என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
புதுச்சேரி
தவறி விழுந்த மூதாட்டி பலி
- புதுவை ரெட்டியார்பாளையம் மரியாள் நகரை சேர்ந்தவர் பிரமிளா.
- இவரது ஒரு மகன் மற்றும் ஒரு மகள் ஆகியோர் பிரான்சில் வசித்து வருகிறார்கள்.
புதுச்சேரி:
புதுவை ரெட்டியார்பாளையம் மரியாள் நகரை சேர்ந்தவர் பிரமிளா. இவரது பெரியம்மா சாரா ஜோஸ்பின் (வயது82). பிரெஞ்சு குடியுரிமை பெற்றவர். இவரது ஒரு மகன் மற்றும் ஒரு மகள் ஆகியோர் பிரான்சில் வசித்து வருகிறார்கள். மற்றொரு மகள் புதுவை பாக்கமுடையான்பட்டில் வசித்து வருகிறார்.
பிரமிளா பராமரிப்பில் சாராஜோஸ்பின் இருந்து வந்தார். இதற்கிடையே சாராஜோஸ்பினுக்கு சிறுநீரக பிரச்சினை மற்றும் ரத்த அழுத்த பிரச்சினை காரணமாக அடிக்கடி மயங்கி கீழே விழுந்து விடுவார். அவ்வப்போது அவரை பிரமிளா மீட்டு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்று சிகிச்சை அளிப்பார்.
இந்தநிலையில் சம்பவத்தன்று சாராஜோஸ்பின் வீட்டின் கழிவறைக்கு சென்றார். அப்போது தடுமாறி கீழே விழுந்ததில் அவருக்கு நெற்றி மற்றும் வயிற்றில் காயம் ஏற்பட்டது. உடனே அவரை பிரமிளா மீட்டு கதிர்காமம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதித்தார். அங்கு சிகிச்சை பெற்று வந்த சாராஜோஸ்பின் சிகிச்சை பலனின்றி நேற்று காலை பரிதாபமாக இறந்து போனார்.
இதுகுறித்து பிரமிளா கொடுத்த புகாரின் பேரில் ரெட்டியார்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்