search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கொள்ளையடிக்க பதுங்கியிருந்த 8 பேர் கைது
    X

    கொள்ளையடிக்க பதுங்கியிருந்த 8 பேர் கைது

    • மதுரை கொள்ளை அடிக்க பதுங்கியிருந்த 8 பேரை போலீசார் கைது செய்தனர்.
    • அவர்களிடம் இருந்து அரிவாள், கத்தி, உருட்டு கட்டை, மிளகாய்பொடி பறிமுதல் செய்யப்பட்டன.

    மதுரை

    மதுரை செல்லூரில் கொள்ளையடிப்பதற்காக ஆயுதங்க ளுடன் மர்ம கும்பல் வலம் வருவதாக போலீசுக்கு தகவல் வந்தது. இதில் தொடர்புடைய குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என்று போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் உத்தரவிட்டார்.

    இதன்படி மாநகர வடக்கு துணை கமிஷனர் மோகன்ராஜ் மேற்பார்வையில், செல்லூர் உதவி கமிஷனர் விஜயகுமார் தலைமையில் தனிப்படை அமைக்க ப்பட்டது. கண்மாய்க்கரை, கணேசபுரம்ரெயில் தண்டவாள பகுதியில், போலீசார் ரோந்து சென்றனர்.

    அங்கு 10 பேர் கும்பல் ஆயுதங்களுடன் பதுங்கியி ருப்பது தெரியவந்தது. அவர்களை போலீசார் சுற்றி வளைத்தனர். அதில் 5 பேரை போலீசார் மடக்கி பிடித்தனர். அவர்களிடம் இருந்து அரிவாள், கத்தி, உருட்டு கட்டை, மிளகாய்பொடி பறிமுதல் செய்யப்பட்டன.

    5 பேரையும் தனிப்படை போலீசார் காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரித்தனர். அவர்கள் தத்தனேரி, பாரதிநகர் சசிகுமார் (30), முனியாண்டி கோவில் தெரு முட்டக்கண் மகாராஜன் (23), அகிம்சாபுரம் மதன்கு மார்(27), ஓடக்கரை, முத்துராமலிங்கம் தெரு கஞ்சிமுட்டி ஜெயபாண்டி ( 33), தத்தனேரி, சிவகாமி நகர் கிடாரி கார்த்திக்(22) என்பது தெரிய வந்தது. அவர்களை போலீசார் கைது செய்தனர்.

    அண்ணாநகர் போலீசார் பாண்டி கோவில் ரிங்ரோடு, அம்மா திடல் அருகே ரோந்து சென்றனர். அங்கு அரிவாளுடன் கொள்ளையடிக்க பதுங்கி இருந்த யாகப்பா நகர், சக்தி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த இட்லி கார்த்திக் (31) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

    எஸ்.எஸ்.காலனி, கருமா ரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த தங்கவேல் மகன் தீனா முருகேசன் (24). இவர் நேற்று எல்லீஸ் நகர், 70 அடி ரோட்டில் நடந்து சென்றார்.

    அப்போது கத்தியை காட்டி மிரட்டி வழிப்பறி செய்ய முயன்ற எல்லீஸ்நகர், காந்திஜி காலனி, சம்சுதீன் மகன் முபாரக் அலி (22) என்பவரை எஸ்.எஸ்.காலனி போலீசார் கைது செய்தனர்.

    Next Story
    ×