search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Servant"

    • விபத்தில் சிக்கிய டாஸ்மாக் ஊழியர் பலியானார்.
    • நரிக்குடி போலீசார் வழக் குப்பதிவு செய்து விசா ரணை மேற்கொண்டு வந்த னர்.

    திருச்சுழி

    விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகேயுள்ள பனை யூர் பகுதியை சேர்ந்த வர் வெங்கலமுத்து (வயது 47). இவர் நரிக்குடி ரெயில் நிலையம் அருகேயுள்ள கண்டுகொண்டான் மாணிக் கும் அரசு டாஸ்மாக் கடையில் விற்பனையாளராக பணிபுரிந்து வந்தார்.

    இந்த நிலையில் இவர் கடந்த 16-ந்தேதி இரவு பணி முடிந்து சொந்த ஊரான பனையூர் கிராமத்திற்கு தனது இருசக்கர வாக னத்தில் நரிக்குடி-திருச்சுழி சாலையில் சென்று கொண் டிருந்தார். அப் போது விடத்தக்குளம் அடுத்துள்ள மேலேந்தல் பேருந்து நிறுத்தம் அருகே சென்று கொண்டிருந்த போது நிலை தடுமாறி கீழே விழுந்தார்.

    இதில் வெங்கலமுத்து விற்கு முன்பக்க தலையில் பலத்த அடி விழுந்த நிலை யில் படுகாயமடைந்து ரத்த வெள்ளத்தில் உயிருக்காக போராடினார்.

    இந்த நிலையில் சம்பவம் குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற நரிக்குடி போலீசார் விபத் தில் சிக்கி படுகாயமடைந்து உயிருக்கு போராடிய வெங்கலமுத்துவை மீட்டு தனியார் வாகனம் மூலம் மதுரை அரசு ராஜாஜி மருத் துவமனைக்கு சிகிச்சைக் காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

    இந்த விபத்து குறித்து அவரது மனைவியான கெங்கம்மாள் (44) கொடுத்த புகாரின் அடிப்படையில் நரிக்குடி போலீசார் வழக் குப்பதிவு செய்து விசா ரணை மேற்கொண்டு வந்த னர். இந்த நிலையில் தீவிர சிகிச்சையிலிருந்த வெங்கல முத்து சிகிச்சை பலனின்றி நேற்றிரவு பரிதாபமாக உயிரிழந்தார்.

    • தனியார் நிறுவன ஊழியர்-மூதாட்டி மாயமாகினர்.
    • இதுகுறித்து மகன் போஸ் கொடுத்த புகாரின் பேரில் விளக்குத்தூண் காவல்நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மதுரை

    மதுரை பெத்தானியபுரம் பாத்திமா நகரை சேர்ந்தவர் அழகர்சாமி (வயது34). வெள்ளரிப்பட்டியில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றினார். இவருக்கு திருமணமாகி மனைவி, 1 ஆண் குழந்தை உள்ளனர்.

    கடந்த 23-ந் தேதி தீபாவளியையொட்டி மாமனார் வீட்டிற்கு மனைவி, குழந்தைகளை அழைத்து சென்றார். அதன் பிறகு கடந்த 2-ந் தேதி முதல் அழகர்சாமியை காணவில்லை. அவரது செல்போனும் அனைத்து வைக்கப்பட்டிருந்தது. பல இடங்களில் தேடி பார்த்தும் தகவல் கிடைக்கவில்லை.

    இதுகுறித்து மனைவி பாண்டீஸ்வரி கொடுத்த புகாரின் பேரில் கரிமேடு காவல் நிலைய ஆய்வாளர் முகமது இத்ரிஸ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    மூதாட்டி

    மதுரை சுவாமி சன்னதி, வடுக தட்டாரசந்தை சேர்ந்தவர் முத்துசாமி. இவரது மனைவி கமலம் (75).

    கடந்த 7-ந் தேதி காலை வெளியே சென்ற மூதாட்டி அதன் பின்னர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடி பார்த்தும் தகவல் கிடைக்கவில்லை.

    இதுகுறித்து மகன் போஸ் கொடுத்த புகாரின் பேரில் விளக்குத்தூண் காவல்நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • மின் ஊழியரான இவர் நேற்றிரவு அரிசிபாளையம் மெயின்ரோட்டில் உள்ள ஒரு மின் கம்பத்தில் ஏறி மின் இணைப்பை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டிருந்தார்.
    • அப்போது திடீரென மின்சாரம் தாக்கியதில் சுருண்டு கீேழ விழுந்தார்.

    சேலம்:

    நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள மங்களபுரத்தை சேர்ந்தவர் செம்மலை (வயது 43),

    மின் ஊழியரான இவர் நேற்றிரவு அரிசிபாளையம் மெயின்ரோட்டில் உள்ள ஒரு மின் கம்பத்தில் ஏறி மின் இணைப்பை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது திடீரென மின்சாரம் தாக்கியதில் சுருண்டு கீேழ விழுந்தார். இதில் படுகாயம் அடைந்த அவர் உயிருக்கு போராடினார்.

    இதனை பார்த்த அந்த பகுதியினர் அவரை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக அவரை ஆம்புலன்சில் கோவையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். ஆனால் ஈரோடு மாவட்டம் பெருந்துறை பகுதியில் செல்லும் போது அவர் உடல் நிலை மேலும் மோசமானதால் அங்குள்ள அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.

    அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி சிறிது நேரத்தில் செம்மலை பரிதாபமாக இறந்து விட்டார். இதனை பார்த்த உறவினர்கள் கதறி துடித்தனர். சம்பவம் குறித்து பள்ளப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் மின்சாரத்தை நிறுத்தாமல் அவர் மின் கம்பத்தில் ஏறி பணி செய்ததால் மின் சாரம் தாக்கியதா?, அவர் எப்படி இறந்தார் என்பது குறித்து மின்சாரத்துறை அதிகாரிகளும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×