search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    மாணவர்களுக்கு ஓவியப் போட்டி
    X

    மாணவர்களுக்கு ஓவியப் போட்டியில் கலந்து கொண்ட காட்சி.

    மாணவர்களுக்கு ஓவியப் போட்டி

    • 75-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு உப்பளம் சட்டமன்றத் தொகுதி பா.ஜனதா சார்பில் வம்பாக்கீரப்பாளையம் சிவன் கோவிலில் மாணவர்களுக்கு ஓவியப் போட்டி நடைபெற்றது.
    • மாணவர்கள் கலந்து கொண்டு சுதந்திரத்திற்காக பாடுபட்ட தேசத் தலைவர்களின் ஓவியங்களை வரைந்தனர்.

    புதுச்சேரி:

    75-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு உப்பளம் சட்டமன்றத் தொகுதி பா.ஜனதா சார்பில் வம்பாக்கீரப்பாளையம் சிவன் கோவிலில் மாணவர்களுக்கு ஓவியப் போட்டி நடைபெற்றது. தொகுதி தலைவர் சக்திவேல் தலைமை தாங்கினார்.

    தொகுதி பொறுப்பாளரும், மாநில கூட்டுறவு பிரிவு அமைப்பாளருமான டாக்டர் க.வெற்றிச்செல்வம் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக மாவட்ட தலைவரும், எம்.எல்.ஏ.வுமான அசோக்பாபு கலந்து கொண்டு சிறப்பித்தார். 75-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு சுதந்திரத்திற்காக பாடுபட்ட தேசத் தலைவர்களின் ஓவியங்களை வரைந்தனர்.

    இந்நிகழ்ச்சியில் மாநில செயற்குழு உறுப்பினர்கள் தெய்வநாயகம், மாரியப்பன், மாவட்ட செயலாளர் அற்புதழகன், தொகுதி பொதுச்செயலாளர்கள் ராஜீவ், துணைத் தலைவர் பிரான்சிஸ், மாவட்டத் துணைத் தலைவர் விஜயரங்கம், ஓவியப்போட்டியின் இணை பொறுப்பாளர்கள் நடராஜன், பிரவீன் குமார், தமிழரசன் உள்ளிட்ட பொறுப்பாளர்களும், உப்பளம் தொகுதிக்குட்பட்ட மாநில, மாவட்ட, தொகுதி ,கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

    நிகழ்ச்சியை ரிக்ஷா மாமா சமூக சேவை மையம் நிறுவனர் ஜான்பீட்டர் ஒருங்கிணைத்தார்.

    Next Story
    ×