search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பண்ருட்டியில் என்.எல்.சி. தொழிலாளி தூக்கு போட்டு தற்கொலை
    X

    பண்ருட்டியில் என்.எல்.சி. தொழிலாளி தூக்கு போட்டு தற்கொலை

    • பண்ருட்டியில் என்.எல்.சி. தொழிலாளி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    • பிரேத பரிசோதனைக்காக பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    கடலூர்:

    பண்ருட்டி அருகே சொரத்தூரை சேர்ந்தவர் சுப்பிர மணியன் (51).இவர் என்எல்சி யில் தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். இவர் நேற்று முந்திரி தோப்பில் உள்ள முந்திரி மரத்தில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக அவரது மகன் ஞானசேகர் கொடுத்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற முத்தாண்டி குப்பம் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

    Next Story
    ×