search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பதுங்கல்"

    • தனிப்படையினர் தீவிர தேடுதல் வேட்டை
    • தக்கலை போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    தக்கலை :

    தக்கலை அருகே உள்ள சடையமங்கலம் பகுதியை சேர்ந்தவர் மோகன்தாஸ் (வயது 53), விவசாயி.

    இவரது உறவினர் பெண்ணை, அதே பகுதியை சேர்ந்த தனியார் நிறு வன டிரைவர் சுரேஷ் கிண்டல் செய்து உள்ளார். இதனை மோகன்தாஸ் தட்டிக் கேட்டுள்ளார். இது தொடர்பாக அவர்களுக்குள் முன்விரோதம் ஏற்பட்டது.

    சம்பவத்தன்று மோகன் தாஸ் தோட்டத்தில் இருந்த போது, சுபாஷ் அங்கு வந்தார். அவர்களுக்குள் மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டது.

    அப்போது ஆத்திரம் அடைந்த சுபாஷ், மறைத்து வைத்திருந்த அரிவாளால் வெட்டினார். இதில் பலத்த காயம் அடைந்த மோகன் தாசை, உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக திருவனந்த புரம் தனியார் ஆஸ்பத்திரி யில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி மோகன்தாஸ் நேற்று மதியம் பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து அவரது மனைவி கீதா, தக்கலை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் தக்கலை போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    தலைமறைவாக உள்ள சுபாசை பிடிக்க தக்கலை போலீஸ் துணை சூப்பிரண்டு உதயசூரியன் தலைமையில் 2 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் நடத்திய விசார ணையில் சுபாஷ், கேரளா விற்கு தப்பி சென்றிருப்பது தெரிய வந்தது. அதன்பேரில் தனிப்படையினர் கேரளா விரைந்துள்ளனர்.

    • மதுரை கொள்ளை அடிக்க பதுங்கியிருந்த 8 பேரை போலீசார் கைது செய்தனர்.
    • அவர்களிடம் இருந்து அரிவாள், கத்தி, உருட்டு கட்டை, மிளகாய்பொடி பறிமுதல் செய்யப்பட்டன.

    மதுரை

    மதுரை செல்லூரில் கொள்ளையடிப்பதற்காக ஆயுதங்க ளுடன் மர்ம கும்பல் வலம் வருவதாக போலீசுக்கு தகவல் வந்தது. இதில் தொடர்புடைய குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என்று போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் உத்தரவிட்டார்.

    இதன்படி மாநகர வடக்கு துணை கமிஷனர் மோகன்ராஜ் மேற்பார்வையில், செல்லூர் உதவி கமிஷனர் விஜயகுமார் தலைமையில் தனிப்படை அமைக்க ப்பட்டது. கண்மாய்க்கரை, கணேசபுரம்ரெயில் தண்டவாள பகுதியில், போலீசார் ரோந்து சென்றனர்.

    அங்கு 10 பேர் கும்பல் ஆயுதங்களுடன் பதுங்கியி ருப்பது தெரியவந்தது. அவர்களை போலீசார் சுற்றி வளைத்தனர். அதில் 5 பேரை போலீசார் மடக்கி பிடித்தனர். அவர்களிடம் இருந்து அரிவாள், கத்தி, உருட்டு கட்டை, மிளகாய்பொடி பறிமுதல் செய்யப்பட்டன.

    5 பேரையும் தனிப்படை போலீசார் காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரித்தனர். அவர்கள் தத்தனேரி, பாரதிநகர் சசிகுமார் (30), முனியாண்டி கோவில் தெரு முட்டக்கண் மகாராஜன் (23), அகிம்சாபுரம் மதன்கு மார்(27), ஓடக்கரை, முத்துராமலிங்கம் தெரு கஞ்சிமுட்டி ஜெயபாண்டி ( 33), தத்தனேரி, சிவகாமி நகர் கிடாரி கார்த்திக்(22) என்பது தெரிய வந்தது. அவர்களை போலீசார் கைது செய்தனர்.

    அண்ணாநகர் போலீசார் பாண்டி கோவில் ரிங்ரோடு, அம்மா திடல் அருகே ரோந்து சென்றனர். அங்கு அரிவாளுடன் கொள்ளையடிக்க பதுங்கி இருந்த யாகப்பா நகர், சக்தி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த இட்லி கார்த்திக் (31) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

    எஸ்.எஸ்.காலனி, கருமா ரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த தங்கவேல் மகன் தீனா முருகேசன் (24). இவர் நேற்று எல்லீஸ் நகர், 70 அடி ரோட்டில் நடந்து சென்றார்.

    அப்போது கத்தியை காட்டி மிரட்டி வழிப்பறி செய்ய முயன்ற எல்லீஸ்நகர், காந்திஜி காலனி, சம்சுதீன் மகன் முபாரக் அலி (22) என்பவரை எஸ்.எஸ்.காலனி போலீசார் கைது செய்தனர்.

    ×