search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "winners"

    • சீனியர் பிரிவு நீளம் தாண்டுதலில் 7.52 மீட்டர் தூரம் குதித்து தேசிய அளவில் வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளார்.
    • சீனியர் பிரிவு 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் 12.39 நொடிகளில் ஓடி தேசிய அளவில் வெண்கலப்பதக்கம் வென்றுள்ளார்.

    திருப்பூர் :

    திருப்பூரை சேர்ந்த சக்திவேல் மற்றும் பரமேஸ்வரி தம்பதியின் மகன் சன்மத் தர்ஷன். தடகள வீரர். இவர் குஜராத் மாநிலம் நாடியட்டில் நடைபெற்ற "20வது தேசிய பெடரேஷன் கப்" 20 வயதுக்குட்பட்டோருக்கான தடகள சேம்பியன்ஷிப் போட்டியில், சீனியர் பிரிவு நீளம் தாண்டுதலில் 7.52 மீட்டர் தூரம் குதித்து தேசிய அளவில் வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளார்.

    மேலும் ஹரியானா மாநிலம் பஞ்ச்குலா-வில் நடைபெற்ற 4வது கேலோ இந்தியா யூத் கேம்ஸ்தடகளப்போட்டியில் நீளம் தாண்டுதலில் 7.34 மீட்டர் தூரம் குதித்து தேசிய அளவில் வெண்கலப்பதக்கம் வென்றுள்ளார்.

    அதேபோல திருப்பூரை சேர்ந்த மரிய முத்துராஜா மற்றும் ஸ்டெல்லா ஜோஸப் தம்பதியரின் மகள் ஏஞ்சல் சில்வியா. தடகள வீராங்கனை. இவர் ஒடிசா மாநிலம் புவனேஷ்வரில் நடைபெற்ற "கிராண்ட் பிரிக்ஸ் 4" தடகள சேம்பியன்ஷிப் போட்டியில் சீனியர் பிரிவு 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் 12.39 நொடிகளில் ஓடி தேசிய அளவில் வெண்கலப்பதக்கம் வென்றுள்ளார்.

    திருப்பூரை சேர்ந்த தடகள வீரர்கள் இருவரையும் பாராட்டி கெளரவிக்கும் விதமாக திருப்பூர் தடகள சங்கத்தின் தலைவரும், தமிழ்நாடு தடகள சங்கத்தின் துணைத்தலைவருமான சண்முகசுந்தரம் தலைமையில் ஐ.பி.எக்ஸ். எக்ஸ்போர்ட்ஸ் நிறுவன நிர்வாக இயக்குநருமான நிரஞ்சன், காவல் ஆய்வாளர் முத்துக்குமார்உள்ளிட்ட திருப்பூர் தடகள சங்க நிர்வாகிகள் இருவருக்கும் பொன்னாடை அணிவித்து விளையாட்டு சீருடைகள் அடங்கிய பெட்டகத்தை வழங்கினர். 

    • சா்க்காா் பெரியபாளையம் அரசு உயா்நிலை பள்ளி தலைமை ஆசிரியை தமிழரசி தலைமையில் பேச்சுப் போட்டி நடைபெற்றது.
    • பல்வேறு பள்ளிகளில் இருந்து 44 மாணவ, மாணவிகள் பங்கேற்றனா்.

    திருப்பூர் :

    முன்னாள் முதல்வா் கருணாநிதியின் பிறந்த நாளை ஒட்டி திருப்பூா் மாவட்ட தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் பள்ளி மாணவா்களுக்கான பேச்சுப் போட்டி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், சா்க்காா் பெரியபாளையம் அரசு உயா்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியை தமிழரசி தலைமையில் நடைபெற்றது.

    இதில், பல்வேறு பள்ளிகளில் இருந்து 44 மாணவ, மாணவிகள் பங்கேற்றனா்.இதில், அவிநாசி புனித தோமையா் பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவி கெளரி முதலிடத்தையும், ஊத்துக்குளி கொங்கு மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி மாணவி ஸ்ரீமதி இரண்டாம் இடத்தையும், பெருமாநல்லூா் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவி கோபிகா மூன்றாம் இடத்தையும் பிடித்தனா்.

    அதேபோல, கணபதிபாளையம் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவி ஹசீனா மற்றும் குண்டடம் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளி மாணவா் கிஷோா் சங்கா் ஆகியோா் சிறப்புப்பரிசுக்காக தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.

    • ஓவியப்போட்டியில் வெற்றி பெற்ற பள்ளிகளுக்கும், சிறப்பாக ஊக்குவித்த ஆசிரியர்களுக்கும் பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
    • நிகழ்ச்சியில் கோபி கலைக் கல்லூரியின் மாணவ-மாணவிகள் பள்ளி வளாகத்தில் தூய்மைப்படுத்தும் பணியும் மேற்கொள்ளப்பட்டது.

    கோபி:

    கோபிசெட்டிபாளையம் நகராட்சியில் நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம் என்ற பொருளில், எனது குப்பை எனது பொறுப்பு என்ற தலைப்பில் நகராட்சி பள்ளி மாணவ-மாணவிகள் தங்கள் பள்ளி சுவரில் வரைந்த விழிப்புணர்வு ஓவியப்போட்டி நடத்தப்பட்டது.

    வெற்றி பெற்ற பள்ளிகளுக்கும் சிறப்பாக ஊக்குவித்த ஆசிரியர்களுக்கும் பரிசு வழங்கும் நிகழ்ச்சி சரவணா தியேட்டர் ரோடு நகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

    இந்நிகழ்ச்சியில் நகர்மன்ற தலைவர் என்.ஆர்.நாகராஜ் தலைமையில் நகராட்சி ஆணையாளர் பிரேம் ஆனந்த் முன்னிலையில் பரிசுகள் வழங்கப்பட்டது.

    இதில் நகராட்சி துப்புரவு அலுவலர் சோழராஜ், துப்புரவு ஆய்வாளர்கள் செந்தில்குமார், கார்த்திக் சவுந்தர்ராஜ், கோபி அனைத்து வியாபாரிகள் சங்கத் தலைவர் வேலுமணி, அரிமா சங்க செயலாளர் ஜெயபிரகாஷ் அருண், ஆதிரை அரிமா சங்க தலைவர் தேவி ஜெகன், உழவன் ரோட்டரி சங்கத் தலைவர் கிருஷ்ணகுமார், சமுதாய அமைப்பாளர் ஈஸ்வர மூர்த்தி, அனைத்து நகராட்சி பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் பலர் பங்கேற்றனர்.

    சிறந்த ஓவியத்திற்கான முதல் பரிசை முருகன் புதூர் நகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியும், இரண்டாம் பரிசை வேங்கம்மையார் உயர்நிலைப் பள்ளியும், மூன்றாம் பரிசை நாயக்கன் காடு நகராட்சி தொடக்க பள்ளியும் பெற்றது.

    சிறந்த ஓவியம் மற்றும் கருத்துரு நிறைந்த ஓவியம் வரைய மாணவர்களுக்கு சிறப்பாக ஊக்குவித்த ஆசிரியர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.

    மொடச்சூர் நகராட்சி மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் பரமேஸ்வரனுக்கு முதல் பரிசும், நகராட்சி நடுநிலைப்பள்ளி டவுன் ஆசிரியர் வடிவாம்பிகைக்கு இரண்டாம் பரிசும், ஜெயராம் நடுநிலைப்பள்ளி ஆசிரியர் பிரியவதனாவுக்கு மூன்றாம் பரிசும் வழங்கப்பட்டது.

    ஓவியம் வரைதலுக்காண சிறப்பு பரிசை மொடச்சூர் நகராட்சி தொடக்க பள்ளியும், வேங்கமையார் தொடக்க பள்ளியும், நகரவை ஆண்கள் மேல்நிலைப்பள்ளியும் பெற்றுக் கொண்டனர்.

    இந்த நிகழ்ச்சியில் கோபி கலைக் கல்லூரியின் மாணவ-மாணவிகள் பள்ளி வளாகத்தில் தூய்மைப்படுத்தும் பணியும் மேற்கொள்ளப்பட்டது.

    மேலும் அனைத்து நகராட்சி பள்ளிகளுக்கும் குப்பை தொட்டிகள் வழங்கப்பட்டது. முடிவில் நகராட்சி துப்புரவு ஆய்வாளர் செந்தில்குமார் நன்றி கூறினார்.

    வேலைவாய்ப்பு அலுவலகத்தின் சிறப்பு பயிற்சி மூலம் குரூப் 4 தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு கலெக்டர் பழனிசாமி பாராட்டு தெரிவித்துள்ளார்.

    திருப்பூர்:

    திருப்பூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் நடத்தப்பட்ட குரூப் 4 தேர்வில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தின் சார்பில் நடத்தப்பட்ட சிறப்பு வகுப்பில் பயின்று வெற்றி பெற்ற மாணவ, மாணவிகள் கலெக்டர் பழனிசாமியிடம் வாழ்த்து பெற்றனர். 

    கோவை மண்டலத்தைச் சேர்ந்த, திருப்பூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டத்தின் மூலம் பயிற்சி பெற்று 35 மனுதாரர்கள் அண்மையில், வெளியிடப்பட்ட குரூப் 4 தேர்வில் வெற்றியடைந்துள்ளனர்.

    திருப்பூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டத்தின் வாயிலாக நடத்தப்பட்ட பயிற்சிகளில் பங்கேற்று, ஆர்.திருநாவுக்கரசு என்ற மாணவர் மாநிலத்திலேயே, குரூப் 4 தேர்வில் தேர்வுகளில் தட்டச்சர் பணிக்காலியிடத்திற்கு முதலாவது மாணவராக தேர்ச்சியடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    கோவை மண்டல வேலைவாய்ப்பு அலுவலகங்களிலேயே, அதிகமான எண்ணிக்கையில் திருப்பூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில்தான் 35 நபர்கள் குரூப் 4 தேர்வில் தேர்வுகளில் தேர்ச்சியடைந்து பணிநியமன வாய்ப்புக்கள் கிடைக்கப்பெற உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும். மேலும் தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகளை கலெக்டர் பழனிசாமி பாராட்டினார். இந்த வெற்றியினை முதல் வெற்றியாக கருதி தொடர்ந்து நடைபெறும் அனைத்து போட்டி தேர்வுகளிலும் பங்கேற்று வெற்றி பெற வேண்டுமென அவர் அறிவுரை வழங்கினார்.

    நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் பிரசன்னா ராமசாமி, கோவை மண்டல இணை இயக்குநர் (வேலைவாய்ப்பு) லதா, கோவை மண்டலத்தைச் சேர்ந்த துணை இயக்குநர்கள் ஓ.எஸ்.ஞானசேகரன் மற்றும் ஜோதிமணி, உதவி இயக்குநர்கள், திருப்பூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் ராதிகா ஆகியோர் கலந்து கொண்டனர்.

    ×