search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    8-ம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை
    X

    கோப்பு படம்.

    8-ம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை

    • புதுவை முத்தியால் பேட்டை பகுதியை சேர்ந்தவர் மூர்த்தி
    • இவரது மனைவி புஷ்பா இவர்களது மகள் மதினா

    புதுச்சேரி:

    புதுவை முத்தியால் பேட்டை பகுதியை சேர்ந்தவர் மூர்த்தி இவரது மனைவி புஷ்பா இவர்களது மகள் மதினா வயது 14) இவர் அங்குள்ள அரசு பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார்.

    கடந்த சில வருடங்களுக்கு முன்பு மூர்த்தியும் அவரது மனைவி புஷ்பாவும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து தனித்தனியே வசித்து வருகின்றனர். இதனால் மதினா அதே பகுதியில் உள்ள தனது சித்தி வீட்டில் தங்கி பள்ளிக்கு சென்று வந்தார்.

    இதற்கிடையே தாய்-தந்தை பிரிந்து வசித்து வந்ததால் மதினா மன வருத்தத்தில் இருந்து வந்தார். ஒரு சில முறை தற்கொலைக்கும் முயன்றார். அப்போதெல்லாம் அவரது சித்தி-சித்தப்பா ஆகியோர் தடுத்து சமாதானம் செய்து வந்தனர்.

    இந்த நிலையில் நேற்று மாலை மதினாவின் சித்தி-சித்தப்பா பொருட்கள் வாங்க கடைக்கு சென்றனர். அப்போது தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்த மதினா வீட்டின் மின் விசிறியில் சேலையால் தூக்கு போட்டு தொங்கினார்.

    பொருட்கள் வாங்கிக்கொண்டு வீடு திரும்பிய மதினாவின் சித்தி-சித்தப்பா வீடு உட்புறமாக பூட்டப்பட்டிருப்பதை கண்டு திடுக்கிட்டனர். சந்தேகமடைந்து அவர்கள் ஜன்னல் வழியாக பார்த்த போது மதினா தூக்கு போட்டு தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    உடனே அக்கம் பக்கத்தி னர் உதவியுடன் கதவை உடைத்து தூக்கில் இருந்து மதினாவை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் மதினா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இது குறித்த புகாரின் பேரில் முத்தியால் பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    Next Story
    ×