search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Parliament"

    • வாக்குப்பதிவு அன்று வாக்களித்துவிட்டு வரும் நபர்களுக்கு தனது கடையில் இலவசமாக முடி வெட்டுவேன்.
    • சலூன் கடைக்காரரின் இந்த வினோத அறிவிப்பு ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலத்தில் வருகிற 13-ந் தேதி பாராளுமன்றத் தேர்தலுடன் சட்டமன்றத்திற்கும் தேர்தல் நடக்கிறது.

    இந்த தேர்தலில் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் பல்வேறு நிகழ்ச்சிகள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது.

    இந்த நிலையில் விசாகப்பட்டினத்தை சேர்ந்த சலூன் கடை உரிமையாளர் ஒருவர் ஓட்டு போடுபவர்களுக்கு இலவசமாக முடி வெட்டப்படும் என அறிவித்துள்ளார்.

    விசாகப்பட்டினம் நகரில் உள்ள ஆர்.கே. சலூன் உரிமையாளர் ராதாகிருஷ்ணன். வாக்குப்பதிவு அன்று வாக்களித்துவிட்டு வரும் நபர்களுக்கு தனது கடையில் இலவசமாக முடி வெட்டுவேன்.

    பொதுமக்கள் ஓட்டு போட்டதும் எனது கடைக்கு வந்து இலவசமாக முடி வெட்டிக் கொள்ளலாம். மேலும் விசாகப்பட்டினத்தில் முத்தியாலம்மா கோவில் அருகிலுயும் எனக்கு மற்றொரு கடை உள்ளது. அங்கு சென்று பொது மக்கள் இலவசமாக முடி வெட்டிக் கொள்ளலாம்.

    இந்த சலுகையை பெற வாக்கு அளித்ததற்கான ஆதாரத்தை காண்பிக்க வேண்டும். பொதுமக்கள் வாக்களிப்பதை ஊக்குவிக்கும் நோக்கத்தில் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

    சலூன் கடைக்காரரின் இந்த வினோத அறிவிப்பு ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • கேரள மாநில மக்களவை தேர்தலில் மும்முனை போட்டி நிலவியது.
    • கட்சி தலைவர்களின் இந்த கணக்கீடு கேரள மாநில பாரதிய ஜனதா கட்சியினரின் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தில் உள்ள 20 மக்களவை தொகுதிகளுக்கு கடந்த மாதம் 26-ந்தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடந்தது. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி, கம்யூனிஸ்டு கட்சிகள் அடங்கிய இடது சாரி ஜனநாயக முன்னணி, பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டனர்.

    இதனால் கேரள மாநில மக்களவை தேர்தலில் மும்முனை போட்டி நிலவியது. அதிலும் காங்கிரஸ், பாரதிய ஜனதா கட்சிகள் நேரடியாக களம் கண்ட தொகுதிகளில் அந்த கட்சிகளுக்கிடையே கடும் போட்டி நிலவியது.

    ஏற்கனவே 19 தொகுதிகள் தங்களது கூட்டணியின் வசம் உள்ள செல்வாக்குடன் மக்களவை தேர்தலில் காங்கிரஸ் களம் கண்டது. பாரதிய ஜனதாவோ முதன்முறையாக வெற்றி பெற்று கேரளாவில் கால்பதித்து விட வேண்டும் என்ற முனைப்பில் களமிறங்கியது.

    மாநிலத்தில் ஆளும் கட்சியாக இருக்கும் கம்யூனிஸ்டு கட்சி, தேசிய அளவில் கூட்டணியாக இருக்கும் காங்கிரஸ் கட்சியை எதிர்த்து களம் கண்டது. பெரும்பான்மையான தொகுதிகளில் வெற்றிபெற வேண்டும் என்ற முனைப்பில் இந்த 3 கட்சிகளும் போட்டியிட்டன.

    ஏற்கனவே 19 தொகுதிகளை தன் வசம் வைத்துள்ள காங்கிரஸ் மற்றும் மாநிலத்தின் ஆளும் கட்சி கம்யூனிஸ்டு ஆகிய கட்சிகளை எதிர்த்து களம் கண்ட பாரதிய ஜனதா, அந்த கட்சிகளின் வேட்பாளர்களை எதிர்த்து போட்டியிட்டு வெற்றிபெறும் வகையில் பிரபலங்களை வேட்பாளர்களாக களமிறக்கியது.

    இதன் காரணமாக கேரள மாநில மக்களவை தேர்தலில் காங்கிரஸ், பாரதிய ஜனதா மற்றும் கம்யூனிஸ்டு கட்சிகளுக்கிடையே கடும் போட்டி நிலவியது. இந்நிலையில் கேரளாவில் எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறுவோம்? கடந்த தேர்தலை விட தற்போது எத்தனை வாக்குகள் அதிகமாக கிடைக்கும்? வாக்கு சதவீதம் எவ்வளவு உயரும்? உள்ளிட்ட விவரங்களை பாரதிய ஜனதா கணக்கிட்டு உள்ளது.

    அந்த விவரங்கள் தேர்தல ஆய்வு கூட்டத்தில் கணக்கிடப்பட்டு இருக்கிறது. மேலும் தங்களின் கணக்கீடு விவரங்களை பாரதிய ஜனதா கட்சியின் தலைவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்தனர். அவர்கள் கூறியிருப்பதாவது:-

    கேரளா மாநிலத்தில் இதற்கு முன்பு நடந்த மக்களவை தேர்தலில் பாரதிய ஜனதாவுக்கு 31.80 வாக்குகள் கிடைத்தன. இந்த முறை 41.44 லட்சம் வாக்குகள் கிடைக்கும். கேரளாவில் பாரதிய ஜனதாவின் வாக்கு சதவீதம் 22 சதவீதமாக அதிகரிக்கும்

    திருவனந்தபுரம் தொகுதியில் மத்திய மந்திரி ராஜீவ் சந்திரசேகர், திருச்சூர் தொகுதியில் நடிகர் சுரேஷ் கோபி ஆகியோர் 4 லட்சம் வாக்குகள் பெற்று வெற்றி பெறுவார்கள். மத்திய மந்திரி முரளீதரன் போட்டியிட்ட அட்டிங்கல் தொகுதியிலும், ஏ.கே அந்தோணியின் மகன் அனில் ஆன்டனி போட்டியிட்ட பத்தினம்திட்டா தொகுதியிலும் பாரதிய ஜனதா வெற்றிபெறும்.

    அதேபோல் ஆலப்புழா தொகுதியில் போட்டியிடும் ஷோபா சுரேந்திரனும் வெற்றி பெறுவார். கேரளாவில் மொத்தம் 5 தொகுதிகளில் பாரதிய ஜனதா வெற்றி பெறும். திருவனந்தபுரத்தில் கடந்த முறை 3,16,000 வாக்குகள் பெற்றிருந்தோம். இந்த முறை 4 லட்சம் வாக்குகளை பெறுவோம். நெய்யாற்றின்கரை தொகுதியில் பாரதிய ஜனதா இரண்டாவது இடத்தை பிடிக்கும்.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    கட்சி தலைவர்களின் இந்த கணக்கீடு கேரள மாநில பாரதிய ஜனதா கட்சியினரின் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

    • கட்சி பிரமுகர்கள், இந்த ஸ்ட்ராங் ரூமை தினமும் பார்வையிட்டு வருகின்றனர்.
    • விழுப்புரத்தில் இடி மின்னலுடன் பெய்த திடீர் மழையால், கேமராவில் பழுது ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

    விழுப்புரம்:

    விழுப்புரம் பாராளுமன்ற தனி தொகுதிக்கு உட்பட்ட வாக்குச்சாவடிகளில் கடந்த 19-ந் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த வாக்குப்பதிவு எந்திரங்கள் விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலை கல்லூரில் வைக்கப்பட்டுள்ளது. தொகுதி வாரியாக தனித்தனி அறைகளில் வைக்கப்பட்டுள்ள வாக்குப்பதிவு எந்திரங்களுக்கு 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    இது தவிர அந்த வளாகம் முழுவதும் சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தப்பட்டு, 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டு வருகிறது. இம்மையத்திற்கு விழுப்புரம் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும், கலெக்டருமான பழனி தினமும் சென்று கண்காணித்து, கையொப்பமிட்டு வருகிறார். இது தவிர அ.தி.மு.க., பா.ம.க., விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட முக்கிய கட்சி பிரமுகர்கள், இந்த ஸ்ட்ராங் ரூமை தினமும் பார்வையிட்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் அறிஞர் அண்ணா கலைக் கல்லூரியில் இயங்கி வந்த சி.சி.டி.வி. கேமராக்கள் இன்று காலை 7.30 மணிக்கு பழுதானது. இதனால் அங்கு அமைக்கப்பட்ட டி.வி.க்களில் சி.சி.டி.வி. கேமரா பதிவு ஒளிபரப்பாகவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த ஊழியர்கள், அதனை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 45 நிமிடங்கள் போராடி, சி.சி.டி.வி. கேமராக்களை சரி செய்தனர்.

    விழுப்புரத்தில் இடி மின்னலுடன் பெய்த திடீர் மழையால், சி.சி.டி.வி. கேமராவில் பழுது ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. இத்தகவல் அறிந்த அரசியல் கட்சி பிரமுகர்கள் ஸ்ட்ராங் ரூம் வளாகத்திற்குள் குவிந்தனர். இதனால் இப்பகுதியில் திடீர் பரபரப்பு நிலவியது.

    கடந்த 3-ந் தேதியன்று இதே இடத்தில் சி.சி.டி.வி. கேமராவில் பழுது ஏற்பட்டு சுமார் ஒரு மணிநேரம் கண்காணிப்பு பணியில் தொய்வு ஏற்பட்டது. இதற்கு மின் கோளாறு மட்டுமே காரணம் என்றும், வாக்குப் பதிவு எந்திரங்கள் அனைத்தும் பாதுகாப்பாக உள்ளதெனவும், கலெக்டர் தெரிவித்தார். மேலும், இது போன்ற பிரச்சனைகள் இனி ஏற்படாதெனும், அதற்கான அனைத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

    ஆனால், இன்று காலையில் ஸ்ட்ராங் ரூமில் உள்ள சி.சி.டி.வி. கேமராக்கள் திடீரென இயங்காததால் அரசியல் கட்சியினரிடையே பல்வேறு கேள்வி களையும், பதட்டத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

    • தேர்தலில் இந்தியா கூட்டணி வெற்றி பெற இதுவே பெரிய ஆதாரமாக அமையும் என நம்புகிறேன்.
    • வடமாநிலங்களில் பா.ஜ.க.வுக்கு கடும் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக தேர்தல் கள ஆய்வு புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலத்தில் பாராளுமன்ற தேர்தலுடன் சட்டமன்றத்திற்கும் தேர்தல் நடக்கிறது.

    இந்த தேர்தலில் 9 சட்டமன்ற தொகுதிகளிலும் ஒரு பாராளுமன்ற தொகுதியிலும் விடுதலை சிறுத்தைகள் கட்சி போட்டியிடுகிறது.

    இந்த கட்சியின் வேட்பாளர்கள் பிரசாரம் செய்து வருகின்றனர். அவர்களுக்கு ஆதரவாக கட்சியின் தலைவர் திருமாவளவன் தீவிர பிரசாரத்தில் இறங்கி உள்ளார்.

    சித்தூர் மாவட்டத்தில் பிரசாரம் செய்த திருமாவளவன் கூறியதாவது:-

    ஆந்திர மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைக்க மாநிலத் தலைவர் சர்மிளாவை சந்தித்தோம் ஆனால் கூட்டணி அமையவில்லை.

    விடுதலை சிறுத்தை கட்சி வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதிகளை தவிர்த்து மற்ற தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களுக்கு எங்களது ஆதரவை தெரிவித்துள்ளோம்.

    தமிழ்நாட்டில் மட்டும்தான் இந்தியா கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் உள்ளது.

    ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, கேரளா மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களுக்கு மட்டும் ஆதரவு தெரிவித்து வருகிறோம்.

    வருகிற 9-ந் தேதி நெல்லூரில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ராஜுவை ஆதரித்து வாக்கு சேகரிக்கிறேன். 11-ந் தேதி மும்பை சென்று சிவசேனா கட்சி வேட்பாளர் அணில் தயா சாயை ஆதரித்து பிரசாரம் செய்ய இருக்கிறேன்.

    மோடியை 3-வது முறையாக பிரதமர் வேட்பாளராக அறிவித்துள்ளதால் இந்திய அளவில் பா.ஜ.க. மீது அதிருப்தி மேலோங்கி உள்ளது.

    இந்த தேர்தலில் இந்தியா கூட்டணி வெற்றி பெற இதுவே பெரிய ஆதாரமாக அமையும் என நம்புகிறேன்.வடமாநிலங்களில் பா.ஜ.க.வுக்கு கடும் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக தேர்தல் கள ஆய்வு புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பா.ஜ.க.வும் ஜனநாயக ஜனதா கட்சியும் இணைந்து ஆட்சி அமைத்தன.
    • 3 எம்.எல்.ஏ.க்கள் அரசுக்கு அளித்த ஆதரவை வாபஸ் பெற்ற நிலையில் பா.ஜ.க. பெரும்பான்மையை இழந்ததாக தகவல்.

    சண்டிகர்:

    அரியானாவில் ரந்திர் கோலன், தரம்பால் கோந்தர், சோம்பிர் சிங் சவான் ஆகிய 3 எம்.எல்.ஏ.க்கள் பா.ஜ.க.வுக்கு வழங்கி வந்த ஆதரவை நேற்று வாபஸ் பெற்று, காங்கிரசுக்கு தங்கள் ஆதரவை தெரிவித்துள்ளனர்.

    முன்னாள் முதல்வரும் காங்கிரஸ் தலைவருமான பூபேந்திர சிங் ஹூடா முன்னிலையில் செய்தியாளர்களை சந்தித்த அவர்கள் இதை தெரிவித்தனர்.

    2019 சட்டப்பேரவை தேர்தலில் பா.ஜ.க. 40 இடங்களிலும், மாநிலக் கட்சியான ஜனநாயக ஜனதா கட்சி 10 தொகுதிகளிலும், காங்கிரஸ் 31 தொகுதிகளிலும் வெற்றி பெற்றிருந்தது. 90 தொகுதிகள் உள்ள அரியானாவில், ஆட்சி அமைக்க 46 இடங்கள் தேவை என்ற நிலையில் பா.ஜ.க.வும் ஜனநாயக ஜனதா கட்சியும் இணைந்து ஆட்சி அமைத்தன.

    மனோகர்லால் கட்டார் முதல்வராகவும், துஷ்யந் சவுதாலா துணைமுதல்வராகவும் பதவியேற்றனர் கடந்த மார்ச் மாதம் பா.ஜ.க. கூட்டணியில் இருந்து ஜனநாயக ஜனதா கட்சி விலகுவதாக துணை முதல்வர் துஷ்யந்த் சவுதாலா அறிவித்தார். இதையடுத்து மனோகர்லால் கட்டார் மாற்றப்பட்டு, நயாப் சிங் சைனி முதல்வராக பதவியேற்றார்.

    இந்தச்சூழலில் தற்போது 3 எம்.எல்.ஏ.க்கள் அரசுக்கு அளித்த ஆதரவை வாபஸ் பெற்ற நிலையில் பா.ஜ.க. பெரும்பான்மையை இழந்ததாக தகவல் வெளியானதால் சூழப்பம் ஏற்பட்டது. ஆனால் தங்களுக்கு முழு ஆதரவு இருப்பதாக பா.ஜ.க. தெரிவித்துள்ளது.

    • பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்தில் மாயாவதியை விடவும் ஆகாஷ் ஆனந்தின் பங்கே அதிகம்.
    • ஆகாஷ் ஆனந்த் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டார் என்பதை மாயாவதி தெரிவிக்கவில்லை.

    லக்னோ:

    பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி கடந்த ஆண்டு இறுதியில் தனது மருமகன் ஆகாஷ் ஆனந்தை தனது அரசியல் வாரிசாகவும், கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளராகவும் அறிவித்து இருந்தார் .

    அதன்படி கடந்த ஒரு வருடமாக தீவிரமாக செயல்பட்டு வந்தார் ஆகாஷ் ஆனந்த். பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்தில் மாயாவதியை விடவும் ஆகாஷ் ஆனந்தின் பங்கே அதிகம்.

    இந்த நிலையில் ஆகாஷ் ஆனந்தை தனது அரசியல் வாரிசாக அறிவித்ததை திரும்ப பெற்றுக் கொள்வதாக மாயாவதி அறிவித்து உள்ளார். அவர் 'அரசியல் ரீதியாக முதிர்ச்சி அடையும் வரை' கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார் என்றும் தெரிவித்துள்ளார்.

    என்ன காரணத்துக்காக ஆகாஷ் ஆனந்த் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டார் என்பதை மாயாவதி தெரிவிக்கவில்லை.

    கடந்த மாத இறுதியில், தேர்தல் கூட்டத்தில் ஆட்சேபகரமான வார்த்தைகளைப் பயன்படுத்தியதாகக் கூறி, நடத்தை விதிகளை மீறியதாக ஆகாஷ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. சீதாபூர் பேரணியில் பேசிய ஆகாஷ் ஆனந்த், "இந்த அரசாங்கம் ஒரு புல்டோசர் அரசு, துரோகிகளின் அரசு. ஆப்கானிஸ்தானில் தலிபான் போன்று பா.ஜ.க. அரசாங்கத்தை நடத்துகிறது. பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பாதுகாப்பு வழங்க பா.ஜ.க. அரசு தவறிவிட்டது. தேர்தல் பத்திரங்கள் மூலம் ரூ.16,000 கோடி எடுத்த திருடர்களின் கட்சி பா.ஜ.க." என்று கடுமையாக விமர்சித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • ராகுல் காந்தி பிரதமராக பாகிஸ்தான் விரும்புகிறது.
    • காங்கிரசுக்கும், பாகிஸ்தானுக்கும் தொடர்பு உள்ளது என்பது இப்போது அம்பலமாகிவிட்டது.

    புதுடெல்லி:

    அமேதி தொகுதியில் பா.ஜ.க.வேட்பாளராக போட்டியிடும் மத்திய மந்திரி ஸ்மிருதி இரானி நேற்று நடைபெற்ற பேரணியின்போது பேசியதாவது:-

    இதுவரை நான் காங்கிரஸ் வேட்பாளர்களை எதிர்த்து போட்டியிட்டுள்ளேன். ஆனால் இப்போது பாகிஸ்தானை சேர்ந்த ஒருவர் நான் தோற்கடிக்கப்பட வேண்டும் என்று கூறுகிறார். உங்களால் பாகிஸ்தானையே கவனிக்க முடியவில்லை.

    அமேதியை பற்றி ஏன் கவலைப்படுகிறீர்கள். பாகிஸ்தானுக்கும் ராகுல் காந்திக்கும் இடையே என்ன உறவு? இந்தியாவில் தேர்தல் நடக்கும்போது பாகிஸ்தான் மீது பாசம் காட்டுவது ஏன்? ராகுல்காந்தி பிரதமராக பாகிஸ்தான் விரும்புகிறது.

    காங்கிரசுக்கும், பாகிஸ்தானுக்கும் தொடர்பு உள்ளது என்பது இப்போது அம்பலமாகிவிட்டது. எனது வார்த்தைகள் பாகிஸ்தான் தலைவர்களை சென்றடைகிறது என்றால், எல்லையில் பயங்கரவாதிகளை கொல்ல பயன்படும் ஏகே 203 ரக துப்பாக்கிகள் தயாரிக்கும் தொழிற்சாலையை பிரதமர் மோடி நிறுவிய அமேதி இது என்பதை நான் அவர்களுக்கு கூற விரும்புகிறேன்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • பாராளுமன்ற தேர்தலில் தெலுங்கானா மக்கள் பா.ஜ.க.வுக்கு வாக்களிப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.
    • தெலுங்கானா காங்கிரஸ் முதல் மந்திரி ரேவந்த் ரெட்டி ஆரம்பத்தில் பிரதமர் மோடியை புகழ்ந்தார்.

    திருப்பதி:

    தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை தெலுங்கானா மாநிலத்தில் தீவிர பிரசாரம் செய்து வருகிறார்.

    அவர் தெலுங்கானா பா.ஜ.க முன்னாள் தலைவர் பண்டி சஞ்சயை ஆதரித்து கரீம் நகரில் பிரசாரம் செய்தார்.

    பண்டி சஞ்சய் மற்றும் தெலுங்கானா மாநில தலைவர்களின் பாத யாத்திரைகள் இந்த மாநிலத்தில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தின. இதனை பார்த்து தான் நான் தமிழகத்தில் நடை பயணம் மேற்கொண்டேன். மக்களுக்காக நடப்பது எளிதல்ல.

    கடந்த ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி பொய்யான உத்தரவாதங்களை அழித்து தெலுங்கானா மாநிலத்தில் வெற்றி பெற்றது. காங்கிரஸ் கட்சியின் வஞ்சகத்தை மக்கள் புரிந்து கொண்டுள்ளனர்.

    இதனால் பாராளுமன்ற தேர்தலில் தெலுங்கானா மக்கள் பா.ஜ.க.வுக்கு வாக்களிப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.


    இன்னும் 5 நாட்கள் தான் தேர்தல் பிரசாரம் நடைபெற உள்ளது. பா.ஜ.க. தொண்டர்கள் ஒவ்வொரு கிராமத்திற்கும் சென்று 100 வாக்குகளை பெறுங்கள். தெலுங்கானா காங்கிரஸ் முதல் மந்திரி ரேவந்த் ரெட்டி ஆரம்பத்தில் பிரதமர் மோடியை புகழ்ந்தார்.

    சோனியா காந்தியின் அழைப்பிற்கு பிறகு அவர் பிரதமருக்கு எதிராக செயல்பட்டு வருகிறார். அமித்ஷா குறித்த போலி வீடியோக்களை உருவாக்குவதில் காங்கிரஸ் தலைவர்கள் ஈடுபட்டுள்ளனர்.

    ஆனால் பாஜக தலைவர்கள் சட்ட விரோத முஸ்லிம் இட ஒதுக்கீடுகளுக்கு எதிராக தொடர்ந்து போராடி வருகின்றனர். இதனை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    மேலும் முதல் மந்திரி ரேவந்த் ரெட்டியின் விமர்சனங்களுக்கு எதிராகவும் அண்ணாமலை பதிலடி கொடுத்து வருகிறார். இதனால் அவருடைய பிரசாரம் தெலுங்கானாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

    • ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் பிரமுகர் ஒருவர் பாட்டிலை எடுத்து சாய் தரம் தேஜை நோக்கி வீசினார்.
    • கட்சித் தொண்டர்கள் ஸ்ரீதரை மீட்டு பிதாபுரத்தில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

    திருப்பதி:

    ஆந்திராவில் உள்ள பித்தாபுரம் சட்டமன்ற தொகுதியில் நடிகரும் ஜனசேனா கட்சி தலைவருமான பவன் கல்யாண் போட்டியிடுக்கிறார்.

    அவரை ஆதரித்து அவரது சகோதரி மகன் நடிகர் சாய் தரம் தேஜ் நேற்று இரவு காக்கிநாடா மாவட்டம் கஜ்ஜாலா மைதானத்தில் வாக்கு சேகரித்துக் கொண்டிருந்தார்.

    அப்போது ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் பிரமுகர் ஒருவர் பாட்டிலை எடுத்து சாய் தரம் தேஜை நோக்கி வீசினார். அதிர்ஷ்டவசமாக பாட்டில் சாய் தரம் தேஜ் மீது விழாமல் அருகில் இருந்த ஸ்ரீதர் என்பவர் தலை மீது விழுந்தது.

    இதில் அவரது மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது. கட்சித் தொண்டர்கள் ஸ்ரீதரை மீட்டு பிதாபுரத்தில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • வி.சி.க. வேட்பாளர் ரவிக்குமார் தேர்தல் அலுவலரிடத்தில் புகார் மனு அளித்துள்ளார்.
    • நெல்லூர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் செய்ய உள்ளேன்.

    திருச்சி:

    திருச்சி விமான நிலையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    சிதம்பரம் பாராளுமன்ற தொகுதியில் நடைபெற்ற தேர்தலுக்கான மின்னணு வாக்கு எந்திரங்கள் பெட்டி அரியலூரில் வைக்கப்பட்டுள்ளது. அதை பார்வையிடுவதற்காக இன்று செல்கிறேன்.

    விழுப்புரம் பாராளுமன்ற தொகுதிக்கான மின்னணு வாக்கு எந்திரங்களை வைக்கப்பட்ட இடத்தில் சி.சி.டி.வி. கேமராக்கள் அரை மணி நேரம் செயலிழந்து உள்ளது. இதுபற்றி வி.சி.க. வேட்பாளர் ரவிக்குமார் தேர்தல் அலுவலரிடத்தில் புகார் மனு அளித்துள்ளார்.

    இதே போல நீலகிரி, ஈரோடு பகுதிகளில் சி.சி.டி.வி. கேமரா செயல் இழந்துள்ளது சந்தேகத்திற்கு இடமான சில குளறுபடிகள் நடந்துள்ளன. அரியலூரில் வைக்கப்பட்டுள்ள சிதம்பரம் தொகுதி வாக்குப்பதிவு எந்திரங்களை விடுதலை சிறுத்தை கட்சியினர் 24 மணி நேரமும் கண்காணித்து வருகின்றனர்.

    அந்தந்த தொகுதிக்கான தேர்தல் அலுவலகம் சி.சி.டி.வி. எந்திரங்களை கண்காணிக்க வேண்டும். சந்தேகத்திற்கு இடமில்லாத வகையில் அவைகளை பாதுகாக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.

    பிரதமர் மோடி சமீபகாலமாக பேசி வருகிற கருத்துக்கள் காங்கிரஸ் மற்றும் இந்தியா கூட்டணி அதிக இடங்களீல் வெற்றி பெற்று விடும் என்ற அச்சத்தில் இருப்பதை வெளிப்படுத்துவது போல் அமைந்துள்ளது.

    அவருடைய நிலையை மறந்து பொறுப்பை மறந்து மிகவும் கீழிறங்கி போய் அவருடைய விமர்சனங்களை முன் வைக்கிறார். குறிப்பாக தாலியை பறித்து இஸ்லாமியருக்கு கொடுத்து விடுவார் என்ற அளவுக்கு அவர் பேசுவது அவரது பொறுப்புக்கு அழகல்ல. அது அச்சத்தை வெளிப்படுத்துவதாக உள்ளது.

    வருகிற 9-ந்தேதி ஆந்திராவில் உள்ள நெல்லூர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் செய்ய உள்ளேன். எங்களது வேட்பாளர்கள் ஆந்திராவில் போட்டியிடுகின்றனர். நாங்கள் போட்டியிடாத மற்ற தொகுதிகளில் நான் பிரசாரம் மேற்கொள்கிறேன்.

    இதே போல் மகாராஷ்டிராவில் தாராவில் போட்டியிடுகிற காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்களுக்கு பிரசாரம் மேற்கொள்ள உள்ளேன். மகாராஷ்டிராவில் லத்தூர் தொகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வேட்பாளர் போட்டியிடுகிறார்.

    தெலுங்கானாவில் விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர்கள் 7 தொகுதிகளில் போட்டியிடுகின்றனர். அங்கு பிரசாரம் மேற்கொள்ள இருக்கிறேன்.

    இதுவரையில் அரசியல் வரலாற்றிலேயே டெல்லி முதல்-மந்திரி கெஜ்ரிவாலை நேரடியாக அமலாக்கத்துறை கைது செய்திருப்பது மிகவும் கண்டிக்கத்தக்க ஒன்றாகும்.

    அதேபோல ஹேமன்சோரளை பொறுப்புள்ள பதவியில் இருக்கிறார். அவரையும் சிறை பிடித்துள்ளனர். இது தவறான ஒரு தவறான முன் மாதிரி என்று அரசியல் வல்லுநர்கள் குறிப்பிடுகின்றனர்.

    நாடு எங்கேயோ போய்க் கொண்டிருக்கிறது.

    வழக்கு செய்த பிறகு அதன் பிறகு கைது செய்ய வேண்டிய துறையினரால் தான் கடந்த காலங்களில் கைது செய்திருக்கிறார்கள். ஆனால் இந்த முறை அமலாக்கதுறையினர் கெஜ்ரிவாலை கைது செய்திருப்பது அதிகாரப் போக்கை வெளிப்படுத்துகிறது.

    இதனால் இந்தியா கூட்டணிக்கு எந்த பின்னடைவும் ஏற்படாது. தேசிய ஜனநாயக கூட்டணிக்கு இதனால் பின்னடைவு ஏற்படும். டெல்லியில் எல்லா தொகுதிகளும் காங்கிரஸ்-ஆம்ஆத்மி கூட்டணி கைப்பற்றும் என்று தெரிவித்தார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • 60 ஆண்டுகளில் பல நாடுகள் முற்றிலும் மாறி விட்டன.
    • காங்கிரஸ் தலைவர்கள் வறுமை ஒழிப்பு பற்றி மட்டுமே பேசினார்கள்.

    மும்பை:

    பிரதமர் மோடி இன்று மராட்டிய மாநிலம் மாதாவில் நடந்த பொதுக் கூட்டத்தில் பேசியதாவது:-

    வளர்ந்த இந்தியாவுக்காக உங்கள் ஆசீர்வாதத்தைப் பெறவே வந்துள்ளேன்.உங்களின் அன்பு எனது பலமாக மாறியுள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக எனது வாழ்க்கையை உங்களுக்கு சேவை செய்வதற்காக அர்ப்பணித்துள்ளேன்.

    மோடியின் 10 ஆண்டு கால ஆட்சிக்கும் காங்கிரசின் 60 ஆண்டு காலத்துக்கும் உள்ள வித்தியாசத்தை மக்கள் இப்போது பார்க்கிறார்கள். 15 ஆண்டுகளுக்கு முன், மிகப் பெரிய தலைவர் ஒருவர் இங்கு தேர்தலில் போட்டியிட வந்தார்.

    அப்போது அவர், வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு தண்ணீர் தருவதாக உறுதிமொழி எடுத்துக் கொண்டார். ஆனால் அவர் வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. இப்போது அவரை தண்டிக்கும் நேரம் வந்துவிட்டது.காங்கிரசுக்கு 60 ஆண்டுகள் ஆட்சி செய்ய நாடு வாய்ப்பு அளித்தது.

    இந்த 60 ஆண்டுகளில் பல நாடுகள் முற்றிலும் மாறி விட்டன. ஆனால் காங்கிரசால் விவசாயிகளின் வயல்களுக்கு தண்ணீர் கொடுக்க முடியவில்லை.ஆறு தசாப்தங்களில் அவர்களால் சாதிக்க முடியாததை நாங்கள் ஒரு தசாப்தத்தில் சாதித்துள்ளோம்.

    காங்கிரஸ் தலைவர்கள் வறுமை ஒழிப்பு பற்றி மட்டுமே பேசினார்கள், ஆனால் கடந்த 10 ஆண்டுகளில் 25 கோடி மக்களை வறுமையில் இருந்து மீட்டு உள்ளேன். நாட்டில் வலுவான அரசாங்கம் இருக்கும்போது, எதிர்காலத்தின் தேவைகளை மனதில் வைத்து நிகழ்காலத்தை கவனித்துக்கொள்கிறது.

    இன்று ரெயில்வே, சாலைகள் மற்றும் விமானப் பாதைகளில் நாம் பெரும் முதலீடுகளைச் செய்கிறோம். எங்களது உள்கட்டமைப்பு திட்டங்களுக்கான ஒரு ஆண்டு பட்ஜெட், காங்கிரசின் 10 ஆண்டுகளுக்கான உள்கட்டமைப்பு பட்ஜெட்டுக்கு சமம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • நடிகர் சிரஞ்சீவியின் குடும்ப உறுப்பினர்களும் பவன் கல்யாணுக்காக தேர்தல் செய்ய உள்ளதாக கூறப்படுகிறது.
    • பா.ஜ.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து சிரஞ்சீவி பிரசாரம் செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

    ஆந்திராவில் ஜனசேனா கட்சி தலைவரும், நடிகருமான பவன் கல்யாண் தெலுங்கு தேசம், பா.ஜ.க கூட்டணியில் பிதாபுரம் தொகுதியில் போட்டியிடுகிறார்.

    பவன் கல்யாண் தனது தொகுதியில் 2 கட்டங்களாக தேர்தல் பிரசாரத்தை முடித்து மற்ற இடங்களில் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்காக பிரசாரம் செய்து வருகிறார்.

    ஒருங்கிணைந்த ஆந்திராவின் மெகா ஸ்டார் நடிகர் சிரஞ்சீவி அவரது தம்பி பவன் கல்யாணுக்காக பிதாபுரம் தொகுதியில் வருகிற 5-ந் தேதி முதல் பல்வேறு கட்சித் தலைவர்களுடன் சேர்ந்து தேர்தல் பிரசாரம் செய்கிறார்.

    நடிகர் சிரஞ்சீவியின் குடும்ப உறுப்பினர்களும் பவன் கல்யாணுக்காக தேர்தல் செய்ய உள்ளதாக கூறப்படுகிறது.

    இதேபோல பா.ஜ.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து சிரஞ்சீவி பிரசாரம் செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

    ×