்ந்த சுரேஷ், செங்கல்பட்டை சேர்ந்த தனசேகரன் உள்பட மொத்தம் 18 பேர் கைது செய்யப்பட்டனர்.

    எரிசாராயம் கடத்தலில் ஈடுபட்ட கும்பலை மொத்தமாக போலீசார் பிடித்தனர். அவர்களிடம் இருந்து 2 லாரிகள், 2 கார்கள், வேன், மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் 15 ஆயிரத்து 911 லிட்டர் எரிசாராயம் கைப்பற்றப்பட்டது. எரிசாராயம் கடத்தல் கும்பலை கூண்டோடு பிடித்த தனிப்படை போலீசாரை அதிகாரிகள் பாராட்டினர்.

    Next Story
    ×