என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "old lady"
- வீட்டில் துளசியம்மாள் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
- இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் நசியனூர் கதிரம்பட்டி ரோடு பகுதியை சேர்ந்தவர் துளசியம்மாள் (68). இவரது மகன் திருநாவுக்கரசு நசியனூர் கலவை ஓரம் தெரு பகுதியில் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
துளசியம்மாள் தினமும் மகன் வீட்டுக்கு வந்து சாப்பிட்டு பின்னர் இரவில் கதிரம்பட்டியில் உள்ள தனது வீட்டில் தூங்க சென்று விடுவார்.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக துளசியம்மாள் உடல் நலம் பாதிக்கப்பட்டு அவதி அடைந்து வந்தார். சம்பவத்தன்று வழக்கம் போல் மகன் வீட்டில் சாப்பிட்டுவிட்டு இரவில் தனது வீட்டிற்கு தூங்க சென்று விட்டார்.
காலை திருநாவுக்கரசு தனது தாயை பார்ப்ப தற்காக அவரது வீட்டிற்கு சென்றார். அப்போது வீட்டில் உள்ள அறையில் துளசியம்மாள் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இது குறித்து சித்தோடு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசாரின் முதற் கட்ட விசாரணையில் உடல்நிலை குறைவால் மூதாட்டி தற்கொலை செய்து கொண்டிருப்பது தெரிய வந்தது.
இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- புதுவை ரெட்டியார்பாளையம் மரியாள் நகரை சேர்ந்தவர் பிரமிளா.
- இவரது ஒரு மகன் மற்றும் ஒரு மகள் ஆகியோர் பிரான்சில் வசித்து வருகிறார்கள்.
புதுச்சேரி:
புதுவை ரெட்டியார்பாளையம் மரியாள் நகரை சேர்ந்தவர் பிரமிளா. இவரது பெரியம்மா சாரா ஜோஸ்பின் (வயது82). பிரெஞ்சு குடியுரிமை பெற்றவர். இவரது ஒரு மகன் மற்றும் ஒரு மகள் ஆகியோர் பிரான்சில் வசித்து வருகிறார்கள். மற்றொரு மகள் புதுவை பாக்கமுடையான்பட்டில் வசித்து வருகிறார்.
பிரமிளா பராமரிப்பில் சாராஜோஸ்பின் இருந்து வந்தார். இதற்கிடையே சாராஜோஸ்பினுக்கு சிறுநீரக பிரச்சினை மற்றும் ரத்த அழுத்த பிரச்சினை காரணமாக அடிக்கடி மயங்கி கீழே விழுந்து விடுவார். அவ்வப்போது அவரை பிரமிளா மீட்டு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்று சிகிச்சை அளிப்பார்.
இந்தநிலையில் சம்பவத்தன்று சாராஜோஸ்பின் வீட்டின் கழிவறைக்கு சென்றார். அப்போது தடுமாறி கீழே விழுந்ததில் அவருக்கு நெற்றி மற்றும் வயிற்றில் காயம் ஏற்பட்டது. உடனே அவரை பிரமிளா மீட்டு கதிர்காமம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதித்தார். அங்கு சிகிச்சை பெற்று வந்த சாராஜோஸ்பின் சிகிச்சை பலனின்றி நேற்று காலை பரிதாபமாக இறந்து போனார்.
இதுகுறித்து பிரமிளா கொடுத்த புகாரின் பேரில் ரெட்டியார்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- மர்மநபர் இவரது வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து மூதாட்டியின் தலையில் செங்கலால் தாக்கி உள்ளார்
- 2 பவுன் தங்க செயினையும், அவரது செல்போனையும் பறித்து கொண்டு தப்பியோடி விட்டார்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி முள்ளக்காடு வடக்கு தெருவை சேர்ந்தவர் ராசம்மாள் (வயது 81). இவரது கணவர் இறந்து விட்ட நிலையில் ராசம்மாள் தனியாக வசித்து வந்தார். நேற்று இரவு மர்மநபர் இவரது வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து ராசம்மாளின் தலையில் செங்கலால் தாக்கி உள்ளார். இதில் மயங்கி விழுந்தார். பின்னர் அவரின் காதை அறுத்து அவர் அணிந்திருந்த ஒரு பவுன் கம்மல் மற்றும் 2 பவுன் தங்க செயினையும், அவரது செல்போனையும் பறித்து கொண்டு தப்பியோடி விட்டார்.
இன்று காலை ராசம்மாள் வீட்டில் மயங்கி கிடப்பதை பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து முத்தையாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மணியனூர் அங்காளம்மன் கோவிலில் இருந்து ஆதிதிராவிடர் தெரு காங்கிரீட் ரோட்டில் செல்வதற்காக காரை எடுத்தபோது, அவர் மீது எதிர்பாராத விதமாக மோதியது.
- அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் சின்னம்மாள் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
பரமத்தி வேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா மணியனூர் ஆதிதிராவிடர் தெருவை சேர்ந்தவர் சின்னம்மாள் (வயது 75). இவர் 100 நாள் வேலைக்கு சென்று வந்தார். இந்நிலையில் நேற்று காலை 8.30 மணியளவில் மணியனூர் அங்காளம்மன் கோவில் முன்பு நின்று கொண்டிருந்தார். அப்போது, சேலம் அஸ்தம்பட்டி மீனாட்சி நகர் பகுதியை சேர்ந்த பிரேம்குமார் என்பவர், சின்னம்மாள் நின்று கொண்டிருப்பதை கவனிக்காமல் மணியனூர் அங்காளம்மன் கோவிலில் இருந்து ஆதிதிராவிடர் தெரு காங்கிரீட் ரோட்டில் செல்வதற்காக காரை எடுத்தபோது, அவர் மீது எதிர்பாராத விதமாக மோதியது.
அருகில் இருந்தவர்கள் சத்தம் போடவே பிரேம்குமார் உடனே காரை நிறுத்தினார். கார் மோதியதில் சின்னம்மாள் பலத்த காயமடைந்தார். அவரை மீட்டு ஆம்புலென்ஸ் மூலம் திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் சின்னம்மாள் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து நல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில், விபத்து ஏற்படுத்திய பிரேம்குமாரை கைது செய்ததுடன், காரையும் பறிமுதல் செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தனியார் நிறுவன ஊழியர்-மூதாட்டி மாயமாகினர்.
- இதுகுறித்து மகன் போஸ் கொடுத்த புகாரின் பேரில் விளக்குத்தூண் காவல்நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மதுரை
மதுரை பெத்தானியபுரம் பாத்திமா நகரை சேர்ந்தவர் அழகர்சாமி (வயது34). வெள்ளரிப்பட்டியில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றினார். இவருக்கு திருமணமாகி மனைவி, 1 ஆண் குழந்தை உள்ளனர்.
கடந்த 23-ந் தேதி தீபாவளியையொட்டி மாமனார் வீட்டிற்கு மனைவி, குழந்தைகளை அழைத்து சென்றார். அதன் பிறகு கடந்த 2-ந் தேதி முதல் அழகர்சாமியை காணவில்லை. அவரது செல்போனும் அனைத்து வைக்கப்பட்டிருந்தது. பல இடங்களில் தேடி பார்த்தும் தகவல் கிடைக்கவில்லை.
இதுகுறித்து மனைவி பாண்டீஸ்வரி கொடுத்த புகாரின் பேரில் கரிமேடு காவல் நிலைய ஆய்வாளர் முகமது இத்ரிஸ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
மூதாட்டி
மதுரை சுவாமி சன்னதி, வடுக தட்டாரசந்தை சேர்ந்தவர் முத்துசாமி. இவரது மனைவி கமலம் (75).
கடந்த 7-ந் தேதி காலை வெளியே சென்ற மூதாட்டி அதன் பின்னர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடி பார்த்தும் தகவல் கிடைக்கவில்லை.
இதுகுறித்து மகன் போஸ் கொடுத்த புகாரின் பேரில் விளக்குத்தூண் காவல்நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் திடீரென மூதாட்டி அணிந்திருந்த தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பி சென்று மறைந்தனர்.
- பல்லடம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்
பல்லடம் :
பல்லடம் வடுகபாளையம் முனியப்பன் கோயில் வீதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணி(62) இவரது மனைவி ஜானகி(56) கணவன் - மனைவி இருவரும் உறவினர் வீட்டு சுப நிகழ்ச்சிக்கு செல்வதற்காக சம்பவத்தன்று மாலை ஸ்கூட்டரில் பல்லடம் அருகே உள்ள சாமி கவுண்டம்பாளையம் நோக்கி சென்று கொண்டிருந்தனர்.
கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், சாமி கவுண்டம்பாளையம் பிரிவு ரோட்டில் செல்லும் போது, இவர்களது பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் திடீரென அருகில் வந்து மூதாட்டி அணிந்திருந்த 5 பவுன் தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் தப்பி சென்று மறைந்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்து செய்வதறியாது திகைத்து நின்ற தம்பதியினர். பின்னர் இதுகுறித்து பல்லடம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். வழக்கு பதிவு செய்த போலீசார் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து அந்த வாலிபர்களை தேடிவந்தனர். இந்த நிலையில், பல்லடம் அருகே உள்ள காரணம்பேட்டை- பருவாய் ரோட்டில், பல்லடம் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, அந்த வழியே மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் போலீசாரை கண்டதும் தப்பிச்செல்ல முயன்றனர் அவர்களை துரத்தி பிடித்த போலீசார் போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்ட போது அவர்கள் சாமி கவுண்டம்பாளையத்தில் மூதாட்டியிடம் தங்கச் சங்கிலி வழிப்பறி செய்தவர்கள் என்பது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் விசாரணையில், கோவை புலியகுளத்தைச் சேர்ந்த மாரிமுத்து மகன் அப்பாஸ் (23) திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதியைச் சேர்ந்த சாகுல் அமீது மகன் (திலீப் ராஜ் 30,)ஆகிய இருவரையும் கைது செய்து அவர்களிடமிருந்து மோட்டார் சைக்கிள் ஒன்றையும் பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
- சம்பவத்தன்று இரவு சரஸ்வதி வீட்டில் தூக்குபோட்டு தற்கொலைக்கு முயன்றார்.
- அவரது குடும்பத்தினர் அவரை மீ்ட்டு பெருந்துறையில் உள்ள ஈரோடு அரசு மருத்துவக்கல்லூரி மருத்து வமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் பவானி தாலுகா அய்யம்பாளையம் புதூரை சேர்ந்த பழனிசாமி மனைவி சரஸ்வதி(67). காய்கறி வியாபாரி.
இந்நிலையில் சம்பவத்தன்று இரவு சரஸ்வதி வீட்டில் தூக்கு போட்டு தற்கொலைக்கு முயன்றார்.
இதைப்பார்த்த அவரது குடும்பத்தினர் அவரை மீ்ட்டு பெருந்துறையில் உள்ள ஈரோடு அரசு மருத்துவக்கல்லூரி மருத்து வமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.
அங்கு மருத்துவர்கள் பரிசோதித்து விட்டு சரஸ்வதி வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து சரஸ்வதியின் மகன் கார்த்தி கவுந்தப்பாடி போலீசில் புகார் அளித்தார். இதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
- திருமங்கலம் அருகே மூதாட்டியை கட்டிப்போட்டு நகை கொள்ளையடித்த 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
- அவர்கள் தங்களை உறவினர்கள் என அறிமுகப்படுத்திக் கொண்டதோடு திருமணத்திற்காக பத்திரிகை கொடுக்க வந்திருப்பதாக தெரிவித்தனர்.
திருமங்கலம்
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள டி கல்லுப்பட்டி மேட்டு தெருவை சேர்ந்தவர் ரவி. இவருடைய மனைவி ருக்மணி வயது (70). இவர்களது மகன், மகள்களுக்கு திருமணம் ஆகி விட்டது.
இதன் காரணமாக ரவி- ருக்குமணி தம்பதி தனியாக வசித்து வந்தனர். இந்த நிலையில் நேற்று மாலை ரவி வெளியே புறப்பட்டு சென்றார். ருக்மணி மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் 3 வாலிபர்கள் வீட்டுக்கு வந்தனர். அவர்கள் தங்களை உறவினர்கள் என அறிமுகப்படுத்திக் கொண்டதோடு திருமணத்திற்காக பத்திரிகை கொடுக்க வந்திருப்பதாக தெரிவித்தனர்.
ருக்மணி 3 பேரையும் இதுவரை பார்த்ததில்லை. இருப்பினும் வீட்டுக்குள் அழைத்து அமரச் செய்தார்.
உறவினர்கள் போல் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்த 3 வாலிபர்கள் திடீரென்று ருக்மணியை கத்தியை காட்டி மிரட்டி அவரது வாயில் துணியை வைத்து அடைத்து கையை துண்டால் கட்டினர். பின்னர் அவர் அணிந்திருந்த 6 பவுன் நகையை பறித்துக் கொண்டு 3 பேரும் மின்னல் வேகத்தில் அங்கிருந்து தப்பினர்.
இதை சற்றும் எதிர்பாராத ருக்மணி செய்வதறியாது திகைத்தார். சிறிது நேரத்தில் அங்கு வந்த அக்கம் பக்கத்தினர் ருக்மணி கட்டிப்போட்டு கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
இந்த சம்பவம் குறித்து டி. கல்லுப்பட்டி போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்து போலீசார் விசாரணை நடத்தினர். மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டது.
உறவினர்கள் போல் நடித்து மூதாட்டியை கட்டிப்போட்டு நகையை பறித்துச் சென்ற 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- லட்சுமி தனது பேரப் பிள்ளைகளுக்காகபட்டாசு வாங்கி விட்டு உடன்குடி பஸ் நிலையத்தில் காத்திருந்தார்.
- பேரனுக்கு வாங்கிச் சென்ற பட்டாசு திருடுபோய் விட்டது என்று பாட்டி கண்ணீர் விட்டார்.
உடன்குடி:
உடன்குடி அருகே உள்ள சமத்துவ நகரை சேர்ந்தவர் லட்சுமி (வயது 60). இவர் தனது பேரப் பிள்ளைகளுக்காக உடன்குடியில் பட்டாசு வாங்கி ஒரு பையில் வைத்துக் கொண்டு பஸ்சுக்காக உடன்குடி பஸ் நிலையத்தில் காத்திருந்தார். அங்கு வந்த ஒரு மர்ம நபர் பாட்டியிடம் பேச்சுக் கொடுத்து கொண்டே இருந்தார். பேரக் குழந்தைகளுக்கு பட்டாசு வாங்கி செல்வதாக அவர் கூறியுள்ளார்.
பஸ் நிலையம் உள்ளே ஒவ்வொரு பஸ் வரும்போதும் பாட்டி எழுந்து சென்று இது திசையன்விளை போகுமா? என்று கேட்டுக் கொண்டு இருந்தார். அப்போது பஸ்சில் விவரம் கேட்டு விட்டு வந்து பார்த்த போது, தனது பை பார்சல் காணாமல் போய்விட்டது தெரிய வந்தது. தன்னிடம் பேச்சு கொடுத்த 40 வயது மிக்க நபர் தான் பட்டாசு பார்சலை தூக்கிச் சென்று விட்டார் என்பதைஅறிந்து கொண்டார், பேரனுக்கு வாங்கிச் சென்ற பட்டாசு இப்படி திருடுபோய் விட்டது என்று கவலைப்பட்டு கண்ணீர் விட்டார் பாட்டி. இது பஸ் நிலையத்தில் இருந்தவர்கள் இடையே பரிதாபத்தை வரவழைத்தது,
- மகேஸ்வரி நேற்று காலை சின்னசேலம் பழைய பஸ் நிலையம் அருகே உள்ள பேங்கில் பணம் எடுக்க சென்றார்.
- 62,000 ரொக்கம் பணம், செல்போன் இருந்ததாக முதியவர் கூறினார்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் பகுதியை சேர்ந்தவர் மகேஸ்வரி (வயது 62) இவரது கணவர் அருணாச்சலம் (73). இவர்களுக்கு பிரசாந்த், கவாஸ்கர், என்ற 2 மகன்கள் உள்ளனர். இந்நிலையில் மகேஸ்வரி நேற்று காலை சின்னசேலம் பழைய பஸ் நிலையம் அருகே உள்ள பேங்கில் பணம் எடுக்க சென்றார். பின்னர் பேங்கில் பணம் எடுத்துவிட்டு வீட்டிற்கு சாலையில் நடந்து வந்துள்ளார்.
அப்போது மகேஸ்வரி மூதாட்டியின் பின்னால் பதிவெண் இல்லா மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் கண் இமைக்கும் நேரத்தில் மூதாட்டியிடம் இருந்து பணப்பையை பறித்துக் கொண்டு தப்பி விட்டனர். இதனையடுத்து மூதாட்டி சத்தம் ேபாட்டுள்ளார். இதனால் அங்கிருந்தவர்கள் பணத்தை திருடிச் சென்றவர்களை பிடிக்க முயன்றனர் ஆனால் மர்ம நபர்கள் கண் இமைக்கும் நேரத்தில் சென்று விட்டனர். 62,000 ரொக்கம் பணம், செல்போன் இருந்ததாக முதியவர் கூறினார். இதுகுறித்து சின்னசேலம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் சின்னசேலம் போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சி மூலம் கொள்ளையர்களை பிடிக்க தீவிரமாக தேடி வருகின்றனர்.
- இளம்பிள்ளை அருகே தப்ப குட்டை கிராமம் கிருஷ்ணா ரெட்டியூர் பகுதியைச் சேர்ந்தவர் மூதாட்டி கிணற்றில் நேற்று பிணமாக மிதந்தார்.
- இது குறித்து அவர் மகுடஞ்சாவடி போலீசருக்கு தகவல் கொடுத்தார். போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
சேலம்:
இளம்பிள்ளை அருகே தப்ப குட்டை கிராமம் கிருஷ்ணா ரெட்டியூர் பகுதியைச் சேர்ந்தவர் தும்பாயி (வயது85). இவர் பல்வேறு பகுதிகளுக்கு சென்று பிச்சை எடுத்து வாழ்ந்து வந்தார். இந்நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த சரவணன் மற்றும் சித்துராஜ் ஆகியோருக்கு சொந்தமான கிணற்றில் நேற்று பிணமாக மிதந்தார்.
நேற்று காலை சித்துராஜ் தனது தோட்டத்திற்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக கிணற்றில் மின் மோட்டாரை இயக்க சென்றபோது கிணற்றிலிருந்து கடும் துர்நாற்றம் வீசியது. அப்போது கிணற்றை எட்டிப் பார்த்தபோது தும்பாயி பிணமாக கிடந்தது தெரியவந்தது.
இது குறித்து அவர் மகுடஞ்சாவடி போலீசருக்கு தகவல் கொடுத்தார். போலீசார் விசாரித்து வருகிறார்கள். தீயணைப்பு துறையினர் மூலம் பிணத்தை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
- சரஸ்வதி நேற்று பரப்பாடியில் இருந்து திசையன்விளைக்கு தனியார் பஸ்சில் சென்றார்.
- திசையன்விளை பஸ் நிலையத்தில் இறங்கி பார்த்தபோது அவரது கழுத்தில் கிடந்த 4 பவுன் தங்க சங்கிலியை காணவில்லை.
நெல்லை:
நாங்குநேரி அருகே உள்ள பரப்பாடி பகுதியை அடுத்த பாப்பான்குளம் அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சந்திரன். இவரது மனைவி சரஸ்வதி (வயது 59). இவர் நேற்று பரப்பாடியில் இருந்து திசையன்விளைக்கு தனியார் பஸ்சில் சென்றார்.
திசையன்விளை பஸ் நிலையத்தில் இறங்கி பார்த்தபோது அவரது கழுத்தில் கிடந்த 4 பவுன் தங்க சங்கிலியை காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் திசையன்விளை போலீசில் புகார் அளித்தார்.
அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கூட்ட நெரிசலை பயன்படுத்தி மூதாட்டியின் கழுத்தில் கிடந்த செயினை பறித்துச் சென்ற மர்ம நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருட்டுபோன செயினின் மதிப்பு ரூ.1 லட்சம் ஆகும்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்