search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "hanged herself"

    • புதுவை முத்தியால் பேட்டை பகுதியை சேர்ந்தவர் மூர்த்தி
    • இவரது மனைவி புஷ்பா இவர்களது மகள் மதினா

    புதுச்சேரி:

    புதுவை முத்தியால் பேட்டை பகுதியை சேர்ந்தவர் மூர்த்தி இவரது மனைவி புஷ்பா இவர்களது மகள் மதினா வயது 14) இவர் அங்குள்ள அரசு பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார்.

     கடந்த சில வருடங்களுக்கு முன்பு மூர்த்தியும் அவரது மனைவி புஷ்பாவும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து தனித்தனியே வசித்து வருகின்றனர். இதனால் மதினா அதே பகுதியில் உள்ள தனது சித்தி வீட்டில் தங்கி பள்ளிக்கு சென்று வந்தார்.

    இதற்கிடையே தாய்-தந்தை பிரிந்து வசித்து வந்ததால் மதினா மன வருத்தத்தில் இருந்து வந்தார். ஒரு சில முறை தற்கொலைக்கும் முயன்றார். அப்போதெல்லாம் அவரது சித்தி-சித்தப்பா ஆகியோர் தடுத்து சமாதானம் செய்து வந்தனர்.

     இந்த நிலையில் நேற்று மாலை மதினாவின் சித்தி-சித்தப்பா பொருட்கள் வாங்க கடைக்கு சென்றனர். அப்போது தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்த மதினா வீட்டின் மின் விசிறியில் சேலையால் தூக்கு போட்டு தொங்கினார்.

    பொருட்கள் வாங்கிக்கொண்டு வீடு திரும்பிய மதினாவின் சித்தி-சித்தப்பா வீடு உட்புறமாக பூட்டப்பட்டிருப்பதை கண்டு திடுக்கிட்டனர். சந்தேகமடைந்து அவர்கள் ஜன்னல் வழியாக பார்த்த போது மதினா தூக்கு போட்டு தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    உடனே அக்கம் பக்கத்தி னர் உதவியுடன் கதவை உடைத்து தூக்கில் இருந்து மதினாவை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் மதினா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இது குறித்த புகாரின் பேரில் முத்தியால் பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • வீட்டில் துளசியம்மாள் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    • இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் நசியனூர் கதிரம்பட்டி ரோடு பகுதியை சேர்ந்தவர் துளசியம்மாள் (68). இவரது மகன் திருநாவுக்கரசு நசியனூர் கலவை ஓரம் தெரு பகுதியில் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

    துளசியம்மாள் தினமும் மகன் வீட்டுக்கு வந்து சாப்பிட்டு பின்னர் இரவில் கதிரம்பட்டியில் உள்ள தனது வீட்டில் தூங்க சென்று விடுவார்.

    இந்நிலையில் கடந்த சில நாட்களாக துளசியம்மாள் உடல் நலம் பாதிக்கப்பட்டு அவதி அடைந்து வந்தார். சம்பவத்தன்று வழக்கம் போல் மகன் வீட்டில் சாப்பிட்டுவிட்டு இரவில் தனது வீட்டிற்கு தூங்க சென்று விட்டார்.

    காலை திருநாவுக்கரசு தனது தாயை பார்ப்ப தற்காக அவரது வீட்டிற்கு சென்றார். அப்போது வீட்டில் உள்ள அறையில் துளசியம்மாள் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    இது குறித்து சித்தோடு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசாரின் முதற் கட்ட விசாரணையில் உடல்நிலை குறைவால் மூதாட்டி தற்கொலை செய்து கொண்டிருப்பது தெரிய வந்தது.

    இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சம்பவத்தன்று இரவு சரஸ்வதி வீட்டில் தூக்குபோட்டு தற்கொலைக்கு முயன்றார்.
    • அவரது குடும்பத்தினர் அவரை மீ்ட்டு பெருந்துறையில் உள்ள ஈரோடு அரசு மருத்துவக்கல்லூரி மருத்து வமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் பவானி தாலுகா அய்யம்பாளையம் புதூரை சேர்ந்த பழனிசாமி மனைவி சரஸ்வதி(67). காய்கறி வியாபாரி.

    இந்நிலையில் சம்பவத்தன்று இரவு சரஸ்வதி வீட்டில் தூக்கு போட்டு தற்கொலைக்கு முயன்றார்.

    இதைப்பார்த்த அவரது குடும்பத்தினர் அவரை மீ்ட்டு பெருந்துறையில் உள்ள ஈரோடு அரசு மருத்துவக்கல்லூரி மருத்து வமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.

    அங்கு மருத்துவர்கள் பரிசோதித்து விட்டு சரஸ்வதி வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து சரஸ்வதியின் மகன் கார்த்தி கவுந்தப்பாடி போலீசில் புகார் அளித்தார். இதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

    ×