search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கஞ்சா விற்பனை: போலீசார் நடவடிக்கை
    X

    கஞ்சா விற்பனை: போலீசார் நடவடிக்கை

    • கஞ்சா விற்பனையை தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
    • கல்லூரி மாணவர்கள் மத்தியில் கஞ்சா விற்பனை அமோகமாக நடந்து வந்தது வெட்டவெளிச்சமாகி உள்ளது.

    காரைக்குடி

    தமிழகத்தில் மது பழக்கத்துக்கு அடுத்து கஞ்சா மற்றும் போதை பொருட்களை இளைஞர்கள் பயன்படுத்துவது அதிகரித்து வருகிறது. இந்த பழக்கம் காரணமாக இளைஞர்களின் எதிர்காலம் முற்றிலும் நாசமாகிவிடும் அபாயம் உள்ளது.

    இதனை கருத்தில் கொண்டு தமிழ கத்தில் கஞ்சா விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கஞ்சா வியாபாரிகளின் சொத்துக்கள் முடக்கப்படு கிறது. மேலும் குண்டர் சட்டத்தின் கீழும் நட வடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் கல்லூரி மாணவர்கள் மத்தியில் சமீபகாலமாக கஞ்சா விற்பனை அதிகமாக நடைபெறுவதாக புகார்கள் எழுந்தது. இதைத்தொடர்ந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் கஞ்சா விற்பனை செய்பவர்களை கண்டறிந்து கைது செய்ய தனிப்படை அமைக்க உத்தரவிட்டார்.

    இதைத் தொடர்ந்து துணை போலீஸ் சூப்பிரண்டு வினோஜி ஆலோசனைபடி தனிப்படை போலீசார் காரைக்குடி பகுதி முழு வதும் கடந்த 3 நாட்களாக தீவிர சோதனை நடத்தினர்.

    அப்போது கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 2 கல்லூரி மாணவர்கள் கைது செய்யப்பட்டனர்.

    இதில் ஒரு மாணவர் மதுரையில் உள்ள ஒரு பாலிடெக்னிக் கல்லூரியில் படித்தவர் என்பதும், அவர் பாதியில் படிப்பை நிறுத்தி விட்டு கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு லட்சம், லட்சமாக சம்பாதித்து வந்ததும் தெரியவந்தது.

    பிடிபட்ட 2 கல்லூரி மாணவர்களிடம் இருந்து 1 கிேலா 100 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். போலீசாரின் விசாரணை யில் கல்லூரி மாணவர்கள் மத்தியில் கஞ்சா விற்பனை அமோகமாக நடந்து வந்தது வெட்டவெளிச்சமாகி உள்ளது.

    காரைக்குடி பகுதியில் மட்டும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 15 பேரை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். கஞ்சா விற்பனையில் ஈடுபட்டட பலர் 22 வயதுக்குட்பட்ட வர்கள். அதில் பெரும்பா லானவர்கள் கல்லூரி மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    மேலும் தொடர்ந்து தனிப்படை போலீசார் கஞ்சா வியாபாரிகளை கண்காணித்து நடவடிக்ைக எடுத்து வருகின்றனர். இந்த நடவடிக்கைக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

    Next Story
    ×