search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "போலீசார் அதிரடி"

    • முக்கிய நிகழ்வான தேர்த் திருவிழா 25-ந்தேதியன்று நடைபெற்றது.
    • கோவிலில் பூஜையில் ஈடுபட்ட தீட்சிதரின் பூணுலை அறுத்து அவரை வெளியேற்றியதாக தகவல் பரவியது.

    கடலூர்: 

    சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆனி திருமஞ்சன விழா கடந்த 17-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த விழாவின் முக்கிய நிகழ்வான தேர்த் திருவிழா 25-ந்தேதியன்று நடைபெற்றது. இதனை முன்னிட்டு கடந்த 24-ந்தேதி முதல், 27-ந்தேதி வரை நடராஜர் கோவிலில் உள்ள கனகசபை மீது ஏறி பொதுமக்கள் தரிசனம் செய்வதற்கு தீட்சிதர்கள் அனுமதி மறுத்தனர். இது தொடர்பாக அறிவிப்பு பலகை வைத்து கனகசபை மீது ஏறும் படிக்கட்டின் கதவுகளை பூட்டினர்.

    இது தொடர்பாக கோவிலில் பணிபுரிந்த முன்னாள் தீட்சிதரின் புகாரின் இந்து அறநிலையத்துறை அதிகாரிகள், போலீசார் கோவிலுக்கு சென்று அறிவிப்பு பலகையை அகற்றினர். அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட தீட்சிதர்கள், கனகசபைக்கு ஏறும் படிகட்டுகளின் கதவுகளை உட்புறமாக பூட்டி விட்டனர். இதனைத் தொடர்ந்து 4 நாட்கள் முடிந்த நிலையில் கடந்த 28-ந் தேதி முதல் பக்தர்கள் கனகசபை மீது ஏறி தரிசனம் செய்ய தீட்சிதர்கள் அனுமதியளித்து கதவை திறந்து விட்டனர்.

    இந்நிலையில் இந்து அறநிலையத் துறை அதிகாரிகளும், போலீசாரும் விளம்பர பலகையை அகற்றும் போது, கோவிலில் பூஜையில் ஈடுபட்ட தீட்சிதரின் பூணுலை அறுத்து அவரை வெளியேற்றியதாக டுவிட்டர் எனப்படும் சமூக வலைதளத்தில் தகவல் பரவியது. இது குறித்து சிதம்பரம் கிராம நிர்வாக அலுவலர் ஷேக் சிராஜிதின் (38) சிதம்பரம் நகர போலீசாரிடம் புகார் மனு அளித்தார். அதில் அடையாளம் தெரியாத நபர், டுவிட்டர் சமூக வலைதளத்தில் தவறான தகவலை பரப்பியு ள்ளார். இத்தகவலின் அடிப்படையில் சிதம்பரம் பஸ் நிலையம், கஞ்சி தொட்டி முனை ஆகிய இடங்களில் பொதுமக்கள் கடந்த 4 நாட்களாக பரவலாக பேசி வருகின்றனர். பொதுமக்கள் பேசுவதற்கு காரணமான அடையாளம் தெரியாத நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென மனுவில் கூறியிருந்தார். அதன்படி சிதம்பரம் நகர போலீசார், டுவிட்டரில் தவறான தகவல் பரப்பியதாக அடையாளம் தெரியாத நபர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ‘தாதா அரசியல்’ உத்தரபிரதேசம், பீகார் உள்ளிட்ட வட மாநிலங்களில் சர்வ சாதாரணம்.
    • தமிழகத்தில் ‘தாதா அரசியல்’ தலையெடுக்க தொடங்கி இருப்பது பேராபத்து என்று எச்சரிக்கிறார் போலீஸ் அதிகாரி.

    கத்தியை எடுத்தவனுக்கு கத்தியால்தான் சாவு என்பார்கள். அந்த வகையில் ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் கத்தியை தூக்கி கொலை உள்ளிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் ரவுடிகள் ஒரு கட்டத்தில் "வேண்டாம் இந்த ரவுடியிசம்" என்று நினைத்து ஒதுங்கி வாழ நினைத்தால் அது நிச்சயம் நடக்காது. அந்த ரவுடி தூக்கிய கத்தி ஏதோ ஒரு நாள் நிச்சயம் அவனையே காலி செய்து விடும்.

    இப்படி ரவுடியாகி.... பின்னர் 'கேங்ஸ்டர்' ஆக உயர்ந்து தாதா போல வலம் வரும் பல ரவுடிகள் தங்களின் பாதுகாப்புக்காக கடைசியாக அடைக்கலம் தேடும் இடமாக அரசியல் களம் மாறி வருகிறது. இதுபோன்ற 'தாதா அரசியல்' உத்தரபிரதேசம், பீகார் உள்ளிட்ட வட மாநிலங்களில் சர்வ சாதாரணம். அங்குள்ள அரசியல்வாதிகளில் பலர் குற்றவாளிகளாக... கொலையாளிகளாக இருந்தே பின்னர் எம்.பி., எம்.எல்.ஏ.க்களாக அதிகாரத்துக்கு வந்திருப்பார்கள். சமீபத்தில் உத்தரபிரதேசத்தில் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்ட அத்திக் அகமது மீது பல்வேறு வழக்குகள் இருந்தன. சுயேட்சையாக நின்றும் கூட அவர் வெற்றி பெற்றிருக்கிறார்.

    இவரை போல தாதாவாக வட மாநிலங்களில் அரசியல் செய்தவர்களை பட்டியலிட்டால் அது நீண்டு கொண்டே செல்லும். தமிழக அரசியல் களத்திலும் எதிர்காலத்தில் அதுபோன்ற நிலை ஏற்பட்டு விடுமோ? என்கிற அச்சம் தமிழக காவல்துறை வட்டாரத்தை சமீபகாலமாகவே கலங்கடித்துக் கொண்டிருக்கிறது. சென்னை மாநகரில் கடந்த பல ஆண்டுகளுக்கு முன்னர் 'லாக்' அப்பில் வைத்து லத்தியில் செமகாட்டு காட்டிய நபர் ஒருவருக்கு தானே பின்நாளில் 'சல்யூட்' அடிக்க நேரிட்டது என்று வேதனையோடு தெரிவித்தார் போலீஸ் அதிகாரி ஒருவர். வடசென்னை பகுதியை சேர்ந்த அந்த நபர் அரசியலில் புகுந்து 'பெரிய ஆள்' ஆன பின்னர், அவரது வீட்டு திருமணத்துக்கு முக்கிய பிரமுகர்கள் பலரும் படையெடுத்துள்ளனர். அப்போது வாசலில் நின்று கொண்டு என்னால் சல்யூட் மட்டுமே அடிக்க முடிந்தது என்றார் அந்த அதிகாரி. இவரைப்போன்று பலரும் எதிர்காலத்தில் உருவாகி விடும் ஆபத்து அதிகமாகவே இருப்பதாக ரவுடி ஒழிப்பு பிரிவில் பணியாற்றும் அதிகாரி ஒருவர் ஆதங்கப்பட்டார்.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ரவுடிகள் புதிது புதிதாக உருவாவதும், அவர்களை ஒரு கட்டத்தில் கிள்ளி எறிய தவறும்பட்சத்தில்தான் அவர்கள் இஷ்டத்துக்கு ஆட்டம் போடுவதும்... ஒரு கட்டத்தில் பாதுகாப்புக்காக 'அரசியல்வாதி'யாக அவதாரம் எடுப்பதும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதற்குதான் முடிவு கட்ட வேண்டும் என்கிறார்கள் காவல் துறையினர்.

    சென்னையில் உள்ள பிரபல ஜவுளி கடை ஒன்றில் இருந்து எடுத்துச்செல்லப்பட்ட பணத்தை கொள்ளையடித்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக இருந்த வடசென்னை பகுதியை சேர்ந்த பிரபல ரவுடி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வெட்டி படுகொலை செய்யப்பட்டான். போலீஸ் வட்டாரத்தில் ஜவுளி கடையின் பெயரை அடைமொழியாக குறிப்பிட்டே அந்த ரவுடியை அழைத்து வந்தனர். ஒரு கட்டத்தில் வட மாநிலத்தை சேர்ந்த அரசியல் கட்சி ஒன்றில் அந்த ரவுடி அடைக்கலம் ஆனான். கட்சியில் பெரிய செல்வாக்கு பெற்ற அவனை அக்கட்சியின் தமிழக தலைவர் மாவட்ட செயலாளராக்கியும் அழகு பார்த்தார். அதனால் என்ன பயன்? கடைசியில் அந்த ரவுடி எங்கேயோ விட்டு வைத்த பெரும் பகை உயிருக்கு உலை வைத்தது. எதிராளிகள் நேரம் பார்த்து காத்திருந்து 'ஸ்கெட்ச்' போட்டு அந்த ரவுடியை தூக்கினார்கள்.

    கொடுங்கையூர் பகுதியை சேர்ந்த ரவுடி ஒருவன் இளம் வயதிலேயே அப்பகுதியில் 'பெரிய தாதா'வாக வலம் வந்தான். முகத்தில் வெட்டுக்காயத்துடன் காணப்படும் அந்த ரவுடி பிரபல கட்சி ஒன்றில் சேர்ந்து பொறுப்புக்கும் வந்தான். அப்பகுதி யை சேர்ந்த அக்கட்சி பிரமுகரே அந்த ரவுடியை அரசியல் கட்சியில் சேர்த்துக்கொண்டு பொறுப்பையும் வாங்கி கொடுத்திருந்தார்.

    கட்சியில் சேர்ந்தவுடன் ரவுடியை போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு அனுப்பி வைத்து "தான் திருந்தி வாழ ஆசைப்படுகிறேன்" என கூறி மனுவும் அளிக்க வைத்தார். ஆனால் இரண்டே நாட்களில் மூலக்கடை சந்திப்பில் வைத்து எதிரிகள் ரவுடியின் மூச்சை நிறுத்தினர். இதுபோன்று தமிழகத்தில் 'தாதா அரசியல்' தலையெடுக்க தொடங்கி இருப்பது பேராபத்து என்று எச்சரிக்கிறார் போலீஸ் அதிகாரி ஒருவர்.

    தனது பெயரை வெளியிட வேண்டாம் என்று கேட்டுக்கொண்ட அவர் இந்த 'தாதா அரசியல்'வாதிகள் உருவாவதற்கு அரசியல் கட்சி தலைவர்களே காரணம் என்று குற்றம்சாட்டினார். குற்றச்செயல்களில் ஈடுபடும் நபர்கள் குறிப்பிட்ட கட்சியில் சேருவதால் எந்த வகையிலும் அந்த கட்சிக்கு லாபம் இல்லை. முழுக்க முழுக்க அது ரவுடிக்கே லாபம் என்று கூறிய அந்த அதிகாரி ரவுடியாக மட்டுமே இருக்கும் ஒருவன் அரசியல் கட்சியில் சேர்ந்த பின்னர், வெளிப்படையாக தனது அதிகாரத்தை காட்ட தொடங்கி விடுவான். அரசியல்வாதியாகும் முன்பு வரையில் திரைமறைவில் பயந்து பயந்து செய்த செயல்களை கட்சி பேனரில் வெளிப்படையாக செய்ய தொடங்கும் ரவுடி தனது குற்றச்செயல்களுக்கு ஆதரவாக சீனியர் தலைவர்களை பேசச் சொல்வது வாடிக்கையாகி விடுகிறது. அது போன்று பேசும் நபர்கள் "போலீஸ் அதிகாரிகளிடம்... இந்த ஒரு தடவை மட்டும் எச்சரிச்சு விடுங்க சார். இனி பிரச்சினை ஏதும் வராம நான் பார்த்துக் கிறேன்" என்பார்கள். ஆனால் இதுவே தொடர் கதையாகி விடும். இப்படி ரவுடியாக மட்டுமே வலம் வந்த நபர் அரசியல்வாதியான பின்னர் செய்வதை யெல்லாம் தூரத்தில் இருந்தே வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் எதிராளிகள் நேரம்... காலம் பார்த்து காத்திருப்பார்கள். ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் 'தாதா அரசியல்வாதி' தனியாக சிக்கினால் சின்னா பின்னமாக்கி விடுவார்கள். சென்னையில் அடுத்தடுத்து நடந்த 2 கொலை சம்பவங்களே இதற்கு சமீபத்தைய பெரிய சாட்சிகளாக மாறிப்போயுள்ளன என்று எச்சரிக்கும் போலீஸ் அதிகாரிகள் தமிழகத்தில் பரவி வரும் இந்த புதிய தாதா அரசியலை வேரறுக்க அதிரடி நடவடிக்கைகளை ஏற்கனவே தொடங்கி மேற்கொண்டு வருகிறார்கள்.

    இந்த நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்த தேவையான பணிகளை மேற்கொள்ளவும் போலீசார் ஆலோசித்து வருகிறார்கள். இது தொடர்பாக அரசியல் கட்சி பிரமுகர்களை அழைத்துப்பேசி உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

    ரவுடிகளை கட்சியில் சேர்ப்பதால் உங்கள் கட்சிக்குத்தான் கெட்ட பெயர் ஏற்படும் என்பதையும், அதுபோன்ற நபர்கள் கொலை செய்யப்படும்போது இவ்வளவு வழக்குகள் உள்ள ரவுடியையா கட்சியில் சேர்த்து வைத்திருந்தார்கள் என பொதுமக்கள் முகம் சுழிக்கும் நிலையும் ஏற்படும் எனவும் போலீசார் கட்சியினரிடம் தொடர்ந்து கூறி வருகிறார்கள்.

    இருப்பினும் தாதா அரசியல் மோகம் ரவுடிகள் மத்தியில் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இதனை கட்டுப்படுத்த அரசியல் ஆசையுடன் வலம் வரும்போதே ரவுடிகளின் கொட்டத்தை ஒடுக்க போலீசார் அதிரடி காட்ட துப்பாக்கியை தூக்கலாமா என்பது பற்றி ஆலோசித்து வருகிறார்கள். ரவுடிகள் அரசியல்வாதி ஆவது அரசியல் களத்துக்கும் சமூகத்துக்கும் ஆபத்து என்பதை உணர்ந்தே அதிரடி காட்ட ஆயத்தமாகி இருப்பதாக காவல் துறையினர் கண்டிப்புடன் கூறிவருகிறார்கள்.

    தமிழகத்தில் தாதா அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுமா. . . என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

    • கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவின் பேரில் அவ்வப்போது லாட்ஜில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
    • லாட்ஜுகளில் தங்கி இருப்பவர்கள் ஆயுதங்கள், போதை பொருட்களை பதுக்கி வைத்துள்ளார்களா? என்றும் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

    சென்னை:

    சென்னையில் குற்றச் செயல்களை தடுக்கவும் தலைமறைவாக உள்ள பழைய குற்றவாளிகளை வேட்டையாடி கைது செய்யவும் போலீசார் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

    இதன் ஒரு பகுதியாக கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவின் பேரில் அவ்வப்போது லாட்ஜில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் சென்னை மாநகரம் முழுவதும் நேற்று முன்தினம் இரவு போலீசார் லாட்ஜுகள், தங்கும் விடுதிகளில் சோதனை நடத்தினர். 377 லாட்ஜுகள் மற்றும் 100 மேன்சன்களில் போலீசார் சோதனை நடத்தினர். இதில் சந்தேகத்துக்கிடமாக யாராவது தங்கி இருக்கிறார்களா? என்பது பற்றி ஆய்வு செய்யப்பட்டது. லாட்ஜுகளில் தங்கி இருப்பவர்கள் எதற்காக அறை எடுத்து உள்ளனர்? அவர்களது முகவரி சரியானதுதானா? என்பதை எல்லாம் போலீசார் ஆய்வு செய்தனர். இது தொடர்பாக லாட்ஜ் உரிமையாளர்கள் மற்றும் மேலாளர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. பழைய குற்றவாளிகளின் முகத்தை அடையாளம் காட்டும் கேமராவையும் போலீசார் பயன்படுத்தினர்.

    இதில் 4123 பேர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். இதில் 4 பழைய குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டனர். பிடிபட்ட இந்த குற்றவாளிகள் போலீசாரின் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளனர்.

    லாட்ஜுகளில் தங்கி இருப்பவர்கள் ஆயுதங்கள், போதை பொருட்களை பதுக்கி வைத்துள்ளார்களா? என்றும் சோதனை மேற்கொள்ளப்பட்டது. சந்தேக நபர்கள் அல்லது பொருட்கள் குறித்து தகவல் அறிந்தால் உடனே காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும், உரிய அடையாள சான்று இல்லாத நபர்களுக்கு அறைகள் கொடுக்க வேண்டாம் எனவும் லாட்ஜ் உரிமையாளர்கள் மற்றும் மேலாளர்களுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டது.

    லாட்ஜுகளில் சோதனை நடத்தப்பட்ட அதே நேரத்தில் வாகன சோதனையும் தீவிரமாக நடைபெற்றது. சென்னை மாநகரம் முழுவதும் 7195 வாகனங்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன. இதில் மது போதையில் வாகனங்களை ஓட்டியதாக மொத்தம் 60 பேர் பிடிபட்டனர். இது தவிர விதிமீறல் வாகனங்களும் சிக்கின. மொத்தம் 142 வாகனங்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. 517 வாகனங்களின் பதிவு எண்கள் சரிபார்க்கப்பட்டதில் முறைகேடாக இயங்கிய 3 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. போலீசாரின் இந்த வேட்டை தொடரும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    • குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு தலைமறைவாக தங்கி உள்ளார்களா? என்பதை போலீசார் ஆய்வு செய்தனர்.
    • இந்த தீவிர சோதனை ஏதுவாக அமைந்துள்ளது என போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டத்தில் குற்றச்செயல் மற்றும் வாகன விதிமீறல்களை தடுக்க வேண்டி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் உத்தரவின் பேரில் கடலூர், பண்ருட்டி, விருத்தாச்சலம், நெய்வேலி, சேத்தியாதோப்பு, சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் ஆகிய 7 உட்கோட்டத்திற்குட்பட்ட பகுதியில் நேற்று 18-ந்தேதி முதல் வருகிற 23-ந்தேதி வரை தீவிர வாகன சோதனை, குற்றவாளிகளின் நடவடிக்கைகள் கண்காணிப்பு, சந்தேகப்படும் நபர்களை பிடித்து விசாரணை, தலைமறைவு குற்றவாளிகள், ரவுடிகளை கண்காணிப்பது போன்ற பணிகளில் போலீசார் தீவிர ஈடுபட வேண்டும் என அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதன்படி கடலூர் மாவட்டம் முழுவதும் நேற்று மாலையிலிருந்து போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். இதில் கடலூர் மாவட்டம் முழுவதுமுள்ள 89 லாட்ஜ்களில் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது குற்ற செயலில் ஈடுபடும் நபர்கள், வேறு மாவட்டங்களில் குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு தலைமறைவாக தங்கி உள்ளார்களா? என்பதை போலீசார் ஆய்வு செய்தனர். இதனை தொடர்ந்து மாவட்டம் முழுவதும் போலீசார் விடிய விடிய தீவிரமாக 2100 வாகனகளில் சோதனை செய்தனர். அப்போது குடிபோதையில் வாகனம் ஓட்டுதல், அதிவேகமாக வாகனம் ஓட்டுதல், ஆவணங்கள் இன்றி வாகனம் ஓட்டுதல், அதிக பாரங்கள் ஏற்றி செல்லுதல், செல்போனில் பேசி செல்லுதல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் 1777 வழக்கு பதிவு செய்து அபராத தொகை வசூல் செய்தனர்.

    இது மட்டும் இன்றி மாவட்டம் முழுவதும் குற்ற செயல்களில் ஈடுபடும் 260 பழைய குற்றவாளிகள், 196 ரவுடிகளை அதிரடியாக நேரில் சென்று அவர்கள் சொந்த ஊரில் உள்ளனரா? வீட்டில் உள்ளார்களா? தற்போது வெளியூரில் இருந்தால் என்ன வேலை செய்கிறார்கள்? தற்போது என்னென்ன நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார்கள்? என்பதனை அதிரடியாக சோதனை செய்தனர். இதில் தலைமறைவாக இருந்த 4 குற்றவாளிகளையும், 2 ரவுடிகளையும் போலீசார் கைது செய்தனர். மேலும் 32 நபர்கள் மீது சந்தேக வழக்கு பதிவு செய்து அவர்களின் கைரேகை, முழு விலாசம், தற்போது காரணம் இன்றி வெளியில் சுற்றுதல்? உள்ளிட்டவைகள் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். புதுவை மாநிலத்தில் இருந்து சாராயம் மற்றும் மது கடத்தல் தொடர்பாக 26 வழக்கில் செய்து 27 மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளன. இந்த நிலையில் கடலூர் மாவட்டத்தில் நடைபெற்று வரும் தொடர் குற்ற சம்பவங்கள், வாகன விதிமீறல்களை தடுப்பது, அடிக்கடி வாகன விபத்தால் ஏற்படும் இறப்பு சதவீதத்தை குறைப்பது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளுக்கு இந்த தீவிர சோதனை ஏதுவாக அமைந்துள்ளது என போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

    • 2 சொகுசு கார்கள், 6 இருசக்கர வாகனங்கள், 21 செல்போன்கள் ஆகியவற்றையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
    • ஒரே நாளில் நடந்த இந்த போலீசாரின் அதிரடி நடவடிக்கை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    அரூர்:

    தருமபுரி மாவட்டம், அரூர் அருகே உள்ள கோட்டப்பட்டி பகுதிகளில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த சூதாட்டக்காரர்கள் சூதாட்டம் நடத்தி வருவதாக அரூர் டி.எஸ்.பி. புகழேந்தி கணேசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் அவருடைய தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் சுந்தரமூர்த்தி, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் கமலநாதன், சக்திவேல் மற்றும் போலீசார்கள் நேற்று இரவு 12 மணி முதல் அதிகாலை 5 மணி வரை அதிரடி ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது கோட்டப்பட்டி பெரிய ஏரி மாட்டு கொட்டகையில் பணம் வைத்து சூதாடுவது தெரியவந்தது.

    உடனே அங்கு விரைந்து சென்ற போலீசார் அவர்களை சுற்றி வளைத்து பிடித்தனர். கைது செய்யப்பட்ட 15 பேரின் விவரம் வருமாறு:-

    ராஜா முகமது (வயது 43), சக்கரை (51), கணேசன் (45), சிலம்பரசன் (28), கருணாகரன் (53), குமார் (57), மகராமூர்த்தி (51), அஜித் (26), பழனிசாமி (52), வினோத்குமார் (33), தனபால் (49), செல்வம் (52), ராஜா (65), கலையரசன் (32), பெரியசாமி (46).

    இவர்கள் சேலம், புதுக்கோட்டை, திருவண்ணாமலை, திருப்பத்தூர் உள்ளிட்ட பல மாவட்டங்களை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    மேலும் தலைமறைவான கன்ஸ்வாட்டர், அஜித், குமார், சங்கர், தங்கப்பா, குப்பன், ராஜகோபால் ஆகியோரை தேடி வருகின்றனர்.

    கைதானவர்களிடம் இருந்து ரூ.5,77,345 ரொக்கப்பணம் பறிமுதல் செய்யப்பட்டது. அத்துடன் 2 சொகுசு கார்கள், 6 இருசக்கர வாகனங்கள், 21 செல்போன்கள் ஆகியவற்றையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

    ஒரே நாளில் நடந்த இந்த போலீசாரின் அதிரடி நடவடிக்கை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • பண்ருட்டி போலீசார் என்.எல்.சி. தொழிலாளியிடம் கந்துவட்டி கேட்டு மிரட்டியவரை கைது செய்தனர்.
    • நாளொன்றுக்கு 18 ஆயிரம் வீதம் 45 நாட்களில் தவணை முறையில் 7,50,000- கொடுத்துள்ளார் செல்வழகன்.

    கடலூர்:

    பண்ருட்டி போலீஸ் உட்கோட்டம் முத்தாண்டிக் குப்பம் காவல் எல்லைக் குட்பட்ட சின்ன ஒடப்பன் குப்பத்தை சேர்ந்தவர் செல்வழகன் (வயது 30) என்.எல்.சி. ஒப்பந்த தொழிலாளி. இவர், அதேபகுதியை சேர்ந்த பந்தல் அமைப்பாளர் தனசேகரன் (33). என்பவரி டம் தனது குடும்ப செலவுக் காக ரூ 3,00,000 கடனாக பெற்றிருந்தார். இந்ததொகையை பெறுவதற்காக பூர்த்தி செய்யப் படாத 10ஆவணங்களை கொடுத்திருந்ததார். இந்தகடன் தொகைக்கு நாளொன்றுக்கு 18 ஆயிரம் வீதம் 45 நாட்களில் தவனை முறையில் 7,50,000 கொடுத்துள்ளார் செல்வழகன். தனசேகரன் தன்னிடம் மேலும் பணம் கேட்டு மிரட்டு–வதாக முத்தாண்டிக் குப்பம் போலீசில் செல்வழ கன்புகார் கொடுத்தார். கடலூர் எஸ்.பி. பண்ருட்டி டி.எஸ்.பி. ஆகியோர் உத்தரவின் பேரில் பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரன் முத்தாண்டி குப்பம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜாராம் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார். விசாரணையில் அதே ஊரைச் சேர்ந்த பெட்ரோல் பங்க் ஊழியர் ராமலிங்கம் என்பவரிடமும் தனசேகரன் கந்து வட்டி கேட்டு மிரட்டி யுள்ளது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து தனசேகரனை கைது செய்து அவரிடமிருந்து செல்வழகன் கொடுத்த ஆவணங்களை கைப்பற்றினர். பின்னர் தனசேகரனை பண்ருட்டி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    ×