search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    துப்புரவு பணியாளர்களுக்கு மருத்துவ முகாம்
    X

    பட்டுக்கோட்டை நகராட்சியில் துப்புரவு பணியாளர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது.

    துப்புரவு பணியாளர்களுக்கு மருத்துவ முகாம்

    • “என் குப்பை என் பொறுப்பு” என்ற தலைப்பில் பள்ளி குழந்தைகளுக்கு ஓவியப்போட்டியும் நடத்தப்பட்டது.
    • இம்முகாமில் சுமார் 100 தூய்மை பணியாளர்கள் கலந்து கொண்டு காய்ச்சல், போன்ற நோய்களுக்கும், ரத்த அழுத்த பரிசோதனையும் செய்துக்கொண்டனர்.

    பட்டுக்கோட்டை:

    பட்டுக்கோட்டை நகரம் புனித தாமஸ் பள்ளியில் நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கத்தின் சார்பில் நகராட்சி ஆணையர் குமார் உத்தரவின் பெயரில் பள்ளி குழந்தைகளுக்கு, "என் குப்பை என் பொறுப்பு" என்பதை நடைமுறை படுத்தும் பொருட்டும், குப்பைகளைமக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரிப்பதன் அவசியம் குறித்தும் பொது இடங்களில் குப்பை கொட்டாமல் இருப்பது, பொது இடங்களில் எச்சில் துப்பாமல்இருப்பது, நெகிழி பயன்பாட்டினை தவிர்ப்பது, துணிப்பை பயன்படுத்துவது, சமுதாயமற்றும் பொது கழிப்பறை தூய்மையாக பராமரிப்பது குறித்தும், உரை நிகழ்த்தப்பட்டது.

    மேலும் பான் செக்ர்ஸ் மேல்நிலைப்பள்ளியில் "என் குப்பை என் பொறுப்பு" என்ற தலைப்பில்பள்ளி குழந்தைகளுக்கு ஒவியப்போ ட்டியும் நடத்த ப்பட்டது. இதில் சுமார் 150 குழந்தைகள் கலந்து கொண்டனர். சிறப்பாக வரையப்பட்ட மூன்று ஓவியங்களுக்கு நகராட்சி சார்பில் பரிசும், சான்றிதழும் எதிர்வரும் 13.7.22 அன்று வழங்கப்படும் என்றும்.

    மேலும் அந்த ஒவியங்கள் நகராட்சிக்கு சொந்தமான கட்டிடங்களில் ஒவியமாக வரைய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும். இப்பணியில்துப்புரவு அலுவலர் நெடுமாறன் மற்றும் துப்புரவு ஆய்வர்கள் ரவிச்சந்திரன், அறிவழகன், ஆரோக்கியசாமி, தூய்மை இந்தியா திட்ட மேற்பார்வையாளர்கள்ரோஜா, சாரதபிரியா மற்றும் பரப்புரையாளர்கள் விழிப்புணர்வு நடவடி க்கையினை மேற்கொ ண்டனர்.இதுபற்றி பட்டுக்கோ ட்டை ஆணையர் குமார் கூறும் போது இது போன்றவிழிப்புணர்வுபணிகள் அனைத்து அரசுமற்றும் தனியார் பள்ளிகளில் தொ டர்ந்து செயல்படுத்தப்படும் வரும் 13.07.2022. புதன்கி ழமையன்று காலை 7.30 மணியளவில பட்டு கோட்டை பேருந்து நிலையத்திலிருந்து பழனியப்பன் தெரு, மணிக்கூண்டு.

    அறந்தாங்கி முக்கம், தஞ்சை சாலை, கடை தெரு மேல் பாகம், கடை தெரு கீழ்பாகம் வழியாக நடத்தப்பட்டு பெண்கள் மேல் நிலைப்பள்ளி வரை விழிப்புணர்வு சைக்கிள் பேரணி நடத்தப்பட உள்ளது. பொது மக்கள் மற்றும் ஆர்வமுள்ள தன்னா ர்வளர்கள் மேற்காணும் சைக்கிள் விழிப்புணர்வு பேரணியில் கலந்து கொள்ளுமாறு தெரிவித்தார்.மேலும், அதனை தொடர்ந்து நகராட்சி அலுவலகத்தில் தூய்மை பணியாளர்கள் நலன் கருதி தூய்மை பணியாளர்களுக்கு மருத்துவ முகாம் நகர்புற ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் மூலம் நடத்தப்பட்டது. இம்முகாமில் சுமார் 100 தூய்மை பணியாளர்கள் கலந்து கொண்டு காய்ச்சல், போன்ற நோய்களுக்கும், ரத்த அழுத்த பரிசோதனையும் செய்துக்கொண்டனர்.

    Next Story
    ×