search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "painting competition"

    • புதுவை விவேகானந்தா மேல்நிலைப் பள்ளியில் எக்ஸாம் வாரியர் என்ற தலைப்பில் ஓவியப்போட்டி நடைபெற்றது.
    • இதன் தொடக்கமாக விவேகானந்தா மேல்நிலைப் பள்ளியில் எக்ஸாம் வாரியர் என்ற தலைப்பில் மாணவர்களுக்கான ஓவியப் போட்டி நடந்தது.

    புதுச்சேரி:

    புதுவை விவேகானந்தா மேல்நிலைப் பள்ளியில் எக்ஸாம் வாரியர் என்ற தலைப்பில் ஓவியப்போட்டி நடைபெற்றது.

    பொதுத்தேர்வின் போது மாணவர்களுக்கு ஏற்படும் மன அழுத்தம் நீங்கவும், மாணவர்கள் நல்ல உடல் நிலை மற்றும் மனநிலையுடன் தேர்வு எழுதி சான்றோனாக உருவாக பிரதமர் மோடி பரிக் ஷா பி சர்ச்சா என்ற திட்டத்தை நாடு முழுவதும் அறிமுகப் படுத்தியுள்ளார்.

    இதன் தொடக்கமாக விவேகானந்தா மேல்நிலைப் பள்ளியில் எக்ஸாம் வாரியர் என்ற தலைப்பில் மாணவர்களுக்கான ஓவியப் போட்டி நடந்தது. இதில் பொதுத் தேர்வு எழுதவுள்ள 500 மாணவர்கள் பங்கேற்றனர்.

    போட்டியை பள்ளி தாளாளரான செல்வகணபதி எம்.பி. தொடக்கி வைத்தார். பள்ளியின் முதன்மை முதல்வர் பத்மா, பள்ளி முதல்வர் கீதா ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • காலை 10 மணி முதல் 12.30 மணி வரை நடக்கிறது
    • பள்ளி மாணவிகள் முன் பதிவு செய்து பங்கேற்கலாம்

    வேலூர்:

    குழந்தைகள் தினமான நவம்பர் 14-ந் தேதியை முன்னிட்டு வேலூர் அரசு அருங்காட்சியகம் சார்பில் 6-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ மாணவியருக்காக, நாளை சனிக்கிழமை காலை 10 மணி முதல் 12.30 மணி வரை ஓவியப்போட்டி வேலூர் கோட்டையில் உள்ள அரசு அருங்காட்சியகத்தில், நடத்தப்பட உள்ளது.

    ஒவியப்போட்டியின் தலைப்பு வேலூர் மாவட்ட நினைவுச்சின்னங்கள்.

    பள்ளி மாணவர்களின், கலைத்திறனை ஊக்கப்படுத்தும் வகையில் ஒவியப்போட்டியானது 6 ஆம் வகுப்பு முதல் 9 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியருக்காக நடத்தப்படவுள்ளது

    ஓவியத்தில் ஆர்வமுள்ள 6 ஆம் வகுப்பு முதல் 9 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவியர்கள். இன்று மாலைக்குள் தங்களது பெயரை வேலூர் அரசு அருங்காட்சியகத்தில் பதிவு செய்து கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது. பெயரை பதிவு செய்த மாணவர்கள் மட்டுமே ஒவியப்போட்டியில் பங்கேற்க அனுமதிக்கப்படுவார்கள்.

    பள்ளி ஒன்றுக்கு 3 மாணவர்கள் மட்டுமே அனுமதிக்கபடுவார்கள். ஒவியப்போட்டிக்கான ஓவிய தாள் மட்டுமே அருங்காட்சியகத்தில் வழங்கப்படும் ஏனைய பொருட்களை மாணவர்களே கொண்டு வரவேண்டும் என தெரிவித்தனர்.

    • சிறைவாசிகளுக்கு ஓவியப்போட்டி நடந்தது
    • தேசிய நூலக வார விழாவினை முன்னிட்டு

    கரூர்:

    பொது நூலகத்துறை கரூர் மாவட்டம் 55-வது தேசிய நூலக வார விழாவினை முன்னிட்டு, சிறைவாசிகளுக்கான ஓவியப்போட்டி கரூர் தாசில்தார் அலுவலக வளாகத்தில் உள்ள கிளை சிறையில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட மைய நூலகர் சிவக்குமார் தலைமை வகித்தார். ஓவிய ஆசிரியர் துரைராஜ், ஓவிய போட்டி கருத்துறை வழங்கி நடுவராக செயல்பட்டார். கிளை சிறை கண்காணிப்பாளர் அருணாச்சலம் ஓவியப்போட்டி துவக்கி வைத்து பேசினார். இந்த ஓவிய போட்டியில் 51 சிறைவாசிகள் கலந்து கொண்டு ஆர்வத்துடன் ஓவியம் வரைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது

    • எனது வாக்கு எனது உரிமை’ குறித்த ஓவியப்போட்டி நடைபெற்றது
    • அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது.

    புதுக்கோட்டை

    இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி எனது வாக்கு எனது உரிமை ஒரு வாக்கின் சக்தி என்ற கருவினை மையமாக கொண்டு விராலிமலை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட இலுப்பூர் தாலுகா அளவிலான ஓவியப்போட்டி இலுப்பூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. போட்டியினை இலுப்பூர் தாசில்தார் வெள்ளைச்சாமி தொடங்கி வைத்தார். இதில் திரளான மாணவிகள் கலந்துகொண்டு ஓவியங்கள் வரைந்தனர். இதற்கான ஏற்பாடுகளை தேர்தல் துணை தாசில்தார் கிருஷ்ணமூர்த்தி மற்றும் ஆசிரியர்கள் செய்திருந்தனர்"

    • தஞ்சாவூர் பள்ளியை சேர்ந்த ஜூனியர் ரெட் கிராஸ் மாணவர்களுக்கு பேச்சு, கட்டுரை, ஓவிய போட்டிகள் நடைபெற்றது.
    • சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணியை தொடங்கி வைத்து மேற்கு போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் சந்திரா ஆகியோர் கலந்து கொண்டனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் பள்ளி கல்வித்துறை ஜூனியர் ரெட் கிராஸ் சார்பில் தஞ்சை அரசர் மேல்நிலைப் பள்ளியில் ஜெனிவா ஒப்பந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

    இந்த விழாவை தஞ்சை மாவட்ட கல்வி அலுவலர் குழந்தைராஜன் தொடங்கி வைத்தார். ரெட் கிராஸ் நிறுவனர் படத்தை அரசர் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் வேலாயுதம் திறந்து வைத்தார்.

    தஞ்சை சுழற்சங்கம் கிரானரி செயலர் ராமமூர்த்தி, தலைவர் ஆல்பர்ட், கொடையாளர் வேலுசாமி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

    இவ்விழாவில் தஞ்சாவூர் பள்ளியை சேர்ந்த ஜூனியர் ரெட் கிராஸ் மாணவர்களுக்கு பேச்சு, கட்டுரை, ஓவியப் போட்டிகள் நடைபெற்றது.

    பள்ளிகளில் சிறப்பாக ஜே.ஆர்.சி. செயல்பாடுகளை செய்த ஊராட்சி நடுநிலைப்பள்ளி கூத்தூர் தமிழ்மாறன், வளம்பகுடி பாலகிருஷ்ணன், செம்மங்குடி ராணி, திருப்பழனம் உக்கடை அம்மாள் உயர்நிலைப்பள்ளி லதா, அருள்நெறிஉயர்நிலை ப்பள்ளி முருகன் ஆகியோருக்கு சிறந்த கவுன்சிலர் விருதை மாவட்ட கல்வி அலுவலர் குழந்தைராஜன் வழங்கினார்.

    முன்னதாக இணை கன்வீனர் பாலமுருகன் வரவேற்றார்.

    இதில் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி செயலர் ரவிச்சந்திரன், பொருளாளர் முத்துக்குமார், கௌரவ ஆலோசகர் ஜெயக்குமார், சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணியை தொடங்கி வைத்த மேற்கு போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் சந்திரா ஆகியோர் கலந்து கொண்டனர்.

    இணை கன்வீனர்கள் அமர்நாத் ,தமிழன்பன் ஆகியோர் நன்றி கூறினர்.

    விழாவுக்கான ஏற்பாடுகளை மாவட்ட கன்வீனர் பிரகதீசு செய்திருந்தார்.

    • குழந்தைகள் நல மாதத்தையொட்டி பள்ளி மாணவர்களுக்கு ஓவியப்போட்டி நடைபெற்றது.
    • வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது.

    திருப்பூர் :

    திருப்பூர் ஸ்மார்ட்சிட்டி ரோட்டரி சங்கம் மற்றும் ஓ.எம்.எஸ். மருத்துவமனை சார்பில் குழந்தைகள் நல மாதத்தையொட்டி பள்ளி மாணவர்களுக்கு ஓவியப்போட்டி நடைபெற்றது. இதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக ரோட்டரி மாவட்ட ஆளுனர் இளங்குமரன் கலந்து கொண்டார். கவுரவ விருந்தினராக திருப்பூர் ஸ்மார்ட்சிட்டி ரோட்டரி சங்க பட்டைய தலைவர் பாலசுப்பிரமணியம், மாவட்ட ரத்ததான முகாம் தலைவர் கணேசமூர்த்தி , மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜ், மண்டல ஒருங்கிணைப்பாளர் முருகானந்தம், துணை ஆளுனர் கவிதாலட்சுமி ஆகியோர் கலந்து கொண்டனர்.

    ஓ.எம்.எஸ். மருத்துவமனை நிறுவனர் டாக்டர் ரவிச்சந்திரன், தலைமை கதிரியக்க நிபுணர் டாக்டர் சரோஜா, தலைமை காயம் மற்றும் எலும்பு முறிவு அறுவை சிகிச்சை நிபுணர் அருள்ஜோதி, ேராட்டரி நிர்வாகிகளான தலைவர் ஜெயராமன், செயலாளர் பாலகணேசன், பொருளாளர் பால்ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.   

    • 75-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு உப்பளம் சட்டமன்றத் தொகுதி பா.ஜனதா சார்பில் வம்பாக்கீரப்பாளையம் சிவன் கோவிலில் மாணவர்களுக்கு ஓவியப் போட்டி நடைபெற்றது.
    • மாணவர்கள் கலந்து கொண்டு சுதந்திரத்திற்காக பாடுபட்ட தேசத் தலைவர்களின் ஓவியங்களை வரைந்தனர்.

    புதுச்சேரி:

    75-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு உப்பளம் சட்டமன்றத் தொகுதி பா.ஜனதா சார்பில் வம்பாக்கீரப்பாளையம் சிவன் கோவிலில் மாணவர்களுக்கு ஓவியப் போட்டி நடைபெற்றது. தொகுதி தலைவர் சக்திவேல் தலைமை தாங்கினார்.

    தொகுதி பொறுப்பாளரும், மாநில கூட்டுறவு பிரிவு அமைப்பாளருமான டாக்டர் க.வெற்றிச்செல்வம் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக மாவட்ட தலைவரும், எம்.எல்.ஏ.வுமான அசோக்பாபு கலந்து கொண்டு சிறப்பித்தார். 75-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு சுதந்திரத்திற்காக பாடுபட்ட தேசத் தலைவர்களின் ஓவியங்களை வரைந்தனர்.

    இந்நிகழ்ச்சியில் மாநில செயற்குழு உறுப்பினர்கள் தெய்வநாயகம், மாரியப்பன், மாவட்ட செயலாளர் அற்புதழகன், தொகுதி பொதுச்செயலாளர்கள் ராஜீவ், துணைத் தலைவர் பிரான்சிஸ், மாவட்டத் துணைத் தலைவர் விஜயரங்கம், ஓவியப்போட்டியின் இணை பொறுப்பாளர்கள் நடராஜன், பிரவீன் குமார், தமிழரசன் உள்ளிட்ட பொறுப்பாளர்களும், உப்பளம் தொகுதிக்குட்பட்ட மாநில, மாவட்ட, தொகுதி ,கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

    நிகழ்ச்சியை ரிக்ஷா மாமா சமூக சேவை மையம் நிறுவனர் ஜான்பீட்டர் ஒருங்கிணைத்தார்.

    • உணவு திருவிழாவில் சுகி சிவத்தின் அறுசுவை பட்டிமன்றம் நடக்கிறது.
    • ஓவியப்போட்டிகளுக்கு வருகிற 4-ந் தேதிக்குள் படைப்புகளை அனுப்பி வைக்கலாம்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை சார்பில் 'திருப்பூர் உணவுத்திருவிழா -2022' காங்கயத்தில் வருகிற 7-ந்தேதி நடக்கிறது.விழாவின் ஒரு பகுதியாக காங்கயம் ஒன்றிய அலுவலகத்தில் இருந்து காலை 8 மணிக்கு, 'வாக்கத்தான்' விழிப்புணர்வு பேரணி நடக்கிறது. மேலும், சலங்கையாட்டம், ஒயிலாட்டம், வள்ளி கும்மி ஆட்டத்துடன் விழா களைகட்ட போகிறது.உணவுத்திருவிழாவில் சுகி சிவத்தின் அறுசுவை பட்டிமன்றம் நடக்கிறது.

    முன்னதாக பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகளுக்கான போட்டிகளும் நடக்கின்றன.உணவு பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு வாசகம், ஓவியப்போட்டிகளுக்கு வருகிற 4-ந் தேதிக்குள் படைப்புகளை அனுப்பி வைக்கலாம்.சிறந்த படைப்புகளுக்கு பரிசுகள் வழங்கப்படும். படைப்புகளை, eatrighttiruppur@gmail.com என்ற மின்னஞ்சல் மூலமாகவும், உணவு பாதுகாப்பு அலுவலகத்துக்கு நேரில் வந்தும் சமர்ப்பிக்கலாம். விவரங்களுக்கு 78711 33777 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.இதுகுறித்து உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் விஜயலலிதாம்பிகை கூறியதாவது:-

    உணவு திருவிழாவின் ஒரு பகுதியாக 7-ந் தேதி காலை 10மணிக்கு, காங்கயம் என்.எஸ்.என்., திருமண மண்டபத்தில் சமையல் போட்டி நடக்கிறது.

    ஆரோக்கிய சமையல், அதிவேக சமையல், அடுப்பில்லா சமையல், குழந்தைகள் சமையல், பாரம்பரிய சமையல், தென்னிந்திய சமையல், சிறுதானிய சமையல், பால்வகை சமையல், மறந்து போன உணவகள், சமையல் அலங்காரம் ஆகிய தலைப்புகளில், சமையல் செய்யலாம்.போட்டியில், 'செப்' தாமு மற்றும் 'செப்' அனிதா ஆகியோர் நடுவர்களாக பங்கேற்கின்றனர்.

    சமையல் போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு, 'திருப்பூரின் அறுசுவை அரசி' என்ற பட்டமும், பரிசுகளும் வழங்கப்படும். போட்டியாளர் விரும்பிய உணவுகளை வீட்டில் தயாரித்தும் எடுத்துவரலாம். ஒவ்வொரு போட்டியிலும் முதலிடம் பெறுபவர், இறுதிப்போட்டிக்கு தேர்வு செய்யப்படுவர். இறுதிப்போட்டி சமையல் கலைஞர் முன்னிலையில் மண்டபத்தில் நடக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.

    • ஓவியப்போட்டியில் வெற்றி பெற்ற பள்ளிகளுக்கும், சிறப்பாக ஊக்குவித்த ஆசிரியர்களுக்கும் பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
    • நிகழ்ச்சியில் கோபி கலைக் கல்லூரியின் மாணவ-மாணவிகள் பள்ளி வளாகத்தில் தூய்மைப்படுத்தும் பணியும் மேற்கொள்ளப்பட்டது.

    கோபி:

    கோபிசெட்டிபாளையம் நகராட்சியில் நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம் என்ற பொருளில், எனது குப்பை எனது பொறுப்பு என்ற தலைப்பில் நகராட்சி பள்ளி மாணவ-மாணவிகள் தங்கள் பள்ளி சுவரில் வரைந்த விழிப்புணர்வு ஓவியப்போட்டி நடத்தப்பட்டது.

    வெற்றி பெற்ற பள்ளிகளுக்கும் சிறப்பாக ஊக்குவித்த ஆசிரியர்களுக்கும் பரிசு வழங்கும் நிகழ்ச்சி சரவணா தியேட்டர் ரோடு நகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

    இந்நிகழ்ச்சியில் நகர்மன்ற தலைவர் என்.ஆர்.நாகராஜ் தலைமையில் நகராட்சி ஆணையாளர் பிரேம் ஆனந்த் முன்னிலையில் பரிசுகள் வழங்கப்பட்டது.

    இதில் நகராட்சி துப்புரவு அலுவலர் சோழராஜ், துப்புரவு ஆய்வாளர்கள் செந்தில்குமார், கார்த்திக் சவுந்தர்ராஜ், கோபி அனைத்து வியாபாரிகள் சங்கத் தலைவர் வேலுமணி, அரிமா சங்க செயலாளர் ஜெயபிரகாஷ் அருண், ஆதிரை அரிமா சங்க தலைவர் தேவி ஜெகன், உழவன் ரோட்டரி சங்கத் தலைவர் கிருஷ்ணகுமார், சமுதாய அமைப்பாளர் ஈஸ்வர மூர்த்தி, அனைத்து நகராட்சி பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் பலர் பங்கேற்றனர்.

    சிறந்த ஓவியத்திற்கான முதல் பரிசை முருகன் புதூர் நகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியும், இரண்டாம் பரிசை வேங்கம்மையார் உயர்நிலைப் பள்ளியும், மூன்றாம் பரிசை நாயக்கன் காடு நகராட்சி தொடக்க பள்ளியும் பெற்றது.

    சிறந்த ஓவியம் மற்றும் கருத்துரு நிறைந்த ஓவியம் வரைய மாணவர்களுக்கு சிறப்பாக ஊக்குவித்த ஆசிரியர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.

    மொடச்சூர் நகராட்சி மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் பரமேஸ்வரனுக்கு முதல் பரிசும், நகராட்சி நடுநிலைப்பள்ளி டவுன் ஆசிரியர் வடிவாம்பிகைக்கு இரண்டாம் பரிசும், ஜெயராம் நடுநிலைப்பள்ளி ஆசிரியர் பிரியவதனாவுக்கு மூன்றாம் பரிசும் வழங்கப்பட்டது.

    ஓவியம் வரைதலுக்காண சிறப்பு பரிசை மொடச்சூர் நகராட்சி தொடக்க பள்ளியும், வேங்கமையார் தொடக்க பள்ளியும், நகரவை ஆண்கள் மேல்நிலைப்பள்ளியும் பெற்றுக் கொண்டனர்.

    இந்த நிகழ்ச்சியில் கோபி கலைக் கல்லூரியின் மாணவ-மாணவிகள் பள்ளி வளாகத்தில் தூய்மைப்படுத்தும் பணியும் மேற்கொள்ளப்பட்டது.

    மேலும் அனைத்து நகராட்சி பள்ளிகளுக்கும் குப்பை தொட்டிகள் வழங்கப்பட்டது. முடிவில் நகராட்சி துப்புரவு ஆய்வாளர் செந்தில்குமார் நன்றி கூறினார்.

    • “என் குப்பை என் பொறுப்பு” என்ற தலைப்பில் பள்ளி குழந்தைகளுக்கு ஓவியப்போட்டியும் நடத்தப்பட்டது.
    • இம்முகாமில் சுமார் 100 தூய்மை பணியாளர்கள் கலந்து கொண்டு காய்ச்சல், போன்ற நோய்களுக்கும், ரத்த அழுத்த பரிசோதனையும் செய்துக்கொண்டனர்.

    பட்டுக்கோட்டை:

    பட்டுக்கோட்டை நகரம் புனித தாமஸ் பள்ளியில் நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கத்தின் சார்பில் நகராட்சி ஆணையர் குமார் உத்தரவின் பெயரில் பள்ளி குழந்தைகளுக்கு, "என் குப்பை என் பொறுப்பு" என்பதை நடைமுறை படுத்தும் பொருட்டும், குப்பைகளைமக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரிப்பதன் அவசியம் குறித்தும் பொது இடங்களில் குப்பை கொட்டாமல் இருப்பது, பொது இடங்களில் எச்சில் துப்பாமல்இருப்பது, நெகிழி பயன்பாட்டினை தவிர்ப்பது, துணிப்பை பயன்படுத்துவது, சமுதாயமற்றும் பொது கழிப்பறை தூய்மையாக பராமரிப்பது குறித்தும், உரை நிகழ்த்தப்பட்டது.

    மேலும் பான் செக்ர்ஸ் மேல்நிலைப்பள்ளியில் "என் குப்பை என் பொறுப்பு" என்ற தலைப்பில்பள்ளி குழந்தைகளுக்கு ஒவியப்போ ட்டியும் நடத்த ப்பட்டது. இதில் சுமார் 150 குழந்தைகள் கலந்து கொண்டனர். சிறப்பாக வரையப்பட்ட மூன்று ஓவியங்களுக்கு நகராட்சி சார்பில் பரிசும், சான்றிதழும் எதிர்வரும் 13.7.22 அன்று வழங்கப்படும் என்றும்.

    மேலும் அந்த ஒவியங்கள் நகராட்சிக்கு சொந்தமான கட்டிடங்களில் ஒவியமாக வரைய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும். இப்பணியில்துப்புரவு அலுவலர் நெடுமாறன் மற்றும் துப்புரவு ஆய்வர்கள் ரவிச்சந்திரன், அறிவழகன், ஆரோக்கியசாமி, தூய்மை இந்தியா திட்ட மேற்பார்வையாளர்கள்ரோஜா, சாரதபிரியா மற்றும் பரப்புரையாளர்கள் விழிப்புணர்வு நடவடி க்கையினை மேற்கொ ண்டனர்.இதுபற்றி பட்டுக்கோ ட்டை ஆணையர் குமார் கூறும் போது இது போன்றவிழிப்புணர்வுபணிகள் அனைத்து அரசுமற்றும் தனியார் பள்ளிகளில் தொ டர்ந்து செயல்படுத்தப்படும் வரும் 13.07.2022. புதன்கி ழமையன்று காலை 7.30 மணியளவில பட்டு கோட்டை பேருந்து நிலையத்திலிருந்து பழனியப்பன் தெரு, மணிக்கூண்டு.

    அறந்தாங்கி முக்கம், தஞ்சை சாலை, கடை தெரு மேல் பாகம், கடை தெரு கீழ்பாகம் வழியாக நடத்தப்பட்டு பெண்கள் மேல் நிலைப்பள்ளி வரை விழிப்புணர்வு சைக்கிள் பேரணி நடத்தப்பட உள்ளது. பொது மக்கள் மற்றும் ஆர்வமுள்ள தன்னா ர்வளர்கள் மேற்காணும் சைக்கிள் விழிப்புணர்வு பேரணியில் கலந்து கொள்ளுமாறு தெரிவித்தார்.மேலும், அதனை தொடர்ந்து நகராட்சி அலுவலகத்தில் தூய்மை பணியாளர்கள் நலன் கருதி தூய்மை பணியாளர்களுக்கு மருத்துவ முகாம் நகர்புற ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் மூலம் நடத்தப்பட்டது. இம்முகாமில் சுமார் 100 தூய்மை பணியாளர்கள் கலந்து கொண்டு காய்ச்சல், போன்ற நோய்களுக்கும், ரத்த அழுத்த பரிசோதனையும் செய்துக்கொண்டனர்.

    ×