search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "என்.எல்.சி. தொழிலாளி"

    • நெய்வேலியில் கழுத்தை அறுத்து என்.எல்.சி. தொழிலாளி இறந்து கடந்தார்.
    • வீட்டின் கதவு வழியாக ரத்தம் வந்ததை அறிந்து அக்கம் பக்கத்தினர் கதவை உடைத்து பார்த்தனர்.

    கடலூர்:

    நெய்வேலி புதுநகர்4-வது வட்டம் புண்ணாக்கு தெருவில் வசித்தவர் சண்முகம் . இவர் நெய்வேலி என்.எல்.சி. நிறுவனத்தில் காண்ட்ராக்ட் ஒப்பந்த தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். நேற்று இரவு வேலை முடித்து வீட்டுக்கு வந்ததும் தூங்கிவிட்டார்.இன்று காலை சுமார் எட்டு மணி அளவில் வீட்டின் கதவு வழியாக ரத்தம் வந்ததை அறிந்து அக்கம் பக்கத்தினர் கதவை உடைத்து பார்த்த நிலையில் கழுத்து அறுந்த நிலையில் ரத்த வெள்ளத்தில் சண்முகம் பிணமாக கிடந்தார். இது குறித்து நெய்வேலி டவுன்ஷிப் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். யாராவது சண்முகத்தை கொலை செய்தார்களா? தன்னைத்தானே தற்கொலை செய்து கொண்டாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • பண்ருட்டியில் என்.எல்.சி. தொழிலாளி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    • பிரேத பரிசோதனைக்காக பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    கடலூர்:

    பண்ருட்டி அருகே சொரத்தூரை சேர்ந்தவர் சுப்பிர மணியன் (51).இவர் என்எல்சி யில் தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். இவர் நேற்று முந்திரி தோப்பில் உள்ள முந்திரி மரத்தில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக அவரது மகன் ஞானசேகர் கொடுத்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற முத்தாண்டி குப்பம் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

    • பண்ருட்டி போலீசார் என்.எல்.சி. தொழிலாளியிடம் கந்துவட்டி கேட்டு மிரட்டியவரை கைது செய்தனர்.
    • நாளொன்றுக்கு 18 ஆயிரம் வீதம் 45 நாட்களில் தவணை முறையில் 7,50,000- கொடுத்துள்ளார் செல்வழகன்.

    கடலூர்:

    பண்ருட்டி போலீஸ் உட்கோட்டம் முத்தாண்டிக் குப்பம் காவல் எல்லைக் குட்பட்ட சின்ன ஒடப்பன் குப்பத்தை சேர்ந்தவர் செல்வழகன் (வயது 30) என்.எல்.சி. ஒப்பந்த தொழிலாளி. இவர், அதேபகுதியை சேர்ந்த பந்தல் அமைப்பாளர் தனசேகரன் (33). என்பவரி டம் தனது குடும்ப செலவுக் காக ரூ 3,00,000 கடனாக பெற்றிருந்தார். இந்ததொகையை பெறுவதற்காக பூர்த்தி செய்யப் படாத 10ஆவணங்களை கொடுத்திருந்ததார். இந்தகடன் தொகைக்கு நாளொன்றுக்கு 18 ஆயிரம் வீதம் 45 நாட்களில் தவனை முறையில் 7,50,000 கொடுத்துள்ளார் செல்வழகன். தனசேகரன் தன்னிடம் மேலும் பணம் கேட்டு மிரட்டு–வதாக முத்தாண்டிக் குப்பம் போலீசில் செல்வழ கன்புகார் கொடுத்தார். கடலூர் எஸ்.பி. பண்ருட்டி டி.எஸ்.பி. ஆகியோர் உத்தரவின் பேரில் பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரன் முத்தாண்டி குப்பம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜாராம் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார். விசாரணையில் அதே ஊரைச் சேர்ந்த பெட்ரோல் பங்க் ஊழியர் ராமலிங்கம் என்பவரிடமும் தனசேகரன் கந்து வட்டி கேட்டு மிரட்டி யுள்ளது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து தனசேகரனை கைது செய்து அவரிடமிருந்து செல்வழகன் கொடுத்த ஆவணங்களை கைப்பற்றினர். பின்னர் தனசேகரனை பண்ருட்டி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    ×