search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "POCSO"

    • ஒரு சிறுமி குறுத்து அவதூறாக வீடியோ தயாரித்து வாட்ஸப் , பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலை தளங்களில் வெளியிட்டுள்ளார்.
    • இதை தொடர்ந்து நவநீதகிருஷ்ணனை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    ஜெயங்கொண்டம்

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உத்திரகுடி கிராமம் காலனி தெருவை சேர்ந்த தர்மலிங்கம் மகன் நவநீத கிருஷ்ணன்(வயது 20). இவர் ஒரு சிறுமி குறுத்து அவதூறாக வீடியோ தயாரித்து வாட்ஸப் , பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலை தளங்களில் வெளியிட்டுள்ளார்.

    இதுபற்றி சிறுமியின் குடும்பத்தார் ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் சுமதி விசாரணை செய்ததில் நவநீத கிருஷ்ணன் சிறுமிக்கு பல்வேறு வகையில் இடையூறு செய்தது தெரியவந்தது.

    இதை தொடர்ந்து நவநீதகிருஷ்ணனை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    • ஏமாற்றி அழைத்துச் செல்லப்பட்ட சிறுமி, பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டார்.
    • சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் குற்றவாளிகளை கைது செய்தனர்.

    கேரள மாநிலம் ஆலுவா பகுதியில் பீகார் மாநிலத்தில் இருந்து புலம் பெயர்ந்து வந்த தொழிலாளி ஒருவர் குடும்பத்துடன் வசித்து வந்தார். அவரது 5 வயது பெண் குழந்தை கடந்த ஜூலை மாதம் 27-ந்தேதி காணாமால் போனார். இது தொடர்பாக அவர்கள் போலீசில் புகார் கொடுத்தனர்.

    புகாரின் பேரில் போலீசார் சிறுமியைத் தேடிவந்த நிலையில், அடுத்த நாள் (ஜூலை 28-ந்தேதி) ஆலுவாவில் உள்ள உள்ளூர் மார்கெட் அருகே சதுப்பு நிலப் பகுதியில் ஒரு சாக்குப்பையில் சடலமாக மீட்கப்பட்டார்.

    அவரது உடல் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது. அதன்படி சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கழுத்தை நெறித்து கொலை செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

    அங்கிருந்த சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த அசாஃபக் அலாம் (29) என்பவரைக் கைது செய்த கேரள போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையின் முடிவில் சிறுமியை வன்கொடுமை செய்து கொலை செய்ததை ஒப்புக்கொண்டார் அசாஃபக் அலாம்.

    இதனைத்தொடர்ந்து போக்சோ நீதிமன்றம் விசாரணை நடத்தி, கடந்த 4-ந்தேதி அசாஃபக் அலாம் குற்றவாளி என அறிவித்தது. தண்டனை வருகிற 14-ந்தேதி (இன்று) அறிவிக்கப்படும் எனத் தெரிவித்தது. அதன்படி இன்று மரண தண்டனை வழங்கி போக்சோ நீதிமன்றம் தண்டனை வழங்கியுள்ளது.

    இன்று குழந்தைகள் தினம். அதேபோல் போக்சா சட்டம் அறிமுகம் ஆகிய 11-வது ஆண்டாகும். இரண்டு முக்கியத்துவம் வாய்ந்த இன்றைய தினத்தில் சிறுமியை கொடுமை செய்து கொலை செய்த குற்றவாளிக்கு நீதிமன்றம் மரண தண்டனை வழங்கி தீர்ப்பு அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    • காட்வின் மைக்கேல் மாணவியை கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்து வந்தார்.
    • தலைமறைவாக உள்ள டிரைவரை போலீசார் தேடி வருகின்றனர்.

    கோவை:

    கோவை பன்னிமடை பகுதியைச் சேர்ந்தவர் 16 வயது சிறுமி. இவர் அந்த பகுதியில் உள்ள பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார்.

    கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு மாணவிக்கு பாலாஜி கார்டனை சேர்ந்த டிரைவர் காட்வின் மைக்கேல் (வயது 20) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. 2 பேரும் அடிக்கடி செல்போனில் பேசியும் நேரில் சந்தித்தும் காதலை வளர்த்து வந்தனர்.

    இந்த காதல் விவகாரம் இருவீட்டாரின் பெற்றோருக்கு தெரிய வரவே அவர்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டித்தனர். ஆனால் காட்வின் மைக்கேல் மாணவியின் பெற்றோர் வீட்டில் இல்லாத நேரத்தில் அங்கு சென்று மாணவியை கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்து வந்தார்.

    கடந்த 1-ந் தேதி மாணவியின் வீட்டிற்கு சென்ற அவர் மாணவியை கட்டாயப்படுத்தி ஊட்டிக்கு அழைத்து சென்றார். காட்வின் மைக்கேலும், மாணவியும் சேர்ந்து சென்றபோது மாணவியின் உறவினர் ஒருவர் பார்த்துவிட்டார். அவர் 2 பேரையும் கண்டித்து போலீஸ் நிலையத்தில் ஆஜர்படுத்தி விடுவதாக கூறி எச்சரித்தார்.

    இதனால் பயந்த மாணவி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். இதையடுத்து காட்வின் மைக்கேல் அங்கு இருந்து தப்பிச் சென்றார். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த மாணவியை உறவினர்கள் மீட்டு ஊட்டி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    அங்கு டாக்டர்கள் மாணவியை பரிசோதனை செய்த போது அவர் 4 மாத கர்ப்பமாக இருப்பது தெரிய வந்தது. இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த மாணவியின் பெற்றோர் இதுகுறித்து பெரிய நாயக்கன் பாளையம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

    புகாரின் பேரில் பிளஸ்-1 மாணவியை கட்டாயப்படுத்தி பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய டிரைவர் காட்வின் மைக்கேல் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். தற்போது தலைமறைவாக உள்ள அவரை போலீசார் தேடி வருகின்றனர்.

    • சேலம் மாவட்டம் மேட்டூர் அடுத்த ஜலகண்டாபுரம் பகுதியை சேர்ந்த ஒரு தம்பதியின் 12 வயது மகள் சம்பவத்தன்று வீட்டில் தனியாக இருந்துள்ளார்.
    • இந்த நிலையில் சிறுமிக்கு திடீரென வயிறு பெரிதானது. பெற்றோர் அவரிடம் கேட்டபோது சிறுமி 7 மாதம் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் இதுகுறித்து

    மேட்டூர்:

    சேலம் மாவட்டம் மேட்டூர் அடுத்த ஜலகண்டாபுரம் பகுதியை சேர்ந்த ஒரு தம்பதியின் 12 வயது மகள் சம்பவத்தன்று வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது அங்கு வந்த அதே பகுதியில் வசிக்கும் முருகேசன் என்ற முதியவர் சிறுமியை பலாத்காரம் செய்துள்ளார். மேலும் இதை வெளியே சொன்னால் உன் பெற்றோரை கொலை செய்து விடுவதாகவும் மிரட்டி உள்ளார். இதனால் பயந்துபோன சிறுமி இதுகுறித்து யாரிடமும் சொல்லாமல் இருந்துள்ளார்.

    இந்த நிலையில் சிறுமிக்கு திடீரென வயிறு பெரிதானது. பெற்றோர் அவரிடம் கேட்டபோது சிறுமி 7 மாதம் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் இதுகுறித்து சிறுமியிடம் விசாரித்தபோது, அருகில் வசிக்கும் முருகேசன் தன்னை மிரட்டி பலாத்காரம் செய்ததாகவும், இதை வெளியே சொன்னால் உன் அப்பா, அம்மாவை கொலை செய்து விடுவேன் என மிரட்டியதாகவும் தெரிவித்தார்.

    இதையடுத்து சிறுமியின் பெற்றோர் சம்பவம் குறித்து ஜலகண்டாபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் போக்சோ வழக்கு பதிவு செய்து முருகேசனை (52) கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    • மாணவிகள் பெற்றோரிடம் தெரிவித்து தீவட்டிப்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.
    • போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து ராஜ மாணிக்கத்தை கைது செய்தனர்.

    காடையாம்பட்டி:

    திருச்சி மாவட்டம் மணப்பாறை பொன்னம்பட்டி பகுதியை சேர்ந்தவர் ராஜமாணிக்கம் (50).

    இவர் தீவட்டிப்பட்டி அடுத்த நடுப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆங்கில ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். மேலும் காடையாம்பட்டி பகுதியில் வீடு வாடகைக்கு எடுத்து பள்ளி விடுமுறை நாட்கள் மற்றும் மாலை நேரங்களில் டியூஷன் நடத்தி வருகிறார்.

    இவரிடம் காடையாம்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த மாணவிகள் டியூஷன் பயின்று வருகின்றனர். இதில் 2 மாணவிகளை தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு ஆசிரியர் ராஜமாணிக்கம் கட்டாயப்படுத்தியதாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து அந்த மாணவிகள் பெற்றோரிடம் தெரிவித்து தீவட்டிப்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து ராஜ மாணிக்கத்தை கைது செய்தனர். 

    • படுகாயம் அடைந்த சிறுமியை மீட்டு மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
    • கைதான கோபால் மீது போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    பொன்னேரி:

    பழவேற்காடு அடுத்த அரங்கம் குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் கோபால் (38). இவர்அதே பகுதியில் உள்ள தனது நண்பர் ஒருவரின் 3 வயது சிறுமியை தனியாக அழைத்து சென்று பாலியல் ரீதியாக வன்கொடுமை செய்தார்.

    இதில் உடல்நிலை பாதிக்கப்பட்ட சிறுமி வலியால் அலறி துடித்தார். சத்தம் கேட்டு திரண்ட அப்பகுதி மக்கள் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கோபாலை சுற்றிவளைத்து பிடித்து கயிற்றால் கட்டினர். பின்னர் அவருக்கு தர்ம அடி கொடுத்தனர். இதுகுறித்து திருப்பாலைவனம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து கோபாலை மீட்டு கைது செய்தனர்.

    மேலும் படுகாயம் அடைந்த சிறுமியை மீட்டு மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிறுமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    கைதான கோபால் மீது போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • புதுக்கோட்டை அருகே மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தை போக்சோவில் கைது செய்யப்பட்டார்
    • கைது செய்யப்பட்ட தொழிலாளி மீது பட்டுக்கோட்டை அருகே நடந்த கொலை சம்பந்தமான வழக்கு நிலுவையில் உள்ளது

    புதுக்கோட்டை,

    புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த 34 வயது தொழிலாளிக்கு 14 வயதில் மகள் உள்ளார். இவர் அரசு பள்ளி ஒன்றில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார்.இந்தநிலையில் அந்த தொழிலாளி தனது மகளுக்கு தொடர்ந்து பாலியல் தொந்தரவு கொடுத்து வந்துள்ளார். மேலும் இதனை வேறு யாரிடமாவது கூறினால் கொலை செய்து விடுவேன் என மிரட்டல் விடுத்துள்ளார்.இதனால் வேதனை அடைந்த சிறுமி நடந்த சம்பவத்தை தனது தாயாரிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து சிறுமியின் தாயார் அளித்த புகாரின் பேரில் இலுப்பூர் மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் லதா போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அந்த தொழிலாளியை கைது செய்தார்.பின்னர் அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். கைது செய்யப்பட்ட தொழிலாளி மீது பட்டுக்கோட்டை அருகே நடந்த கொலை சம்பந்தமான வழக்கு நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

    • இது குறித்து மாணவியின் பெற்றோர் புதுப்பேட்டை போலீசாரிடம் புகார் கொடுத்தனர்.
    • பண்ருட்டி அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வள்ளி விசாரணை நடத்தினார்.

    கடலூர்:

    பண்ருட்டி அடுத்த குடுமியான்குப்பம் கிராமத்தை சேர்ந்த 15 வயது சிறுமி, வடலூரில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-1 படித்து வருகிறார். பக்கத்து ஊரில் வசிக்கும் விஜயராம் (வயது 21) என்ற வாலிபர், சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்றுவிட்டார். இது குறித்து மாணவியின் பெற்றோர் புதுப்பேட்டை போலீசாரிடம் புகார் கொடுத்தனர். இதனை பண்ருட்டி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு மாற்றி புதுப்பேட்டை போலீசார் பரிந்துரை செய்தனர்.

    அதன்படி பண்ருட்டி அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வள்ளி விசாரணை நடத்தினார். இதில் மாணவியை கடத்தி சென்ற விஜயராம் மீது போக்சோ வழக்கு பதிவு செய்து, அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    • யுவராஜ் கோழிப் பண்ணையில் ஓட்டுனராக வேலை பார்த்து வருகிறார்.
    • புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை செய்தனர்.

    பல்லடம்:

    பல்லடம் அருகே உள்ள கிராமப் பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமி ஒருவரை காதலிப்பதாக கூறி வாலிபர் ஒருவர் பாலியல் சீண்டல்கள் செய்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த சிறுமி இது குறித்து அவரது பெற்றோர்களிடம் கூறியுள்ளார். இதையடுத்து அவர்கள் பல்லடம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

    புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை செய்த போது சிறுமி க்கு பாலியல் தொல்லை கொடுத்தது பல்லடம் அருகே உள்ள புளியம்பட்டியை சேர்ந்த யுவராஜ் என்பது தெரிய வந்தது. இவர் அந்தப் பகுதியில் உள்ள கோழிப் பண்ணையில் ஓட்டுனராக வேலை பார்த்து வருகிறார். இதையடுத்து அவரை போக்சோ சட்டத்தில் கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • வீட்டிற்கு வந்த சிறுமி தனக்கு நடந்த கொடுமை குறித்து தனது பாட்டியிடம் கூறினார்.
    • போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து ஸ்ரீனுவை கைது செய்தனர்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், பிரகாசம் மாவட்டம், கடபராஜி பள்ளியை சேர்ந்தவர் ஸ்ரீனு (வயது 21). கூலி தொழிலாளியான இவர் மது போதைக்கு அடிமையானார்.

    அதே பகுதியை சேர்ந்த 11 வயது சிறுமி. தனது பாட்டி வீட்டில் தங்கி இருந்து அங்குள்ள பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வருகிறார்.

    நேற்று முன் தினம் இரவு சிறுமி வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டு இருந்தார்.

    அப்போது அங்கு வந்த ஸ்ரீனு சிறுமியிடம் நைசாக பேசி ஊருக்கு வெளியே உள்ள ஓடை பகுதிக்கு அழைத்துச் சென்றார்.

    மறைவான இடத்தில் வைத்து சிறுமியை வலுக்கட்டாயமாக பலாத்காரம் செய்தார். பின்னர் சிறுமியை அருகில் இருந்த குளத்தில் தள்ளிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.

    சிறிது நேர போராட்டத்திற்கு பிறகு சிறுமி உயிர்த் தப்பி குளத்தில் இருந்து வெளியே வந்தார். பின்னர் வீட்டிற்கு வந்த சிறுமி தனக்கு நடந்த கொடுமை குறித்து தனது பாட்டியிடம் கூறினார்.

    சிறுமியின் பாட்டி இதுகுறித்து போர்னாலா போலீசில் புகார் செய்தார். போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து ஸ்ரீனுவை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.

    • சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் மீது போக்சோ வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
    • சிறுமி 6 மாத கர்ப்பிணியாக இருப்பது தெரியவந்தது.

    விருதுநகர்

    மதுரை மாவட்டம் பேரையூர் அருகேயுள்ள மெய்யனூத்தம்பட்டி பகுதியை சேர்ந்தவர் பெரியசாமி(வயது75). இவரது 17 வயது பேத்தி திருப்பூரில் வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் அவர் 2 மாதம் கர்ப்பிணியாக இருப்பது தெரியவந்தது.

    பெரியசாமி அவரிடம் விசாரித்தபோது காரியா பட்டியில் நடந்த பங்குனி பொங்கல் திருவிழாவுக்காக உறவினர் வீட்டுக்கு சென்ற போது கீழஉப்பிலிக்குண்டு பகுதியை சேர்ந்த பால் பாண்டி என்பவர் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறியுள்ளார்.

    இதையடுத்து பால்பாண்டியிடம் சிறு மியை திருமணம் செய்து கொள்ளுமாறு உறவி னர்கள் கேட்டுள்ளனர். ஆனால் அவர் திருமணத்திற்கு மறுத்தார். இதைத்தொடர்ந்து அருப்புக்கோட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் பெரியசாமி புகார் செய்தார். போலீசார் பால்பாண்டி மீது போக்சோ வில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வரு கின்றனர்.

    மற்றொரு சம்பவம்

    விருதுநகரில் கிழக்கு பகுதியில் உள்ள குடி யிருப்பை சேர்ந்தவர் 17 வயது சிறுமி. அங்குள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார். சிறுமிக்கு உடல்நல பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து பெற்றோர்கள் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு சிறுமி 6 மாத கர்ப்பிணியாக இருப்பது தெரியவந்தது.

    இதுகுறித்து பெற்றோர் கள் சிறுமியிடம் விசாரித்த போது, அதே பகுதியை சேர்ந்த சூர்யா என்பவருடன் ஒரு வருடமாக பழக்கம் இருப்பதாகவும், அவர் அங்குள்ள தியேட்டர் பகுதிக்கு அழைத்து சென்றும் பெற்றோர் வெளியே செல்கிறபோது வீட்டிற்கு வந்தும் பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறியுள்ளார்.

    இதையடுத்து சிறுமி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்து விருதுநகர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சிறுமிக்கு பாலியல் தொல்லை குறித்து போலீசார் விசாரணை நடத்தினர்
    • பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் கைது செய்யப்பட்டார்

    கரூர்,

    கரூர் ரத்தினம் சாலை பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் மகன் சூர்யா காந்தி, (வயது 32) இவர் அதே பகு தியை சேர்ந்த, 13 வயது பள்ளி எட்டாம் வகுப்பு பள்ளி சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து புகார்படி, கரூர் மகளிர் போலீசார், சூர்யா காந்தியை போக்சோ சட்டத்தில் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×