search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "OTT"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தளங்களில் ஒளிபரப்பப்படும் காட்சிகள் ஆபாசமாகவும், பெண்களை இழிவுபடுத்தும் வகையில் சித்தரிக்கப்பட்டதாகவும் கண்டறியப்பட்டது.
    • மத்திய தகவல் ஒளிபரப்பு துறை அமைச்சகம் தொடர்ந்து எச்சரிக்கை விடுத்தும் பொருட்படுத்தாமல் இருந்ததால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    புதுடெல்லி:

    மோசமான, ஆபாசமான உள்ளடங்களை ஒளிபரப்பியதற்காக 18 ஓ.டி.டி. தளங்களை மத்திய அரசு முடக்கியுள்ளது.

    இணையத்தில் ஆபாச படங்கள் மற்றும் வெப்சீரிஸ்களை ஒளிபரப்பியதற்காக 18 ஓ.டி.டி. தளங்களை மத்திய அரசு முடக்கியுள்ளது. மேலும் 19 இணையதளங்கள், 10 செயலிகள், 57 சமூக வலைதள கணக்குகளும் முடக்கம்.

    இந்த தளங்களில் ஒளிபரப்பப்படும் காட்சிகள் ஆபாசமாகவும், பெண்களை இழிவுபடுத்தும் வகையில் சித்தரிக்கப்பட்டதாகவும் கண்டறியப்பட்டது. இதையடுத்து மத்திய தகவல் ஒளிபரப்பு துறை அமைச்சகம் தொடர்ந்து எச்சரிக்கை விடுத்தும் பொருட்படுத்தாமல் இருந்ததால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    • காதலர்களுக்கு இடையில் நடக்கும் பிரச்சனைகளை மையமாக வைத்து உருவாகியுள்ளது.
    • லவ்வர், கடந்த பிப்ரவரி மாதம் 9ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

    விநாயக் சந்திரசேகரன் இயக்கத்தில் வெளியான குட் நைட் திரைப்படத்தில் மோகன் என்ற கதாப்பாத்திரத்தில் நடித்த மணிகண்டன் பலரையும் கவர்ந்தார்.

    இதன் பிறகு, அறிமுக இயக்குனர் பிரபுராம் வியாஸ் எழுதி இயக்கியுள்ள 'லவ்வர்' (lover) திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்தார்.

    இதில் ஸ்ரீகெளரி பிரியா, கண்ணன் ரவி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஷான் ரோல்டன் இசையமைத்துள்ள இப்படத்திற்கு ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படம் கடந்த பிப்ரவரி மாதம் 9ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

    காதலர்களுக்கு இடையில் நடக்கும் பிரச்சனைகளை மையமாக வைத்து உருவாகியுள்ள இந்த படம் இளைஞர்கள் மனதில் நின்றது.

    இந்நிலையில், லவ்வர் திரைப்படம் ஓடிடியில் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    அதன்படி, லவ்வர் திரைப்படம் மார்ச் மாதம் வரும் 27ம் தேதி முதல் டிஸ்னீப் பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

     

    • கேரளாவில் மார்ச் 7 ஆம் தேதி மாநில அரசுக்கு சொந்தமான ஓடிடி தளத்தை தொடங்கினர்
    • Cspace-ன் பிரதான நோக்கமே நல்ல சினிமாவை ஊக்குவிக்கவும் தயாரிப்பாளர்கள் மற்றும் பார்வையாளர்களின் நலன்களைப் பாதிக்காமல் இருக்க வேண்டும் என்பதுதான்

    கேரளாவில் மார்ச் 7 ஆம் தேதி மாநில அரசுக்கு சொந்தமான ஓடிடி தளத்தை தொடங்கினர். இதனை கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் துவக்கி வைத்தார். இத்தளத்திற்கு Cspace என்று பெயரிட்டுள்ளனர். மலையாள சினிமாவை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்ல இந்த முயற்சியை துவங்குகிறோம் என்று அப்போது பினராயி கூறினார். இது கலை மற்றும் கலாச்சார மதிப்புள்ள திரைப்படங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க ஒரு பாதையாக அமையும் என்றும், பிற ஓடிடி தளம் அனைத்தும் வியாபார நோக்கத்துடன பெரிய கமர்ஷியல் படங்களை மட்டும் வாங்குகின்றன., CSpace தரமான திரைப்படங்களை வீட்டிற்கு கொண்டு வரும் ஒரு ஊடகமாக முத்திரை பதிக்க உள்ளது என்றும் கூறினார்.

    Cspace ஓடிடி தளத்தில் ஏற்கனவே தியேட்டரில் வெளியான படங்களை மட்டும்தான் இடம்பெறும். அதனால் தியேட்டருக்கு சென்று பார்க்கும் பார்வையாளர்களை அது பாதிக்காத வண்ணம் இது செயல்படும் என்று கூறப்பட்டுள்ளது.

    Cspace-ன் பிரதான நோக்கமே நல்ல சினிமாவை ஊக்குவிக்கவும் தயாரிப்பாளர்கள் மற்றும் பார்வையாளர்களின் நலன்களைப் பாதிக்காமல் இருக்க வேண்டும் என்பதுதான்.

    மாநில, தேசிய மற்றும் சர்வதேச விருதுகளை வென்ற படமும் இதில் இடம்பெரும் என குறிப்பிடப்பட்டுள்ளது. அதன் முதல் கட்டமாக 42 படங்கள் Cspace ஓடிடி தளத்தில் இடம்பெறவுள்ளது. அதில் 35 முழு நீள படங்களும், 6 ஆவணப் படங்களும்,1 குறும்படமும் இடம்பெறவுள்ளது.

    சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்ட திரைப்படங்களை இந்த ஓ.டி.டி. தளத்தில் வெளியிடவும் திட்டமிட்டிருக்கிறார்கள்.

    பே பெர் வியூ என்ற அடிப்படையில் இந்த ஓடிடி தளம் இயங்கவுள்ளது. ஃபீட்சர் (Feature)படங்களை பார்க்க ரூ.75, குறும்படங்களை பார்க்க குறைவான கட்டணங்கள் வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்டணத்தில் பாதி தொகை அந்த படத்தின் தயாரிப்பளருக்கு சென்றடையும் என்று குறிப்பிட்டுள்ளனர். Cspace-ன் app-ஐ கூகுள் ப்ளே ஸ்டோர், ஆப் ஸ்டோரில் இருந்து நாம் டவுன்லோட் செய்துக்கொள்ளலாம்.

    இந்த Cspace ஓடிடி தளம் வெளியானதால் சிறிய பட்ஜெட் படங்களுக்கும், வணிக சமரசமின்றி எடுக்கப்படும் யதார்த்தப் படைப்புகளுக்கும் பெரும் வரமாக இருக்கப்போகிறது என்று எதிர்பார்க்கப்படுகிறது.



     


    • கேரளா அரசாங்கம் வெளியிட போகும் அந்த ஓடிடி தளத்திற்கு சி-ஸ்பேஸ் என்று பெயரிட்டுள்ளனர்.
    • நாளை காலை 9.30 மணி அளவில் கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன் கைராலி தியேட்டரில் சி-ஸ்பேஸ் ஓடிடி தளத்தை துவங்கி வைக்க இருக்கிறார்.

    தற்போதைய சினிமா சூழ்நிலையில் மற்ற அனைத்து மொழி சினிமாகளுக்கு இடையில் எப்போழுதும் மலையாள சினிமா தனித்து இருக்கும்.

    அவர்கள் இயக்கும் படங்கள் ஆகட்டும், அவர்கள் எடுக்கும் கதைகளம் ஆகட்டும் எப்பொழுதும் வித்தியாசமானவை.

    மலையாள சினிமாவின் கதைகளம் எப்போதும் மக்களின் பிரச்சனைகளையும், சமூதாய பிரச்சனைகளையும் அதிகமாக பேசக்கூடியவை.

    பெரும் பெரும் பொருட் செலவில் எடுக்கப்படும் பிற மொழி பல படங்களுக்கு போட்டி போடும் அளவில் எளிமையான படங்களை முந்நிறுத்தி வசூல்களை அள்ளும் திறன் கொண்டது மலையாள சினிமா. அதற்கு உதாரணமாக சமீபத்தில் வெளியாகிய பிரமயுகம்,மஞ்சும்மல் பாய்ஸ். ப்ரேமலு போன்ற படங்களே சாட்சி.

    இப்போது அதற்கு மேலும் ஒரு மகுடம் சூடும் விதமாக கேரளா அரசாங்கம் ஒரு முயற்சி எடுத்துள்ளது.கேரளா அரசாங்கம் இந்தியாவில் முதன் அரசாங்கத்திற்கு சொந்தமான ஓடிடி தளத்தை தொடங்க உள்ளது.இதுவரை ஓடிடி தளங்கள் என்றால் பெருன்பான்மையாக இருப்பது அமேசான் ப்ரைம் வீடியோ, நெட்ஃப்லிக்ஸ், zee 5,ஹாட் ஸ்டார்.ஆஹா போன்றவைகள்தான் .

    கேரளா அரசாங்கம் வெளியிட போகும் அந்த ஓடிடி தளத்திற்கு சி-ஸ்பேஸ் என்று பெயரிட்டுள்ளனர்.

    நாளை காலை 9.30 மணி அளவில் கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன் கைராலி தியேட்டரில் சி-ஸ்பேஸ் ஓடிடி தளத்தை துவங்கி வைக்க இருக்கிறார்.

    சிஸ்பேஸ் ஓடிடி தளம் உருவாக்கிய நோக்கத்தைப் பற்றி செய்தியாளர்களிடம்"சிஸ்பேஸ் OTT துறையில் வளர்ந்து வரும் ஏற்றதாழ்வுகள் மற்றும் உள்ளடக்கத் தேர்வு மற்றும் பரப்புதல் ஆகியவற்றின் அடிப்படையில் பலதரப்பட்ட சவால்களுக்கு ஒரு பிரதிபலிப்பாகும்" என்று கேரள மாநில திரைப்பட மேம்பாட்டுக் கழகத்தின் (KSFDC) தலைவருமான ஷாஜி என் கருண் கூறினார்.

    சிஸ்பேஸ் ஓடிடி தளம் KSFDC என்ற மாநில திரைபட மேம்பாட்டு கழகத்தால் நிர்வகிக்க படும் எனவும்,மலையாள சினிமாவையும், மலையாள திரைத்துறையையும் மேம்படுத்த இந்த முயற்சி முதல் படியாக இருக்கும் எனவும்,இத்தளத்தில் எந்த படங்கள் இடம் பெற வேண்டும் என்பதை 60 நபர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளனர்.

    • இந்த திரைப்படம் கருப்பு வெள்ளையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
    • வரும் மார்ச் 15 ஆம் தேதி சோனி லைவ் ஓடிடி-யில் வெளியாக உள்ளது.

    பிப்ரவரி மாதம் 15-ம் தேதி மம்மூட்டி நடிப்பில், ராகுல் சதாசிவன் இயக்கத்தில், நைட் ஷிஃப்ட் மற்றும் ஒய் நாட் ஸ்டூடியோஸ் தயாரிப்பில் வெளியானது பிரமயுகம் திரைப்படம்.

    இத்திரைப்படத்தில் மம்மூட்டியின் நடிப்பு மிகவும் அபாரமாக இருக்கிறது என்று அனைவரின் பாராட்டையும் பெற்றார். படத்தின் ஒளிப்பதிவும், காட்சி அமைப்பும், ஒலி வடிவமும் இத்திரைப்படத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றது. இதுவரை உலகளவில் 60 கோடி ரூபாயை வசூலித்துள்ளது பிரமயுகம்.

    கடந்த பல ஆண்டுகளாக நாம் திரைப்படங்களை முழு நீள வண்ண திரைபடங்களாவே பார்த்திருக்கிறோம். ஆனால் இந்த திரைப்படம் கருப்பு வெள்ளையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

    திரையரங்குகளில் வெளியாகி மிகவும் வெற்றிகரமாக ஓடிய இத்திரைப்படம் இப்பொழுது வரும் மார்ச் 15 ஆம் தேதி சோனி லைவ் ஓடிடி-யில் வெளியாக உள்ளது.

    • லால் சலாம் திரைப்படம் மார்ச் 8 ஆம் தேதி நெட்ஃப்லிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.
    • மார்ச் 8-ஆம் தேதி டிஸ்னி ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகிறது லவ்வர் திரைப்படம்.

     

    இந்த வார ஓடிடி ரிலீஸ் - 4 படங்கள்

    1. லால் சலாம் {lal salaam} - Netflix

    பிப்ரவரி 9 ஆம் தேதி வெளியான லால் சலாம் படம். மக்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திய படம். இப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த், விஷ்ணு விஷால், விக்ராந்த் போன்ற முன்னணி நடிகர்கள் நடித்திருந்தனர். ரஜினியின் மகளான ஐஷ்வர்யா தான் இத்திரைப்படத்தின் இயக்குனர். இத்திரைப்படத்தை லைகா ப்ரொடக்ஷன் நிறுவனம் தயாரித்துள்ளது. ஏ.ஆர் ரகுமான் இத்திரைப்படத்துக்கு இசையமைத்துள்ளார்.

    லால் சலாம் திரைப்படம் மார்ச் 8 ஆம் தேதி நெட்ஃப்லிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.

     

     

    2. லவ்வர் {lover} - Hot star

    பிப்ரவரி 9-ஆம் தேதி நடிகர் மணிகண்டன், ஸ்ரீகௌரி ப்ரியா, கண்ணா ரவி நடித்து வெளியான படம் தான் "லவ்வர்".இத்திரைப்படத்தை பிரபுராம் வியாஸ் என்பவர் இயக்கியுள்ளார். இவரின் முதல் படம் இதுவே. இவர் இதற்கு முன்பு 'லிவ் இன்"என்ற வெப் சீரீஸை யூ ட்யூபில் இயக்கியுள்ளார்.

    படம் வெளியான சில நாட்களிலையே மக்கள் இடையே நல்ல பெயரையும், நம்பிக்கையையும் இப்படம் பெற்றது. 25 நாட்கள் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி முடித்து. தற்போது வரும் வெள்ளிக்கிழமை மார்ச் 8-ஆம் தேதி டிஸ்னி ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

     

    3. மெரி கிறிஸ்துமஸ் {merry christmas} - Netflix

    விஜய் சேதுபதி மற்றும் கத்ரீனா கைஃப் நடித்து ஜனவரி 12-ஆம் தேதி பொங்கலை முன்னிட்டு வெளியானது மெரி கிறிஸ்துமஸ் படம். இத்திரைப்படம் தமிழ் மற்றும் ஹிந்தி என இரு மொழிகளிலும் வெளியானது. இத்திரைப்படத்தை "அந்தாதுன்" படத்தின் இயகுனரான ஸ்ரீராம் ராஹவன் இயக்கியிருந்தார். மெரி கிறிஸ்துமஸ் வரும் மார்ச் 8-ஆம் தேதி நெட்ஃப்லிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

     

    4. ஹனுமான் {Hanu-man} - zee 5

    ஜனவரி 12-ஆம் தேதி பொங்கலை முன்னிட்டு வெளியான மற்றொரு படம் ஹனுமன். தெலுங்கு மொழியில் திரையரங்கில் வெளியானது. தேஜா சஜ்ஜா முன்னணி ஹீராவாக நடித்திருந்தார். வரலக்ஷ்மி சரத்குமார், அமிர்தா ஐயர், சமுத்திரகனி, வினய் ராய் போன்ற பல நடிகர்களும் நடித்திருந்தனர். இத்திரைப்படத்தை ப்ரசாந்த் வர்மா என்பவர் இயக்கியுள்ளார். ஹனுமன் திரைப்படம் வரும் மார்ச் 8-ஆம் தேதி zee 5 ஓடிடி தளத்தில் வெளியாகிறது




     


     

     

    • நடிகர்கள் அசோக் செல்வன் மற்றும் ஷாந்தனு முதன்மை கதாபாத்திரத்தில் நடித்தனர்.
    • இப்படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்தார்.

    இயக்குனர் எஸ்.ஜெயகுமார் இயக்கத்தில் உருவாகி திரைக்கு வந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற படம் 'புளூ ஸ்டார்' (Blue Star).

    இப்படத்தில் நடிகர்கள் அசோக் செல்வன் மற்றும் ஷாந்தனு முதன்மை கதாபாத்திரத்தில் நடித்தனர். மேலும், கீர்த்தி பாண்டியன், பிரித்விராஜன், பகவதி பெருமாள் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தனர். 

    லெமன் லீப் கிரியேஷன் பிரைவேட் லிமிடெட் மற்றும் நீலம் புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்த இப்படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்தார்.

    இந்நிலையில், திரையரங்கில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற ப்ளூஸ்டார் திரைப்படம் அமேசான் பிரைம் ஒடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

    • சந்தாவின் கீழ் இலவசமாகவே பயன்படுத்த முடியும்.
    • பிரீபெயிம் சலுகையை பெற விரும்புவோர் ரூ. 999 செலுத்த வேண்டும்.

    ஒ.டி.டி. சந்தாவுடன் கூடிய பிரீபெயிட் சலுகைகளை வோடபோன் ஐடியா நிறுவனம் வழங்கி வருகிறது. அந்த வகையில், சோனி லிவ் உடன் வி நிறுவனம் இணைந்து இருக்கிறது. இதன் மூலம் பயனர்கள் விளையாட்டு, தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், திரைப்படங்களை கண்டுகளிக்க முடியும்.

    வி நிறுவனம் கூட்டணி அமைத்து இருப்பதன் மூலம் பயனர்கள் சோனிலிவ் மொபைல் சந்தாவின் கீழ் இவற்றை இலவசமாகவே பயன்படுத்த முடியும். இதே சேவைகளை ஒரு வருடத்திற்கு பெற விரும்புவோர் ரூ. 599 மற்றும் பிரீபெயிம் சலுகையை பெற விரும்புவோர் ரூ. 999 செலுத்த வேண்டும்.

     

    கோப்புப்படம் 

    கோப்புப்படம் 


    அந்த வகையில் இந்த பலன்களுக்கு தனியே செலவழிக்க விரும்பாதவர்கள் வி நிறுவனத்தின் ரூ. 698 சலுகையை பயன்படுத்திக் கொள்ளலாம். வி ரூ. 698 சலுகையில் 10 ஜி.பி. வரையிலான டேட்டா, 28 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. டேட்டா பலன்களை பயன்படுத்துவதற்கு பயனர்கள் வேறு ஏதேனும் பிரீபெயிட் சலுகையை ரிசார்ஜ் செய்திருப்பது அவசியம் ஆகும்.

    ஏற்கனவே குறிப்பிட்டதை போன்றே இந்த சலுகையுடன் ஒரு வருடத்திற்கான சோனிலிவ் மொபைல் சந்தா வழங்கப்படுகிறது. இதில் ஒ.டி.டி. சந்தா மட்டுமின்றி 28 நாட்களுக்கு 10 ஜி.பி. வரையிலான டேட்டாவும் வழங்கப்படுகிறது. இதை கொண்டு நிகழ்ச்சிகளை அதிக தரத்தில் கண்டுகளிக்க முடியும்.

    • அமேசான் பிரைம் வீடியோ நிகழ்ச்சிகளை கண்டுகளிக்க முடியும்.
    • இந்த சலுகையில் தினமும் 2 ஜி.பி. டேட்டா வழங்கப்படுகிறது.

    வி நிறுவனம் தனது பிரீபெயிட் சந்தாதாரர்களுக்கு முற்றிலும் புதிய ரிசார்ஜ் சலுகையை அறிவித்து இருக்கிறது. ரூ. 3 ஆயிரத்து 199 விலையில் அறிவிக்கப்பட்டு இருக்கும் புதிய வி சலுகையில் ஒரு வருடத்திற்கான அமேசான் பிரைம் வீடியோ சந்தா வழங்கப்படுகிறது. இந்த சலுகையில் ரிசார்ஜ் செய்வோர் எவ்வித கூடுதல் கட்டணம் மற்றும் சந்தா செலுத்தாமல் அமேசான் பிரைம் வீடியோ நிகழ்ச்சிகளை கண்டுகளிக்க முடியும்.

    ஒரு வருடத்திற்கான ஒ.டி.டி. பலன்கள் மட்டுமின்றி இந்த சலுகையில் தினமும் 2 ஜி.பி. டேட்டா, தினமும் 100 எஸ்.எம்.எஸ். போன்ற பலன்கள் வழங்கப்படுகிறது. இந்த சலுகையின் வேலிடிட்டி 365 நாட்கள் ஆகும். மற்ற முன்னணி நிறுவனங்களான ரிலையன்ஸ் ஜியோ மற்றும் பாரதி ஏர்டெல் இதே போன்ற வருடாந்திர பலன்களை கொண்ட சலுகையை வழங்கி வருகின்றன.

     


    புதிய சலுகை குறித்து வி வலைதளத்தில் இடம்பெற்றுள்ள பதிவில், ரூ. 3 ஆயிரத்து 199 விலை கொண்ட ரிசார்ஜ் சலுகையில் மொத்தம் 730 ஜி.பி. டேட்டா, ஒரு வருடத்திற்கான அமேசான் பிரைம் சந்தா வழங்கப்படுகிறது. இந்த சலுகையின் வேலிடிட்டி 365 நாட்கள் ஆகும். இத்துடன் அன்லிமிடெட் அழைப்புகள், தினமும் 2 ஜி.பி. டேட்டா, 100 எஸ்.எம்.எஸ். வழங்கப்படுகிறது.

    இதுதவிர புதிய சலுகையில் நள்ளிரவு 12 மணி முதல் அதிகாலை 6 மணி வரை அன்லிமிடெட் டேட்டாவும் வழங்கப்படுகிறது. மேலும் வார இறுதியில் டேட்டா ரோல் ஓவர் சலுகையும் வழங்கப்படுகிறது. இதில் ஒரு வார காலத்தில் பயன்படுத்தி முடிக்காத டேட்டாவை வார இறுதி நாட்களில் பயன்படுத்தும் வசதி வழங்கப்படுகிறது.

    • ஒ.டி.டி. பலன்களை மட்டுமே வழங்குகிறது.
    • வி மூவிஸ் மற்றும் டி.வி. ப்ரோ சந்தா வழங்குகிறது.

    ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் சமீபத்தில் ஜியோடிவி பிரீமியம் சந்தா வழங்கும் புதிய பிரீபெயிட் சலுகைகளை அறிவித்தது. அந்த வரிசையில், தற்போது வி (வோடபோன் ஐடியா) நிறுவனம் வி-யின் ஒ.டி.டி. பலன்களை வழங்கும் புதிய சலுகையை அறிவித்து இருக்கிறது.

    சத்தமின்றி அறிவிக்கப்பட்டு இருக்கும் புதிய வி சலுகையின் விலை ரூ. 202 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. எனினும், இது வி வழங்கி வரும் வழக்கமான சலுகைகள் போன்றில்லாமல் ஒ.டி.டி. பலன்களை மட்டுமே வழங்குகிறது.

     

    கோப்புப்படம்

    கோப்புப்படம்


    ஒ.டி.டி. பலன்களை வழங்கும் வி சலுகையுடன் வி மூவிஸ் மற்றும் டி.வி. ப்ரோ சந்தா வழங்குகிறது. இத்துடன் 13-க்கும் அதிக ஒ.டி.டி. சேவைகளை வழங்குகிறது. இதில் வாய்ஸ் காலிங், எஸ்.எம்.எஸ். அல்லது டேட்டா போன்ற எந்த பலன்களும் வழங்கப்படவில்லை. இந்த சலுகை ஒரு மாத காலத்திற்கு வேலிடிட்டி கொண்டுள்ளது.

    வி. ரூ. 202 சலுகையுடன் எந்தெந்த ஒ.டி.டி. பலன்கள் வழங்கப்படும் என்பது குறித்து எந்த தகவலும் வழங்கப்படவில்லை. எனினும், இதில் சோனி லிவ், ஜீ5, டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார், சன் நெக்ஸ்ட், ஹங்காமா மற்றும் பல்வேறு ஒ.டி.டி. பலன்களை வழங்கும் என்று தெரிகிறது. இந்த சலுகை வி செயலி மற்றும் வலைதளங்களில் பட்டியலிடப்பட்டு இருக்கிறது.

    • பயனர்களுக்கு 14 ஒ.டி.டி. சேவைகளின் சந்தா வழங்கப்படுகிறது.
    • மூன்று பிரீபெயிட் சலுகைகளை ஜியோ அறிவித்தது.

    ஜியோ நிறுவனம் புதிய ஜியோடிவி பிரீமியம் சந்தாவை இந்திய சந்தையில் அறிவித்து இருக்கிறது. இந்த ஒற்றை சலுகையில் பயனர்களுக்கு அதிகபட்சமாக 14 ஒ.டி.டி. சேவைகளின் சந்தா வழங்கப்படுகிறது. இத்துடன் ஜியோடிவி பிரீமியம் சந்தா வழங்கும் மூன்று பிரீபெயிட் சலுகைகளையும் ஜியோ அறிவித்து இருக்கிறது.

    புதிய சலுகைகள் மாதாந்திர, காலாண்டு மற்றும் வருடாந்திர அடிப்படையில் வழங்கப்படுகிறது. இவற்றின் விலை ரூ. 398 என்று துவங்குகிறது. இவற்றுடன் அன்லிமிடெட் டேட்டா, வாய்ஸ் மற்றும் எஸ்.எம்.எஸ். போன்ற பலன்கள் வழங்கப்படுகிறது. அழைப்புகள், எஸ்.எம்.எஸ். மட்டுமின்றி பயனர்களுக்கு டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார், அமேசான் பிரைம் வீடியோ, சோனி லிவ், ஜீ5 மற்றும் பல்வேறு சலுகைகள் வழங்கப்படுகிறது.

     


    இந்த சலுகைகள் இன்று (டிசம்பர் 15) முதல் வழங்கப்படுகிறது. அனைத்து சலுகைகளுடன் தினமும் 2 ஜி.பி. டேட்டா, 100 எஸ்.எம்.எஸ். போன்ற பலன்கள் வழங்கப்படுகிறது. ஜியோவின் புதிய சலுகைகளின் விலை ரூ. 398, ரூ. 1198 மற்றும் ரூ. 4 ஆயிரத்து 498 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இவற்றுடன் அன்லிமிடெட் டேட்டா, வாய்ஸ் கால், எஸ்.எம்.எஸ். பலன்கள் மற்றும் 14 ஒ.டி.டி. சந்தாக்கள் வழங்கப்படுகின்றன.

    ரூ. 398 சலுகையுடன் 12 ஒ.டி.டி. சந்தாக்களும், ரூ. 1198 மற்றும் ரூ. 4 ஆயிரத்து 498 சலுகைகளுடன் 14 ஒ.டி.டி. சந்தாக்கள் வழங்கப்படுகிறது. ஒரு வருட ரிசார்ஜ் சலுகையுடன் ஜியோ எளிய மாத தவணை முறை வசதியை வழங்குகிறது. மூன்று பிரீபெயிட் ரிசார்ஜ்களிலும் அன்லிமிடெட் வாய்ஸ் கால், தினமும் 100 எஸ்.எம்.எஸ்., தினமும் 2 ஜி.பி. டேட்டா வழங்கப்படுகிறது.

    ஜியோடிவி பிரீமியம் சந்தா ஜியோ சிம் பயனர்களுக்கானது ஆகும். இத்துடன் ரூ. 148 விலையில் டேட்டா ஆட் ஆன் வவுச்சர் வழங்கப்படுகிறது. இதில் 10 ஜி.பி. டேட்டா மற்றும் 12 ஒ.டி.டி. சந்தா வழங்கப்படுகிறது. இந்த சலுகையின் விலை 28 நாட்கள் ஆகும். ஜியோடிவி பிரீமியம் சலுகைகள் நாளை (டிசம்பர் 16) முதல் வழங்கப்படுகிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • புதிய சலுகையில் அமேசான் பிரைம் வீடியோ சந்தா வழங்கப்படுகிறது.
    • இந்த சலுகையில் அன்லிமிடெட் காலிங், 5ஜி டேட்டா வழங்கப்படுகிறது.

    இந்திய டெலிகாம் சந்தையில் முன்னணி நிறுவனமான ஜியோ தொடர்ச்சியாக வருடாந்திர ரிசார்ஜ் சலுகைகளை அறிவித்து வருகிறது. இவற்றுடன் ஒ.டி.டி. சந்தாக்களும் வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வரிசையில், ரிலையன்ஸ் ஜியோ அறிவித்து இருக்கும் புதிய சலுகையில் அமேசான் பிரைம் வீடியோ மொபைல் எடிஷன் வழங்கப்படுகிறது.

    ஜியோவின் புதிய ரூ. 3,227 பிரீபெயிட் சலுகையில் அமேசான் பிரைம் மொபைல் எடிஷன் சந்தா வழங்கப்படுகிறது. இந்த சலுகை 365 நாட்களுக்கான வேலிடிட்டி வழங்கப்படுகிறது. இத்துடன் தினமும் 2 ஜி.பி. டேட்டா, 100 எஸ்.எம்.எஸ்., அன்லிமிடெட் காலிங் மற்றும் அன்லிமிடெட் 5ஜி டேட்டா வழங்கப்படுகிறது. பயனர்கள் இந்த சலுகையை மை ஜியோ செயலி அல்லது ஜியோ வலைதளத்தில் ரிசார்ஜ் செய்து கொள்ளலாம்.

     

    சமீபத்தில் மத்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் வெளியிட்டு இருக்கும் தகவல்களில் ஜியோ நிறுவனம் இந்திய சந்தையின் முன்னணி இணைய சேவை வழங்கும் நிறுவனமாக உருவெடுத்து இருப்பது தெரியவந்துள்ளது. சந்தையில் ஜியோ நிறுவனம் மட்டும் 52 சதவீத பங்குகளை பெற்று இருக்கிறது.

    ஜியோ சேவையை 442 மில்லியன் வயர்லெஸ் சந்தாதாரர்களும், 9.4 மில்லியன் வயர்டு பிராட்பேண்ட் பயனர்களும் பயன்படுத்தி வருகின்றனர்.

    ×