விழிப்புணர்வு ஓவிய போட்டியில் வென்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா

ஓவியப்போட்டியில் வெற்றி பெற்ற பள்ளிகளுக்கும், சிறப்பாக ஊக்குவித்த ஆசிரியர்களுக்கும் பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.நிகழ்ச்சியில் கோபி கலைக் கல்லூரியின் மாணவ-மாணவிகள் பள்ளி வளாகத்தில் தூய்மைப்படுத்தும் பணியும் மேற்கொள்ளப்பட்டது.
விழிப்புணர்வு ஓவிய போட்டியில் வென்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா
Published on

கோபி:

கோபிசெட்டிபாளையம் நகராட்சியில் நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம் என்ற பொருளில், எனது குப்பை எனது பொறுப்பு என்ற தலைப்பில் நகராட்சி பள்ளி மாணவ-மாணவிகள் தங்கள் பள்ளி சுவரில் வரைந்த விழிப்புணர்வு ஓவியப்போட்டி நடத்தப்பட்டது.

வெற்றி பெற்ற பள்ளிகளுக்கும் சிறப்பாக ஊக்குவித்த ஆசிரியர்களுக்கும் பரிசு வழங்கும் நிகழ்ச்சி சரவணா தியேட்டர் ரோடு நகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் நகர்மன்ற தலைவர் என்.ஆர்.நாகராஜ் தலைமையில் நகராட்சி ஆணையாளர் பிரேம் ஆனந்த் முன்னிலையில் பரிசுகள் வழங்கப்பட்டது.

இதில் நகராட்சி துப்புரவு அலுவலர் சோழராஜ், துப்புரவு ஆய்வாளர்கள் செந்தில்குமார், கார்த்திக் சவுந்தர்ராஜ், கோபி அனைத்து வியாபாரிகள் சங்கத் தலைவர் வேலுமணி, அரிமா சங்க செயலாளர் ஜெயபிரகாஷ் அருண், ஆதிரை அரிமா சங்க தலைவர் தேவி ஜெகன், உழவன் ரோட்டரி சங்கத் தலைவர் கிருஷ்ணகுமார், சமுதாய அமைப்பாளர் ஈஸ்வர மூர்த்தி, அனைத்து நகராட்சி பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் பலர் பங்கேற்றனர்.

சிறந்த ஓவியத்திற்கான முதல் பரிசை முருகன் புதூர் நகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியும், இரண்டாம் பரிசை வேங்கம்மையார் உயர்நிலைப் பள்ளியும், மூன்றாம் பரிசை நாயக்கன் காடு நகராட்சி தொடக்க பள்ளியும் பெற்றது.

சிறந்த ஓவியம் மற்றும் கருத்துரு நிறைந்த ஓவியம் வரைய மாணவர்களுக்கு சிறப்பாக ஊக்குவித்த ஆசிரியர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.

மொடச்சூர் நகராட்சி மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் பரமேஸ்வரனுக்கு முதல் பரிசும், நகராட்சி நடுநிலைப்பள்ளி டவுன் ஆசிரியர் வடிவாம்பிகைக்கு இரண்டாம் பரிசும், ஜெயராம் நடுநிலைப்பள்ளி ஆசிரியர் பிரியவதனாவுக்கு மூன்றாம் பரிசும் வழங்கப்பட்டது.

ஓவியம் வரைதலுக்காண சிறப்பு பரிசை மொடச்சூர் நகராட்சி தொடக்க பள்ளியும், வேங்கமையார் தொடக்க பள்ளியும், நகரவை ஆண்கள் மேல்நிலைப்பள்ளியும் பெற்றுக் கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் கோபி கலைக் கல்லூரியின் மாணவ-மாணவிகள் பள்ளி வளாகத்தில் தூய்மைப்படுத்தும் பணியும் மேற்கொள்ளப்பட்டது.

மேலும் அனைத்து நகராட்சி பள்ளிகளுக்கும் குப்பை தொட்டிகள் வழங்கப்பட்டது. முடிவில் நகராட்சி துப்புரவு ஆய்வாளர் செந்தில்குமார் நன்றி கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com