search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மூதாட்டி தூக்குபோட்டு தற்கொலை
    X

    மூதாட்டி தூக்குபோட்டு தற்கொலை

    • சம்பவத்தன்று இரவு சரஸ்வதி வீட்டில் தூக்குபோட்டு தற்கொலைக்கு முயன்றார்.
    • அவரது குடும்பத்தினர் அவரை மீ்ட்டு பெருந்துறையில் உள்ள ஈரோடு அரசு மருத்துவக்கல்லூரி மருத்து வமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் பவானி தாலுகா அய்யம்பாளையம் புதூரை சேர்ந்த பழனிசாமி மனைவி சரஸ்வதி(67). காய்கறி வியாபாரி.

    இந்நிலையில் சம்பவத்தன்று இரவு சரஸ்வதி வீட்டில் தூக்கு போட்டு தற்கொலைக்கு முயன்றார்.

    இதைப்பார்த்த அவரது குடும்பத்தினர் அவரை மீ்ட்டு பெருந்துறையில் உள்ள ஈரோடு அரசு மருத்துவக்கல்லூரி மருத்து வமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.

    அங்கு மருத்துவர்கள் பரிசோதித்து விட்டு சரஸ்வதி வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து சரஸ்வதியின் மகன் கார்த்தி கவுந்தப்பாடி போலீசில் புகார் அளித்தார். இதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

    Next Story
    ×