search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Negotiation"

    • மதுக்கடை திறக்க கூடாது என எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • பேச்சுவார்த்தை நடத்திய பிறகு அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

    திருவோணம்:

    திருவோணம் அருகே உள்ள வீரடிப்பட்டி (வீரப்பையா சுவாமி கோவில் அருகில்) புதிதாக அரசு மதுபானகடை ஒன்று திறக்கப்பட இருந்தது.

    இதைத் தொடர்ந்து இப்பகுதி பெண்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமான இன்று காலை ஒன்று திரண்டு புதிதாக அரசு மதுபான கடை இந்த பகுதியில் திறக்க கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

    இதைத் தொடர்ந்து திருவோணம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

    அப்போது பொது மக்கள் கூறுகையில்,

    புதிதாக திறக்கப்பட உள்ள மதுபான கடை அருகே பிரசித்தி பெற்ற வீரப்பையா சுவாமி கோவில் ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளி உள்ளது பொதுமக்கள் அதிகம் குடியிருப்பு உள்ளது கடை திறக்க கூடாது என கூறி கடைக்குள் மதுபான பாட்டில்களை கொண்டு செல்ல விட மாட்டோம் என்றனர்.

    இதைத் தொடர்ந்து பொது மக்களிடம் போலீசார் மற்றும் அதிகாரிகள் அமைதி பேச்சு வார்த்தை நடத்திய பிறகு அடுத்த கட்ட நடவடிக்கை செய்யப்படும் என்று ள் உறுதி அளித்தனர்.

    இதைத் தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர்.

    • சாலைகளை சீரமைக்க கோரி பொதுமக்கள் திடீர் மறியலில் ஈடுபட்டனர்.
    • மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி சாலைகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    மதுரை

    மதுரை மாநகராட்சியில் சாலைகள் படு மோசமாக உள்ளது. மழை காலங்களில் சேறும், சகதியுமாகவும் மற்ற நேரங்களில் குண்டும், குழியுமாகவும் காணப்படு கிறது. இதனால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது.

    தரமற்ற சாலைகளால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். மதுரை மாநகராட்சியில் 67-வது வார்டான எச்.எம்.எஸ்.காலனி பகுதியில் சாலைகள் போக்கு வரத்திற்கு லாயக்கற்ற முறையில் உள்ளது. இதனால் அந்தப்பகுதி மக்கள் அவதியடைந்தனர். சாலைகளை சீரமைக்க வலியுறுத்தி பலமுறை கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை இல்லை.

    இந்த நிலையில் நேற்று பெய்த மழை காரணமாக எச்.எம்.எஸ். காலனி பகுதியில் சேறும், சகதியுமாக காட்சியளிக்கிறது. தற்போது முடக்கு சாலையில் இருந்து எச்.எம்.எஸ். காலனி வழியாக தேனி மெயின் ரோட்டிற்கு வாகனங்கள் விடப்படுவதால் அதிகள வில் தூசி பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

    இதை கண்டித்தும், எச்.எம்.எஸ். காலனி பகுதியில் சாலைகளை சீரமைக்க வலியுறுத்தியும், அந்தப்பகுதி மக்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி சாலைகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர். இதையடுத்து மறியல் கைவிடப்பட்டது.

    • பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    • போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

    சோழவந்தான்

    மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே காடுபட்டி ஊராட்சிக்கு உட்பட்ட வடகாடுபட்டியில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு 2 தரப்பை சேர்ந்த வர்கள் மோதிக்கொண்ட னர். இதில் 4 பேர் காய மடைந்தனர்.

    இந்த மோதல் காரணமாக அந்த கிராமத்தில் பதட்டம் ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் குவிக்கப்பட்ட னர். இந்த சம்பவம் தொடர் பாக சோழவந்தான் இன்ஸ் பெக்டர் சிவபாலன் வழக்குப்பதிவு செய்து பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்ததாக ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேரை கைது செய்தார். மேலும் இதில் தொடர்புடைய 2 பேர் தலைமறை வானார்கள். அவர்களை போலீசார் தேடி வந்தனர்.

    இந்த நிலையில் இன்று காலை விக்கிரமங்கலம் மெயின் ரோட்டில் வடகாடுபட்டியை சேர்ந்த ஒரு தரப்பினர் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்கள் தலைமறைவான 2 பேரை கைது செய்ய வேண்டுமென கோரிக்கை விடுத்தனர். சாலை மறியலால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து மறியல் கைவிடப்பட்டது.

    • ஏர்வாடி தர்கா கொடி ரத ஊர்வலம் நடந்தது.
    • இரு தரப்பினரிடமும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    கீழக்கரை

    ஏர்வாடி சுல்தான் இப்ராஹிம் பாதுஷா நாயகம் தர்காவில் சந்தனக்கூடு விழா கொடியேற்றத்துடன் ெதாடங்கியுள்ளது.

    கொடி ரத ஊர்வலத்தில் பாரம்பரிய உரிமை கோரி இரு தரப்பினரிடையே பிரச்சினை எழுந்தது. கலெக்டர் விஷ்ணு சந்திரனிடம் ஒரு தரப்பினர் இது தொடர்பாக முறையிட்டனர்.

    அதனைத்தொடர்ந்து சமாதான கூட்டம் கீழக்கரை தாலுகா அலுவலகத்தில் நடந்தது. ராமநாயதபுரம் கோட்டாட்சியர் கோபு தலைமை வகித்தார். தாசில்தார் பழனிக்குமார் முன்னிலை வகித்தார்.

    டி.எஸ்.பி., சுதிர்வேல், துணை தாசில்தார் பரமசிவம், வருவாய் அலுவலர் வேல்முருகன், வி.ஏ.ஓ., மாரியப்பன், தர்கா நிர்வாக சபை தலைவர் பாக்கீர் சுல்தான் லெவ்வை, துணைத்தலைவர் சாதிக் பாட்ஷா, உறுப்பினர்கள் துல்கருணை பாட்ஷா, அப்துல் கனி, அஜ்முல் ரகுமான் உட்பட பலர் பங்கேற்றனர்.

    கூட்டத்தில் ஏர்வாடி முஜாபிர் நல்ல இப்ராகிம் மஹாலில் இருந்து தண்ணீர் பந்தல் வரை ஒரு தரப்பினரும், அங்கிருந்து தர்கா வரை மற்றொரு தரப்பினரும் கொடி ரதம் ஊர்வலத்தை நிறைவு செய்வது எனவும், சந்தனக்கூடு ஊர்வலத்தில் இதே நடைமுறையை பின்பற்றுவது என முடிவு செய்யப்பட்டது.

    • குடிநீர் திட்டம் அமைப்பது தொடர்பான அமைதி பேச்சுவார்த்தை நடைபெற்றது.
    • பணிகளை தொடர பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவிக்க மாட்டோம் என தெரிவித்தனர்.

    பாபநாசம்:

    வீரமாங்குடி, சருக்கை, வாழ்க்கை, சத்தியமங்கலம் அருகே நீர் சேகரிப்பு கிணறு அமைத்தல், ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் நாகப்பட்டினம் நகராட்சி, திட்டச்சேரி, வேளாங்கண்ணி, கீழ்வேளூர், தலைஞாயிறு பேரூராட்சிகள் மற்றும் 980 ஊரக குடியிருப்புகளுக்கான கூட்டு குடிநீர் திட்டம் அமைப்பது தொடர்பான அமைதி பேச்சுவார்த்தை கூட்டம் பாபநாசம் தாசில்தார் அலுவலகத்தில் நடைபெற்றது.

    கூட்டத்தில் தாசில்தார் பூங்கொடி தலைமை தாங்கினார்.

    இதில் குடிநீர் திட்ட நிர்வாக பொறியாளர் ஜெயக்குமார், உதவி நிர்வாக பொறியாளர்கள் நடராஜன், ராணி மற்றும் ஊராட்சி தலைவர்கள் ஜெகதீசன், செல்வராஜ், தமிழ்நாடு காவிரி உழவர் பாதுகாப்பு சங்க செயலாளர் சுவாமிமலை சுந்தரவிமல்நாதன், தூத்தூர் விவசாய சங்க தலைவர் தங்க. தர்மராஜன் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள், வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    இதில் வாழ்க்கை- தூத்துக்குடி கிராமங்களுக்கு இடையே தடுப்பணைகள் அமைத்து தரும் பட்சத்தில் மேற்படி கூட்டுக் குடிநீர் திட்ட பணிகளை தொடர பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவிக்க மாட்டோம் என தெரிவித்தனர்.

    • 12 சிவன் கோவில்களில் இருந்து சுவாமி- அம்பாள் ரிஷப வாகனத்தில் திருமண கோலத்தில் காட்சி தரும் விழா.
    • இரு தரப்பும் இணைந்து சட்டம்- ஒழுங்கு பிரச்சனை இன்றி விழாவை நடத்த ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

    சீர்காழி:

    சீர்காழி அருகே திருநாங்கூர் மதங்கீஸ்வரர் சுவாமி கோவிலில் ஆண்டு தோறும் சுற்றியுள்ள 12 சிவபெருமான் கோவில்களில் இருந்து சிவபெருமான்கள் அம்பிகைகளுடன் ரிஷப வாகனத்தில் திருமணக் கோலத்தில் காட்சி தரும் விழா நடைபெறுவது வழக்கம்.

    இந்த ஆண்டு விழா வரும் 20-ம் தேதி நடைபெற உள்ளது.

    விழா நடத்திட நாங்கூர் கிராமத்தில் இரு தரப்பினர் அனுமதி கோரினர்.

    இதனால் விழாவில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படக் கூடும் என்பதால் சீர்காழி வட்டாட்சியர் அலுவலகத்தில் மண்டல துணை வட்டாட்சியர் ரஜினி தலைமையில் அமைதிப் பேச்சு வார்த்தை நடந்தது.

    கோவில் செயல் அலுவலர் முருகன், திருவெண்காடு இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    பேச்சுவார்த்தையின் போது இரு தரப்பினர் இடையே காவல்துறை முன்னிலையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

    பின்னர் இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை சமாதானப்படுத்தி பேச்சுவார்த்தை தொடர்ந்தது.

    அப்போது இரு தரப்பும் இணைந்து சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏதும் இன்றி விழாவினை நடத்திட ஒத்துழைப்பு வழங்குவது என முடிவு செய்யப்பட்டது.

    • உளுந்தூர்பேட்டை தாலுகா பெரியப்பட்டு கிராமத்திற்கும், ஈஸ்வரகண்ட நல்லூர் கிராமத்திற்கும் சொந்தமான அய்யனார் கோவில் பொதுவாக உள்ளது.
    • பெரியப்பட்டு கிராமத்தில் திருவிழா நடைபெறுவதை குறித்து இரு தரப்பினரும் கூட்டு பேச்சுவார்த்தை நடத்தினர்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை தாலுகா பெரியப்பட்டு கிராமத்திற்கும், ஈஸ்வரகண்ட நல்லூர் கிராமத்திற்கும் சொந்தமான அய்யனார் கோவில் பொதுவாக உள்ளது. பெரியப்பட்டு கிராமத்தில் திருவிழா நடைபெற இருப்பதால் கோவில் மூலவர் சிலை ஈஸ்வரகண்டநல்லூரில் உள்ளது. இது சம்பந்தமாக 5-ந்தேதி வட்டாட்சியர் அலுவலகத்தில் இரு தரப்பினரும் கூட்டு பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் தீர்வு காணப்படாததால் பெரியப்பட்டு கிராம பொதுமக்கள் கடலூர் உளுந்தூர்பேட்டை சாலையில் இன்று காலை திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    தகவல் இருந்த உளுந்தூர்பேட்டை போலீஸ் துணை சூப்பிரண்டு மகேஷ், திருநாவலூர் இன்ஸ்பெக்டர் அசோக் மற்றும் போலீசார் சம்பவ இடத்தைச் சென்று பேச்சுவார்த்தை நடத்தினர்.பேச்சுவார்த்தையை தொடர்ந்து பொதுமக்கள் சாலை மறியலை கைவிடப் பட்டது. இருந்தபோதும் போலீசார் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    • கடலூர் கே.என். பேட்டை குவாரியில் அளவுக்கு அதிகமாக செம்மண் எடுப்பதை கண்டித்து லாரிகளை பொதுமக்கள் சிறைப்பிடித்து போராட்டம் நடத்தினார்கள்,
    • இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    கடலூர்:

    விக்கிரவாண்டி முதல் நாகப்பட்டினம் வரை தேசிய நெடுஞ்சாலை துறை சார்பில் 4 வழி சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த சாலை கடலூர் அருகே உள்ள கே.என்.பேட்டை வழியாக செல்கிறது. இதற்காக கே.என். பேட்டையில் உள்ள செம்மண் குவாரிகளிலிருந்து தினந்தோறும் 100-க்கும் மேற்பட்ட லாரிகளில் மண் எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் அரசு அனுமதித்த அளவைவிட அந்தப் பகுதியில் இருந்து கூடுதலாக செம்மண் எடுக்கப்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டினர். இது குறித்து அவர்கள் குவாரி நிர்வாகிகளிடம் சென்று கேட்டபோது, அவர்கள் சரியான பதில் அளிக்காமல் அலட்சியமாக பேசியதாக கூறப்படுகிறது. இதனால் திருவந்திபுரம் ஒன்றிய குழு துணை தலைவர் அய்யனார் தலைமையில் இன்று காலை ஏராளமான பொதுமக்கள் அந்த மணல் குவாரிக்கு சென்றனர். அங்கு செம்மண் எடுத்த லாரிகளை சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து பொது மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பொதுமக்கள் கூறுகையில், இந்த செம்மண் குவாரியில் இருந்து அரசு அனுமதித்த அளவை விட அதிக அளவில் மண் எடுப்பதால் இந்த பகுதியின் நீர் ஆதாரம் பாதிக்கப்படுகிறது  மேலும், இவ்வாறு தொடர்ந்து மண் எடுப்பதால் மண்வளமும் பாதிக்கப்பட்டு இங்கு உள்ள ஏரிகள் துர்ந்து போகும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இங்கிருந்து செம்மண் எடுப்பதை நிறுத்த வேண்டும் என்று கூறினர்  தொடர்ந்து பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி மாணவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • கல்லூரி வெளியே அமர்ந்து போராடிவரும் மாணவர்களிடம் பேச்சுவார்த்தை.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த மேலையூரில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான பூம்புகார் கல்லூரி இயங்கி வருகிறது.

    இங்கு சீர்காழி சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் இங்கு கல்வி பயின்று வருகின்றனர்.

    இந்த கல்லூரி முன்பு அடிப்படை வசதி செய்து தரக்கோரி மாணவர்கள் இன்று 3-வது நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதே போல 40க்கும் மேற்பட்ட பேராசிரியர்களுக்கு பணி மேம்பாடு மற்றும் அடிப்படை வசதிகள் செய்து தரவில்லை என போராடி வருகின்றனர்.

    இதைத் தொடர்ந்து இந்து சமய அறநிலைத்துறை கூடுதல் ஆணையர் ஹரிப்பிரியா மற்றும் இணை ஆணையர் மோகனசுந்தரம், வருவாய் கோட்டாட்சியர் அர்ச்சனா உள்ளிட்டோர் இன்று பூம்புகார் கல்லூரிக்கு ஆய்வு நடத்த வந்தனர்.

    அப்போது இந்து சமய அறநிலைத்துறை கூடுதல் ஆணையரிடம் மாணவர்கள் கல்லூரிக்கு அடிப்படை வசதிகள் செய்து தராத முதல்வரை பணி நீக்கம் செய்ய வேண்டும் என கூறினர்.

    இதைத் தொடர்ந்து கல்லூரி உள்ளே சென்ற கூடுதல் ஆணையர் கழிவறை, ஆய்வுக்கூடம், வகுப்பறை.உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஆய்வு செய்தார்.

    பின்னர் ஒப்பந்தக்காரரை அழைத்து விரைந்து பணிகளை முடிக்கவேண்டும் என கூறினார்.

    அதனைத் தொடர்ந்து கல்லூரி வெளியே அமர்ந்து போராடிவரும் மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்த சென்றார்.

    அப்போது பேராசிரிய ர்கள் குறுக்கிட்டு தங்களது கோரிக்கைகளையும் கூறினர்.

    அப்போது இணை ஆணையர் மோகனசுந்தரம் மற்றும் பேராசிரியர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

    இதனை அடுத்து பேராசிரியர்கள் கல்லூரி வாயிலேயே நின்று முதல்வருக்கு உறுதுணையாக பேசும் இணை ஆணையர் மோகனசுந்தரத்தை பணியிடம் மாற்றம் செய்ய வேண்டும், முதல்வரையும் பணியிட மாற்றம் செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கையை முன்னிறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    தொடர்ந்து மாணவர்கள் வெளியே போராடி வரும் சூழ்நிலையில் பேராசிரியர்கள் இணை ஆணையரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருவதால் பதட்டமான சூழல் ஏற்பட்டுள்ளது.

    அசாம்விதங்களை தடுக்கும் பொருட்டு பூம்புகார் போலீசார் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுப்பட்டு வருகின்றனர். 

    • ராஜபாளையம் அருகே விசைத்தறி தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • 11-வது நாளான இன்று கண்களில் கருப்பு துணியை கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் அருகே உள்ள தளவாய்புரம் பகுதியில் 400-க்கு மேற்பட்ட விசைத்தறிக்கூடங்கள் உள்ளன. இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைத்தறி தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு கூலி உயர்வு மற்றும் போனஸ், விடுப்பு சம்பளம் வழங்க கோரி போடப்பட்ட ஒப்பந்தம் முடிவடைந்தது.

    கடந்த 2 ஆண்டு களாக புதிய ஒப்பந்தம் போடாப்படாமல் விசைத் தறி உரிமை யாளர்கள் காலம் தாழ்த்தி வருவதாக புகார் கூறி கடந்த 30-ந்தேதி முதல் விசைத்தறி தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    நேற்று முன்தினம் கஞ்சித் தொட்டி திறந்து தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் வட்டாட்சியர் அலுவலகத்தில் பேச்சு வார்த்தை நடத்த வருமாறு உரிமையாளர் தரப்பிலும், தொழிற்சங்கம் தரப்பிலும் அழைப்பு விடுக்கப்பட்டது.

    இந்த பேச்சுவார்த்தைக்கு விருதுநகர் தொழிலாளர் நலத்துறை உதவி ஆணையர் மின்னல் கொடி, ராஜபாளையம் வட்டாட்சியர் ராமச்சந்திரன், மண்டல துணை வட்டாட்சியர் கோதண்டராமன், தள வாய்புரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தெய்வீக பாண்டியன் தலைமை தாங்கினர்.

    அப்ேபாது உரிமையாளர் தரப்பில் இருந்து பேச்சு வார்த்தைக்கு யாரும் வராததால் தொழி்ற் சங்கத்தினர் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். இதனால் பேச்சுவார்த்தை ேதால்வியடைந்தது.

    ெதாழிற்சங்கத்தினர் அதிகாரியிடம் கூறுகையில், எங்களுக்கு உடனடியாக தீர்வு கிடைக்க வழி செய்ய வேண்டும். இல்லையென்றால் அடுத்தகட்ட போராட்டம் தீவிரமடையும் என்றனர்.

    இந்த நிலையில் 11-வது நாளான இன்று செட்டியார்பட்டி அரசரடி பஸ் நிலையம் அருகே விசைத்தறி தொழிலாளர்கள் கண்களில் கருப்பு துணியை கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    • தண்ணீர் இன்றி பல கிராமங்களில் பயிர்கள் கருகும் நிலை ஏற்பட்டுள்ளது.
    • சாலை மறியல் செய்தவரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    பூதலூர்:

    காவேரி டெல்டா பாசன விவசாயத்திற்காக மேட்டூர் அணை வழக்கமான ஜூன் 12க்கு பதிலாக மே மாதம் 24 ம் தேதி திறக்கப்பட்டது.

    பருவம் தப்பிய மழையால் நடவு பணிகள் சற்று தாமதம் ஆகியது இதனால் கல்லணையில் தலைப்பு பகுதியான பூதலூர் தாலுகா பகுதிகளில் பல இடங்களில் இன்னும் சில வாரங்களுக்கு வயல்களுக்கு தண்ணீர் தேவைப்படுகிறது.

    இந்நிலையில் ஜனவரி 28ஆம் தேதி மேட்டூர் அணை மூடப்பட்டது.

    இதனால் தண்ணீர் இன்றி பல கிராமங்களில் பயிர்கள் கருகும் நிலை ஏற்பட்டுள்ளது

    இதனால் உடனடியாக மேலும் சில வாரங்களுக்கு பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று கோரி இன்று காலை பூதலூர் நான்கு சாலை சந்திப்பில் விவசாயிகள் சங்கத்தினர், மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    இதில் தஞ்சை மாவட்ட விவசாய சங்க செயலாளர் கண்ணன், தஞ்சை மாவட்ட அனைத்திந்திய மாத சங்க செயலாளர் தமிழ்ச்செல்வி மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    முக்கியமான இடத்தில் சாலை மறியல் நடைபெற்றதால் இரண்டு புறமும் ஏராளமான வாகனங்கள் அணிவகுத்துநின்றன. பூதலூர் தாசில்தார் பெர்ஷியா திருக்காட்டுப்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் ஆகியோர் சாலை மறியல் நடைபெறும் இடத்திற்கு வந்து சாலை மறியல் செய்தவரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    இதை அடுத்து சாலை மறியல் போராட்டம் விளக்கிக் கொள்ளப்பட்டது.

    இதனால் இந்த தடத்தில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நீர்வள த்துறை அதிகாரி உடன் பேசி நடவடிக்கை எடுக்க ப்படும் என்று உறுதி கூறியது அடிப்படையில் சாலை மறியல் போரா ட்டம் தற்காலிகமாக கைவி டப்பட்டது.

    கடந்த பத்து ஆண்டுகளுக்கு மேல் சாலைவசதிகள் இல்லாமல் பெரும் சிரமத்துக்கு ஆளாக்கப்பட்டு வருகிறோம்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை அருகே திருவிழந்நூர் ஊராட்சி காமராஜர் தெருவை சேர்ந்தவர்கள் சாலைவசதி செய்து தரகோரி சாலை மறியல் செய்தனர்.

    தகவலறிந்த இன்பெக்டர் செல்வம் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சு வார்த்தை நடத்தினார். அப்போது சாலை மறியல் செய்த மக்கள் கூறியதாவது. கடந்த பத்து வருடங்களுக்கு மேல் சாலைவசதிகள் இல்லாமல் பெரும் சிரமத்து க்கு ஆளாக்கப்பட்டு வருகிறோம். ஆளுங்கட்சியை சேர்ந்த கூட்டணி எம்.எல்,ஏ. சாலை போட்டு தருவதாக வாக்குறுதி அளித்தார் இதுவரை கண்டுகொள்ளவில்லை.

    பள்ளி மாணவ மாணவிகள்,வேலைக்கு போகிறவர்கள் கர்ப்பிணி பெண்கள், நோயாளிகள் உள்ளிட்டவர்கள் குண்டும் குழியுமான சாலையை கடந்து செல்ல வேண்டி இருப்பதால் அவசர உதவிக்கு ஆட்டோக்காரர்கள் கூட வருவதில்லை. இப்பகுதியில் சுமார் 250 குடும்பங்களை சேர்ந்தவர்கள்வசித்து வருகிறோம்.எங்க ளுக்கு உடனடியாகஇப்பகு தியில்சாலை வசதியை ஏற்்படுத்தி தர வேண்டும் என்ற னர்.உரிய அதிகாரிகளிடம் கூறி நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதியளித்தனர். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.

    ×